Wednesday, October 31, 2012

சோழர்களின் வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 2 )

சோழர்களின்  வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 2 )
http://www.usetamil.com/t643-topic

(அங்கே கேட்க வழி இல்லாததால் இங்கே கேட்கிறேன்)

============================
//சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது.//

இந்த கட்டுரையை எழுதியர் அப்படி என்ன வரலாற்றை கரைத்து குடித்து விட்டு, கடையில் இப்படி ஒன்றும் இல்லை என்று கைவிரித்தார் என்று தெரியவில்லை. கீழே உள்ள சங்கரன் கோவில் கல்வெட்டை பாருங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு

"

விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் 2, எண் 863ஃ பக்கம் 803








(கள்ளர் கூற்றுப்படி)
சேரன் மலையையும், காட்டியும் ஆண்டவன்,
சோழன் மருத நிலத்தை ஆண்டவன்,
பாண்டியன் நெய்தல் நிலத்தை ஆண்டவன் என்றால்

//உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் //

இந்த மூவரும் ,உழவர் தலைவனான 'தெய்வேந்திரக் குடும்பனிடம்' மழை வேண்டி நிற்பானேன்?. குடும்பன் வெட்டிய 12000 கிணறால் விவசாயம் செய்பவனுக்கு தான் உபயோகம். மீன் பிடிப்பவனுக்கும், மலையில் இருப்பவனுக்க்ம் மழை எதற்கு? கிணறு எதற்கு?
...............................................
(வன்னியர் கூற்றுப்படி)
மூவேந்தர்களுக்குள் எந்த உறவும் இல்லை என்றால்,

//சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, //

ஒரு பொது பிரச்னைக்கு இவர்கள் ஒன்றாக வந்து வேண்டியது ஏன்? பாண்டியனுக்கு பிரச்சனை என்றால் சோழன் எதுக்கு வரணும்? வறட்சியினால் சோழனின் நிலம் வாடினால் சேரனுக்கு என்ன? ஒருவரை 'மன்னன்' என்றும், இன்னொருவனை 'கோ' என்று மட்டுமே வலராறு சுட்டி இருந்திருந்தால் கூட சிறு குழப்பம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மூவரையும் தமிழ் உலகம் 'வேந்தன்' என்று தானே பதிவு செய்கிறது? வயலும் வயல் சார்ந்த 'மருத' நில தலைவனையே வேந்தன் என்று தொல்காப்பியர் நிறுவி உள்ளார். எனவே மூவேந்தர்கள் மருத நில குடிகளே, மூவரும் ஒரே குடியை சேர்ந்தவர்களே....!!!


(குறிப்பு: பல காலம் ஒன்றாக இருந்த மூவேந்தர்களை சூழ்ச்சியால் பிரித்ததை மிகப் பெருமையாக சொல்லிக் கொள்ளும் கலிங்கத்து அரசனின் கல்வெட்டும் இங்கே விரைவில் பதிப்பிக்கப் படும்.)

சோழர்களின் வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 1 )

சோழர்களின்  வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 1 )
http://www.usetamil.com/t643-topic

(அங்கே கேட்க வழி இல்லாததால் இங்கே கேட்கிறேன்)

============================

//சோழர் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று தெரியவில்லை//
அப்படி என்றால் வன்னியர்கள் 'சோழன்' என்ற பட்டங்களுக்கு உள்ள அர்த்தம் தெரியாமலேயே அதை இத்தனை நாளும் வைத்துகொண்டு இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

பள் - பண்டு - பண்டைய - பண்டையம் (விவசாயம்) - பாண்டியன்
சோறு - சோர - சோழ
(மொழி ஞாயிறு தேவநேய பாவாணர்)

=> இப்படி சோழனும், பாண்டியனும் தங்களை பெயரை பட்டத்தை குறிக்கும் வேர் சொல்கள் 'விவசாயம்' என்று இருப்பானேன்?
=> 'சோழனையாவது' 'தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சையை ஆண்டவன், ஊரு உலகத்துக்கே சோறு இட்டவன், அதனால் அவனின் வேர் சொல்' சோழன் என்று வருவதில் ஒரு அர்த்தம் இருக்கு. ஆனால் 'வன்னியரும்,கள்ளரும்' சொல்லும் 'பாண்டியன்' என்பவன் நெய்தல் நில மன்னனாக இருந்தால், அவனுடைய வேர் சொல்லும் விவசாயத்தை குறிப்பானேன்?
=> அட அவ்வளவு ஏங்க...? ஆங்கில அகராதியில் 'குடும்ப' தலைவனை குறிக்கும் husband என்ற சொல்லின் வேர் சொல்லே 'husbandary ' என்ற விவசாய சொல் தானே?
=> "சுழன்றும் ஏர் பின்னது உலகும்" என்று உலகில் இருக்கும் அனைத்து தொழில்களுக்கெல்லாம் 'உழவு' தொழிலே தலையானது என்று திருவள்ளுவர் சொல்வானேன்?


* பிராமணன் தான் உயர்ந்தவன் என்று சோழன் கருதி இருந்தால், அவனின் தொன்மமும் அதுவாகவே, வேதம் ஒதுபவனாகவே, பண்டிதனாகவே அல்லவா இருந்திருக்க வேண்டும்?
* போர் தொழிலே மிக உயர்ந்த தொழில் என்று எந்த தமிழ் இலக்கியங்களும் சொன்னதாக தெரியவில்லை. மூவேந்தர்களுக்கு சொந்தம் கொண்டாடும், போர் குடிகள், சத்ரியர்கள் என்று அழைத்து கொள்பவர்களும், ஏன் போர் தொழிலை சோழன் தனது ஆதி தொழிலாக கொள்ளவில்லை என்று என்னைக்காவது யோசித்தது உண்டா?


ஆக தொழிலாக இருக்கட்டும், சோழ, பாண்டிய, குடும்ப தலைவனாக இருந்தாலும் அனைவரும் விவசாயம் சார்ந்து, அதில் இருந்து தோன்றியவர்கலாகவே இருக்க முடியும். இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,

மூன்று + வேந்தன் = மூவேந்தன்.
'வேந்தன் மேய தீம்புனல் உலகும்' (தொல்காப்பியம்).

மருத நில தலைவனே வேந்தன், மூவேந்தர்களும் மருத நில குடிகளே என்று தொல்காப்பியரே தடம் பிடித்து காட்டுகிறார். எனவே சோழன் தமிழனாக இருக்கும் பட்சத்தில், அவனின் பூர்வீகம் தமிழ் மண் என்ற பட்சத்தில் அவனின் மூலம் 'விவசாயமே' என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
============================

மள்ளர் மல்லர் ஆய்வு என்ற கட்டுரைக்கு மறுப்பு

மள்ளர் மல்லர் ஆய்வு என்ற கட்டுரைக்கு மறுப்பு

மூலக் கட்டுரை:  

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு |

www.thevarthalam.com/thevar/?p=1907Share
24 ஆகஸ்ட் 2012 – மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு. உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல ...
You've visited this page 2 times. Last visit: 30/10/12
------------------


மறுப்பு கட்டுரை
இரா.ச.இமலாதித்தன் அவர்கள் 24/08/2012 அன்று 'தேவர் தளம்' என்ற இணையத்தில் எழுதிய 'மல்லர், மள்ளர்' ஓர் ஆய்வு என்ற கட்டுரைக்கான மறுப்பு இது. வரலாற்றை தன இஷ்டத்துக்கு எவ்வித ஆதாரமும் இன்றி எழுதும் இவர்களுக்கு, ஆதாரத்துடன் 'மள்ளர்கள்' போடும் கமெண்ட்டுகளை இவர்கள் பிரசுரிப்பதே இல்லை. இந்த கயமைத் தனத்தை உலகிற்கு தெரிவிப்பதுடன், இன்னும் பிரசுரிக்கப் படாத அந்த ஆதாரங்களை இங்கே பார்க்கலாம்.

============================================

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு
உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சிலேடை, வஞ்ச புகழ்ச்சி, இரட்டைக்கிழவி யென தமிழ் தனக்கான ஆற்றலை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. இந்த தமிழில் ஒரே வார்த்தைக்கு பல பெருள் / பல்வேறு அர்த்தங்கள் விரவி கிடக்கின்றன.ஒரே ஒலியுடைய சொல்லும், ஒரேவொரு எழுத்தின் சிறு மாறுதல் வாயிலாகவும் பல பரிமாணங்களையும், பல அர்த்தங்களையும்  நமக்கு தருகிறது.அதுதான் தமிழுக்கான தனித்தன்மை. அந்த வகையில் தமிழ் பெருமையடைய வேண்டிய விசயம் தான்; ஆனாலும், அந்த விசயமே ஒரு மாபெரும் குழப்பத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
அதற்கான உதாரணங்கள் கீழே:
மதி – நிலவு, அறிவு;
மாலை - மாலைப் பொழுது, பூமாலை.
கல் – கல்வி கற்பது , செங்கல் உட்பட பலவித கல் வகைகள்; கள் – மதுபானம்.
வெள்ளம் – நீர் பெருக்கு; வெல்லம் – இனிப்பு சுவையுடையது.
தால் – வார்த்தை முடிவுறா சொல் (செய்தால், வந்தால்) ; தாழ் – பூட்டு; தாள் – காகிதம்.
ஒலி – சப்தம்; ஒளி – வெளிச்சம்; ஒழி – அழிப்பது.
அலி – ஆண் பெண் நிலையற்ற தன்மை; அழி – நிர்மூலம் செய்தல்; அளி – கொடுப்பது.
இது போல, (பால், பாள், பாழ்) ; (ஆல், ஆழ், ஆள்) – இவையெல்லாமே தனித்தனி வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை. இப்படி நிறைய தமிழில் சொல்லிக்கொண்டே போகலாம். அது போல ‘மல்லர்’ என்பது மல்லுயுத்தம் புரியும் வீரர்; மன்னர் யென்று பொருள். ஆனால் ‘மள்ளர்’ என்பது விவசயம் செய்யும் ஒரு பிரிவினர்.
‘மள்ளர்’ என்பது – பள்ளர் இனத்தையும், ‘மல்லர்’ – தேவர் இனத்தையுமே குறிக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு எதிரெதிர் துருவங்களை கொண்டது. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசமானது, மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே ஒலி கொண்ட மாற்பட்ட பொருள் கொண்டவை.
“ல் – ள்” இந்த இரண்டு (ள், ல்) எழுத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு, போலியான வரலாற்றை உருவாக்கும் ஈனர்களின் போலி முகங்களை கிழித்தெறிய வேண்டும். தமிழே தெரியாதவர்களுக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது? தமிழில் ஒரு வார்த்தைக்கே பல்வேறு அர்த்தங்கள் கிடைக்கும்போது, இரு வேறு எழுத்துகளுக்கு எப்படி ஒரு பொருளை திணிக்க முற்படுகின்றனர் இந்த அறிவிலிகள்?
இலக்கியங்களிலும், வரலாற்றிலும் சொல்லப்படும் ‘மல்லர்’ என்பது வீரதீர போர்க்குணம் உடையவர்களை பற்றியது. வரலாறை பொறுத்தவரை ‘மல்லர்’ என்பது தேவர் இனத்தை சார்ந்ததே. முடியுடை மூவேந்தர் அனைவருமே மல்லர்களே. ஏனெனில் இந்த மூவேந்தர்களும் மல்யுத்தம் புரியும் போர்வீரர்களே! இங்கே கவனிக்க வேண்டும் மள்ளர்கள் அல்ல; ஆனால், ‘தேவந்திரர்’ யென்று தங்களை அழைத்துக்கொள்ளும் ‘பள்ளர்’ இனத்து நபர்கள் சொல்கின்ற ‘மள்ளர்’ என்பது, மருத நிலத்து விவசாய மக்களை மட்டுமே.
இந்த மள்ளர்கள் (பள்ளர்கள்) யாரும், வால், வில்லோடு களத்தில் நின்று போர் செய்யவில்லை.மள்ளர்களான இவர்கள் நின்ற களம், நெல்சாகுபடி சார்ந்த விவசாயக்களம் மட்டுமே என்பது வரலாற்று உண்மை.அறுவடை காலங்களிலும், அதை தொடர்ந்த சிலமாத காலங்களிலும், அந்த விவசாயக்களங்களில் வைக்கோல் போரைத்தான் அவர்கள் நேரிடையாக அறிந்திருந்தனர். பல நெடுங்காலமாய் வயலோரங்களிலும், பண்ணை வீட்டின் மாட்டு தொழுவத்தின் பின்புறமும், பல வைக்கோல் போர்களை மிக நேர்த்தியாக உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். அதை தவிர, மல்யுத்த போர் எதுவும் அவர்களுக்கு செய்ய தெரியாது; அந்த மள்ளர்களுக்கு தெரிந்த ஆயுதமும், பயன்படுத்திய ஆயுதமும், கதிர் அரிவாள் மட்டுமே. அந்த மக்கள் வேற ஒன்றுமே தெரியாத அப்பாவிகள்!
முக்குலத்து மக்களின் சொந்த நிலங்களில் விவசாய கூலியாகவும்,தேவரின மக்களின் வீட்டில் பண்ணை ஆட்களாகவும், மள்ளர்(பள்ளர்) இன மக்கள் பணி புரிந்து வந்தவர்களை, சில சுயநல அரசியல்வாதிகள் தனது அரசியல் லாபநோக்கிற்க்காக தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர். அதை அறியாமேலே அவர்களும் தங்களது இயல்பான சந்தோச தருணங்களை இழந்து, வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதை அவர்களாகவே சுய உணர்தல் ஏற்பட்டு அந்த மாயைகளிலிருந்து வெளிவந்தால் மட்டுமே மீண்டுமொரு மிகப்பெரிய சாதீய மோதல் ஏற்படமால் இருக்க ஒரே வழி!
தேவர்தளத்திற்காக,
இரா.ச.இமலாதித்தன்
Share
No related posts.
This entry was posted in வரலாறு and tagged , . Bookmark the permalink.

2 Responses to மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

  1. rajesh says:
    Mr.imalaathithan, then what is your answer to Thivakara nikandu verse “Arunthiral veerarkum,perunthiral uzhavarkum varunthakaiththaakkum mallar enum peyar” ? Have n’t you known that the word mallar(the same word you mentioned to represent pallar) represents both veeran and uzhavan? Indeed, it does not belong to your community.So,don’t distort the tamil history.
    All the tamil kings(muvendars) were said to be mallar(the same word you mentioned to represent pallar).If you have any doubt ,go and study sangam literature.
  2. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 1 :
    ———————————————-
    மல்லர் என்ற சொல் பற்றியது.மல்லல் என்றால் ‘வளம்’என சங்க இலக்கியத்தில் பொருள் கொண்டுள்ளனர்.தொல்காப்பியத்தில்’மல்லல் வளனே’(தொல்.சொல் அதி.8).மல்லல் வளத்தை குறிக்கும…
    ் போது மல்லன் என்பது வளமுடையவனை குறிக்கவேண்டும்.மருத நிலம் வளமானது.எனவே,மல்லன்,மல்லர் என்பது மருத நில மக்களைக் குறிக்கும்.
    மல்லர் எனில் வலிமையுடையவன்,மற்போரில் தேர்ச்சி பெற்றவன் என்ற அர்த்தமும் உண்டு.எனவே,மல்லர் என்பதற்கு போர்வீரன் என்ற பொருள் கொள்ளவேண்டும்.வளமும்,வலிமையும் உடையவர் மல்லர்.தற்காலத்தில் பள்ளர் இன மக்கள் மட்டுமே மல்லாண்டர் சாமியை போரில் இறந்த மல்லர் நினைவாக கும்பிடுவதே அதன் காரணமாகத்தான்.எனவே மள்ளர் மற்றும் மல்லர் என்பது ஒன்றே.மல்லி என்பது பெண்பால்.
    திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மேலப்பழவூர் அகத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு(தெ.க.13/227)பழவூர்ச் சங்கரபடி மல்லன் கங்கன் கொடை பற்றிக் குறிப்பிடுகிறது.
    மேல்கண்ட அதேஊரில் வாதமுலீஸ்வரர் கோயில் கல்வெட்டு(தெ.க.5/680)நந்தா விளக்கு கொடை அளித்த மள்ளர் தொண்டிநாட்டு மணலூருடையான் மல்லன்.
    தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு(தெ.க.6/37)’ஆகோ மல்லகுல கால வாய்க்காலுக்கும் வடக்கு’என்று கூறுகிறது.மல்லர் என்பது ஒரு குலம் என்பது சுட்டப்படுகிறது.
    பாண்டிய மரபினரின் பெரும்பாலான(கல்வெட்டு) அடையாளங்கள்தான் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது .ஆனால்,பாண்டியரின் வரலாற்றைக்கூறும் திருவிளையாடல் புராணத்தில் கீழ்கண்ட மள்ளர்கள் பாண்டியமன்னர்களாக இருந்துள்ளனர் என்ற செய்திகள் உள்ளன.
    சோமசேகரப்பாண்டியன்,இராஜசேகரப்பாண்டியன்,அனந்தகுணப்பாண்டியன்,குலபூடணப்பாண்டியன்,இராஜேந்திரப்பாண்டியன்,இராசசிங்கப்பாண்டியன்,சுந்தரேசபாதசேகரப்பாண்டியன்,வரகுணப்பாண்டியன்,இராசராசப்பாண்டியன்,வங்கியசேகரப்பாண்டியன் மற்றும் அரிமர்த்தனப்பாண்டியன் ஆகியோர் மள்ள மன்னர்களே.
    உதாரணம்:
    ‘புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும்
    வரவிற் கால்வலி மள்ளரின் வெள்ளமும்
    விரவி யாழிய வெள்ளமு முள்ளுக
    இரவி தன் வழித் தோன்றல்வந்
    தெய்தினான்’
    என்ற பாடலில் சோமசேகரப்பாண்டியன் அனைத்துப்படைகளையும் வழிநடத்தி சூரியன் உதித்து வருவதுப்போல வந்தான் என்று உள்ளது
  3. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 2:
    —————————————————————————————————-
    “அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
    வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்” – திவாகர நிகண்டு.
    “செருமலை வீரரும் திண்ணியோரும்
    மருத நில மக்களும் மள்ளர் என்ப” — பிங்கள நிகண்டு
  4. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 3:
    —————————————————————————————————-
    கம்பர் தமது இராமாயணத்தில் மள்ளர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்துவதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு கீழ்க்கண்டவாறு ஒப்பிட்டு கூறுவார்.அப்பாடலானது,

    “நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
    உதிர நீர் நிறைந்த காப்பின்
    கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
    இன மள்ளர் பரந்த கையில்
    கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
    பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
    தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
    எனப் பொலியும் தகையும் காண்மின்” – கம்பராமாயணம்.
    இதிலிருந்து மருதநிலத் தமிழர்களான மள்ளர்கள் உழவர்களாக மட்டுமின்றி போர்ப்படையாகவும் இருத்தமை தெளிவாகும்
  5. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 4:
    —————————————————————————————————-
    ஏறும் போரும் இணைபிரியாது என்ற பழமொழிக்கு ஏற்ப மள்ளர்கள் உழவர்களாக மட்டுமின்றி போர்க்குடிகளாகவும் இருந்து பேரரசுகளைக் கட்டி தமிழினத்தைக் காத்துநின்றமையை சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன. திருவிளையாடற்புராணம்மள்ளர்களின…
    ் போர்த்திறனை வேளாண்திறனோடு சேர்த்து “பலநிற மணிகளையும் கோர்த்துச் செய்த மாணிக்கமாலை போன்று பலநிறக் காளைகளையும் ஏரில்பூட்டி கலப்பையில் உள்ள இரும்பினால்செய்த கொழுவு தேய , வாள்வீசிச் சண்டையிடும் போர்த்தொழிலில் வல்ல கரிய கால்களையுடைய மள்ளர்கள், நிலமகளின் உடல்போன்ற நிலத்தை உழுதனர். உழுத ஏர்த்தடங்களில் குருதி போன்ற சிவந்த சேற்றிடத்தில் சிவந்த மாணிக்கம் போன்ற தானிய மணிகள் ஒளிவீசின ” எனப் பாடுகிறது.அப்பாடலானது,
    “பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி
    அலமுக விரும்பு தேய வாள்வினைக் கருங்கான் மள்ளர்
    நிலமக ளுடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச்
    சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி யிமைக்கு மன்னோ” (செ-19) என சுட்டுகிறது.
  6. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 5:
    —————————————————————————————————-
    (மல்லன்,மள்ளன்,பள்ளன் அனைவரும் ஒருவரே என்பது குறித்த ஒரு ஆதாரம்)
    கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட பேரூர்ப்புராணம் சிவனை (பேரூர் பட்டீஸ்வரர் -கோயமுத்தூர்) பள்ளன் எனவும் மள்ளன் எனவும் மாறி மாறி அழைக்கிறது. அப்பாடலானது

    ” இந்திரன் பிரமனாரணன் முதலா மிமையவர் நுகமலை மேழி
    வெந்திறள் கொழுவார் கயிறுகோல் பகடு வித்துனா றனைத்துமா யங்கு
    வந்தனர் பயில வன்கண நாத றேவல்செய் மள்ளரய் விரவி
    முந்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழிவழி வினைதொடங் கினரால்”-(செய்-28) எனப் போற்றுகிறது.
  7. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 6:
    —————————————————————————————————-
    சங்க காலம் முதற்கொண்டு இடைக்காலத்திலும் ஆண்ட அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் அல்லது வேளிர்கள் அனைவரும் மள்ளர் குலத்தவர் என்று கூறுவது அதிகப்படியாகத் தோன்றுகிறது.
    இடைக்காலம் என்பதும் தமிழரசர்கள் ஆண்ட காலம் தான்.குறு நில மன்னர்கள் ஏனைய இனத்தோரிலும் உண்டு.
    மள்ளர்களே தமிழகம் முழுதும் ஆண்டார்கள், சிறிய பகுதிகளுக்குக் கூட தலைவராக விளங்கியவர்கள் மள்ளர்கள் என்பது போன்ற கருத்துக்கள் மிகையானவை. உழு தொழில் செய்தவர்தான் அனைத்தும் அறிந்தவர் எனக் கூற முடியாது. உழு தொழில் மேன்மை உடையது என்று கூறினாலும் ஒவ்வொரு அரசனும் தங்கள் நாட்டைக் காத்துக் கொள்ள படைகள் கூடுதலாகவே தேவைப்பட்டன. உழு தொழில் செய்த மள்ளர்களும் போர்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
    மல் என்ற சொல்லுக்குச் செல்வம் என்று பொருள். மல்லை என்றால் செல்வம் மிகுந்தது என்று பொருள். அதற்கு திண்மை என்ற பொருளும் உண்டு. வளப்பம் என்ற பொருளும் உண்டு.
    வளப்பம் என்ற பொருளும், திண்மை என்ற பொருளும், செழுமை என்ற பொருளும்,செல்வம் என்ற பொருளும் மல் என்ற சொல்லுக்கு உண்டு (டாக்டர்.தயாளனின் லெக்௯சிகன் மற்றும் திராவிடியன் எட்டிமலாச்சி டிக்ஸனரி). எனவே,மல்லன் என்றால் யார் எனப் புரிந்துவிடும்.
    இதே பொருளை மள் என்ற சொல்லுக்கும் பார்க்கலாம்.அதாவது,மள்ளர் என்றால் திண்மை, செழுமை என்று வருகிறது. மல்-மல்லர், மள்-மள்ளர் இரண்டுக்கும் ஒரே மாதிரியான பொருள் வருகின்ற காரணத்தினால் இரண்டு சொற்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.//
    Referrence:
    http://kallarperavai.webs.com/kallar.htm
  8. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    //முடியுடை மூவேந்தர் அனைவருமே மல்லர்களே. ஏனெனில் இந்த மூவேந்தர்களும் மல்யுத்தம் புரியும் போர்வீரர்களே! இங்கே கவனிக்க வேண்டும் மள்ளர்கள் அல்ல//
    ‘மள்ளர்’,'மல்லர்’ இருவரும் ஒருவரே என்றும், இந்த இரண்டு வார்த்தைகளும் மாறி மாறி உழவுத் தொழில், போர்த்தொழில் என்று இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இன்னும் பல ஆதரங்களுடன் இங்கு யாம் நிரூபித்தால் இந்த கட்டுரை எழுதியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இந்த கட்டுரையை நீக்கி விடுகிறீர்களா? இது என்னுடைய வெளிப்படையான சவால்.
============================================

சோழர்களின் வம்சம்? கட்டுரைக்கு மறுப்புரை:


மூலக் கட்டுரை

சோழர்களின் வம்சம்? கட்டுரைக்கு மறுப்புரை:
யார் இந்தக்கட்டுரையின் ஆசிரியர்?. முதலில் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் குறிப்பது போல், இது உண்மையில் ஒரு சார்பான உணர்ச்சிக்கு அப்பாற்பட்டு, அறிவியல் பூர்வமாக எழுதப்பட்ட கட்டுரை இல்லை என்பதை இதைப் படிப்பவர் அனைவரும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
சோழர் வம்சத்தைக் காண சோழகனார், சோழகங்கன் மற்றும் சோழங்கன் என்ற பட்டம் இருந்தால் போதும் என்றும், அந்தப் பட்டத்தைத் தற்போது(?) கொண்டுள்ளதால் கள்ளர் மற்றும் வன்னியர் போன்ற இனத்தாருக்கே சோழ வம்சத்தாராக இருக்க வாய்ப்பு வலுவாக உள்ளதாக கட்டுரையாளர் கண்டுபிடித்துள்ளார். என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு!
நான் கேட்பது என்னவெனில், தற்காலத்தில் ‘சோழர்’ என்பது போன்ற பட்டப்பெயர் வைத்துக் கொண்டால் அவர்கள் சோழ வம்சத்தார் என்று முடிவு கொள்வது சரியாகுமா? இது பெரிய முட்டாள்தனமாக தெரியவில்லையா? ஒரு வேளை சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கள்ளர், வன்னியர்களுக்கு இந்தக்குடிப் பெயர்கள் இருந்திருந்தால், அதற்கான ஆதாரம் கல்வெட்டுக்களில் காணப்பட்டிருந்தால் நாம் அவர்களை சோழ வம்சத்தார் என்று ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், கள்ளர் மற்றும் வன்னியர் போன்ற இனத்திற்கு சோழர்கள் ஆட்சிக் காலத்தில் ‘சோழர்’ போன்ற பெயர்கள் இருந்ததற்கான கல்வெட்டுச் செய்தி உறுதியாக இல்லை. தற்காலத்தில்(?) அவர்கள் ‘சோழங்கன்’ போன்ற பட்டங்கள் வைத்துள்ளனர். இதை வைத்து அவர்கள்தான் சோழ வம்சத்தார் என்று சொல்வது அறிவார்த்தமான முடிவாக இல்லை என்பதே உண்மை.
முதலில் ‘சோழ’ என்ற சொல்லானது சோறு மற்றும் நெல்லைக் குறிக்கும் வேர்ச் சொல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, சோழன் என்பவன் அந்த நெல்லுக்குரிய, நெல் நாகரிகத்தின் பண்பாட்டுக்குறி என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ள முடியும். அப்படியெனில், நெல் நாகரிகத்து மக்கள் என்ற வகையில் மள்ளர் என்றும், தற்காலத்தில் பள்ளர் என்றும் அழைக்கக் கூடிய மக்களே ‘சோழர்கள்’ என்பது சொல்லாமலே விளங்கும். ஏன் மற்ற இனத்தவர் நெல் நாகரிக மக்களாக இருக்கக் கூடாது? இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கையே. தற்காலத்தில் பல இனத்தார் நெல்விவசாயம் செய்கிறார்கள். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்புவரை மள்ளர்களே நெல் விவசாயம் செய்தார்கள். தற்காலத்தில், மற்ற இனத்தார் விவசாயம் கற்றுக் கொண்டபோதும், பள்ளர் இனமக்களே தங்களது குலத்தொழிலை விடாமல் போற்றி வருகின்றனர். சரி, பள்ளர் என்ற பெயர் எப்படி வந்தது? எப்படி உயர்ந்த விவசாயத் தொழிலைச் செய்யும் பள்ளர்கள் சமூகத்தில் கீழே கொண்டு செல்லப்பட்டார்கள்? என்று கேட்டால், அதற்கு ’பள்ளர்கள் பள்ளமான வயலில் நெல்விவசாயம் செய்ததால் பள்ளர்கள் ஆனார்கள். அதனால், சேற்றில் கால் வைத்ததால் இவர்கள் தாழ்’த்தப்பட்டவர்கள் என்று சொல்கிறார்கள். இதன்மூலம் தெரியவில்லையா?, பள்ளர்கள்தான் நெல் நாகரிக மக்கள் என்று.
தேவேந்திரகுல வேளாளர்களைக் குறிப்பிடும்போது, ‘அவர்கள் மள்ளர் அல்லது பள்ளர் என்ற பட்டம் வைத்துக் கொண்டு சோழர் என்கிறார்கள்’ என்று இந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். மள்ளர் மற்றும் பள்ளர் என்பது பட்டப் பெயர் இல்லை. அது ஒரு இனத்தைக் குறிக்கும் மரபுப்பெயர். வன்னியர் என்பது தேவர் போன்று பட்டப்பெயர். இந்த, வன்னியர் பட்டம் கள்ளர்களும் வைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில் சொல்லப்போனால் தற்காலத்தில்(?) தஞ்சைக் கள்ளர்கள் வைத்துக் கொள்ளாத பட்டமே(?) இல்லை.
தற்காலத்தில் மட்டுமே கள்ளர் மற்றும் வன்னியர் போன்றோர் ‘சோழ’ போன்ற சொற்களை பட்டமாகக் கொண்டுள்ளனர். அது எதற்கு என்பது நமக்குத் தெரியாதா! சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த இனத்தார்கள் இந்தக் குடிப் பெயர் கொண்டதற்கு எந்தக் கல்வெட்டுச் செய்தியும் உறுதியாக இல்லை. ஆனால், பள்ளர்களுக்கு சோழர்களின் ஆட்சிக் காலத்திலேயே இந்தப் பெயர்கள் இருந்துள்ளது. அதை இவர் வசதியாக மறைத்துள்ளார்.
மள்ளர் என்ற பள்ளர்கள், சோழர் ஆட்சி காலத்திலேயே ‘சோழன்’ என்ற பெயர் கொண்டதற்கு கல்வெட்டு ஆதாரம்:
1.கோயமுத்தூர்,பேரூர் பட்டீஸ்வரர் கோயில்கல்வெட்டு.. (தெ.க.5/240) பட்டீஸ்வரர் கோயிலுக்கு நந்தவனம் எற்படுத்திக் கொடுத்த குடும்பர்
‘தென்வழிநாட்டு ஏழூர் ஊராளி தென் குடும்பரில் சிங்கன் சோழனான அணுத்திரப்பல்லவரையன்’
இங்கு குடும்பன் என்பது பள்ளரைக் குறிக்கும். அணுத்திரன் என்றால் தேவேந்திரன்.
2.திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கல்வெட்டு (தெ.க.5/278) கோயிலுக்கு நிலம் கொடை அளித்தவர்” ‘குடும்பரில் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்கச் சோழ இருங்கோளர்
இதுபோன்று நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் மள்ளர் என்ற பள்ளர்களுக்கு உள்ளது. அதை வசதியாக மறைத்து விட்டார், இந்த நல்லவர்!
இதுமட்டும் கிடையாது. இராசராச சோழன் மற்றும் இராசேந்திர சோழன் ஆட்சியின் போதுதான் அதாவது கி.பி 9 மற்றும் 10 நூற்றாண்டு காலத்தில்தான்
‘அருந்திரல் வீரர்க்கும்,பெருந்திரல் உழவர்க்கும்
வருந்தகையதாக்கும் மள்ளர் எனும் பெயர்’ (திவாகர நிகண்டு)
‘செருமலை வீரரும்,திண்ணியோரும் மருதநில  
மக்களும் மள்ளர் என்ப” (பிங்கல நிகண்டு)              
அதாவது, மிகச்சிறந்த வீரன், மிகச்சிறந்த உழவன் மற்றும் மருதநிலத்தான் என்பவன் மள்ளனே என்று அருதிட்டுக் கூறப்பட்டது. இதன்மூலம் மற்ற இனத்தவர் மன்னர் மற்றும் உழவன் இல்லை என்பதாகிறது! மள்ளர் என்றாலே மன்னர் என்றுதானே அர்த்தம். தற்காலத்தில் சோழர் என்ற பட்டப்பெயரை தங்களது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டதால் அவர்கள் சோழ வம்சத்தவர் ஆகி விட்டனர் என்று சொன்னால்,இந்த முட்டாள்தனத்தை யாரிடம் சொல்வது. பிச்சாவரம் சமீன் சூரப்ப சோழகனாரை சோழ வம்சத்தவர் என்று எப்படி சொல்ல முடிகிறது? உண்மையில், சூரப்ப சோழகனார் தெலுங்கு பாளையத்துக்காரன் வாரிசு.’ சோழகனார்’ என்ற பட்டத்தை வைத்துக்கொண்டால்,அவர் ‘சோழ வாரிசு’ஆகி விடுவாரா?
சோழர்கள் ‘களப’ என்று பெயருக்கு முன்னால் போற்றுக் கொண்டார்கள் என்று சொல்லி, அவர்கள் கள்ளர் இனத்தவர் என்கிறார்! அய்யா சோழர் மன்னர் ஒருவர் ‘களப’ என்ற சொல்லை பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டார். அப்படிஎனில், அவர் கள்ளர் இனத்தவர் என்று அர்த்தம் கிடையாது.’களப’ என்றால் ‘யானைக்கன்று’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளத்தான். பொதுவாகவே சோழர்கள் ‘ராஜசிங்கம்’ மற்றும் ‘யானைக்கன்று’ என்று தங்களை பெருமையாக அழைத்துக் கொள்வார்கள். அதற்காகத்தான் இந்த ‘ராஜகேசரி’ மற்றும் ‘களப’ போன்ற சொற்களை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது. தனது இனத்தைக் குறிக்க அல்ல. இதற்குப் பிறகும் கண்ட இனத்தவர்களை ‘சோழர் வம்சம்’ என்று சொல்வதை நிறுத்திக்கொள்ள புத்தி வருமா?.
                         ---சுந்தரலிங்க குடும்பன்---