Saturday, July 13, 2013

பாண்டியர்கள் யார் ? - நடுவக்குறிச்சி பாளையக்காரன் கைபீது

வடுகர்கள் மதுரைப் பாண்டியர்களை வென்று தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த தமிழர்களின் குடும்பு ஆட்சி முறையை மாற்றி 72 பாளையப்பட்டுகளை எற்படுத்தி பாளையக்காரர்களை நியமித்து ஆட்சி செய்து வந்தனர். பெருவாரியாக வடுகர்களைப்  பாளையக்காரர்களாக  நியமித்தனர். ஒரு சில பாளையப்பட்டுகளைத் தமிழ் மன்னர்களுக்கு  எதிராக உதவி செய்த சாதியினருக்கு வழங்கினர்.  
வடுகர்களின் ஆட்சி போய் பிரித்தானியரின்  கிழக்கிந்தியக் கும்பனியார் ஆட்சியைக் கைப்பற்றிய  19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாளையப்பட்டுக்காரர்கள்  அனைவரும் பாளையப்பட்டுகளை தாங்கள் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வருவதாகவும் கும்பனியார் இந்தப்  பாளையப்பட்டுகளைத் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் நாங்கள் கும்பனியாரின் கீழ் வரிகளை ஒழுங்காகக் கட்டி வருவோம் என்றும் உறுதி கூறி வேண்டுகோள் விண்ணப்பங்கள் செய்து கொண்டார்கள். இந்த விண்ணப்பங்கள் கைபீதுகள் எனப் பெயர் பெற்றனர்.
தமிழ்நாடு அரசு பாளையப்பட்டுகளின் வம்சாவளி என்று நான்கு தொகுதிகளாக இவைகளைப் பதிப்பித்துள்ளது. நடுவக்குறிச்சி பாளையக்காரன்  வம்சாவளி கைபீது என்ற கைபீது தொகுதி – 2 இல் பக்கங்கள் 106 முதல் 111 வரை ஆறு பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. (பதிப்பு ஆண்டு 1981).  தமிழ்நாடு அரசு கீழ்திசைச் சுவடிகள் நூல் நிலையத்தில்  சுவடி எண் 3886 ஆகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குத்தாலத் தேவர் என்ற பட்டப்பெயர் கொண்ட இப்பாளையக்காரன்  “எங்கள் வமுசத்தில் பாண்டிய றாசா பெண் கேட்டார்,அதற்கு மறக்குலத்திலேயிருக்கிற பெண்ணை சந்திறகுல வங்கிசத்தில் குடுக்கிறதில்லை என்று சொன்னதிற்கு பாண்டிய றாசா விதனமாய்ப் படை சேகரித்து……என்று தமது கைபீதில் எழுதியுள்ளார். கைபீதுவில் உள்ள காலக் குறிப்புகள் தவறாக இருந்தாலும் இந்தச்சாதி பற்றிய செய்தி தவறாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்கள் கூட முக்குலத்தோருக்கும் தமிழ் மூவேந்தர் மரபினருக்கும் சாதியத் தொடர்பு இல்லை என்பதையும், முக்குலத்தோர்  மூவேந்தர் மரபினர் அல்லர் என்பதையும் கூறியுள்ளனர். இந்த கைபீதில் மறவர் குலத்தினரும் பாண்டியர் குலத்தினரும் வேறு வேறு சாதியினர் என்பதை ஒரு மறவர் பாளையக்காரர் 200 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.
                தகவல் : டாக்டர் குருசாமி சித்தர் (மள்ளர் மலர் 2003)
       கூடுதல் தகவல் : எந்த பாளையக்காரர்களும் ( மறவர், கள்ளர், அகம்படியர்.) தங்களை  மூவேந்தர் வம்சம் என உரிமைகோரவில்லை.

Sunday, July 7, 2013

இடஒதுக்கீடு என்பது பள்ளருக்கான சலுகையா?
------------------------------------------------------------------------------------------------------------
ஓ !!! அப்படியா !! சலுகை என்று வந்துவிட்டால் நாங்கள்தான் தாழ்த்த பட்டோர் என்று அரசின் சலுகைகளை அப்படியே அமுக்க போரடுகிரிர்கள் !!!! இனவெறி ஒன்று வந்து விட்டால் நீங்கள்தான் உயர்ந்த சாதியா !!! நல்ல இருக்கடா உங்க நெயாம் !!! இவுகளே எல்லாத்தயும் அனுபவிபகலாம் !!! யாராவது கேட்ட சாதிய சொல்லி திட்டுனான் !! PCR act -la பொய் புகார் கொடுபகலாம் !!!! இவுகளே மன்னர் ,மள்ளர், மட்டை, மஸ்ரு புருடா விடுவகலாம் !! இவுக அடுத்தவங்கள புருடா , கட்டுக்கதை விடகூடாதுன்னு எழுது வகலாம் !!! உன் இனத்தில் உள்ளவன் மானமுள்ள , சோத்தில் உப்பு போட்டு திங்கிறவன இருந்தா !! நாடார் ,வன்னியர் சங்கங்கள் sc பட்டியலில் BC மாறியபோதே மாறி இருக்க வேண்டும் !! அதை விட்டுவிட்டு தமிழ் வரலாறையே மாற்ற நினைக்கும் உன்னை எல்லாம் எதால் அடிப்பது !!!! பூனைக்கு சூடு போட்டால் புலி ஆஹாது !!!
------------------------------------------------------------------------------------------------------------
மறுப்புரை:
என்ன கொடுமை!. இடஒதுக்கீடு என்பது சலுகையா? இது மற்ற சாதிகளுக்கு மாதிரி பட்டியல் இனத்தில் உள்ளவருக்கும் உரிய உரிமைதானே? சலுகை என்பது கல்வி உதவித்தொகை என்று கொண்டாலும், தற்காலத்தில் எஃப்.சி தவிர மற்ற அனைத்து சாதியினருக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது பட்டியல் இனத்தாருக்கு மட்டுந்தான் இடஒதுக்கீடும் மற்றும் கல்வி உதவித்தொகையும் கொடுக்கப்படுகிறது என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, காலங்காலமாக இந்த மாதிரி பொய்ப் பரப்புரையை சிலர் செய்வது, இந்த பட்டியல் இனமக்களை தாழ்ந்த மக்களாக போலியாகச் சித்தரிப்பதற்காகத்தான் அன்றி வேரில்லை. அப்படி இவர்களை சொன்னால்தானே தாங்கள் போலியாக உயர் சாதி என்ற போர்வையில் இந்த தமிழ் நாட்டில் ஏமாற்றிப் பிழைத்ததையும், பிழைப்பதையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். வெட்கம்.. வெட்கம். இப்போது எங்களை பட்டியல் இனத்திலிருந்து வெளிக் கொண்டு வந்து, எங்களை எஸ்.சி தவிர்த்த வேறு அடையாளத்தில் உங்களைப் போன்று எங்களுக்கான இடஒதுக்கீடு கொடுத்தாலும் அதுவும் இப்போது உள்ளது போன்றே இருக்கப் போகிறது. ஏனென்றால், இடஒதுக்கீடும், உதவித்தொகையும் அனைத்து சாதிக்கும் உள்ளது. இதில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? ஒரே மாற்றம் பட்டியல் இனத்தார் என்ற அடையாளம் இல்லாமல் வேறு ஒரு பெயர். அது எம்.பி.சி அல்லது பி.சி யாக இருக்கும். அவ்வளவுதான். இதுதானே இடஒதுக்கீடு மற்றும் சலுகைக்கான கணக்கு. எவ்வளவு நாளைக்குத்தான் இந்த இடஒதுக்கீடு மற்றும் சலுகை பற்றிய பொய்யை நீங்கள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? முந்தைய காலங்களில் பட்டியல் இனத்தார்களின் விகிதாசாரத்துக்கு உரிய இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களை நிரப்ப போதுமான படித்த மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், படித்த ஒரு சிலருக்கு [பெரும்பான்மை மக்கள் படிக்க மற்ற இனத்தார் போன்று வசதி இல்லாததால் அல்லது படிக்கவிடாமல் அடக்கப்பட்டதால்] மிக எளிதாக அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கல்வி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தற்காலத்தில் நிலை அப்படி இல்லை. தற்காலத்தில் பட்டியல் இனத்தார் பெரும்பாலானவர் படிக்க ஆரம்பித்து விட்டனர். ஆதலால், மற்ற இனத்தாரை ஒப்பீடு செய்யும்போது உயர்கல்வியிலும் மற்றும் அரசு வேலை வாய்ப்பிலும் இவர்களில் நன்கு படித்த பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. இந்த நிதர்சனத்தை நாங்கள் புரிந்து தானே இருக்கிறோம். ஆனால், இது உங்களுக்கத்தானே புரியாமல் இருக்கிறது. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? உங்களுக்காக நாங்கள் சித்திக்க முடியுமா?