Friday, November 30, 2012

கள்ளர்,மறவர்,அகமுடையார் என்றால் யார்?

கள்ளர்,மறவர்,அகமுடையார் என்றால் யார்?

அறிஞர் பெருமக்கள் சொல்வது:
*******************************
      * "கள்ளர் என்ற சொல் பொதுவாக திருட்டு தொழில் ஈடுபடும் எல்லா மரபினரையும் குறிக்கும். ஆனால் இப்பெயர் அரசுக்கு வரி செலுத்த உட்படாத ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் மக்களை குறிப்பதாக உள்ளது. கள்ளர்களுக்கு என்று ஒரு பொதுப்படையான குணம் உண்டு.அது தான் எல்லோரும் திருடுவது ஆகும். இதனால் கள்ளர
் என்ற பொதுப்பெயர் இவர்களுக்கு தொழிற் பெயராக சூட்டப் பட்டது. (தகவல்: E.Thurston C&T of SI Vol. IV,Page 53)

        * மறவர் என்ற சொல் போரில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் பொதுவாக வழங்கியது. "சங்க இலக்கியத்தில் மறம்,மறவன் என்ற சொற்கள் பேசப்படுவது உண்மையே.அது முறையே வீரத்தையும், வீரனையும் சுட்டுமே அன்றி, மறவர் என்ற ஒரு இனம் அல்லது மரபை சுட்டவில்லை.(தகவல்:History of Maravar,Page 16. Dr. S. Kadirvel)

        * அகம்படியார் என்ற ஒரு சாதி தமிழ்வேந்தர் காலத்திலேயே இல்லை என்று தான் கூறப்படுகிறது. "ஆளையங்களிலும், அரண்மனையிலும் குற்றேவல் செய்வோர் அகம்படியார் என வழங்கினர்". (தகவல்: J.A.Abbe Dubois, Hindu Mannar & Custom - Page 17)

வன்னியர் சொல்வது
*********************
"உண்மையில் கள்ளர் சங்ககாலத்தில் இவர்கள் முதலில் தூசிப் படைகளாக, ஆநிரை கவரும் வெட்சிப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது. பிறகு அவர்களை குதிரை பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தினர். இவ்வாறானவர்கள் சேர்வைக்காரர்களாக அறியப்பட்டனர். பிறகு இவர்கள் அகப்பரிவாரங்களாக, அரண்மனைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்களே அகம்படியர் ஆவர். படைத் தளபதி ஆகும் அளவு இவர்களுக்கு உரிமை இருந்தது. இதைத்தான் 'கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே' என்கிற சொல்வழக்கு வெளிப்படுத்துகிறது."

மறத்தமிழர் சேனை(இது 'மறவர்களுக்கான' அமைப்பு):
***************************************************
கள் - தல்: பறித்தல், பகைவர்களின் பொருட்களை கவர்தல்
கள்ளன்: களம் விட்டு களம் சென்று பகையை அளித்தவர்கள் களைப்படை வீரர்கள்
மறவர்: வரும் பகையை எதிர்த்து நின்ற மறப்படை வீரர்கள்
அகமுடையார்: கோட்டை கொத்தளங்கள் காத்தும், குடிபடைகளுக்குள் கட்டுகோப்பு வளர்த்த அகப்படை வீரர்கள்

11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சோழர் யார் ? சோழருக்கு உரிமை கோரும் இனங்களும் அவர்களின் ஆதாரங்களும

    விஜயாலயச் சோழனில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழகத்தை ஆண்ட வம்சம். இந்திய அரசர்களில் முதலும் கடைசியாகவும் வெளிநாட்டின் மீது படையெடுத்துச் சென்று வென்ற வம்சம்.


    இந்த வம்சத்தின் வாரிசுகள் இப்போது இருக்கிறார்களா?
    இருந்தால் எங்கு இருக்கிறார்கள்?

    பல விதமான சாதி அமைப்புகள் இப்போது சோழர்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவர்களில் எந்த இனத்தில் உண்மையாக சோழர்கள் இருக்கிறார்கள்?
    அரச இனங்களை ஒரு சாதி அமைப்புக்குள் அடைக்க நினைத்தால் அது சரியாக இருக்குமா?

    அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் வம்சம் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்களே, அது உண்மையா?
    அப்படியானால் இப்போது யாரேனும் சோழர்களின் வாரிசுகள் இருந்தால் அவர்கள் சாளுக்கிய சோழர்களாகத்தான் இருக்குமோ?

    இந்தக் கேள்விகள் வரலாற்றில் ஆர்வமுடைய அனைவருக்குமே இருக்கக் கூடிய கேள்விகள்.

    இந்தக் கேள்விகளுக்கான விடை தேடலே இந்தக் கட்டுரை.

    உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமெனில், கிடைக்கின்ற ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டுமே தவிர, ஒரு சார்புடையதாய் உணர்ச்சி பூர்வமாக முடிவு எடுக்கக் கூடாது.

    முதலில் அரச இனங்களை ஒரு சாதி அமைப்புக்குள் அடைக்க நினைத்தால் அது சரியாக இருக்குமா?
    அவ்வாறு முயற்சித்தால் அதனால் குழப்பமே மிஞ்சும் என்றக் கூற்று உண்மையா என்றுப் பார்ப்போம்.
    தனிப்பட்ட முறையில் சோழர்களை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைப்பதில் யாருக்கும் உடன்பாடு இருக்காது. அவர்கள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்.

    அனைத்து சாதியினரும் அவர்களை சொந்தம் கொண்டாடுவது சந்தோஷமான விஷயமே. தஞ்சைப் பெரிய கோயில் கட்டுவதில் ஈடுபடாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? தமிழர்களின் மக்கள் தொகை ஒரு கோடியைக் கூடத் தாண்டாத கால கட்டத்தில் ஒன்பது லட்சம் பேர் கொண்ட கட்டுக்கோப்பான வலிமை வாய்ந்த ராஜேந்திர சோழரின் படையில் இடம் பெறாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? சோழர்கள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்றாலும், அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என ஆராய வேண்டுமெனில், இப்போது உள்ள சமூக அமைப்பில் அவர்கள் ஏதேனும் ஒரு சாதி அமைப்புக்குள்ளேயே இருந்தாக வேண்டும்.

    எனவே சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்களை ஒவ்வொன்றாய் ஆராய்வோம்.
    ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவெனில், இப்போதுள்ள ஜாதி அமைப்பே 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததா என்றால் அது சந்தேகமே. உதாரணமாக தற்போது தஞ்சைக் கள்ளர்கள் மற்றும் வன்னியகுல க்ஷத்ரியாவிலுள்ள பொதுவானக் குடும்பப் பெயர்கள்(மழவரையர், பழுவேட்டரையர், உடையார்,கண்டியத்தேவர்,….).

    எனவே குடும்பப் பெயரை வைத்தே இவர்களை அடையாளம் காண இயலும். சோழர்களின் குடும்பப் பெயர் சோழர் என்றுதான் இருக்க வேண்டுமே தவிர தேவர் என்றோ உடையார் என்றோ அல்ல என்ற அடிப்படை விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்கள்:
    1. தேவேந்திர குல வேளாளர்
    2. முக்குலத்தோர்
    3.முத்தரையர்
    4 . பார்க்கவ குலத்தோர்
    5 . தஞ்சைக் கள்ளர்கள்
    6 . வன்னிய குலச் சத்ரியர்


    சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்கள் , வசிப்பிடம்
    சோழர்கள் பயன் படுத்தியப் பட்டங்கள் ,சோழர்களின் குடும்பப் பெயர், சோழர்களுக்கான உரிமை கோரல்:


    1. தேவேந்திர குல வேளாளர்:
    வசிப்பிடம் : தென் தமிழகம்...........
    சோழர்கள் பயன் படுத்தியப் பட்டங்கள் : இல்லை.......
    சோழர்களின் குடும்பப் பெயர் : இல்லை........ சோழர்களுக்கான உரிமை கோரல்: ஆதாரமற்றது.....

    2.முக்குலத்தோர்:

    வசிப்பிடம் : தென் தமிழகம்..........
    சோழர்கள் பயன் படுத்தியப் பட்டங்கள் : தேவர்.....
    சோழர்களின் குடும்பப் பெயர் : இல்லை.......
    சோழர்களுக்கான உரிமை கோரல்: வலுவற்றது.....

    3.முத்தரையர்

    வசிப்பிடம் : தஞ்சை............
    சோழர்கள் பயன் படுத்தியப் பட்டங்கள் : இல்லை .... சோழர்களின் குடும்பப் பெயர் : இல்லை.......
    சோழர்களுக்கான உரிமை கோரல்: ஆதாரமற்றது....

    4. பார்க்கவ குலத்தோர்

    வசிப்பிடம் : தஞ்சை.......
    சோழர்கள் பயன் படுத்தியப் பட்டங்கள் : உடையார் ..... சோழர்களின் குடும்பப் பெயர் : இல்லை.......
    சோழர்களுக்கான உரிமை கோரல்: தவறானது......

    5. தஞ்சைக் கள்ளர்கள்

    வசிப்பிடம் : தஞ்சை..........
    சோழர்கள் பயன்படுத்திய பட்டங்கள்:தேவர்,உடையார்...
    சோழர்களின் குடும்பப் பெயர் : சோழகங்கன்................ சோழர்களுக்கான உரிமை கோரல்: ஆராயத் தக்கது.....

    6. வன்னிய குலச் சத்ரியர்

    வசிப்பிடம் :கங்கை கொண்ட சோழ புரம், சிதம்பரம்...............
    சோழர்கள் பயன் படுத்தியப் பட்டங்கள் : தேவர், உடையார்..........
    சோழர்களின் குடும்பப் பெயர் : சோழங்கனார்.................. சோழர்களுக்கான உரிமை கோரல்: மிக வலுவானது

    ReplyDelete
    Replies
    1. தற்பொழுது வரை வன்னிய குல க்ஷத்திரிய மரபில் வரும் பிச்சாவரம் ஜமீன் வாரிசுகளுக்கு சிதம்பரத்தில் தீட்சிதர்களால் முடிசூட்டப்பட்டு வருகிறது.

      Delete
  4. அகம் + உடையார் = அகமுடையார்
    அகமுடையார் என்றால் அகம் என்பது கோவில்,வீடு,அரண்மனை என்று பொருள்படும்.கோவிலிலும்,அரண்மனையிலும் கணக்காளர்,
    வரிவசூலிக்கும் அதிகாரி,நிர்வாக அதிகாரி,கருவூல அதிகாரி,காவல்,படைப் பிரிவில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அதிகாரி போன்ற பதவிகளை வகிப்போர் அகமுடையார் என்ற பட்டம் கொண்டு அழைக்கப்பட்டனர்.அகமுடையார் என்றால் அகம்=அரசு, உடையார்=அதிகாரி என்றே பொருள் வரும்.இவர்கள் பெரும் நில உடைமையாளர்கள் ஆக இருந்தனர்.
    அரசரின் அரண்மனை,கோவில் போன்ற இடங்களில் உள்ள வேலைகளைச் செய்பவர்கள்.கருவூலம் மற்றும் கோட்டைக் கொத்தளங்களில் காவல் மற்றும் இதர அனைத்து ப்பணிகளையும் செய்வோர் அகம்படியர் எனப்படுவர்.
    சிவகங்கை,ராமநாத புரம் போன்ற பகுதிகளில் மறவர் குல மன்னர்களின் நேரடி சேவையாக அரண்மனையில் பணி செய்தவர்களை ராஜ குல அகமுடையார் சேர்வை என்பார்கள்.

    இறைவனின் சேவைக்கு கோவிலில் (இன்றைக்கும் ராமேஸ்வரம் போன்ற கோவில்களில் பல்லக்கு தூக்கும் அகம்படியர் சேர்வை போன்றோர்)பயன்படுத்தப்பட்ட மக்களே அகம்படியர்.அரசுக்கு சேவை செய்வோர் என்ற பொருளிலும்,குழுவாகவே செயல்படவேண்டிய பணிகளில் உடையவர்கள் என்பதனால் சேர்வை என்றும்,இவர்களின் தலைமைப் பதவி வகிப்பவர் சேர்வைக்காரர் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.
    இவர்களில் மிகச்சிறந்த அந்தஸ்தில் வாழ்ந்தவர்கள் மருது சேர்வைக்காரர்கள்.சிவகங்கை மறவர் குலத்தைச் சேர்ந்த அரசர் முத்துவடுகநாதர் அவர்களிடம் சிறுவயதில் இருந்தே பணியாற்றி, போர்ப்பயிற்சியும் பெற்று தங்கள் வீரத்தை அரசரிடம் நிரூபித்து படைத்தொழிலில் சேவை செய்ய அதிகாரம் பெற்று அங்கு அவர்களின் கீழ் சேவை செய்யும் அனைவருக்கும் தலைமைப்பதவியான சேர்வைக்காரர்கள் என்ற பதவி வகித்தனர்.
    அரசனிடம் அகமுடையராக சேர்வையாக பணியாற்றிய மருது சேர்வைக்காரர்கள் தங்கள் வீரத்தின் காரணமாக பிற்பாடு சிவகங்கை நாட்டையே அரசாண்டனர்.
    அகமுடையார்களில் "சேர்வை" என்றால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட குழுவினர் எனப்படும். பொதுவாக மன்னராட்சி காலங்களில் படைப்பிரிவு,காவல் பணி,பல்லக்கு தூக்குதல்,அனைத்து விதமான பராமரிப்புப்பணி,அரசனின் நேரடி பணியாட்கள் போன்ற வேலைகளை அரண்மனை,கோவில் இரு இடங்களிலும் செய்தவர்கள் சேர்வை என்றும் இவர்களின் தலைமை அதிகாரம் கொண்டவர் சேர்வைக்காரர் என்றே அழைக்கப்பட்டனர். அரசு சேவை என்பதே காலப்போக்கில் சேர்வை என்று பட்டமாக மருவி இன்று அடையாளப்படுகிறது.
    அரசனின் நேரடி பணியாட்கள் ராஜ குல அகமுடையார் எனப்பட்டனர்.
    அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் வடமாவட்டங்களில் தஞ்சையில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    தஞ்சை போன்ற வட தமிழகத்தில் அகமுடையார்கள் தேவர்,முதலியார்,உடையார் போன்ற உயர்ந்த பட்டங்கள் கொண்டுள்ளனர்.இவர்கள் குறுநில மன்னர்களின் வம்சாவழியினராகவும், அரசருக்கு படை கொடுத்து உதவி செய்யும் வலிமை கொண்டோராகவும்,வேளிர்கள் குலமாகவும்,சிற்றரசாகவும் இருந்துள்ளனர்.வரி விதிக்கும் பொறுப்பு,கருவூல பொறுப்பு காவல் பதவி,கொண்டிருந்தோர் இவர்களே.வட மாவட்டங்களில் பெரும் நிலஉடைமையாளர்களும் இவர்களே.
    இவர்களில் வீரம் கொண்ட போர்த் தொழில் சார்ந்த குழுவினர் என்போர்
    இருக்கு வேளிர்,மலையமான்,வல்வில் ஓரி,அதியமான்,பழுவேட்டரையர் இவர்களின் மரபு வழி வந்தவர்கள்.இவர்களே படை முதலி,பண்டாரத்தார் பாளையக்காரர்,அதிகாரி போன்ற பதவி வகித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் கள்ளர் மற்றும் மறவரில் இருந்து கிளைத்து அகமுடையார் ஆகினர்.
    அகமுடையார்களில் பொதுவாக "பிள்ளை" பட்டம் என்பது அரசு கணக்காயர்களைக் குறிக்கின்றது.(துளுவ வெள்ளாளர்)
    ”கள்ளர் மறவர் கணக்காயர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆகினாரே” என்ற பாடல் வாயிலாக,அரசாட்சி முடிவடையுந்தருவாயில் வேளாண்மை சிறப்புற்று வளரத் தொடங்கிய காலத்தில் உண்டான சமூக மாற்றம்.போர்த் தொழில் புரிந்த கள்ளர்,மறவர் போன்றோரும் அரசுபதவியில் இருந்த கணக்காயர் என்ற அகமுடைய பிள்ளை போன்றோரும்,உயர் பதவியான படை முதலி,அதிகாரி,பண்டாரத்தார் போன்ற பதவிகள் வகித்த உடையார் போன்றோரும் தமக்கு உடைமையான பெரும் நிலங்களைக் கொண்டு வேளாண்மையில் ஈடுபடத் தொடங்கினர்.நிலக்கிழார்கள் ஆகினர்.இவர்களிலும் செல்வ வசதியில் குறைந்தோர் தாமே உழுதொழிலும் செய்யும் வெள்ளாளர் ஆகினர்.
    அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.முதலியார் என்பதும் போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. இங்குள்ள சேர்வைக்காரர் போன்ற ஒரு பதவியே படை முதலி என்பது.
    கைக்கோளர் என்ற செங்குந்தர் சாதியினருக்கும் முதலியார் என்று பட்டமிருப்பதால் ஒருசிலருக்கு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.இவர்களுக்கும் அகமுடைய முதலியாருக்கும் சம்பந்தம் இல்லை.
    இன்றைக்கு அகம்படியர் என்போரும் அகமுடையார் என்போரும் ஒருவரே.

    ReplyDelete
    Replies
    1. பல்லவர்கள் ஆட்சி அமைக்கும்போது அவர்களை ஏற்றுக்கொண்ட மண்ணின் மைந்தர்களுக்கு மரியாதை செய்யும்பொருட்டு அவர்களுக்கு அவை முன்னவர் என்று அழக்கப்பட்டனர்.அவர்களே முதலியார்கள்

      Delete
  5. 6. வன்னிய குலச் சத்ரியர்

    வசிப்பிடம் :கங்கை கொண்ட சோழ புரம், சிதம்பரம்...............
    சோழர்கள் பயன் படுத்தியப் பட்டங்கள் : தேவர், உடையார்..........
    சோழர்களின் குடும்பப் பெயர் : சோழங்கனார்.................. சோழர்களுக்கான உரிமை கோரல்: மிக வலுவானது/////

    பொய் புனைவதில் பள்ளியர்களையும் சாணார்களையும் அடித்துக் கொள்ள ஆளில்லை.பல்லவர்கள் காலத்தில் மணிபல்லவத்தில் இருந்து வந்தேறிய சிங்களர்களில் சமண பௌத்த மதத்தவர்கள் பள்ளியர் என்று நம் மக்களால் வழங்கப்பட்டனர். மேலும் இவர்கள் குறும்பர் இருளர் போன்ற தமிழகத்தில் இருந்த தொல்குடிகளோடு இணைந்து புதிய இனமாக (காடையர்)காடவர் எனப்பட்டனர்.பட்டியல் இனத்தவரில் முக்கிய பிரிவாக சேர்க்கப்பட இருந்த இவர்கள் (சக்கிலியர்,சாணார்,பறையர்,பள்ளர்,பள்ளியர்)அதிலிருந்து தப்பிக்க வன்னியர் என்ற இங்குள்ள போர்க்குடிகளின் பட்டத்தை சூட்டிக் கொள்ளவும் அதற்கு ஆதாரமாக வன்னியர் என்ற பூர்வ குடி மக்களின் வரலாற்றை (வனயர்,வவுனியர்) பள்ளியர் உடையதாக கதைகள் பலவாறு கூறி சத்திரியர் என்று வன்னியப் பட்டங்கொண்ட மக்கள் பலரும் ஒரே பெயரில் (வன்னியர் அனைவரும் பள்ளி கிடையாது) பெருங்குழுவாக இணைக்கப்பட்டனர்.அதனால் தான் உடையார் தேவர் என்றும் ராவுத்தர் (பஞ்சவண்ணத்தார்)என்றும் கூட கூறிக் கொள்வர்.(சாணார்,நாடாவி)சாண்டார் நளவர் என்பது ஈழ வழக்கு.\\தென்னகம் எங்கும் பனையேறும் மக்களை ஈழுவர் என்பார்கள்.(ஆதாரம் தொ.பரமசிவம் அறியப்படாத தமிழகம்.)
    இவர்கள் இரு இனத்தவரும் பட்டியல் இனமாக அறிவிக்கப்படுவதில் இருந்து விலக்க சொல்லி சத்திரியர் என்று கதை கட்டிக் கொண்டனர்.வலங்கை உய்யகொண்ட சத்திரியரா?.ஆதாரம் உண்டா?கிடையாது.இவர்கள் கூறும் நாடான் நாடாள்வான் பட்டம் மற்றும் அதற்கு கூறும் ஆதாரம் அனைத்தும் ஆய்வு செய்தோம் என்றால் தெரியும் அவை தமிழ் நாட்டின் பூர்வ குடிகள் சூடிக்கொள்வது.அவர்களின் பிரதிநிதிகளுக்கு உடைமையானது.நாடான் என்று அன்றைக்கு இருந்தவர்கள் வடதமிழகத்தில் இருந்து தெற்கே குடியேறியவர்களில் நிலக்கிழார்கள்.உண்மையான தமிழர் வரலாற்றில் மண் அள்ளிப்போட வரலாறு வாங்க காசு ஒன்றே போதும் என்பது தற்போதுள்ள நடைமுறை உண்மை.எந்த சாதிக்காரன் நம்மை ஆண்டான் என்பது எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை இலங்கைக்காரர்கள் தான் முன்னர் மூவேந்தராக இருந்திருப்பார்களோ?ஆகவே தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்த,அழைத்து வரப்பட்ட சாதிக்காரன் எல்லாம் ஆண்ட பரம்பரை என்கிறான்.ஆண்டாண்டு காலமாக இங்குள்ள பூர்வகுடித் தமிழன்(பள்ளர்) ஆண்ட பரம்பரை நாங்களும் தான் என்று சொன்னால் குற்றமா?

    ReplyDelete
  6. நீ எந்த இணமப்பா

    ReplyDelete
  7. அகமுடையாரை பற்றி தப்பகா பதிவிடுவதை விட்டுவிடுங்கள் ......
    அகமுடையார் என்றால் அரசன் என்று அர்த்தம் அகம்(மலை,நாடு)+உடையார்(அரசன்)...
    அகமுடையார் சேர்வை பட்டம் இல்லை சேரவரையர்கள் என்பதே அகமுடையார் பட்டம் ஆகும் சேரவரையர்கள் என்பது கால அளவில் சேர்வை என்று அழைக்க படுகிறது.....சேரவரையர்கள் என்னும் பட்டம் சேர வம்சத்தை செந்தவர்கள் என்று தான் அர்த்தம்....இவர்கள் கோவில்,கோட்டையில் சேவை செய்தவர்கள் இல்லை ...சேர வம்சத்தை செந்ததனல் ராஜா குல அகமுடையார் என்னும் குல பெயரை உடையவர்கள்..
    தேவர் பட்டம் கொண்ட அகமுடையார் பாண்டியர் வம்சத்தை செந்தவங்கள் தஞ்சாவூரில் கொட்டைபற்று அகமுடையார்
    பாண்டியன் சோழன் மீது படை எடுக்கும் பொது மதுரையில் இருந்து தஞ்சை மீது படை எடுத்து வந்தவர்கள் என்று வரலாற்றில் உள்ளது கொட்டப்பற்று அகமுடையார் தேவர் வம்சத்தில் அதிவீரராம பாண்டியன் என்னும் மன்னர் ஆட்சி செய்த ஊர் இன்றும் அதிராம்பட்டினம் என்னும் பெயரில் உள்ளது....கிலமண்டு மெலமண்டு அகமுடையார் தேவர் பாண்டியர் வம்சம் செந்தவங்கள் என்பதுகும் ஆதாரம் உண்டு...முதலில் அகமுடையார் வரலாறு தெரிந்தால் மட்டும் அகமுடையார் பற்றி பத்திவிடனும்....அகமுடையார் பற்றி உங்க இஷ்டத்துக்கு எழுதி வைக்க கூடாது...அகமுடையார் என்பது அரசகுடி....கோட்டை,கோவில் வேலை செய்தவர்கள் கிடையாது.....பொய்யான வரலாறை கூறுவதை விட்டு விட்டு உண்மை வரலாறை பதிவிடுங்கள்

    ReplyDelete
  8. நல்ல கதை .... அருமை வன்னியருக்கும் அகம்படிக்கும் சம்மந்தமே இல்லை அவர்கள் பழக்க வழக்கம் அனைத்துமே வேறு மறவரில் ஒரு பிரிவே அகம்படியர் அகம்படி என்று சாதியே இல்லையா பல நூறூ ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பல கல்வெட்டில் அகம்படி என்று குறிப்பிட்டுள்ளது லூசு புண்டை....

    ReplyDelete