Monday, June 10, 2013

தாழ்த்தப்பட்டவர் சரித்திரம் மறுப்புரை

தாழ்த்தப்பட்டவர் சரித்திரம்

தமிழக வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள்

பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம் இலக்கியமே. தாழ்த்தப்பட்ட மக்கள் இலக்கியங்களில் தலை மக்களாக இடம் பெறலாகாது என்ற இலக்கிய மரபு ஒன்று இருந்து வந்த அன்றையச் சூழலில் அவர்களைப் ஫ற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் மிக அரிதாகவே காணப்படுகின்றன. சிற்சில சொற்களையும் உவமைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆய்வை நடத்த வேண்டியுள்ளது.
தமிழ் இலக்கிய வரலாற்றின் துவக்க காலத்தில் இருப்பது தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் அகத்திணையியல், மரபியல் இரண்டும் ஜாதி அமைப்புக் குறித்த சில செய்திகளைத் தெரிவிக்கின்றன. பிரிவு பற்றிப் பேச வந்த அகத்திணையியல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவினரைச் சுட்டுகின்றது. இந்நால்வரும் "ஏவல் மரபினர்" (தொல் அகத்திணையியல்.26) எ஁ன்றும் குறிக்கப்படுகின்றனர். அதாவது "பிறரை ஏவிக்கொள்ளும் தொழில் தமக்குளதாகிய தன்மையை உடையவர்கள்" என்று இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார். இதிலிருந்து நான்கு குலத்தினரின் ஏவலுக்குக் கீழ்ப்பட்டுக் குற்றேவல் செய்த ஒரு பிரிவினர் சமுதாயத்தில் இருந்தனர் என்பது புலனாகிறது. அவர் யார்?
மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவினர்஖்஖ான மரபும் தொழிலும் வரையறுத்த மரபியல், அதனை அடுத்து, `அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை' (தொல்.மரபியல்:84) என்கிறது. இங்கு `இழிந்தோர் என்பதற்கு "நான்கு குலத்தினும் இழிந்த மாந்தர்" என இளம்பூரணர் உரை எழுதுகிறார். இந்த இழிந்த மக்கள் யார்?
நடுவண் ஐந்திணைக்குரிய தலைமக்களைப் பற்றிக் கூறிய பிறகு, அதன் புறத்தவாகிய கைக்கிளை, பெருந்~ திணைக்குரிய மக்களைப் பற்றி அகத்திணையியலில் பேசப்படுகிறது. "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்து என்மனார் புலவர்"
இதை முன்னெழுப்பிய இரு கேள்விகளுக்கான ஐயங்களுக்~ கான விடையாக஼க் கொள்வோம். இங்கு அடியோர் என்பவரைப் பிறருக்குக் குற்றவேல் செய்வோர் ' எனவும், வினை~ வலர் என்பவரைப் `பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோர் எனவும் நச்சினார்க்கினியர் விளக்கி உரைக்கிறார். இவர்கள் ஏன் அதனைந்திணைக்கு உரியர் அல்லர் என்பதற்கு இளம்பூரணர் நீண்டதொரு விளக்கம் தருகிறார்; அகத்திணையாவன அறத்தின் வழாமலும், பொருளின் வழாமலும், இன்பத்தின் வழாமலும் இயலல்வேண்டும். அவையெல்லாம் பிறருக்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும் அவர் நாணுக்குறைபாடு உடையவர் ஆகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவராகலானும், இன்பம் இனிய நடத்துவார் பிறர் ஏவல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்டு உரியர் ஆயினார்" என்கிறார். இது பிறருக்குக் குற்றேவல் செய்வோரின் சமூகப் பொருளாதார நிலையை விளக்குவதோடு அன்றைய இலக்கியங்கள் மேட்டுக்குடியினரின் இலக்கியங்களே என்ற உண்மையையும் தெளிவுபடுத்து஖ிறது. ஆக, பொருளாதார ஆதிக்கமும் சமூக மதிப்பும் கொண்டோர் ஒரு பக்கம்; அவர்களுக்கு அடித்தொழில் செய்தோர் ஒரு பக்கம் என்஼்று அன்றையச்சமூகம் பிளவு பட்டுக்கிடந்த஼து என்பது புலனாகிறது. அடிமை, இழிந்தோர் என்ற சொற்஖ள் குற்றேவல் செய்தோரின் சமூக இழி நிலையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
சங்க இலக்கியங்களில் துடியர் பறையர் என்போர் பேச஬்படுகின்றனர். துடி, பறை என்னும் தோல் கருவிகளை இயக்குபவர்கள் இவர்கள். இவர்கள் "இழிசினர் "என்றும் "இழி பிறப்பாளர்"என்றும் இலக்கியங்களில் இழித்துரைக்கப்படுகின்றனர்.
"துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின" (புறம்: 287)
"பூக்கோல் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே" (புறம்: 289)
"இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி' (புறம்:170)
"கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று (புறம்: 82) 65 இழிசினர் என்றும் இழிபிறப்பாளர் என்றும் அழைக்கப்படும் இவர்களின் தொழில் பறை மற்றும் துடியறைதல், தோல் பொருட்களைப் பழுதுபார்த்தல் என்று தோல்தொழிலோடு ஒட்டியதாகத் தெரிகிறது.
புலையன் என்பது ஏசத்தக்க இழிசொல்லாக இலக்கியத்தில் சில இடங்களில் கையாளப்படுகிறது. (கலி:72:4; 311:2) பறையர் துடியர் பாணர் ஆகியோரும் புலையர் என அழைக்கப்படுகின்றனர்.
...... புலையன் பேழ்வாய்த் தண்ணைமை இடந்தொட்டன்ன அருவி இழிதரும் பெருவரை நாடன் (நற்றிணை: 345:5-7)
"மலையமா ஊர்ந்து போகிப் புலையன் பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கவர்" (நற்றிணை77:1-2)
"புதுவன ஈகை வளம்பாடிக் காலின் பிரியாக் கவிதைப் புலையன்தன் யாழின்" (கலித்: 95:9-10)
இவர்கள் மட்டுமின்றி இழிதொழிலைச் செய்யும் வேறு சிலரும். உதாரணமாக சுடுகாடு காக்கும் வெட்டியான் துணி வெளுக்கும் வண்ணான் ஆகியோரும் புலையன் புலைத்தி என்ற பொதுப் பெயராகலேயே அழைக்கப்படுகின்றனர். "கள்ளி போகிய களரி மருங்கின வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்திட்ட சில்லவிழ் வல்சி புலையனேவப் புல்மேல் அமர்ந்துண்டு அழல்வாய்ப் புக்க முன்னும் பலர்வாய்த்திராஅர் பகுத்துண்டோரே" (஫ுறம்:360:16-2) 66 "அடியியல் விழவின் அழுங்கல் மூதூர் உடையோர் பான்மையின் பெருங்கை தூவா வறனில் புலைத்தி எல்லின் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம்" (நற்.90:1-4)
ஆக, அன்றை௟ச் சமூக அமைப்பில் பறையர்,துடியர், பாணர், வண்ணார், வெட்டியான் போன்ற வேலைப் பிரிவினர் இழி~ நிலைச் சாதியினராகக் கருதப்பட்டனர் எனக்கொள்ளலாம். அன்றைய விவசாயத் தொழில் சாதியினராக விளங்கியவர்~ கள் இவர்களா? இது பற்றி உறுதியாக஼க் கூறமுடியாவிடினும் சில யூகங்களை முன்வைக்கச் சங்க இலக்கியம் இடமளிக்கிறது. நெல்கதிரை அறுவடை செய்யும் மக்கள் பறையை முழக்கிக் கொண்டே அறுவடை செய்ததாக இலக்கியங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.
"வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇக் கண்மடல் கொண்ட தீந்தேன் இரிய" (புறம்:348)
"வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரிய" (புறம்:350)
"வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்" (அகம்: 204)
"வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச் செங்கண் எருமை இனம்பிரி பொருத்தல்" (மலைபடு:471-2)
"ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன்மைவினைநர் அரிபறை" (மதுரை.காஞ்: 261-62) பறையறைவர்கள் இழிந்தவர்கள், புலையர்கள் என்னும் போது, இங்கு அறுவடைத் தொழிலில் ஈடுபட்டவர்களும் இழிநிலை மக்களாக இருக்க வேண்டும். 67 மதுரைக்காஞ்சியில் வன்கைவினைஞர் (அதாவது வலிய கை~ யினால் தொழில் செய்பவர்கள் என்ற பொருளில்) எனச் சுட்டப்படுவது போல வேறு சில இடங்களில் நெல் வயல் களின் களை பறிப்பவர்களும் அவ்வாறே சுட்டப்படுகின்றனர். அத்தோடு கடைசியர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
"கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும். (குறுந்:309)
"கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர் சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் மலங்குமிளிர் செருவில் தனம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூரக்கண் துணியல் புது நெல்வெண்சோற்றுக்கண்ணுறையாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் வன்கை வினைஞர் " (புறம்:61)
"கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்தீ தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கண் நெடுங்கயல் சின்மொழிக் கடைசியர் வெங்கண தொலைச்சிய விருந்தின் பாணி" (சிலம்பு10:127-131) இவை முன்குறிப்பிட்ட யூகத்தை வலியுறுத்துவனவாக அமைகின்றன. அதாவது விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்஖ளின் `கடைநிலை' மக்களே என்பது "கடைசியர்" என்று சொல்லால் புலனாகிறது. சங்க காலத்தில் பண்ணை அடிமைகள் இருந்தனரா என்ப஼தற்கான 68 தற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லையெனினும், இக் கடைசியர் தங்கள் சமூக நிலையில் அடிமைகளின்று பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை எனக் கொள்ள இடமுண்டு" என்கிறார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி!
இலக்கியங்கள் சுட்டும் `உழவர் ' என்ற சொல்லுக்கு உரியவர்களாக விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபடும் இக்கீழ் மக்களைக் கருத இடமில்லை. மருத நிலங்களில் வாழும், உழுதுண்பாராகிய சிறுநிலை உடைமையாளர்களே 'உழவர் ' என்று சுட்டப்படும் சொல்லுக்கு உரியவர் களாகத் தெரிகிறார்கள்.
"வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான் வீழ்குடி உழவன் வித்துண்டாங்கு" (புறம் :230:12-13)
"ஈரச் செவ்வி உதவின வாயினும் பல்லெருத்துள்ளும் நல்லேருது நோக்கி வீறுவீறாயும் உழவன் போல" (புறம்:289:1-3)
"வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை இனைச்சிதர் ஆர்ப்ப நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்குழவர்" (அகம்:41:1-6)
நிலம், ஏர், எருது ஆகிய உற்பத்திச் சாதனங்க஼ளை உழவர் உடைமையாகக் கொண்டிருந்தனர். இதனடிப்படையில் விவசாய உற்பத்தியல் உடல் உழைப்பில் ஈடுபட்ட `கடை நிலை' மக்கள் நிலஉடைமையற்றவர்களாக இருந்தனர் எனவும் கொள்ளலாம். 69 சங்க இலக்கியங்களில் புலையர், பறையர், கடைசியர் என்று சுட்டிச் சொல்லப்பட்டவர்கள் தாழ்ந்த சாதியினரே; நில உடைமையற்ற விவசாயக் கூலிகளே; இன்றைய பள்ளர் பறையர் சாதியினரின் முன்னோர்களே என்ற முடிவுக்கு வருவதற்கான ஆதாரங்கள் இடைக்கால இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.
சீவக சிந்தாமணி ஏமாங்க஼த நாட்டின் வளம் பற்றிக் கூறும் போது, நஞ்சை நிலத்தில் நிகழும் விவசாய உற்பத்தி பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. அங்கு உழவு முதல் அறு வடை ஈறாக உள்ள விவசாயத் தொழிலைச் செய்பவர்஖ள் `கடைசியர் ' என்றே அழைக்கப்படுகின்றனர்.
"சேறமை செருவினுள் செந்நெல் வான்முளை வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் நாளிது பதமெனப் பறித்து நாட்செய்வார் கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார் (பா. எண் 45) கடைசியர் பெண்கள் களை பறிக்கும் தொழிலின் ஊடே மது அருந்திக் களித்தாக மற்றொரு பாடல் கூறுகிறது.
"வளைக்கையால் கடைசியர் மட்டு வாக்கலின் திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக் களிப்ப உண்டு இள அனங் கன்னி நாரையைத் திளைத்தலின் பெடைமயில் தெருட்டுஞ் செம்மற்றே" (பா.எ:50)
இன்றைய பள்ளர் பறையர் சாதியினரின் முன்னோர்களே என்ற முடிவுக்கு வருவதற்கான ஆதாரங்கள் இடைக்கால இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.சீவக சிந்தாமணி ஏமாங்க஼த நாட்டின் வளம் பற்றிக் கூறும் போது, நஞ்சை நிலத்தில் நிகழும் விவசாய உற்பத்தி பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. அங்கு உழவு முதல் அறுவடை ஈறாக உள்ள விவசாயத் தொழிலைச் செய்பவர்஖ள் `கடைசியர் ' என்றே அழைக்கப்படுகின்றனர்."சேறமை செருவினுள் செந்நெல் வான்முளை வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் நாளிது பதமெனப் பறித்து நாட்செய்வார் கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார் (பா. எண் 45) கடைசியர் பெண்கள் களை பறிக்கும் தொழிலின் ஊடே மது அருந்திக் களித்தாக மற்றொரு பாடல் கூறுகிறது.வளைக்கையால் கடைசியர் மட்டு வாக்கலின் திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக் களிப்ப உண்டு இள அனங் கன்னி நாரையைத் திளைத்தலின் பெடைமயில் தெருட்டுஞ் செம்மற்றே" (பா.எ:50)சேக்கிழாரின் ஆதனூர் புலைப்பாடி வருணனை புலையர்களின் வாழ்க்கைச் சூழலை யதார்த்தமாகச் சித்திரிக்கிறது.மற்றவ்வூர்ப் புறம்பணையின் வயல்மருங்கு பெருங்குலையில் சுற்றம் விரும்பி கீழ்மைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப் பற்றிய கொடிச்சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில பல நிறைந்துளதோர் புலைப்பாடி.கூர்உகிர் மெல்லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயில் முன்றிலினின்ற வள்ளுகிர நாய்த்துன்ற பறழ் கார் இருப்பின் சரிசெறிகைக் கருஞ்கிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென குரைப்படக்கு மரைக்கசைத்த விருப்புமணிவன்சிறுதோல் மிசைஉழத்தி மக஼உறக்கும் நிழல்மருதுந் தன்சினைமென் படையொடுங்குந் தடங்குழிசிப் புதைநீழல் மென்சினைய வஞ்சிகளும் வசிப்பறை தூங்கின மாவும் புன்சிறுநா௟்ப் புனிற்றுமுழைப் புடைத்தெங்கும் முடைத்தெங்கும்செறிவலித்திண் கடைஞர் வினைச்செயல்புரி வைகறையாமக் குறியளக்க அளைக்குஞ் செங்குடுமி வாரமச் சேக்கை வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கெல்லாம் நெறிகுழல் புன்புலைமகளில் நெற்குறு பாட்டொலி பரக்கும்புள்ளுந்த஼ண் புனல்கலிக்கும் பொய்கையுடையப் புடையெங்குந் தள்ளுந்தாள் நடையசையத் தளையவிழ் பூங்குவளை மது விள்ளும் பைங்குழல் கதிர்நெல் மிலைச்சி புன்புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறையுங் கலிக்கும்(பா:6-10) புலையர்கள் இங்கு`புன்புலை மகளிர்' என்றும் புன்புலைச்சியர்கள் என்றும் அழைக்கப்படுவதிலிருந்து அவர்களின் சமூக இழிநிலையை உணரலாம். இவர்களே செறிவலித்திண் கடைஞர் இப்படித்தாகிய கடைஞர் இருப்பின் என்று கடைஞர், கடைசியர் எனவும் சுட்டப்படுகின்றனர். இவர்களுக்கான குடியிருப்புகள் உயர்சாதியார் இருந்த ஊருக்குப் புறத்தே வயல்களுக்கு நடுவேயான மேட்டுநிலத்தே தனித்து அமைந்து இருந்தது என்பதைப் `புறம்பணையின் வயல் மருங்கு.... புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்துளதோர் புலைப்பாடி' என்ற வரிகள் உணர்த்துகின்றன. உயர்சாதி நில உடைமையாளர் வீடுகளைப் `புயலடையும் மாடங்கள்' என வருணிக்கும் சேக்கிழார் புலையர்களின் குடியிருப்பைப் `பைங்கொடிச் சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற் குரம்பைச் சிற்றில் ' என அதன் ஏழ்மை நிலை தோன்றச் சித்திரிக்கிறார். இது இரு வர்க்கத்திற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வைத் தெளிவாக வெளிப்படுத்து஖ிறது. `கீழ்மைத் தொழில் உழவர்' என்பது இவர்களே விவசாயக் கூலிகளாக விளங்கியதை மெய்ப்பிக்கும். இது தவிர மாடறுக்கும் தொழிலுடைய இவர்஖ள் அதிலிருந்து கிடைக்கும் தோல், நரம்பு, கோரோசனை முதலாய பொருட்களை உயர்சாதியார் கோயில்களுக்கு அளித்து வந்தனர். தோலும் விசிவாரும் பேரிகை முதலாய கருவிகளுக்கும் ,நரம்பு வீணைக்கும், யாழுக்கும், கோரோசனை அர்ச்சனைக்கும் பயன்படுத்தப்பட்டன. இவ் ஊர் கோயில் பணியைச் செய்து வருபவருக்கு ஊர்ப்போதுவிலிருந்து `பறைத்துடவை'என்னும் பறைத் தொழில் மான்யம் அளிக்கப்பட்டது."ஊரில்஼விடும் பறைத்துடவை உணவு உரிமையாகக் கொண்டு சார்பில் வரும் தொழில் செய்வார் தலைநின்றார் தொண்டினால் கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில்தொறும் பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும் போர்வைத்தோல் விசிவாரென்று இனையனவும் புகலுமிசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர்பிரான் அர்ச்சனைகட்கு ஆர்வத்தினுடன் கோரோசனையும் இவை அளித்துள்ளார்." என்ற நந்தனைக் குறித்த அறிமுக வரிகளால் அறியலாம். இவர்஖ள் கோயில்களுக்கு உள்ளேயும், உயர்சாதியார் குடியிருந்த ஊர்களுக்கு உள்ளேயும் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட உண்மைக்கு நந்தனே சான்று.நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் இப்பறையர்களின் தொழில் விரிவாக எடுத்துரைக்கப்படும்.நாத்து நரம்புகளைச் சுமப்பதும் உழுவதும் நஞ்சை வயலைச் சுற்றி-வருவதும் வளம்பெறப் பாத்திகட்டி விதை-தெளிப்பதும் பறிப்பதும் பாயுமடையைத் திறந்து- விடுவதும் அன்றியில் சேரியண்டையில் குடியிருப்பதும் பதறுகள் சிதறித் தூற்றி நெல்-அளப்பதும் பார்ப்பதும் ஊரை வளைத்துத் தமுக-கடிப்பதும் மதுக்குடம் உண்டு களித்துநா-முறங்குவது அன்றியில்ஆண்டைமார்களிடும்-பணிவிடை செய்வதும், அருகில் நின்றுகும்பிடுவதும் நடுவதும் தாண்டி நடந்து கோல்-பிடிப்பதும் அளப்பதும் தனித்துச் சுடலைதினம்-காப்பதும் அன்றியில்.... இது பறையர் வகுப்பாரின் தொழிலையும் சமூகக் கடமையையும் தெளிவாக விவரிக்கிறது.
இதுவரை இலக்கியத்திலோ பிறவற்றிலோ இடம்பெறாத `பள்ளர்' என்ற வகுப்பாரைப் பற்றிப் பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கியங்கள் கி.பி.பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவைகள். இவைகளில் காலத்தால் முந்திய஦ு முக்கூடற்஫ள்ளு, இப்பள்ளு இலக்கியங்களில் பேசப்படும் பள்ளர்கள் விவசாயத் தொழிலாளர்கள்; கடைநிலை மக்கள் இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணும் முன் பள்ளு இலக்கியம் காட்டும் உற்஫த்தி உறவுமுறை ஫ற்றிக் காணலாம்.முக்கூடற்பள்ளு இரண்டு வர்க்கங்களை முதன்மைப் படுத்துகிறது. உருவமற்ற நிலப்பிரபுவான இறைவனின் பிரதிநிதியாய் இருந்து நிலத்தைக் கண்காணிக்கும் பண்ணை விசாரிப்பான்; விவசாய உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் பள்ளர்கள் என்ற இரு வர்க்கத்தினர். நிலம் முக்கூடலில் கோயில் கொண்டுள்ள அழகர் ஆகிய திருமாலுக்குச் சொந்தமானது."முக்கூடல் அழகர் பண்ணை" (பா:36) "கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை"(பா.91) "முக்கூடல்பரமனார் அழகர் தம் பண்ணை"(பா.113) "அடிக்குள் அடங்கும் படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே." (பா.129)ஆகிய வரிகள் இதை மெய்ப்பிக்கும் இடைக்காலங்஖ளில் தேவதானம் முதலான பெயர்களில் மன்னர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலவகையாக இதுவும் இருக்கலாம். இந்நிலங்களைப் பள்ளருக்குப் பிரித்துக் கொடுத்து, உற்பத்தியை மேற்பார்வையிடுபவனே பண்ணை விசாரிப்பான். இவன் கோயிலின் பிரதிநிதியாகவோ ,விசயநகரப் பேரரசுக் காலத்தில் மன்னனால் நியமிக்கப்பட்ட பாருபட்டயக் காரனாகவோ இருக்கலாம்.பண்ணைகளில் நேரடியான உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் பள்ளர்கள். இவர்கள் கோயில் என்னும் உருவமற்ற ஆனால் நிறுவன வடிவமான நிலப்பிரபுவுக்குச் சொந்தமான பண்ணையோடு பிணைக்கப்பட்ட பரம்பரைக் கொத்தடிமைகள். "பண்ணைஏவலறும் பள்ளியர்"(பா.5) "முத்தமிழ் நாட்டழகர் கொத்தடியான்"(பா.13) என்று இவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதே இதற்குச் சான்று. இந்தக் கொத்தடிமைப் ஫ள்ளர்களுக்குள்ளே ஒரு தலைமைப் பள்ளன். அவன்஼தான் முக்கூடல் பள்ளுவில் வரும் வடிவழகக் குடும்பன. இவன் பண்ணை விசாரிப்பானால தலைவனாக நியமிக்கப்படுவதாகத் தெரிகிறது.பள்ளர்்களுக்கெல்லாம் தலைமையைப் பள்ளனாக இருக்கும் வடி வழகக்குடும்பன், கோயில் நிலத்தை எல்லாம் சேரிப் பள்ளர்களுக்குப் பிரித்துக் கொடுத்துச் சாகுபடி செய்஖ிறான், அறுவடையில் அவரவர் செலுத்த வேண்டிய பங்கை வசூலித்துப் பண்ணைக்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் இவனதே. முக்கூடல் பள்ளுவில் தினச்சக்கரம், பெரிய நம்பி திருமாளிகை, ஏழு திருப்பதிக் கட்டளைகள், வடமேலந்திரன் மடம், ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட நெல் அளக்கப்பட்ட செய்தியும், ஆடித்திருநாள் விழாவிற்கு 6000 கோட்டை நெல்லும், பங்குனித் திருநாள் விழாவிற்கு6000 கோட்டை நெல்லும்,மண்டகப்படி சார்த்தும் செலவிற்கு 1000 கோட்டை நெல்லும், உள்ளூர் அந்தணர்க்கு 4000 கோட்டை நெல்லும்,நாள் வழிபாட்டிற்கு 8000 கோட்டை நெல்லும் வடிவழகக் குடும்பனால் அளந்து குடுக்கப்பட்ட செய்தி வருகிறது. விளைச்சலில் பள்ளர் பெறும் பங்கு எவ்வளவு என்பதற்கான சான்று இல்லை, எனினும் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவே கொடுக்கப்பட்டு மீதியனைத்தும் பறிக்கப் பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. "முப்பழமும் சோறும் உண்ணவே- நடத்திக்கொண்டீர்" என இளையபள்ளி பண்ணை விசாரிப்பானை எதிர்த்துப் பேசுவது இந்த யூகத்துக்கு இடமளிக்கிறது.பள்ளர்கள் தங்களை அடிமை யென்றும், பண்ணை விசாரிப்பானை ஆண்டை என்றும் அழைக்கின்றனர். இச்சொல்லாட்சி ஆண்டான்- அடிமை யென்னும் நிலப்பிரபுத்துவ உறவுமுறையின் கொடுமையை வெளிப்படுத்துகிறது."பக்கமே தூரப் போயும் தக்க சோறென வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர்" என்ற குடும்பன் கூற்று பள்ளர்கள் தீண்டத்தகாதவர்஖ளாக நடத்தப்பட்ட சமூக நடைமுறையைப் புலப்படுத்தும். குடும்பனைச்சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே" என மூத்தபள்ளி பண்ணை விசாரிப்பானிடம் முறையிடுவது அடிமைகளைப் பண்ணைவிசாரிப்பான் சவுக்கால் அடிக்கும் வழமுறை நிலவியதை மெய்ப்பிக்கும். அடிமையின் காலில் மரக்கட்டையை மாட்டி அப்பால் இப்பால் நகர முடியாதபடி விலங்கிடுவது மற்றொரு வகைத் தண்டனை. கண்சிவந்து பண்ணைக்காரணங்கே வந்த பள்ளன்தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே " (93) முக்கூடல் பள்ளுவில் வடிவழகக் குடும்பன், பண்ணை விசாரிப்பானால் இவ்வாறு தண்டிக்கப்படுகிறான். இவ்வுறவு முறையின் கோரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆவணங்களில் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது.அதற்குமுன் வரலாற்றில் இதுவரை இலக்கியத்திலோ கல் வெட்டுக்களிலோ செப்பேடுகளிலோ சட்டப்படாத இப்பள்ளர் யார் என்ற கேள்விக்கு விடை காணலாம். இது குறித்து வரலாற்று அறிஞர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அவை குறித்துக் கேசவன் விரிவாக ஆய்கிறார்நிலஉடைமையாளர்களான வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்தனர் என்றும் இவர்஖ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன்top: 0.4em; text-align: -webkit-auto;">வேளாளர்களுக்குள்ளே இழிநிலை அடைந்த ஒரு பிரிவினர் பள்ளர் என்னும் நிலைக்குத் தாழ்ந்தனர் என்பது மற்றொரு கருத்து. இக்கருத்தைத் தங்கராஜ் பின்வருமாறு விளக்குகிறார். "உத்தேசமாக 14,15 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே பண்ணை விவசாய முறையும் பண்ணையாள் (வேலைக்காரர்) அமர்த்திச் செயல்பட்ட விவசாய முறையும் வளர்ந்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பெருமளவு நிலவுடைமையும் பண்ணைமுதலாளிகள் உருவானதும் இக்காலத்திற்குப் பின்னரே எனக் க஼ொள்ளலாம். நிலஅபகரிப்பு, நிலம் வாங்கல் விற்றல் குத்தகை வாரம்-கடன் போன்ற நிலம் சம்பந்தப் பட்ட வழக்கங்கள் இக்காலத்திற்஖ுப் பின்னரே உருவாகி~ யிருக்க வேண்டும். இதனால் அதிக அளவு நிலம் சேர்த்த வேளாளர்கள் தங்களுக்குத் துணை வேலையும் பண்ணை வேலையும் செய்ய அவர்஖ளுக்குள்ளேயே நிலம் சேர்க்க முடியாது போனவர், நிலத்தைப் ஫றிகொடுத்தவர், நிலத்தை அடமானம் வைத்துவிட்டுத் திருப்ப முடியாது போனவர், நிலமே இல்லாது இருந்தவர், ஏழையாயிருந்தவர் ஆகியவர்~ களைக் கூலிக்கு அமர்த்தியிருந்தனர். நிலவுடைமை வாழ்க்கையில் அபலையாகிவிட்ட வேளாளர், நிலவுடைமையில் வெற்றி பெற்ற வேளாளர்களிடமே குத்தகை-வாரம் முதலிய 77 முறையில் நிலம்பெற்று பயிர்த்தொழில் செய்திருக்கின் றனர். இவ்வகை வேளாளரே காலப் போக்கில் தனிக்குலத்தினராக அதாவது ஜாதியினராக உருவாகியுள்ளனர்.இவ்விரு கருத்தையும் கேசவன் மறுக்கிறார்."பள்ளர்கள் ஒரு குடியேற்றம் பிரிவினர் என்்று கூறும் தர்ஸ்டன் எந்தக் காலத்தில் இக்குடியேற்றம் நடந்தது என்றும், எந்த இடத்திலிருந்து இவர்கள் குடியேற்றப்பட்டனர். என்றும் விளக்கவில்லை. மேலும் தமிழகத்தில் குறிப்பாகத் தஞ்சை மதுரை நெல்லை மண்டலங்களில் பல்வேறு ஜாதியினரின் குடியேற்றங்஖ள் நடந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவே தவிர பள்ளர் சாதியினரின் குடியேற்றத்திற்கு வரலாற்று ஆதாரம் இல்லை. தங்கராஜ் கூறுவதைப் போல கி.பி.14,15 ஆம் நூற்றாண்டு களுக்குப் பின்தான் தமிழகத்தில் வாங்கல் ,விற்றல், குத்தகை வாரம்,கடன் போன்ற நிலம் தொடர்பான வழக்கங்கள் உருவானவை என்றில்லை. அதற்கும் முந்தைய காலங்களிலேயே நாம் இவற்றைக் காண்கிறோம். வாரம், காட்டுக்குத்தகை, மேல்வாரம், கீழ்வாரம் எனும் சொற்கள் குத்தகையைத் தெரிவிக்க஼ின்றன. நிலம் விற்பனைக்கும் வாங்கலுக்கும் கல்வெட்டுச் செய்திகள் ஆதாரமாக உள்ளன. எனவே கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத்தகைய வழக்கங்கள் நடந்தேறின் என்றறிகிறோம்.மேலும் அக்காலத்தில் பள்ளர்கள் குத்தகை பெறும் உழவர்களாக இருந்ததே இல்லை. பள்ளுப் பாடல்களில் வரும் பள்ளர்கள் குத்தகை பெறுபவர்஖ள் அல்லர்; பண்ணை அடிமைகளே. கி.பி. 1843 க்கு முன் ஫ள்ளர்கள் மேல்ஜாதி நிலவுடைமை மக்களுக்குப் பண்ணை அடிமைகளாகவே இருந்தனர்."பள்ளர்கள் எவ்வித விதிவிலக்கும் இன்றி விவசா௟த் தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். இதற்கு முந்திய காலங்஼களில் 78 எவ்்வித ஐயத்துக்கும் இடமின்றி இவர்கள் நிலமற்ற கட்டுண்ட அடிமைகளாகவே இருந்தனர். எனினும் இன்று அவர்களின் 22 சத௉வீதம் பேர் பண்ணையாட்஖ளாக உள்ளனர். 38 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் குத்தகை~ யாளர்களாக உள்ளனர். 39 சதவீதத்தினர் நாட்கூலியாக உள்ளனர். ஒரே ஒரு நபர் மட்டுமே மிகச் சிறிய நிலத்தை உடைமையாக்கி விவசாயம் செய்்கிறார்" என்஖ிறார் த஼ஞ்சை மாவட்டம் கும்பா பேட்டை கிராமத்தை ஆய்வு செய்தசமூக வியலறிஞர் கத்லீன் கஃப். இது தஞ்சைக்கு மட்டுமின்றித் தமிழகத்திற்கே பொருந்தும் எனலாம். எனவே அண்மைக் காலத்திய சமூக வரலாற்று நிகழ்வுகளை 3,4 நூற்றாண்டுகளுக்கு முந்தைய சமூக நிகழ்வு஖ளோடு அப்படியே பொருத்த முடியாது. எனவே, குத்தகைதாரர்களான வேளாளர்஖ள் இழிநிலை யடைந்து பள்ளர்களாக உருவாகியிருக்க வாய்ப் பில்லை என்கிறார் கேசவன்.கி.பி. 1500 வரை வரலாற்று ரீதியாகத் தீண்டாமை குறித்து ஆராய்ந்த டாக்டர் அனுமந்தன் பள்ளர்களின் தோற்றம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறார்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தை வேளாளர்கள் தாக்கி அங்கே குடியமர்ந்த போது பல்லவர்களை ஒடுக்கினர். அந்நேரத்தில் வேளாளர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்வகுப்புப் பல்லவர்கள் சோழர் படையில் சேர்ந்து படையாச்சி என்றழைக்கப்பட்டனர் என்றும், தாழ்நிலைப் பல்லவர்கள் அடிமையாக மாறிப் பள்ளர்களாக உருமாறினர் என்றும் இவர் கருத்துத் தெரிவிக்கிறார்.ஆனால் பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்த மெய்க்கீர்த்திகள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் பள்ளர் என்ற சமூகப் பிரிவினர் காணப்படவில்லை. ஜாதி முறைகளைச் சொல்லும் கல்வெட்டுகூட அந்தணரிலிருந்து புல்லுப்பறிக்கிற பறமன்வரை என்றுதான் கூறுகிறதே தவிர பள்ளர் இனத்தைக் குறிப்பிடவில்லை. நிகண்டுகளிலும் இலக்கியங்களிலும்கூட குறிப்புக்கள் இல்லை. எனவே டாக்டர் அனுமந்தன் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை என மறுக்கும் கேசவன் முடிவில் தமது கருத்தை முன் வைக்கிறார்.கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் விசயநகரப் நகரப் பேரரசின் ஒரு பகுதியாக மாறிய தமிழகத்திற்குள் ஏராளமான குடியேற்றங்஖ள் நடந்தேறின. கம்மவார்களும், நாயக்கர்களும் ரெட்டியார்களும் , நிலஉரிமை பெற்றுச் சிற்சில பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சிலர் ஆயக்கார அமைப்பின் அதிகாரிகளாகவும் ஆனார்கள். இவர்கள் மட்டுமின்றி கைவினைஞர்களும் ,பணியாளர்களும் குடியமர்த்தப்பட்டனர்... கைவினைஞர்களாகவும், பணியாளர்~ களாகவும் இருந்த சேணியர், சாலியர், வண்ணார்,ஒட்டர் தொம்பரவர், சக்கிலியர் ஆகியோரின் குடியேற்றத்தினால் ஏற்கனவே இவர்களது தொழில்களைச் செய்து வந்த மக்கள் மத்தியில் ஒருவித வேலைப்பிரிவினை தொடங்கியிருக்கலாம். முந்தைய குடிமக்கள் தம் தொழிலை முழுவதும் கைவிட்டு, வேறு தொழிலைச் செய்திருக்கலாம். அல்லது தம் தொழில்களில் ஏதாவது ஒன்றை மட்டும் ஖ுறிப்பாக எடுத்துக்கொண்டு ஏனைய தொழில்களை விட்டிருக்கலாம்.அன்றைய தமிழகத்தில் தோல்தொழில், சங்கு ஊதுதல் மாடு , அறுத்தல், பண்ணை அடிமை வேலை செய்தல் போன்றவற்றைப் பறையரே செய்தனர். குடியேற்றப்பட்ட தெலுங்குச் சக்கிலியர்கள் பிணம் எடுத்தல், மாடு அறுத்தல் தோல், செருப்பு தைத்தல் போன்ற தொழில்களைச் செய் தனர். சக்கிலியர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டதற்கான சான்று இல்லை. ஆயினும் சக்கிலியர் தொழில்களுக்கும் 80 பறையர் தொழில்களுக்கும் சில ஒற்றுமைத் தன்மைகள் உண்஼டு. மாடறுத்தல், தோல்தொழில் போன்றன இவ்விரு ஜாதியினருக்கும் பொதுவான தொழில்களாக இருந்த஼ன. இத்தன்மை பறையர்஖ளுக்குள்ளே ஒருவித வேலைப் பிரிவினையை உண்டுபண்ணியிருக்கலாம்.அதாவது சக்கிலியர் குடியேற்றத்திற்குப் பின்னால் பறையரில் ஒரு பிரிவினர், இருவருக்கும் இடையே இருந்த பொதுவான தொழிலைக் கைவிட்டு, இருவரையும் வேறுபடுத்தும் தொழிலான பண்ணை அடிமைத்தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருக்கலாம். காலம் செல்லச் செல்லப் பண்ணை அடிமைத்தனத்திலேயே இருந்து, பண்ணைத் தொழிலை மட்டுமே கவனிக்கக்கூடிய சாதியினராக உருவெடுக்கக் காரணமாயிருந்தது எனலாம். வேறு தொழில்களையும் விட்டு விடாது செய்து கொண்டிருந்தவர்கள் பறையர்களாகவே இருந்தனர். வயல்களில்- பள்ளஙகளில் மட்டுமே தொழில் செய்த வேலைப் பிரிவினர் பள்ளர் எனப்பட்டனர் எனலாம் என்கிறார் கேசவன்.ஆக பள்ளர்கள் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டு கால அளவில் தமிழகத்தில் அன்றிருந்த பறையர் இனத்தில் இருந்து பிரிந்த ஜாதியினர் என்ற முடிவை ஒப்புக்கொண்டால், இடைக் காலத்திலும், பண்டைக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தின் கடைநிலையிலிருந்த ,இழிநிலையிலிருந்த, மக்கட் பிரிவினரான கடைசியர், இழிசினர், புலையர் பறையர் ஆகியோரின் வாரிசுகளே இவர்களும் என்பது தெளிவாகிறது.


மறுப்புரை:
    சங்ககாலத்தில் தீண்டத்தகாதார் என்ற மக்கள் தமிழகத்தில் கிடையாது. இந்தக் கட்டுரையாளரின் நோக்கம் பள்ளர்களை வந்தேரிகளாகச் சித்தரித்து, அதன்மூலம் அவர்கள் ஆரம்பகாலம் முதலே அடிமையானவர்கள், தாழ்ந்தவர்கள் என நிறுவ முயற்சித்தலேயாகும். அதற்காக அவர் ஆதாரங்களாக காட்டுபவை: சங்க காலத்தின் நான்கு இனப்பிரிவான ஏவல் மரபினர், இழிந்த மக்களாகச் சுட்டப்படும் ‘இழிசினர் பறையர் என்ற இனம், கடைஞர் மற்றும் கடைசியராகக் காட்டப்படுபவர், பறைத்துடவை, பள்ளு இலக்கியத்தில் பள்ளரின் நிலை, பறையரிலிருந்து பள்ளர் உருவானர் என்ற கோ.கேசவன் கூற்று மற்றும் அன்னியர் ஆட்சியில் பள்ளரின் நிலை ஆகியன. மேற்கூறிய ஆதாரங்கள் அனைத்தும் இந்தக் கட்டுரையில் சொல்லியபடி உண்மைதான் என்று நிரூபனமானால் பள்ளர்கள் என்போர் வந்தேரிகள் என்பதும், அவர்கள் அடிமைகள் என்பதும், அவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதும் மற்றும் அவர்கள் பறையரிலிருந்து உருவானவர் என்பதும் உண்மையாகும். இதைப்பற்றி விலாவாரியாகப் பார்க்கலாம்.

    சங்க காலத்தின் மக்கள் பற்றி அறியத் துணை புரிவது சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியமானது நான்குவிதமான நில அமைப்பான குறிஞ்சி,முல்லை,மருதம் மற்றும் நெய்தலை குறிப்பிடுகிறது. இதைத் தவிர குறிஞ்சியும்,முல்லையும் திரிந்து உருமாறிய ஒரு நிலமாகக் கொண்டு அதனைப் பாலை என அடையாளப்படுத்துகிறது. அந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் பற்றிக் கூறும்போது, குறிஞ்சி நிலமக்கள் குறவர் மற்றும் குறத்தி என்றும், முல்லை நிலமக்கள் இடையர் மற்றும் இடைச்சியர் என்றும், மருத நிலமக்கள் மள்ளர் மற்றும் மள்ளத்தியர் என்றும், நெய்தல் நிலமக்கள் நுழையர் மற்றும் நுழைச்சியர் என்றும், பாலை நிலமக்கள் எயினர் மற்றும் எயிற்றியர் என்கிறது. சிலர் கூறுவது போல் தற்கால கள்ளர் மற்றும் மறவர் என்போர் பாலை நிலமக்கள் கிடையாது. ஏனென்றால்,சங்கத் தமிழ் இலக்கியத்தில் தற்கால கள்ளர்,மறவர்களுக்கு இடம் இல்லை. சங்க இலக்கியத்தில் பாலை மக்களாக காட்டப்படுகின்ற கள்ளர் மற்றும் மறவர் என்போர் உண்மையில் தமிழ் மக்களான மழவர் ஆவார். இதைத் தவிர போர் மறவராகச் சுட்டப்படுபவர் மருத நில மள்ளர் ஆவார்.

    மருத நிலமக்களான மள்ளர் யார் என்ற கேள்விக்கு திவாகர மற்றும் பிங்கல நிகண்டுகள் கீழ்கண்டவாறு தெளிவுபடுத்துகின்றன.

‘அருந்திரல் வீரர்க்கும் பெருந்திரல் உழவர்க்கும்
வருந்தகைய தாக்கும் மள்ளர் எனும் பெயர்  -- திவாகர நிகண்டு

‘செருமலை வீரரும் திண்ணியோரும் மருதநில
மக்களும் மள்ள ரென்ப  ---- பிங்கல நிகண்டு

மேற்கண்ட இரு நிகண்டுகளும் மள்ளர் என்போர் மருத நிலமக்கள், வன்மை(வலிமை) மிக்கவர் மற்றும் உழவர் என்று அருதிட்டுக் கூறுகிறது. ஆனால், மருத நில மக்கள் பற்றிக் குறிப்பிடும் போது வரலாற்றார் மள்ளர் மற்றும் மள்ளத்தியர் என்ற மரபுச் சொல்லைச் சுட்டாமல்,உழவன் மற்றும் உழத்தியர் என்ற தொழிற் பெயரால் மட்டும் தவறாகக் குறிப்பிடுகின்றனர். உண்மையில், மள்ளர் என்போர் மருத நிலத்தார்; மள்ளர் என்போர் நானில மக்களையும் அடக்கியாண்ட வன்மை(வலிமை)மிக்க வீரர்; மள்ளர் என்போர் உழவர். இந்த மள்ளர்கள்தான் தமிழ்த் தலைக்குடிமக்கள். இவர்கள் தற்காலத்தில் யார் என்ற உண்மைச் செய்தியை இந்தக் கட்டுரையாளர் வசதியாக மறைத்து விடுகிறார். சரி இவர் சுட்டக்கூடிய ஏவல் மரபினரான அரசர்,அந்தணர்,வணிகர் மற்றும் வேளாளர் என்போர் யார் என்பதற்கான விடை காண்போம். 

    சங்க காலத்தில் காட்டப்படுகின்ற நானிலங்களில், ஆற்றின் கரையோரங்களில் அமைந்த மருத நிலந்தான் உற்பத்திப் பொருளான நெல் விளைவிற்கேற்ற வளமிக்க நிலம். அந்நிலத்தில்தான் கணவன் மற்றும் மனைவி என்ற நாகரிகத்தின் அடிப்படைக் கூறான ‘குடும்பம் என்ற அமைப்பு உருவாகியது. பண்டைய காலத்தில் உற்பத்திப் பொருளான நெல்லைச் சந்தைப்படுத்துவதானது பண்டமாற்று முறையிலேயே நடந்தது. எனவே,மருத நில மக்கள் தொகை பெருகியபின் பண்டமாற்றிற்கு வணிகரும்,உற்பத்திப் பொருளான நெல்லையும்,மக்களையும் நாடோடிகளான திருடர்களிடமிருந்து காத்தலுக்கு ஊர்க்கிழவரும்,நோய் நீக்கவும் மழை பெய்விக்கவும் தெய்வத்தை வேண்ட உவச்சனான பூசாரியும் மள்ளனான உழவரிலிருந்து உருவாகினர். 

    ஊர்க்கிழவரே(ஊர்க்குடும்பன்) அரசர்குலத் தொடக்கம். ஆட்சிப்பரப்பு விரிய விரிய, வேளிர்களும்,மன்னர்களும்,வேந்தர்களும் படிப்படியே தோன்றினர். அதாவது,அரசர் என்போர் மருதநில காவல்தலைவரான மள்ளர்,வணிகர் என்போர் மருதநில உற்பத்திப் பொருளைச் சந்தைப்படுத்தும் மள்ளர்,அந்தணர் என்போர் மருதநில பூசாரியான மள்ளர்,உழவர் என்போர் மருதநில விவசாயிகளான மள்ளர். உண்மையில் வேளாளர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் கிடையாது. அது உழவர்களான மள்ளர்களின் பெருமையைப் போற்ற பின்னால் ஏற்பட்ட பட்டம் ஆகும். எனவே,கட்டுரையாளர் குறிப்பிடக் கூடிய ஏவல் மரபினரான நான்கு பிரிவினர் மருதநில மக்களான மள்ளர்களே.  இந்த மள்ளர்கள்தான் மற்ற நிலமக்களையும் அடக்கியாண்டவர்கள். இவர்கள்தான் மருதநிலத்திலும் மற்ற நிலங்களிலும் கிளவித் தலைவன் மற்றும் கிளவித் தலைவியாக சங்க இலக்கியங்களில் சுட்டப்படுபவர். 

    இந்தத் தலைமக்களான மள்ளர்களின் வீரத்தையும் காதலையும் போற்றவே புறநானூறும் மற்றும் அகநானூறும் படைக்கப்பட்டன.
தமிழகத்தின் நில அமைப்பு ஐந்தாக இருந்த நிலையில், மருத நில மக்களான மள்ளர்கள்தான் நாகரிகத்தில் சிறந்தவர்கள் என்பதும்,மருத நில மள்ளர்கள்தான் பிற நில மக்களையும் அடக்கியாண்டவர் என்பதும் நம்பும்படியாக இல்லாததுபோல் தோன்றும். ஆனால்,பண்டைய தமிழக மக்களின் யதார்த்த நிலை என்பது இதுதான். குறிஞ்சி நில மக்கள் உயிர்களை வேட்டையாடி வாழ்ந்தனர். இவர்கள் இலைகளையும்,தழைகளையும்,மரப்பட்டைகளையும் ஆடையாக உடுத்தனர். கிழங்கு,தேன்,காய் மற்றும் கனிகளும் இவர்களின் உணவுப் பொருளாக இருந்தது. எனவே,உணப்பொருளை தேடிப் பாதுகாப்பதில் இவர்கள் பெரும்பொழுதைக் கழித்தனர். இதனால்,அறிவு வளர்ச்சி பெற இவர்களுக்கு நேரம் இல்லை.

    முல்லைநில மக்கள் ஆடு,மாடு மேய்த்து வாழ்ந்து வந்ததால்,மேய்ச்சல் நிலம் தேடி நாடோடி வாழ்வு வாழ்ந்தனர். இதைத்தவிர பால்,தயிர் மற்றும் வெண்ணெய் போன்ற ஆனைந்தை மருத நிலத்தில் எடுத்துச் சென்று பண்டமாற்றி,அதன்மூலம் தமக்குத் தேவையான உணவுப் பொருளையும்,உடைகளையும் மருத நில மக்களிடமிருந்து வாங்கி வருவர். கால்நடை வளர்ப்பிற்குத் தேவையான மேய்ச்சல் நிலம் தேடிச் சென்ற காரணத்தால்,இவர்களுக்கும் அறிவு வளர்ச்சி பெற வழியில்லை. இது அந்த நிலத்தின் அமைப்பால் உண்டான யதார்த்த நிலை ஆகும்.


    பாலை என்பது விளைச்சல் இல்லாத வறண்ட நிலமாகும். எனவே,அந்நில மக்கள் வழிப்பறி செய்து வாழ்ந்தனர். இதனால் இந்த மக்களிடம் அறிவு வளர்ச்சியோ,பண்பாட்டு வளர்ச்சியோ ஏற்பட்டிருக்கவில்லை.
நெய்தல் நிலத்தில் கலம் செலுத்தி மீன் பிடித்தனர். முத்துக்குளித்தலும்,சங்கு எடுத்தலும் இவர்களின் பிற தொழில்களாக இருந்தது. இவர்கள் பகல் முழுதும் மீன் பிடித்தலில் ஈடுபட்டிருந்ததால் இவர்களிடமும் கல்வி அறிவு பெற வழி இல்லை. இது அந்த நிலத்தின்பால் ஏற்பட்ட நிலையாகும்.ஆனால்,ஆற்றுப் பாசனமுள்ள வளமான மருத நிலத்தில் வாழ்ந்த மள்ளரின மக்கள் நிலத்தைப் பண்படுத்தி,பயிரிட்டு விளைவித்து உணவுப் பொருள்களை குறுகிய காலத்தில் சேமித்து வைத்துக் கொள்கின்றனர். இதன் பொருட்டு ஆற்றுப்பாசனமுள்ள ஓரிடத்தில் நிலையாக இருப்பிடம் அமைத்து கணவன்,மனைவி என்ற பண்பாட்டின் உயர்ந்த நிலையை ஏற்படுத்தி நாகரிக வாழ்வு வாழ்ந்தனர். இவர்கள் உணவுப் பொருளை குறுகிய காலத்தில் சேமித்துக் கொள்வதால் அதிக ஓய்வு நேரம் கிடைத்தது. எனவே,கல்வியிலும்,கலையிலும் கவனம் செலுத்தி அறிவை வளர்த்தனர். நாகரிகத்தின் உயர்ந்த நிலையில் இருந்த இந்த மக்களிடமே அரசு என்ற அமைப்பு ஏற்படுவது சாத்தியமானது. நாகரிகத்திலும்,பண்பாட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்த இந்த மள்ளரின மக்கள்தான் பிற நிலத்து மக்களையும் அடக்கி,நல்வழிப்படுத்தி ஆண்டனர். இதனை மேலே கொடுக்கப்பட்ட திவாகர மற்றும் பிங்கல நிகண்டுகள் தெளிவுபடுத்துகின்றன. அதாவது,மருதநில மக்கள் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும் அவர்கள் மள்ளர் என்று நாம் உணர்ந்து கொள்ளமுடியும். ஆனால்,வலிமைமிக்க வீரர் என்போரும் மள்ளரே என்று விளக்குவதால் பண்டைய தமிழகத்தில் அனைத்து நில மக்களையும் அடக்கியாண்ட அந்த வன்மைமிக்க தலைவனும் மருதநிலத்து மள்ளனே என்பது தெள்ளத் தெளிவாகும். இதன்மூலம் மேலே கட்டுரையாளர் குறிப்பிடக்கூடிய மேட்டுக்குடியினர் என்போர் இன்றைய பள்ளர் என்று சொல்லக்கூடிய மள்ளர்களே என்பதும் தெளிவாகும். 

    இதனிடையே நாகரிகம் மிகுந்த மருத நில மள்ள மக்களின் விவசாயத் தொழில் வளர்ச்சியடைந்த நிலையில், பிற நிலம் சார்ந்த நாகரிகமற்ற மக்கள் மருத நில மள்ளர்களை அண்டி வாழத் தலைப்பட்ட நிலையில், மருத நில மக்களின் விவசாயத்திற்குத் தேவையான உழவுக் கருவிகளையும் இன்னும் பிறபல தொழில்களையும் செய்து விவசாயிக்கு உதவும் பொருட்டு மருத நிலத்திலிருந்தும் பிற நிலங்களிலிருந்தும் பதினெட்டுக் குடிமக்கள் என்ற தொழில் மக்கள் உருவாயினர். இதைத் தவிர சில அழுக்குச் சார்ந்த மற்றும் தீட்டுப்படக் கூடிய செய்கைகளாகக் கருதப்பட்ட துணி வெளுத்தல் மற்றும் பிணம் சுடுதல் ஆகிய செயல்களைச் செய்யும் புலையன் (இழிசினன்) மற்றும் புலைத்தி என்போர் பிற நில மக்களிலிருந்து உருவான மக்களாவர். இவர்கள் மருத நிலத்து மக்கள் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏனெனில் மருத நில மக்களை மள்ளர் என்றே நிகண்டுகள் மரபு சார்ந்து குறிப்பிடுகின்றன. இந்த புலையன் மற்றும் புலைத்தி என்போர் உண்மையில் வண்ணான் மற்றும் வண்ணாத்தி ஆவர். இவர்கள்தான் துடி என்ற சிறிய பறையையும் முழக்கியவர். இதற்குக் கீழ்கண்ட சங்கப் பாடல்கள் ஆதாரமாக உள்ளது.


‘துடி எறியும் புலைய
எறிகோல் கொள்ளும் இழிசின (புறம் 287)

‘புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு(புறம் 360)

பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய (அகம் 387)

‘இழிப்பிறப்பினோன் ஈயப்பெற்று (புறம் 363)

‘இழிப்பிறப் பாளன் கருங்கை சிவப்ப (புறம் 170)

‘மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர் (நற்றிணை 77)

"அடியியல் விழவின் அழுங்கல் மூதூர் உடையோர் பான்மையின் பெருங்கை தூவா வறனில் புலைத்தி எல்லின் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம்" (நற்.90:1-4)


மேற்கண்ட பாடல்கள் அனைத்திலும் காட்டப்படுகின்ற பறை அடிப்பவரும்,பிணம் சுடுபவரும் ஆகிய புலையன் மற்றும் புலைத்தி என்போர் தற்காலத்திய பறையடிக்கின்ற பறையனும்,பிணம் சுடுகின்ற வெட்டியானாகிய பறையனும் கிடையாது. அது வண்ணானையும், வண்ணாத்தியையும் குறிக்கிறது. கீழ்கண்ட முதல் பாடலில் யாழ்ப்பாணன் புலையன் என்று சுட்டப்படுவது ஆய்வுக்கு உரியது. ஏனெனில், தற்காலத்தில் கூட பாணர்கள் கேரளத்தில் வசிக்கின்றனர். ஆனால் அவர்கள் புலையராக அறியப்படவில்லை.

“புதுவன ஈகை வளம்பாடிக் காலின் பிரியாக் கவிதைப் புலையன்தன் யாழின்" (கலித்: 95:9-10)

அடுத்து, ......பாடல் கொடுக்கவில்லை?  (கலி:72:4; 311:2)  

மற்றும் ...... 

புலையன் பேழ்வாய்த் தண்ணைமை இடந்தொட்டன்ன அருவி இழிதரும் பெருவரை நாடன் (நற்றிணை: 345:5-7)"

என்ற பாடல்களில் பறையன் என்போரும் புலையராக அழைக்கப்பட்டனர் என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக இல்லாத பறையனை புலையனாக காட்ட முயற்சிக்கிறார்.

     சரி பறையன் என்ற இனம் சங்க காலத்தில் இல்லை எனில் பறை அடித்தவர் யார்? என எல்லோர் மனதிலும் கேள்வி எழுவது இயற்கையே! முதலில் துடி,யாழ்,பறை மற்றும் கடம்பு என்பவைகள் சங்க காலத்திய இசைக்கருவிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை இசைத்தவர் ஒரு குறிப்பிட்ட இனத்தார் என்று கருதுவதுதான் அனைத்து விதமான தவறான புரிதலுக்கும் காரணமாக அமைகிறது. இப்போது துடியை எடுத்துக் கொள்வோம். அதை இசைப்பவர் துடியர் என்ற இனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. அதாவது, புலையன் என்ற பிணம் சுடும் வேலையையும் பார்த்த வண்ணான் துடி என்ற சிறிய இசைக்கருவியை மீட்ட செய்தியும் மேலே கொடுக்கப்பட்ட பாடல்களில் ஆதாரமாக உள்ளது.
அதேபோன்று புலையன் ஒருவன் யாழ் என்ற இசைக் கருவியை இசைத்த செய்திதான்

“புதுவன ஈகை வளம்பாடிக் காலின் பிரியாக் கவிதைப் புலையன்தன் யாழின்" (கலித்: 95:9-10) என்ற பாடலில் உள்ளது. 

இதை வைத்து யாழ் இசைத்தவன் பாணன் என்று முடிவு கொண்டு,’பாணன் என்பவன் புலையன் என்று அழைக்கப்பட்டான்’ என்று சொல்லக் கூடாது. அரசனாகிய புலவர்களும் யாழ் இசைத்த செய்தி சங்க இலக்கியத்தில் உள்ளது. அதைவைத்து அரசர்கள் பாணர் இனத்தவர் என்று சொல்லக்கூடாது. இப்போது பறையன் என்று சொல் பற்றிப் பார்க்கலாம். சங்க காலத்தில் பறையர் என்ற இனம் தமிழகத்தில் இல்லை.

 ‘துடியன்,பாணன்,பறையன் கடம்பன்‘ என்ற ஒரேவொரு சங்கப்பாடலில் உள்ள பறையர் என்ற சொல் தற்காலத்திய பறையர் என்ற இனத்தைக் குறிக்கவில்லை.
சங்க காலத்தில் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் மற்றும் பாலை ஆகிய 5 நிலத்திலும் பறை என்ற இசைக் கருவி இருந்தது. குறிஞ்சி-வெறியாட்டுப் பறை,தொண்டகப் பறை (முருகியம்,துடி); முல்லை-ஏறுகோட்பறை(பம்பை); மருதம்-நெல்லரிப்பறை(கிணை); நெய்தல்-நாவாப் பறை; பாலை-ஆறலை மற்றும் சூறைகோட் பறை. இந்த இசைக் கருவிகளை அந்தந்த நிலத்து அனைத்து மக்களும் இசைத்து மகிழ்ந்திருந்தனர். மேலே கட்டுரையாளர் என்ற அதிமேதாவி நெல் அறுவடையின்போது மருத நில மள்ளர் இனமக்கள் தண்ணுமை என்ற நெல்லரிப் பறையை இசைத்து மகிழும் செய்தியை (கும்கிப் படப்பாடல்) மட்டும் சொல்லிவிட்டு,மற்ற நிலங்களில் அந்தந்த நிலமக்கள் பறை இசைக்கும் செய்தியை வசதியாக மறைத்து விடுகிறார். இது எதற்கு எனில் தற்கால பறையர் என்போர் மள்ளரிலிருந்து உருவானவர் என்றும், அதன்மூலம் பள்ளர் மற்றும் பறையர் என்போர் ஒன்றிலிருந்து மற்றொருவராக மாறியவர் என்றும் பொய்க்கோட்டை எழுப்பி கட்டுக்கதை எழுதுவதற்குத்தான்!.


பாலை நிலத்தில் இசைக்கப்பட்ட பறை (தண்ணுமை) பற்றிய செய்தி:

‘கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்

எழுந்த தண்ணுமை....(அகம் 87)

மருதநிலத்தின் பறை இசைத்தலை இவர்கள் பறையர்களுடன் தொடர்புபடுத்துவது போல்தான் மருதநில மள்ளரான கடைஞர் மற்றும் கடைசியரை தற்கால பறையர் எனச் சொல்வது. கடைஞர் மற்றும் கடைசியர் என்ற மக்களை கடைவர்ணமாக இவர்களாக இட்டுக்கட்டிக் கொண்டதன் பேரில்தான் இவர்கள் பறையரை பள்ளருடன் தொடர்புபடுத்தி கதை அளக்கிறார்கள். உண்மையில், கடைஞர் மற்றும் கடைசியர் என்பது மருத நில கடைவர்ணம் கிடையாது. கடைஞர் என்பது களமர்,கம்பளர்,உழவர்,வினைஞர்,மேழியர் மற்றும் கிளைஞர் போன்று மருதநில ஆண் பெயராகும். அதேபோன்று,கடைசியர் என்பது உழத்தியர் மற்றும் ஆற்றுக்காலாட்டியார் போன்று மருத நில பெண் பெயராகும். இது தற்காலத்திலுள்ள குடும்பன்,பண்ணாடி,மண்ணாடி,காலாடி,பணிக்கன்,மூப்பன்,பலகான்,கடையன்,கரையாளன் மற்றும் வாதிரியான் போன்றதே. இவர்கள் வேறு வேறு கிடையாது. இவர்கள் அனைவரும் தற்காலத்தில் பள்ளர் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றனர். இதுபோன்றுதான் மருதநில மள்ளர்களின் பல பெயர்கள். இங்கே “இந்த யூகத்திற்கு இடம் தருகிறது,அந்த யூகத்திற்கு இடம் தருகிறது என்ற கதை அளப்புகள் தேவையில்லாதது. மேற்சொல்லப்பட்டவைதான் சங்க கால மருதநில மள்ளர் நிலை.


    சங்கம் மருவிய அதாவது களப்பிரர் காலத்தில் தீண்டத்தகாதார் என்போர் புலையர் என்பதாகக் காட்டப்படுகிறது. அதன்பின்பு பெரியபுராணத்தில் புலையர் என்போர் கடைஞர் மற்றும் கடைசியர் என்ற கடைவர்ணமாக ஆக்கப்படுகின்றனர். ஆனால்,கடைஞர் மற்றும் கடைசியர் என்ற சங்க கால மள்ளருக்கும்,பெரியபுராணத்தில் கடைஞர் மற்றும் கடைசியர் என்ற கடைவர்ணமாகக் காட்டக்கூடிய புலையருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்தப் புலையர் குடியிருப்பு ‘புலைப்பாடி’’ என்றே அழைக்கப்பட்டது. இந்தக் குடியிருப்புப் பெயரே கடைஞர் மற்றும் கடைசியர் என்று காட்டக்கூடிய பெரியபுராணக் காலத்துப் புலையர் என்போர் மருத நிலத்தைச் சார்ந்த மக்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. உண்மையில், பாடி என்பது முல்லை நிலத்து மக்களின் குடியிருப்பு ஆகும். இதன் மூலம் கடைஞர் மற்றும் கடைசியர் என்று பெரியபுராணப்பாடலில் வருகின்ற புலையன் மற்றும் புலைத்தி என்போர் மருத நில மக்களின் ஏவல் வேலைகளைச் செய்வதற்கு, பிற நிலங்களிலிருந்து மருத நில எல்லைகளில் மள்ளர்களை அண்டி வாழ்ந்த மக்களாவார் என்பது தெளிவாகும். இந்த மக்களின் வாழவு நிலையைத்தான் பெரியபுராணத்தில் திருநாளைப்போவார் நாயனார் புராணம் விளக்குகிறது. இந்த மக்களின் ஏவலராக மருத நில மள்ளரைத்தான் ‘மருதக் கிழவன் என்று தெளிவுபடுத்துகிறது. இங்கே முக்கியமாக நாம் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டியது சங்கப் பாடல்களில் காட்டப்படுகின்ற கடைஞர் மற்றும் கடைசியர் என்ற மக்களும்,பின்னால் இடைக்காலத்தில் பெரியபுராணச் செய்யுள்களில் காட்டப்படுகின்ற  கடைஞர் மற்றும் கடைசியர் என்ற மக்களும் ஒன்றல்ல என்பதே.   


    இனி, பறைத்துடவை பற்றிப் பார்க்கலாம். கட்டுரையாளர் ‘பறைத்துடவை என்று பறையருக்கு கொடுக்கப்பட்ட மானியம் பற்றி சொன்ன விசயம் பெரியபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
18 திருநாளைப்போவார் நாயனார் புராணம்
1053.


ஊரில்விடும் பறைத்துடவை யுணவுரிமை யாக்கொண்டு
சார்பில்வருந் தொழில்செய்வார் தலைநின்றார்
                                
தொண்டினால்;
கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயிறொறும்
பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும்       13


1054.
போர்வைத்தோல் விசிவாரென் றினையனவும், புகலுமிசை
நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கு நிலவகையில்
சேர்வுற்ற தந்திரியுந், தேவர்பிரா னர்ச்சனைகட்
கார்வத்தி னுடன்கோரோ சனையுமிவை யளித்துள்ளார்.   14
     1053. (-ள்.) வெளிப்படை. (அவர்) ஊரில் விடப்பட்ட, வெட்டிமைத்
தொழிலுக்குள்ள மானிய நிலத்தின் வருவாயைத் தமக்கு உணவுக்கு
ஆதரவாகக் கொண்டு, தமது பிறப்பின் சார்பினால் வரும் தொழிலைச்செய்து
வருவார், திருத்தொண்டினால் தலைநின்றார்; கூர்மையாகிய இலைவடிவுடைய
மூன்று தலைகளையுடைய சூலப்படை யேந்திய சிவபெருமானுடைய திருக்கோயில்கள்தோறும் பேரிகை முதலாகிய முகமுடைய கருவிகள் பிறவற்றுக்கும்,
  1054.
     (இ-ள்.)வெளிப்படை. போர்வைத் தோலும்; விசிவாரும், மற்றும்
இவ்வாறாகிய பிற சாதனங்களும், இசை பேசுகின்ற நேர்மையுடைய
வீணைக்கும் யாழுக்கும் அவ்வற்றுக்கேற்ற வகையிற் பொருத்தமுற்ற
தந்திரியும், அன்புடனே தேவர் பெருமானுடைய அருச்சனைகளுக்குரிய
கோரோசனை முதலிய பொருள்களும் ஆகிய இவற்றை அளித்துள்ளார். 14
இந்த இரண்டு பாட்டுக்கள் மூலம் பெரியபுராணம் எழுதப்பட்ட காலத்தில் பறையர் என்ற இனம் இருந்த உண்மையும்,அவர்களின் தொழில் நிலையும் தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பறையர் என்ற இனம் சங்க காலத்தில் தமிழகத்தில் இல்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

    முதலில் பறையர் என்ற இனம் பற்றிய செய்தி முதல் பல்லவ மன்னன் இளந்திரையன் பற்றி உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப் படை பாடலில்தான் காட்டப்படுகிறது. அதே பாடலில் மருத நில உழவர்களான பள்ளர் என்ற இனம் பற்றியும் காட்டப்பட்டுள்ளது. இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, இளந்திரையன் காலத்தில் பள்ளர் என்ற இனமும்,பறையர் என்ற இனமும் தனித்தனியே தமிழகத்தில் இருந்த நிலை அப்பட்டமாகத் தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்த இரு இனத்தாரின் குடியிருப்புக்களும் தனித்தனியே இருந்த செய்தியும் விளக்கப்பட்டுள்ளது. பள்ளரின் குடியிருப்பு மன்னன் இளந்திரையன் அரண்மனைக்குப் பக்கத்திலும்,பறையர் குடியிருப்பு வெகு தொலைவில் தள்ளியும் இருந்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பறையர் என்போர் எயினர்களின் தலைவர் என்றவாறு சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் தாழ்ந்தவராகச் சொல்லப்படவில்லை. ஆனால்,இங்கே பள்ளருக்கும்,பறையருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது முக்கியமான ஒன்று. இதன்மூலம்,சங்கம் மருவிய காலத்தில்தான் தமிழகத்தில் பறையர் என்ற இனத்தின் அடையாளம் பெறப்படுகிறது. அதன்பின்பு அவர்கள் இடைக்கால சோழர் ஆட்சியில் உயர் பதவியில் இருந்த நிலை பற்றியும் கல்வெட்டுச் செய்தி உள்ளது.

     பின்னால்,பிற்காலச் சோழர் காலத்தில் பறையர்கள் கீழ்பட்ட தொழில் செய்த செய்தி பெரியபுராணத்தில் உள்ளது. இப்போது மட்டும் பறையரை இந்தக் கட்டுரையாளர் எப்படி பள்ளரோடு தொடர்புபடுத்துகிறார் என்று தெரியவில்லை? இது உள்நோக்கம் கொண்டதுதானே!

இனிப் பள்ளுப்பாடல் பற்றியும்,அதில் காட்டப்பட்ட பள்ளர் நிலை பற்றியும் பார்ப்போம். இங்கே பள்ளுப் பாடலின் அறிமுகம் என்பது முக்கியமான ஒன்று. தமிழக வரலாற்றிலே அந்நியர் ஆட்சியில் ஒரு இனத்திற்காக படைக்கப்பட்ட ஒரே தமிழ் இலக்கியம் உள்ளது என்றால், அது பள்ளுப் பாடல்கள்தான். இந்த சிறப்பு வேறு எந்த இனத்திற்கும் தற்காலத்தில் கிடையாது. இது தமிழ் தலைக்குடியான பள்ளர்களின் வாழ்க்கை பற்றி கேலி கலந்த கிண்டலுடன் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தும் பொருட்டு எழுதப்பட்ட ஒரு ‘ஏசல்’ பாடல்’ வகையைச் சார்ந்தது. அதனால்தான்,இந்தப் பாடல்கள் ‘பள்ளேசல்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தப் பாடல்களை எழுதிய யாரும் பள்ளர்கள் கிடையாது என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது. இது எழுதப்பட்ட காலம் கி.பி 17 முதல் கி.பி 19 வரையான காலகட்டம். அதாவது,அந்நியர் ஆட்சியில்.”இதுவரை இலக்கியத்திலோ பிறவற்றிலோ இடம்பெறாத `பள்ளர்' என்ற வகுப்பாரைப் பற்றிப் பள்ளு இலக்கியங்கள்” என்று இந்தக் கட்டுரையாளர் கூறுகிறார். இவர் கூறக் கூடிய பள்ளுப்பாடலில் பள்ளர் என்றும், மள்ளர் என்றும்,பள்ளி என்றும், மள்ளி என்றும் கூறப்படுகிறதே! ஏன் இதை இவர் மறைத்து விடுகிறார்? சரி ஆண்டைக்கு அடிமை மாதிரி பள்ளன் உள்ளதாகக் கூறும் இவர் பள்ளனின் சிறப்பு பற்றிய கூறப்பட்ட செய்திக்கு என்ன சொல்லப் போகிறார்?

பள்ளுப் பாடலில் கூறப்பட்ட பள்ளரின் சிறப்பு:
முக்கூடற்பள்ளு 13 ஆம் பாடலில் மூத்த மள்ளி சொல்வது,
....அத்தனை காலமுந் தொட்டு
இத்தனை காலமும் கண்டு
அடி அடி வாழையாய் நான்
குடியில் வந்தேன்.......
விளக்கம்: பழமை வாய்ந்த மூத்த தமிழ்குடியில் வந்தவள் என்று கூறுகிறாள்.

மும்முலைத் தடாதகையாம் அம்மை அவதாரஞ் செய்யும்
முந்தவே குடியிருந்தோம் அந்த நாட்டிலே....(வடகரைப் பள்ளு 12)
விளக்கம்: மீனாட்சி ஆட்சிக்கு முந்தைய பாண்டிய நாட்டில் வாழ்ந்த  மள்ளர் தொன்மை பற்றி குறிப்பிடப்படுகிறது

..படிப்படியே சொல்லு மள்ளா பள்ளா வென்றான்...(பாடல் 106)
மள்ளரெல்லாம் கூடி மழைக் குறி பார்க்கின்றாரே....(பாடல் 42)
விளக்கம்: மள்ளர் மற்றும் பள்ளர் என்பது ஒன்றே.

....வற்றாத செல்வமும் பெற்
றிருந்து வளர்ந்த புரந்தரன் குலம் நான்..(செங்கோட்டுப் பள்ளுப் பாடல் 208)
விளக்கம்: வளமுடன் வாழ்ந்த தேவேந்திர குலத்தார் பள்ளர்.

சேமமே மிகு சந்நிதியின் சேர சோழ பாண்டியர்க்குத்
தேவை பால் பழமும் பொங்கல் அவல் யாவையும்.....(திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளுப் பாடல் 35)
விளக்கம்: தமது முன்னோர்களான மூவேந்தர்களுக்கு படைத்து வழிபடல்
இதுபோன்று பள்ளுப் பாடல்களில் பள்ளரின் சிறப்பு ஏராளம் ஏராளம். 

இதெல்லாம் கட்டுரையாளருக்கு கண்ணுக்குத் தெரியவில்லையோ? என்ன மனிதர்கள் இவர்கள்?

     கடைசியாக பறையரிலிருந்து பள்ளர்கள் உருவானார்கள் என்று சொன்ன கோ.கேசவன் பற்றி ஆராய்வோம். முதலில் கேசவன் என்பவர் யார்? பறையர் இனத்திலிருந்து உருவான ஒரு எழுத்தாளர். இடைக்கால சோழர் ஆட்சியில் உழுப்பறையர் மற்றும் நெசவுப் பறையர் என்ற இரு பிரிவு இருந்தது பற்றிக் கல்வெட்டுச் செய்தி உள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. பள்ளரில் உழுபவர் இல்லை என்று சொன்னால்தான் அது செய்தி. ஏனெனில்,ஏறும் போரும் வேந்தர்குலக் கடன். அதுபோன்று,பறையரில் உழுபவரும்,நெசவு வேலை செய்பவரும் இருக்கிறார்கள் என்றால் அது முக்கியச் செய்திதானே! ஏனெனில், அவர்கள் குலத்தொழில் உழவுத் தொழில் இல்லையே. அதுதானே அச்செய்தி கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. இதைவைத்து பறையரிலிருந்து பள்ளர் உருவானார் என்று சொன்னால், இது சிறுபிள்ளை தனமாக உள்ளது!

    இன்னொரு முக்கியச் செய்தி பள்ளர்கள் மள்ளர் என்ற பெயரில் சங்க காலத்திலிருந்து வருகின்ற தமிழ்த் தலைகுடி மக்கள். பறையர்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் காணப்படாத ஒரு இனம். அவர்கள் அடையாளம் தமிழகத்தில் பல்லவர் காலத்திலிருந்துதான் பெறப்படுகிறது. பின்பு எப்படி பறையரிலிருந்து பள்ளர் உருவாக முடியும்? மேலும் பள்ளர் மாட்டைத் தெய்வமாக வணங்குபவர்கள். ஆனால்,பறையர்கள் மாட்டைக் கொன்றோ அல்லது செத்த மாட்டையோ சாப்பிடக்கூடியவர்கள். மேலும் மாட்டின் தோல் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள். பின்பு எப்படி பறையருக்கும்,பள்ளருக்கும் தொடர்பு இருக்க முடியும்? முட்டாள்தனமாக கருத்துச் சொன்ன கோ.கேசவனே பின்பு தன்னைத் திருத்திக் கொண்டு மன்னிப்புக் கோரியது இந்த அடிமுட்டாள்களுக்குத் (கட்டுரையாளர்) தெரியுமா? இதற்கு மேலும் பறையரும்,பள்ளரும் ஒன்று என்றும் ஒருவர் மற்றொருவரிலிருந்து உருவானவர் என்றும் இந்த புத்திகெட்ட ஜென்மங்கள் சொன்னால் அவர்களுக்கு ஒரு உண்மையை இங்கே போட்டு உடைத்து விடுகிறேன், இதை அவர்கள் மனதில் இருத்திக் கொள்ளட்டும். அதாவது,பறையருக்கும்,பள்ளருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பறையருக்கும்,முக்குலத்தோருக்கும் இடையேதான் தொடர்பு உள்ளது. இதுதான் அப்பட்டமான உண்மை. இதை கீழ்கண்ட மரபியல் ஆராய்ச்சி முடிவு தெளிவுபடுத்துகிறது. இதை உணர்ந்து உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள் மதி கெட்டவர்களே!