Saturday, December 22, 2012

காளையார் கோவில் பள்ளனுக்கே சொந்தம்

பள்ளர்களின் கோவில் உரிமை என்ற கட்டுரைகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று தான்தோன்றி தனமாக கைக்கு வந்ததை எழுதி தள்ளும் கள்ளரின் ஒரு சில வார்த்தைகள் தாம் இவை. 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@மேகநாதன் முக்குலத்து புலி: திரும்பிய பக்கம் எல்லாம் எங்களுக்கும்(கள்ளர்களுக்கும்) கோவில் மரியாதை உள்ளது. ஒரு உதாரணமாக மருது பாண்டியர்கள் கட்டிய
கோவில்களில் காளையார் கோவில் போதுமா ?? ஒன்றா இரண்டா சொல்ல ஓராயிரம் கோவில்கள் என் பாட்டன்களுக்கே சொந்தமாக இரண்டு கோவில்கள்
இருக்கு ..அட போங்கப்பா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மள்ளரின் மறுப்புரை:
      என்ன காளையார் கோயிலைக் கட்டியது மருது சேர்வைக்காரர்களா? இப்படிச் சொல்ல கள்ளர்களுக்கு அசிங்கமா இல்லையா?. என் பாட்டனுக்கு,மள்ளனுக்கு கோயில்  கட்ட நீங்கள் யார்? இது எப்படி இருக்கிறது என்றால், இராமேஸ்வரம் கோயிலைக் கட்டியது மறவர் (கிழவன் சேதுபதி) என்று சொல்வது போலும், மீனாட்சியம்மன் கோயிலைக் கட்டியது நாயக்கர் (திருமலை) என்று சொல்வது போலும், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது மராட்டியர் (போஸ்லே) என்று சொல்வது போலும் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோயிலைக் கட்டியது தெலுங்கு பாளையக்காரர் (பிச்சாவரம் சமீன்தார்) என்று சொல்வது போலும் இருக்கிறது நீங்கள் சொல்லக்கூடிய கதை.
    உண்மையில், காளையார் கோயில் என்பது சங்க காலப் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சங்க காலத்தில் இதன் உண்மையான பெயர் ‘காளீஸ்வரர் என்பதாகும். ஆரம்பத்தில் இந்த இடம் ‘கானப்பேர் என்றே அழைக்கப்பட்டது. கி.பி 9 ஆம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாயனார் இதில் குடிகொண்ட எனது(பள்ளனின்) பாட்டனை ‘காளை என்று பாடியதால் காளையார் என்று மாறியது. இதுதான் காளையார் கோயில் என்று பெயர் வந்த கதை. சங்க காலத்தில் பாண்டியர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கும், 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் இங்கு இருந்த அந்நிய பாளையக்காரரான முத்துவடுகநாதன் மற்றும் அவரது சேவைக்காரர்களான மருது சகோதரர்களுக்கும் என்ன சம்மந்தம்? எப்படி மீனாட்சியம்மன் கோயிலைக் கட்டியது திருமலை நாயக்கன் இல்லையோ அதுபோல் காளையார் கோயிலைக் கட்டியது முத்துவடுகநாதன் மற்றும் மருது சேவைக்காரர் கிடையாது.
    அந்நியர் ஆட்சிகாலத்தில் கோயில்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதி சமஸ்தானத்தில் இணைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டது என்பதற்காக, அந்த சமஸ்தானதிபதி கட்டினார் என்று சொன்னால் இதைவிட பைத்தியக்காரத்தனமான பேச்சு வேறு எதுவும் இருக்க முடியாது.
     தெலுங்கன் (வீரபாண்டிய) கெட்டிப்பொம்மு மாதிரி பெயரில் (மருது) பாண்டியர் என்று இப்போது சேர்த்துக் கொண்டு, தங்களைப் பாண்டியர் பரம்பரை போல் நினைத்துக் கொண்டு பேசுவது, அவர்களுக்கு முன்பு காளையார் கோயில் பகுதியில் இருந்த அபிராமி என்ற தாசி மகன்கள் தங்களைப் பாண்டியர் என்று சொல்லிக் கொண்டதைவிட ரொம்பக் கேவலமாக இருக்கிறது.
கானப்பேர் என்று சங்க காலத்தில் அறியப்பட்ட காளையார் கோயில் பற்றிய புறநானூற்றுப் பாடல்:

".....அருங்குறும்பு உடுத்த கானப்பேர் எயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய..."(புறம் 21:6-7)
கானப் பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி பற்றி மூலங்கிழார் பாடியது.