Monday, May 19, 2014

வெட்டும் பெருமாள் பாண்டியன் யார்?

வெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள்

(கயத்தாறு இளவேலங்கால் நடுகல் கல்வெட்டு)
பதிற்றுபத்து:
“ஓடாப்பூட்கை ஒண்பொறிக் கழற்கால்
பெருஞ் சமம் ததைந்த செருப்புகல் மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து.
பெருஞ்சோறு உகந்தற்கு, எறியும்
கடுஞ் சினவேந்தே! நின் தழங்கு குரல் முரசே,
பொருள்:
பகைவர்க்குப் புறங்கொடுத்து ஒடாத கொள்கையினை தாங்கள் செய்த அரிய வீரச் செயல்கள் பொறிக்கப்பட்ட வீரக் கழலையணிந்த கால்கள் உடையவரும் பெரிய போரிலே பகைவரச் சிதைத்தவரும் மேலும் போர் செய்தலையே விரும்புவராகிய மறவர்களின் ஆராவாரம் இடிபோல நிலத்தை அதிரச் செய்து யாழிசை சேர்த்து ஒலிக்கப் போர் மறவருக்கு மிக்க சோற்றை விருந்தாக அழிக்க கூடிய சினத்துடைய வேந்தே! நின் முழங்குகின்ற முரசு அறைபடாமல் நின்றது.
பாண்டியன் தானே என்றும் கொண்டயங்கோட்டை மறவர்கள் வந்தேறிகள் என்றும் தூற்றும் இழிசினக்கூட்டத்தினர்கள் இதை கவனிக்கவும்.
வெட்டும் பெருமாள் வாரிசுகள் தானே என்றும் நாப்பிலக்க பொய்யுறைக்கும் புனைகதைகள் புனைந்து அதை புத்தகமாக வெளியிடும் கூட்டங்களுக்கு பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் விஜயநகர தளபதி விட்டலராயன்(வெங்கலராஜன்) படையே எதிர்த்து போரிட்டு மடிந்த பத்து கொண்டையங்கோட்டை மறவர்களின் கல்வெட்டு செய்திகள் தமிழக அரசு தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது. அது அரசால் முறையாக பதிவு செய்யபட்டுள்ளது. அந்த நடுகற்களும் பாளையங்கோட்டை அருங்காட்ச்சியகத்தில் உள்ளது.
வரலாறு:
1544 ஆம் ஆண்டில் விஜநகர மேலாதிக்கத்தை எதிர்த்து திருவனந்தபுரம் அரசர்கள்,திருவாடானை பாண்டியர்கள்(அஞ்சுக்கொத்து மறவர்கள்), தென்பரதவர்கள், போகலூரை சார்ந்த ஜெயதுங்க தேவர்(சேதுபதி) கலகக்கொடி உயர்த்தினர். விஜயநகர மன்னன் சதாசிவராயன் தனது உறவினனும் தளபதியுமான விட்டலராயனை(வெங்கலராஜன்) படையோடு அனுப்பினான். அப்பொழுது திருவனந்தபுரம் அரசனும்,கயத்தாற்றில் ஆண்டுவந்த பாண்டியனும் ஒப்பந்தம் செய்து கொண்டு தெண்காசி விஜயநகர மன்னனுடன் உறவுடையதாக இருந்தது. இவர்களிருவரையும் கலகக்காரர்களாக கருதி தென்பகுதிக்கு வந்தான் வித்தலராயன்.முதலில் திருவாடானை அஞ்சுகொத்து பாண்டிய மறவர்களை ஒடுக்கினான்.பின்பு தூத்துக்குடி பரதவர்களை ஒடுக்கினான்.
பின்பு திருவனந்தபுரம் அரசன் உன்னி கேரளவர்மனை ஒடுக்கினான்.பின்பு கயத்தார் பாண்டியனை ஒடுக்க தெண் பகுதிக்கு வந்தான். அப்போது நடந்த போரில் வடுக படையுடன் வந்த வெங்கலராஜனான விட்டலராயனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்த போரில் விஜய நகர தளபதி தோற்றான் எனவே கூறலாம்.கன்னடிய தளபதி (வெங்கலராஜ)விட்டலராயனுக்கும் வெட்டும் பெருமாள் பாண்டியனுக்கும் இடையே நடந்த போர் பற்றிய கல்வெட்டு கயத்தார் ‘இளவேலங்கால் கல்வெட்டு’ குதிரையுடன் ஒருவனும் காலாட்படையுடன் ஒருவனும் சண்டையிடுவதாக சிற்பம் ஒன்று உள்ளது. இதுவே சாட்ச்சியாகும்.
போரில் வடுக படையை எதிர்த்து போரிட்ட வீர மறவர்கள் ஆயிரக்கணகானோர் இறந்தனர். இதில் தளபதிகளான பத்து கொண்டையங்கோட்டை மறவர்களுக்கு பாண்டியன் நடுகள் எடுத்துள்ளான்.
இந்த கொண்டையங்கோட்டை மறவர்களுடன் பாண்டிய மன்னனின் பெயரும் அவனது வம்சப்பெயரும் தமிழக் தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது.
இந்த பத்து கொண்டையங்கோட்டை மறவர் தளபதிகளின் பெயர்கள் பின்வருமாறு:

300. முதல் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“போவாசி மழவராய சிறுவனான குண்டையங்கோட்டை மறவன் வடுக படையுடன்
வந்த வெங்கலராஜன் குதிரையை குத்தி பட்டான்”
301. இரண்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டயங்கோட்டை மறவரில் சிவனை மறவாத தேவர் மகன் பெருமாள் குட்டி பிச்சான் காலாட்போரில் பட்டான்”
302. மூன்றாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டையங்கோட்டை அஞ்சாதகண்ட பேரரையரும் போரில் பட்டான்”
303. நாண்காம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் போரில் பட்டான் ”
kondayam1
304. ஐந்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டயங்கோட்டை மறவரில் அரசுநிலை நின்ற பாண்டிய தேவரின் புத்திரனான செல்லபெருமாள்
இராமகுட்டி குதிரையை குத்திப் போரில் பட்டான்”
kondayam2
305. ஆறாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“ராசவேங்கை, பகந்தலை ஊரை சார்ந்தவன் தொண்டைமானின் மகன் குதிரைபடையுடன் பட்டான்”
kondayam3
306. ஏழாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டயங்கோட்டை மறவரில் பிரியாதான் தொண்டைமான் மகனான பிழைபொருத்தான் பகந்தலை ஊரை சார்ந்தவன்”
307. எட்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டயங்கோட்டை மறவரில் அஞ்சாதான் இராமேத்தி போரில் பட்டான்”
308. ஒன்பதாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“பெயர் தெரியவில்லை”
309. பத்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டயங்கோட்டை மறவரில் இளவேலங்கால் ஆண்டார் மகன் ஆள்புலித்திருவன் போரில் பட்டான்”
kondayam4kondayam0
Annual Reports on Indian Epigraphy
(1939-1944)
PUBLISHED BY THE DIRECTOR GENERAL
ARCHELOGICAL SURVEY OF INDIA
JANPATH, NEW DELHI-110011
1986


LIST OF STONE INSCRIPTIONS COPIED DURING THE YEAR 1940-41-CONTD
NO
PLACE OF INSCRIPTION
DYNASTRY
DATE
REMARKS





300.








301.





302.




303.


304.



305.



306.




307.



308.



309.


TINNEVELLY DISTRICT-
KovilPatti Taluk
ILAVELANGAL

First hero-stone








Second hero-stone in the Same Place



Third hero-stone in the Same Place


Fourth hero-stone in the Same Place
Fifth hero-stone in the Same Place

Sixth hero-stone in the Same Place

Seven hero-stone in the Same Place


Eight hero-stone in the Same Place

Ninth hero-stone in the Same Place

Tenth hero-stone in the Same Place






Jadavarman alies

Ku…..ndyadeva






Jadavarman alies

Ku…..ndyadeva



…………..





………………..

……………..



…………….




……………….




……………….




…………………


……………….





Saka 1469
Kilaka
Pankuni22






Saka 1469
Kilaka
Pankuni22



…………..





………….

…………….



……………




…………..




……………




……………


……………






Records the death of certain “Povasi Malavaraya Siruvan the Maravan of the Kundayankottai while fighting(his foes) on the occasion of the attack by vengalaraja with his vaduga army during the sojourn of Tirunelveli Perumal alias vettum Perumal set at Illavelangal

Records the death of another Marava warrior by name Sivanai Maravada
Thevar Perumal kutti pichchan( son  of……



Records the death of Anjagandar periyarayar of Kundayan Kottai During the same Raid.

Records the death of Sivalavan Venrumudigondan Visayalayathevan,son visayalayadevan Tinniyan of Kundayan Kottai During the same Raid.

Records the death of Sella perumal Ramakutti Son of Marava  Arasunilainindra………….Pandiya devar of Ilavelangal After piercing the death.

Damaged.Records the death of Another Warrior Rajavengai,son of Tondaiman mikkupillai of Paindalai in Similar combat in the fight of Cavalary. 

Records the death of Pilaiporuthan,Son of Tondaiman(Kundayankottai) At Paindalai in Similar combat in the fight of Vaduga Army Durin the same raid. 

Fragment

Records the death of Marava Warrior Alpuli Tiruvan,Son of Andar,of Ilavelangal After piercing the death During the Occasion of Vengalaraja raid.




இவர்கள் பத்து பேரும் கொண்டையங்கோட்டை மறவர்களே கயத்தார் அருகே இளவேலங்கால் ஊரை சார்ந்தவர்கள்.
இதில் மறைக்கப்பட்ட இன்னோர் செய்தி மிக முக்கியமானது வெட்டும் பெருமாளை குறிப்பிடும் முதல் நடுகல் செய்தியில் குண்டயன்…………….பாண்டிய தேவர் என ஒரு செய்தி அரசாலே மறைக்கபட்டது. இதற்க்கு நாம் கொண்டையங்கோட்டை மறவர் தலைவன் வெட்டும் பெருமாள் பாண்டியர் என நாம் பொருள் கொல்லலாம்.
இதிலிருந்து பாண்டியனும் பாண்டிய படைவீரர்களும் யார்? என்பதை மேலும் புரியவைக்க தேவையில்லை.
நன்றி:
இந்திய தொல்லியல் துறை,டில்லி
வழக்கறிஞர் முத்துராஜா அவர்கள்
Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Leave a comment
....................................................................................................................................................................

 மறுப்புரை:

தங்களைப் பாண்டியர் வம்சத்தார் என்று வரலாற்றை மாற்றும் நாகரிகமிகுந்த(?)  உயர்ந்த(?) கூட்டத்தார் இலட்சணத்தைப் பாருங்கள்:

முன்பே சொன்னதுபோல் சங்க நூல்களில் போர் மறவர் என்று சுட்டப்படுபவர் மள்ளர் என்ற பள்ளர். இவர்கள் மேலே சுட்டிக்காட்டிய "பதிற்றுப் பத்து" பாடல்களில் காட்டப்பட்ட சேர வேந்தர்கள் மள்ளர்கள் என்பது தெளிவாக இருப்பதை ஏன் மறைத்து விட்டார்கள்?. அதையும் (பயிற்றுப் பாடல்கள்) அவர்களது தளங்களில் வெளியிட வேண்டியது தானே?


இவர்கள் உண்மையானவர்களாக, உண்மை விரும்புபவர்களாக மற்றும் உண்மையை எதிர்கொள்ள தைரியம் உள்ளவர்களாக இருந்தால், உண்மையான 'போர் மறவர்கள்'  என்போர் யார்? என்பதை, அவர்களே காட்டுகின்ற 'பதிற்றுப்பத்தில்'  கீழ்கண்ட பாடல்களைப் படித்து அறிவு பெறட்டும்!.
பதிற்றுப்பத்து பாடல் எண் 13, 38, 43, 63, 66, 81 மற்றும் 90
  
அவர்கள் காட்டக்கூடிய 16 ஆம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டுச் செய்தியை நாங்கள் மறுக்கவில்லை. இதில் 'குண்டையன் கோட்டை மறவர்' என்பது அவர்கள்தான். அதில் மாற்றம் இல்லை. கொண்டையன் கோட்டை மறவர் இனத்தைச் சார்ந்தவன்தான்  பூலித்தேவன் என்ற பாளையத்தான். அதுவும் எங்களுக்குத் தெரியும். அதேபோல் அந்தப் பூலித்தேவனின் படைத்தளபதியாக இருந்து,பூலித்தேவனுக்காக போரிட்டு உயிர் துறந்த பள்ளன் 'வெண்ணிக்காலாடி' என்பதையும், அந்த மாவீரனுக்காக பூலித்தேவன் நடுகல் வைத்ததையும்  அவர்கள் மறுக்க முடியுமா? இங்கே அவர்கள் இனத்தானுக்கு உயிர் துறந்தவன் பள்ளன் என்பதை மறக்க வேண்டாம். இது அந்தக் குறிப்பிட்ட காலத்திய தமிழ் நாட்டின் சூழல்.
இப்போது அவர்கள் காட்டக் கூடிய செய்திக்கு வருவோம். இங்கே பாண்டியனுக்காக உயிர் துறந்த இளவேலங்கால் குண்டையன் கோட்டை மறவர்களுக்கு பாண்டிய மன்னன் நடுகல் வைத்துள்ளான். இதை நாங்கள் மறுக்கவில்லை. இதை வைத்து அந்த பாண்டிய மன்னன் குண்டையன் கோட்டை மறவர் இனத்தவன் அதாவது, மாண்ட இளவேலங்கால் குண்டையன் கோட்டை மறவர்களுடைய இனத்தைச் சார்ந்தவன் பாண்டிய மன்னன் என்று சொன்னால் இது அவர்களுக்கு அசிங்கமாகத் தெரியவில்லை? பாண்டிய வேந்தரிடம் கி.பி 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாணர் குலத்தவர் படைவீரர்களாகவும்,படைத்தலைவர்க
ளாகவும் பணி புரிந்தனர். பிள்ளை குலசேகர மாவலி வாணாதிராயன் என்பவன் அந்த இனத்தைச் சார்ந்த ஒரு படைத்தலைவன் ஆவான். இந்த வாணர் படைத்தலைவர்களால்தான் பிற்காலப் பாண்டியர் வீழ்ச்சி கண்டனர் என்பது வரலாற்று உண்மை.அந்த இனத்தைச் சார்ந்த படைவீரர்கள் 'மறவர்' என்று சொல்லிக் கொண்டனர். இந்த வாணர் என்போர் யார்? என்பதை அவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்க வேண்டியதுதானே!

அவர்கள் குறிப்பிட்டுள்ள (அரசால் மறைக்கப்பட்டதாகச் சொல்லி) குண்டயன்…………….பாண்டிய தேவர் என்பது  தவறான செய்தி.அதன் உண்மையான விளக்கம் (ஜடாவர்மன் என்ற) குலசேகர பாண்டிய தேவர் என்பதாகும்.இங்கு தேவர் என்பது உடையார் போன்று அரசர்கள் வைத்துக் கொண்ட பட்டமாகும்.


 வரலாற்றை எப்படியெல்லாம்
மாற்ற இந்தக் கூட்டம் முயற்சிப்பதைப் பாருங்கள்! 

 
 


..............................................................................................................................................................     


73 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. "அவர்களே காட்டுகின்ற 'பதிற்றுப்பத்தில்' கீழ்கண்ட பாடல்களைப் படித்து அறிவு பெறட்டும்!.
    பதிற்றுப்பத்து பாடல் எண் 13, 38, 43, 63, 66, 81 மற்றும் 90" - நீங்களே அந்த பாடல்களை போட்டு அதற்கு விளக்கம் கொடுக்கலாமே, அதற்கு முன் மள்ளர்களே பள்ளர் ஆனார் என்பதற்கான உண்மையான (சும்மா "இருந்திருக்கலாம்" போன்ற ஆதாரங்கள் இல்லாமல்) ஆதாரம் கொடுங்களேன் பார்ப்போம். மள்ளர் என்பவர் எந்த காலத்தில் பள்ளர் ஆனார்கள்? ஏதேனும் குறிப்பிட்ட ஒரு நூற்றாண்டில் அப்படி நடந்ததா? மறுக்க முடியாத ஆதாரம் கொடுக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. அப்படியே அடிச்சு விடவேண்டியதுதான் :P ஆரு கேக்கப்போறா :P 17ஆம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் எழுதப்பட்ட நூல் பள்ளு இலக்கியங்கள்... அதிலும் கூட மள்ளர் குலத்தில் வரினும்-னு என்றுதான் உள்ளது... இது எதைக்குறிக்கின்றது??? மள்ளர் குலமாக பள்ளர் வரினும்... ஆக மள்ளர் குலத்தில் பள்ளரும் என்றுதான் பொருளாகின்றது... இந்த ஒற்றை வரியை வைத்துக்கொண்டு இவர்கள் பேசட்டும்... ஆனால் கொடுமை என்ன-னா.

      குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களால் உருவாக்கப்பட்டதுதான் மருதநிலம் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மருதநிலம் வானத்தில் இருந்து குதித்தது... மருதநில மக்களும் ஸட்ரெய்டா வானத்துல இருந்து வந்தவங்க என்பதைப்போல பேசுவார்கள்.

      மருதநிலத்தில் ஆரம்பித்து மருதநிலத்திலேயே தமிழர் வரலாறை முடக்கிவிடலாம் என கணவு காண்கின்றனர் :)

      Delete
    2. மள்ளர் குலத்தில் வரினும் என்று கூறும் போதே
      மள்ளர் என்பது பொதுப் பெயர் என்றாகி விட்டதே...
      அதில் பள்ளர் என்பது உட்பிரிவே என்று தான் கூறப் பட்டுள்ளது....
      மள்ளரில் எல்லா சாதியும் அடக்கம்...

      Delete
    3. அட பள்ளநாயே வெணணிகாலடி கற்பனை உருவக்கியவன் கள்ளன் நாடராசன் இதுல தளபதி வேற 10 கல்வெட்டெல் ஒன்று அரசு நிலைநின்றபாண்டியதேன் என்று பாண்டிய அரசமரபினும் உண்டு அடிமைகள் திருந்தபோவதில்லை

      Delete
  3. மள்ளர்களே பள்ளர்கள் ஆனார்கள் என்பதற்கான உண்மையான பல சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை நீங்கள் பார்க்கவில்லையா?. மேலும் என்ன சான்றுகள் வேண்டும் கூறுங்கள் தருகிறோம்.

    ReplyDelete
  4. என்ன ஆதாரம்? ஒரு வேலை நீங்கள் உங்கள் தளத்தில் விளக்கம் கொடுத்திருந்தால் அந்த சொடுக்கியை கொடுக்கலாமே?

    நான் படித்த வரை உங்கள் தரவுகள் எல்லாமே

    1. மள்ளர் என்ற வார்த்தை மருத நிலத்தில் வாழ்பவரை குறிக்கிறது, பள்ளரும் மருத நிலத்தில் வாழ்ந்தார்கள் அதனால் அவர்கள் தான் மள்ளர்

    2. மள்ளர் (அது மல்லரா? மள்ளரா? - இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கூட விளக்கவில்லை) என்று "திவாகர நிகண்டு" சொல்லிவிட்டது என்று மட்டும் தான் சொல்கிறீர்கள், நிகண்டு என்பதற்கான அர்த்தம் என்ன என்றே சொல்வதில் ஏன்?

    இப்படியான ஒற்றைப்படையான கருத்துகளை மட்டுமே கொண்டு எப்படி இது தான் உண்மையான வரலாறு என்று சொல்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லாம் நானும் கேட்டேன் என்னை குழந்தை என்கின்றார்கள் நான் அழுகின்றேன் என்கின்றார்கள் :P

      Delete
  5. உங்கள் கருத்துபடி மறவர் வாழும் ராமநாதபுரம் போன்ற பகுதிகள் பாலை நிலம் என்கிறீர்கள், அதுவே சில இடங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளர்கள் தான் அதிகம் என்கிறீர்கள், பள்ளர்கள் மருத நிலத்தை சேர்ந்தவர் என்று சொல்லி கொண்டே பள்ளர்கள் அதிகமாக பாலை நிலமான ராமநாதபுரத்தில் வாழ்கிறோம் என்கிறீர்கள்?

    - ஏன் இவ்வளவு குழப்பம்? இதை தெளிவு படுத்த முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. அதாவது பாலை நிலத்தை பசுமையாக்கவே பள்ளர்களை அழைத்து வந்தனர் பாண்டியர்கள் (மறவர்கள்)சோழதேசத்திலிருந்து

      Delete
    2. இரமாநாதபுர மாவட்டத்தில் ஓடும் னவனக ஆற்றின் இரு கனறகளல உள்ள வளமான பகுதிகளன ஊர்களில் பள்ளர்கள் வாழ்கின்றனர் மருத நிலத்தில்

      Delete
  6. நான் கேட்டதில் முக்கியமாக, பதிற்று பத்து பாடல்களில் நீங்கள் சொல்லி உள்ள எண் 13, 38, 43, 63, 66, 81 மற்றும் 90 பாடல்களை ஒரு தனி கட்டுரையாக கொடுத்து அவற்றுக்கு அ. ச. ஞான சம்பந்தன் போன்ற பழம்பெறும் தமிழறிஞர்களின் விளக்கத்தையும், உங்களின் விளக்கத்தையும் கொடுத்து உங்கள் தரப்பை விளக்கலாமே?

    ReplyDelete
  7. பள்ளர் ,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் :


    கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட பேரூர்ப்புராணம் சிவனை (பேரூர் பட்டீஸ்வரர் -கோயமுத்தூர்) பள்ளன் எனவும் மள்ளன் எனவும் மாறி மாறி அழைக்கிறது. அப்பாடலானது

    ” இந்திரன் பிரமனாரணன் முதலா மிமையவர் நுகமலை மேழி
    வெந்திறள் கொழுவார் கயிறுகோல் பகடு வித்துனா றனைத்துமா யங்கு
    வந்தனர் பயில வன்கண நாத றேவல்செய் மள்ளரய் விரவி
    முந்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழிவழி வினைதொடங் கினரால்”-(செய்-28) எனப் போற்றுகிறது.

    பள்ளர் ,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் :
    முக்கூடற் பள்ளு
    காலம் கி.பி.1670 .
    செய்யுள் 12
    மள்ளர் குலமே பள்ளர் குலம்
    "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க் கோர்
    பள்ளக் கணவன் எனின் பாவனைவே றாகாதோ
    கள்ளப்புள் வாய்கிழித்த காரழகர் முக்கூடல்
    கொள்ளத் தமுது குடித்தரங்கள் கூறினரே"
    மள்ளர் என்பது ஒரு குலம் என்பதையும், அம்மள்ளர் குலமே பள்ளர் குலம் என்பதையும் முக்கூடற் பள்ளு அடிகள் தீர்க்கமுடன் தெளிவுபடுத்துகின்றன.

    ReplyDelete
    Replies
    1. மள்ளர் குலத்தில் வரினும் என்றால் என்ன பொருள்... பள்ளர்கள் மள்ளர் குலமாக(வயலும் வயல் சார்ந்த நிலத்தில் வாழந்தவர்களாக) இருந்தாலும் என்றுதானே பொருள்??? மள்ளர் குலத்தில் பள்ளர் மட்டும்தான் என்றால் அதை பள்ளர் குலம் என்றே எழுதி இருக்கலாமே???

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. மள்ளர் - குடும்பர் ஒன்றென
    உரைக்கும் பள்ளுப்பாடல்கள்

    வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கிவந்த வேளாண்குடி மக்களின் வேறுபட்ட பெயர்கள் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை உணர்த்தி, மள்ளர்களின் நீண்டதோர் வரலாற்றுத் தொடர்ச்சியினை இணைத்தும், பிணைத்தும் பள்ளுப் பாடல்களே தெளிவுற்றுகின்றன. மள்ளர் குலத்தவரின் குலப்பட்டமே குடும்பர் என்பது குறித்துக் கூறும் பள்ளுப் பாடல்கள் சிலவற்றை இங்கே காட்டாகக் காண்போம்.


    சாமிநாதப் பள்ளு
    இயற்றியவர் சிவபெருமாள் கவி.
    செய்யுள் 10
    "பெருக்கமிடும் பண்ணைதனைக் காவியத்தியாய்
    வந்த மள்ளன் பிரபலமோங்கு
    திருக்குலவு வீராச்சிமங்கை நகரக் குடும்பன்
    வந்த திரஞ் சொல்வோமே"
    அடர்ந்த கருங்கொண்டையை முடிந்து, மீசையை நன்றாக முறுக்கு, உருமாலையை இறுக்கிக் கட்டி, வண்ணச் சோமனை இடையிற்கட்டி, சோமபானம் அருந்தி, தென்கரை நாட்டில் பெரும் புகழ் பெற்ற குடும்பனார் வரவை, அவர்தம் குடியினரான மள்ளர்கள் புகழ்ந்ததாக மேற்க்கண பள்ளு அடிகள் பரப்புரை செய்கின்றன.



    எட்டையபுரப் பள்ளு
    இயற்றியவர் முத்துப் புலவர்
    செய்யுள் 37
    "வாய்ந்த ராமனூற்றுப் பண்ணை
    மள்ளர் கட்டிய வெள்ளை காளையைப்
    பேய்த்தண்ணீர் வெறியாலே கொம்பை
    யுயர்த்திப் பிடிப்பாராம்
    குருமலை தனில் வாழும் கெச்சிலாக்
    குடும்பன் கட்டிய யிடும்புக் காளையை
    மறுவிலாத தென்னிசைக் குடும்பன்
    வளைத்து பிடிக்கவே...."


    செய்யுள் 41
    "நெஞ்சூ டெருதுகுத்தும் நீள்காயாத்தாற் காய்ந்தே
    தொஞ்சே மயங்கி மதிசோர்ந்திருக்கும் வேளைதன்னில்
    மஞ்சாடும் பூங்கூந்தல் மள்ளியர்கள் வாய்மொழியோர்
    சஞ்சீவிக் குடும்பன் தானெழுந்து கொண்டானே...."
    தென்னிசைப் பள்ளு அடிகள் மள்ளரும் குடும்பரும் ஒன்றென்பதைத் தீர்க்கமுடன் தெளிவுறுத்துகின்றன. இதில் முதற் செய்யுளில் இடம் பெற்றுள்ள 'கெச்சிலாக் குடும்பன்' நினைவாகவே 'கெச்சிலாபுரம்' என்ற ஊர்ப்பெயர் ஏற்ப்பட்டுள்ளது. 'கெச்சிலாபுரம்' என்ற பெயரில் கோயில்பட்டி அருகே ஓர் ஊரும், கழுகுமலை அருகே ஓர் ஊரும் உள்ளன.



    தென்புதுவைப்பதி தேவாங்கப் பள்ளு
    "புள்ளியுரு மாலுங்கட்டி மள்ளியர்தமைப் பகட்டிப்
    போதவே சிலப்பங் கையில் வாணத்தடியுந்த்
    துள்ளிய வீசி முருக்கி வொள்ளிய கச்சை யிருக்கித்
    தொட்டு விளிக்குஞ் சபாது பொட்டது மிட்டு
    வள்ளல் பழனியப் பேந்திரன் பண்ணை வளம்பார்க்கிறான்
    மைந்தன் உடையக் குடும்பன் வந்து தோன்றினானே...."
    மேற்கண்ட பள்ளு அடிகளும் மள்ளர் - குடும்பர் ஒன்றென்பதை உணர்த்துகிறது.



    பொய்கைப் பள்ளு
    இயற்றியவர் கடிகை அங்கமுத்துப் புலவர், காலம் கி.பி. 1891
    செய்யுள் 25
    "குடும்பனென்ப துயர்ந்தசாதி யானல்ல வென்பர்
    குடும்ப நுயர்ச்சியினைக் கூறவெளி தோ
    நெடுங்கடற் புவியுள் ளோரவரவர் குலத்துக்கு
    நிகழ்த்துந் தலைமையுள் ளோனே குடும்பனாம்
    திடஞ்சேர் மறையோராதி குலசிரேட் டருங்கெல்லாத்
    சேர்ந்திருக்கு மேன்பெயர் தெரியு மீது
    தடம்புயன் சொக்கலிங்கப் பெத்தண்ணல் பண்ணை மள்ளச்
    சாதிக் குடும்பனேன்னைத் தள்ளலரிதே ..."
    மேற்கண்ட பள்ளு குடும்பர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை உணர்த்துவதோடு 'மள்ள சாதிக் குடும்பன்' என்ற சொற்றொடரின் ஊடாக மள்ளரும், குடும்பரும் ஒன்றென்பதை விளக்கி உரைக்கின்றது.


    செய்யுள் 119
    "எண்டிசையும் போற்றுசொக்க லிங்கபெத்த னேந்திரதுரை
    மண்டலங்கொண் டாடுபண்ணை மள்ளிமூத் தாள்சாடி
    விண்டகன்ற பின் குடும்பன் மிகக்கிடை வைத்துவயல்
    கண்டுவந்தான் போலவொரு கணத்தினில் வந்துற்றானே .."
    மேற்கண்ட பள்ளு மூத்த பள்ளியை மள்ளிமூத்தாள் என்றும் பள்ளியின் கணவனை 'குடும்பன்' எனவும் குறிக்கின்றது.

    ReplyDelete
  10. மல்லர், ,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் :



    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருக்கோடிக் காவல் திருகோட்டீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.12 /78 ) பொன் கொடை அளித்த மள்ளர் "கொண்ட நாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன்வெங்கடேவன் கொடுத்த பொன் பதினைங்கழஞ்சி" என்கிறது.

    ReplyDelete
  11. மல்லர் - மள்ளர் - பள்ளர் - குடும்பர்
    ஒன்றென உரைக்கும் சான்றுகள்

    அனுமனேரிச் செப்பேடு
    "ரெகுநாத காவேரிக்குத் தெற்கு மல்லர் திருமேனிக் குடும்பன் புஞ்செய்கு மேற்கு பொடுகட்டியூரணிக்கு வடக்கு" நில அளவையின் போது, அருகாமைந்த நில உரிமையாளரின் பெயரினைப் பதிவு செய்யும் மேற்கண்ட செப்பேடு 'மல்லர் திருமேனிக் குடும்பன்' எனக் குறிக்கிறது. இதனால் குடும்பர்கள் 'மல்லர் குலத்தவர்' என்பது மெய்ப்படுகிறது.

    மதுரை மாவட்ட நில ஆவணம்
    நில ஆவணத்தின்.... '1952 - ம் வருஷம் ஜனவரி மாதம் 9 -ஆம் தேதிக்கு தமிழ் கர வருஷம் மார்கழி மாதம் 25 - ம் தேதி மதுரை தாலுகா வண்டியூர் கிராமத்திலிருக்கும் இருளப்பக் குடும்பன் குமாரத்தி பள்ளர் சுகவாசி அரசாய் அம்மாளுக்கு மேலூர் தாலுகா, ஜாரி ஆமூர் கிராமம், மஜரா தெற்கிலாமூரிக்கும் மல்லர் குடும்பன் குமாரர் பள்ளர் விவசாயம் ஆளப்பன் எழுதி வைத்த செட்டில்மென்ட்...." எனக் குறிப்பிடுகின்றது.


    எட்டையபுரப் பள்ளு
    செய்யுள் 146
    "யிப்படிக் கூடிய நாள்நல்ல நாள் மல்லர் யாரும் வயல்
    ஏரிடச் சாத்திகம் நேரிடச் சீக்கிரம் வாருஞ்
    செப்பினேனென்று மனப்பிரியமாகவே நடந்தான் மள்ளர்
    சேரத்திரண்ட பின்பு கூர்க்குடும்பன் பின்றுடர்ந்தார்
    காகம் வலம்பாயக் கருடனிடம் பாயக் கண்டார் சிலைக்
    காமன் குமாரயெட்டசாமி யோகமென்று கொண்டார்
    வாகன கருடனுமாகாசம் வட்டமிட்டாடவே பள்ளர்
    வந்தபேர்க ளெல்லாஞ் சிந்தை மகிழ்ந்து கொண்டாடவே..."

    தென்னிசைப் பள்ளு மருத நில மக்களை மல்லர்,மள்ளர், குடும்பன், பள்ளர் எனக் குறிக்கிறது. மல்லர் / மள்ளர் என்பது ஒன்றே! யாவரே இன்றையப் பள்ளர்! குடும்பன் என்னும் குலப்பட்டம் இவர்களுக்குரியதே என்பதற்கு மேற்கண்ட பள்ளு மறுக்கவொண்ணாச் சான்றாக திகழ்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மூவேந்தர்கள் பள்ளர்கள் தான் (பள்ளர்கள்) என்பதற்கு ஆதாரம் போதும்

      Delete
  12. என்ன நன்பரே மேலே கொடுத்த சான்றுகள் போதுமா?. இனிமேலாவது மள்ளர் / மல்லர் என்பது பள்ளர்தான் என்று ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது மற்ற நன்பர்கள் போல நீங்களும் மள்ளர் / மல்லர் என்பது பள்ளர்களை குறிப்பிடவில்லையென்று கூறப் போகிறீர்களா?.

    ReplyDelete
    Replies
    1. தூங்குபவனை எழுப்பலாம்...நடிக்கிறவனை...அதான் இவனுக்

      Delete
  13. இவ்வளவு சிரமப்பட்டு பள்ளு பாடல்களை தொகுத்து அளித்தமைக்கு எனது நன்றிகள்.
    நான் ஏதோ மேலும் மேலும் கேள்வி கேட்கிறேன் என்பது போல் இருக்கிறது, ஆனால் உண்மையாக இந்த கேள்விகள் என்பது தான் உங்கள் அனைத்து விளக்கத்துக்கும் ஒரு மதிப்பை தருகிறது.
    கேள்வி 1: மள்ளர் என்ற பள்ளர் என்று பள்ளு பாடல்களில் உள்ளது என்று தெளிவு படுத்தி உள்ளீர்கள், ஆனால் பள்ளு பாடல்கள் பள்ளர்களால் எழுதப்படவில்லை, அவை பள்ளரை ஏச பாடிய பாடல்கள் என்று நீங்கள் வேறு இடங்களில் சொல்லியுள்ளீர்கள். - அப்படி சொல்லும்போது உங்களை பற்றி தாழ்ந்து சித்தரிக்க எத்தனித்த ஒருவர் (உங்கள் கருத்து படி: மூவேந்தர் வமிசவளினர் ஆகிய) மள்ளரே பள்ளர் என்று எப்படி குறிப்பார்?
    ஏன் அந்த பள்ளு பாடல்களில் சொல்லி உள்ள மள்ளர் என்பவர் வெறும் கழனி உழவர் என்ற அர்த்தத்தில் சொல்லபட்டிருக்க கூடாது?
    கேள்வி 2: (இது கேள்வி 1க்கு சமந்தபட்ட கேள்வி) உங்கள் உதாரணங்களில் திவாகர நிகண்டு பற்றி அடிகடி குறிபிடுகிறீர்கள். (கேள்வி 1க்கு திவாகர நிகண்டு சொல்லி விட்டது என்று ஒற்றைப்படையாக பதில் அளிக்கலாம் என்பதினால் இந்த விளக்கமான கேள்வி)
    "நிகண்டு" என்பதன் அர்த்தம் என்ன என்று நீங்கள் சொல்லும்போது தானே நீங்கள் சொல்லும் மள்ளர் என்ற அர்த்தம் விளங்கும்?
    நிகண்டுகளின் படி "பெருந்திறல் வீரர்க்கும், அருந்திறல் உழவர்க்கும் மள்ளர் என்று பெயர்" என்று சொல்கிறீர்கள், நிகண்டு என்பதே ஒரு வார்த்தைக்கு இரு அல்லது பல அர்த்தங்கள் உள்ள சொற்களை குறித்து விளக்குவது தானே (இல்லை நிகண்டு என்பது அர்த்தம் கூறுவதே என்றால் அதற்கும் அகராதிக்கும் என்ன வித்தியாசம்?)
    அப்படி என்றால் "மள்ளர் - பெருந்திறல் வீரர் (இனம் அல்ல, வீரர்களை குறிப்பது)" அதே சமயம் இப்படியும் பொருள் படும் "மள்ளர் - அருந்திறல் உழவர் (இனம் அல்ல, உழவர்களை குறிப்பது) "

    இது சரியான புரிதல் இல்லை என்றால், தமிழறிஞர்களால் பெரிதும் ஏற்று கொள்ள பட்ட அகராதிகளில் (பிங்கல நிகண்டு / திவாகர நிகண்டு காலத்திய அல்லது அதற்கு பின் 1800 காலத்திற்கு முன் உள்ள அகராதிகளில்) மள்ளர் என்பவர் தான் பள்ளர் அவர்களே மூவேந்தர் வமிசவளியினர் என்று ஏன் எங்கும் குறிக்கவில்லை?

    ஒருவேளை அகராதிகள் வேண்டுமென்றே அதிக்க சாதியினரால் பள்ளர்கள் வரலாற்றினை இருட்டடிப்பு செய்ய
    பயன்படுத்தினர் என்றால், நிகண்டுகள் குறிப்பாக தமிழ் அறிஞர் எல்லோரிடமும் கண்டிப்பாக இருக்கும் திவாகர நிகண்டு போன்றவற்றில் மட்டும் எப்படி இருட்டடிப்பு செய்யாமல் விட்டுவிட்டனர்?

    ReplyDelete
    Replies
    1. பிம்பிலிகா பிலாபி :P போங்க-னோ போய் அ.ஆ படிங்க-னு சொல்லிட்டாங்க சகோ :P

      Delete
  14. கேள்வி 3: நமது மொழியில் பொதுவாக ஒரே சத்தம் கொடுக்கும் இறந்து வார்த்தைகள் வெவ்வேறு பொருள் படும் ,உதாரணமாக "மரம்" - "மறம்", இவை இரண்டிற்கும் மிக பெரிய வேறுபாடு, அப்படி இருக்கையில் நீங்கள் கொடுத்துள்ள "மல்லர்" - "மள்ளர்" எப்படி ஒரே பொருள் படும் (குறிப்பாக ஒரு இனத்தை குறிக்கும்?)
    நீங்கள் கொடுத்துள்ள அனுமனேறி செப்பட்டில்,"மல்லர் திருமேனி குடும்பர்" என்பதில் ஒருவேளை எந்த திருமேனி குடும்பர் மல்யுத்தம் பயின்றவராக இருந்திருந்தால் அவரை குறிக்க "மல்லர்" என்று பயன்படுத்தியிருக்கலாமே? மல்யுத்தம் தெரிந்த ஒருவரை "மல்லர்" என்று குறிக்கும் பழக்கம் உள்ளதே (ஆதாரம் உடனடியாக என்னிடம் இல்லை ஆனால் சில "தென்னிந்திய கல்வெட்டு சாசனங்கள்" பற்றிய புத்தகங்களில் படித்ததாக நினைவு) ஆகவே அது ஒரு இனத்தை குறிக்காமல் "மல்யுத்தம்" அறிந்த திருமேனி குடும்பர் என்று சொல்லி இருக்கலாமே? மல்யுத்தம் பயில்வது என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் அல்லாமல் சில சமயங்களில் தாழ்த்தப்பட்ட இனத்தில் சிலரும் பயின்றனர் என்பது தானே உண்மை. மேலும் சில இடங்களில், எழுத்துக்கள் தவறாக செப்பு பட்டயங்கள்/கல்வெட்டுகள் ஆகியவற்றில் ஏழுதபட்டுள்ளனவே, உதாரணமாக நீங்கள் கருத்து சொல்லி உள்ள இந்த சொடுக்கியில் (http://maruppukalam.blogspot.com/2013/07/blog-post_13.html) ஒரு சுவடியில் "பாண்டிய றாச" என்ற சொல் ராசா என்று சரியான "ர" இல்லாமல் தவறான "ற" கொண்டு எழுத பட்டுள்ளது. இதை போல் பல இடங்களில் உள்ள சொல் தவறுகளை தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டும் போது அதற்கு காரணம் கல்வெட்டுகள் / செப்பு பட்டயங்கள் எழுதும் எழுத்தர்கள் புலவர்கள் இல்லை அதனால் தவறான எழுத்துக்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது, அப்படி இருக்கும் பொது அது மள்ளர் என்று இருக்க மட்டுமே கூட வாய்ப்புள்ளது தானே?

    கேள்வி 4: நீங்கள் கூறும் மள்ளர் தான் இன்றைய பள்ளரே என்பதற்கான தொடர் சங்கிலியை எப்படி விளக்குகிறீர்கள் என்றால்

    1. சங்க பாடல்களில் "மள்ளர்" என்று குறிப்பு உள்ளது <-> மள்ளரே மூவேந்தர் <-> திவாகர நிகண்டில் "அருந்திறல் வீரர்க்கும் ...பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர் என்பர் பெயர்", அவரே வீரர்/உழவர் என்று குறிப்பு உள்ளது <-> பள்ளு பாடல்கள் மள்ளர் குலமாகிய பள்ளர் என்று சொல்கிறது -----> அதனால் பள்ளரே -> மள்ளர் -> மூவேந்தர்

    இப்படி நீங்கள் சொல்லும்போது சங்க பாடல்களில் மள்ளர் என்று குறிப்பதே இன்றைய பள்ளர் இனம் என்று சொல்கிறீர்கள், ஆனால் அதே சங்க பாடல்களில் மறவர் என்று குறிப்பது வெறும் வீரர்களை மட்டும் தான் அது இனம் அல்ல என்று சொல்கிறீர்கள்.

    ---- மள்ளர் என்று சொன்னால் மட்டும் அது இனத்தை குறிக்கிறது என்பதும் மறவர் என்று சொன்னால் மட்டும் அது வெறும் வீரர்களை குறிக்கும் சொல் ஒரு இனத்தை குறிக்காது என்று சொல்வதும் சரியான ஆய்வா?

    ReplyDelete
    Replies
    1. சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.


      சண்டையிட வேண்டாம்.

      பண்டைய காலங்களில் ஜாதி என்பது அந்த கோத்திரத் தலைவரின் பெயராலேயே அழைக்கப்பட்டது. அந்த வகையில் மக்காவை சேர்ந்த நஜ்ஜார் என்பவருக்கு நான்கு மகன்கள். அவர்களின் பெயர்கள் மள்ளர், ரபிஆ, அன்மார், இயாத் என்பதாகும். இவர்களில் மள்ளருக்கும் ரபிஆவுக்கும் சந்ததிகள் அதிகம். மள்ளரின் சந்ததிகள் மள்ளரென்றும் ரபிஆவின் சந்ததிகள் ஏயினரென்றும் அழைக்கப்பட்டனர்.ஏயினர்களே எயினைட் கிங்டம்( ஏயின அரசை நிறுவினர்.).


      மள்ளர்கள் மக்காவின் மேற்க்கே எகிப்து , சூடான் வரைக்கும் கிழக்கே தென்னிந்தியா, இந்தோனேசியா வரைக்கும் வாழ்ந்தனர்.

      மள்ளரின் சந்ததிகளில் தோன்றிய பல்வேறு குலத்தார் பின்பு தங்கள் தங்கள் தலைவர்கள் பெயரில் அழைக்கப்பட்டனர்.

      இவ்வகையில் மள்ளரினத்தைச் சேர்ந்த இல்யாஸ்(இறையனாருக்கு) இரண்டு மகன்கள் ஒருவர் பெயர் குமா.மற்றொருவர் பெயர் முர்ரா(முருகா) இந்த முர்ராவின் சந்ததிகளே மறவர்கள்.முர்ராவின் வம்சாவழியில் வந்தவர் அல் நாடார். இவருடைய சந்ததிகளே நாடார்கள். நாடாரின் மகன் மாலிக், மாலிக்ன் மகன் பள்ளர் அதாவது குரைஷ்.இவருடைய சந்ததிகளே குரைஷ். பள்ளருடைய மகன் மாறன் மாறனுடைய சந்ததிகளே மாறர்கள். இவர்கள் காலத்தில்தான் பாண்டிய ராஜ்ஜியம் கட்டமைக்கப்பட்டது.மாறனுடைய மகன்தான் கிழாப், கிழாப்பின் சந்ததிகளே கிழார்கள் என்றும் கிழவர்கள் என்றும் அழைக்கப்பட்ட வேளாள வேந்தர்கள். கிழாப்பின் மகன் சஹ்ரானின் சந்ததிகளே சஹ்ரர்கள்(சேரர்கள்). சஹ்ரானின் மகன் அதியை சேர்ந்தவர்களே அதியர்கள். சஹ்ரானின் மகன் பாக்கவனை சேர்ந்தவர்களே பாக்கவர்கள் (பாரிகள், பாக்கர்கள்) .முர்அல் சஹ்ரனை சேர்ந்தவர்களே மாறல் சேரர்கள்.


      "ஆயிரம் விரித்த கைம்மாய மள்ளன்" - முருகன்

      பரிபாடல் : 3 -41

      "செருவில் ஒருவ! பொருவிரல் மள்ள" - முருகன்
      திருமுருகாற்றுப்படை : 262

      **********************************************

      நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மக்களிலேயே அதிக கொடையுள்ளம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
      நூல்:" புகாரி :6033" முஸ்லிம் "4620"

      **********************************************

      "மள்ளர்கள் சூழ்தர வள்ளல் நம் நபி" /

      ஸல்லலாஹீ அலைஹிவஸல்லம்

      "சீறாப்புராணம்:3664/3".

      ***************************************

      நபிகள் நாயகம் ஸல் அவர்கள் குரைஷிகளின் கிழவாவின் மகன் குஸையின் குடும்பத்தில் பிறந்தார்கள்.

      அவர்களின் தாய் கஹ்ளன் வம்சத்தைச் சேர்ந்த கள்ளன் என்பவரின் சந்ததியான கள்ளன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.


      கஹ்ளான் இனத்தைச் சேர்ந்த குஸாஆ என்பவருடைய சந்ததியை சேர்ந்த குஸாஆ கோத்திரத்து குறபா என்பவருடைய சந்ததிகளே குறவர்கள். குசாவா கோத்திரத்து சாணா என்பவருடைய சந்ததிகளே சாணார்கள்.

      Geographical and historical works mention the locations that Khuzā’ah used to inhabit before and after the coming of Islam, since they were either Makkah, or adjoining it or in the mountains, watering holes and wadis around it. A number of other Arab tribes used to share these places with them, such as the Quraysh in Makkah, and Kinānah in Jabal al-Abwā’ and Murr al-Ẓahrān and Qudayd. The Arab tribes in general often used to move from one area to another in search of water, something that sometimes led to tribes sharing certain spots. And among the campsites of Khuza’ah were:

      Murr al-Ẓahrān
      'Asifān
      Qudayd
      Al-Watīr
      Al-Maraysī’
      Khalīṣ
      Ghazzāl
      Ghaḑūr
      Ghalā’il
      Al-Ghurābāt
      Ghadīr Khumm
      Muhaymah (al-Juḥfah)
      Al-Abwā’
      Muḥammar
      Shanā’iq
      Shaqrā
      Al-Shabbāk
      Dawrān
      Khayf Salām
      Khayf al-Ni’am
      Nadā
      Nashāq
      Al-Mashqar
      Amaj
      Shahad
      ‘Abab
      Shamnaṣīr
      Harshī
      Bayyin


      .

      Delete
    2. Entha varusam Pai intraiku pallargal irukkururanga musslima mariirukkanga avanalala asinga paduthathinga Vera entha sathi karanavathu Muslims mariirukkanga innikku therkillpallane Muslims irukkanga neenga Pai agavum theriyala pallanga vum theriyala

      Delete
    3. பண்ணை அடிமைகள் என்று நீங்கள் சொல்லும் பள்ளர்களை (மள்ளர்) பற்றி மட்டும் ஏன் வந்தேரிகள் இத்தனை பள்ளுபாடல்களை இயற்ற வேண்டும்? அதற்கு என்ன அவசியம்?

      (மூவேந்தர்களை பற்றி கூட இத்தனை பாடல்கள் பாடப்படவில்லை என்பது வேறு) அதுவும் கடவுள் வாழ்த்து உட்பட

      இலங்கையில் இருந்தும் கூட பள்ளர்களை (மள்ளர்) பற்றி ஏன் எழுத வேண்டும் நண்பா?

      இதைபற்றி நீங்கள் ஆய்வு செய்துவிட்டு பேசலாம்

      பாளய பட்டுக்கள் யாருக்கு அதிகம் தரப்பட்டது ஏன்?

      இன்றைய மறவர்கள் தான் பாண்டியர்கள் என்றால் ஏன் பாளயங்களை வாங்கினார்கள்?

      பாளயங்களை வாங்கிய மறவர்கள் மீண்டும் படை திரட்டி நாயக்கர்களை வீழ்த்தியிருக்கலாம் அல்லவா? என் செய்யவில்லை?

      உங்களை போன்றோர்க்கு 1000 ஆதாரம் தந்தாலும் ஏற்ற மாட்டீர்கள். உங்கள் என்னம் புத்தி அப்படி தான் இருக்கும்

      Delete
  15. மேலும் சில கேள்விகள்.

    குமார கம்பண்ணன் மதுரையில் ஆண்ட முஸ்லிம் ஆட்சியாளர்களை வென்ற பிறகு அவன் தளபதியான லக்கணன் என்பவனை மதுரை பகுதிகளை நிருவாகம் செய்ய நியமித்தான் என்றும் அதன் பொழுது பாண்டியர் வாரிசு என்று சொல்லி கொண்டு தேனி, காளையார் கோவில், கயத்தாறு, தென்காசி (நீங்கள் சொன்ன பாண்டிய வமிசத்தார்) ஆகிய இடங்களில் இருந்தனர், அவர்களில் காளையார் கோவிலில் இருந்த வாரிசை அழைத்து வந்து மதுரை அரியணையில் அமர வைத்தார், அந்த வாரிசு விஜயநகர ராஜ்யத்தில் நரசிம்ம நாயக்கரின் ஆட்சிகாலத்தில் (1486) பதவியில் இருந்து இறக்கப்பட்டார் (கவனிக்கவும் கொல்லபடவில்லை) என்று காவல் கோட்டத்தில் சு. வெங்கடேசன் எழுதி இருக்கிறார், இதற்கு அவர் History of Nayakkars புத்தகத்தில் இருந்து ஆதாரம் எடுத்ததாக சொல்கிறாரே
    அப்படி என்றால் அந்த பாண்டிய வமிசம் பள்ளர்ராக அடிமைபடுத்தப்பட்டு மாற்றபட்டிருந்தால் அதற்கான ஆதாரமும் இருந்திருக்கும் அல்லவா?

    ஏன் என்றால் இவ்வளவு பெரிய குலம் பெரும் போரில் தோற்று பண்ணை அடிமைகளாக மற்றபட்டார்கள் என்றால் அதற்கு காரணமான பெரும் போர் பற்றி தகவல் இருக்குமே ?

    ஆனால் இங்கே ஒரு அமைதியான ஆட்சி மாற்றம் தானே நிகழ்ந்ததாக அனைத்து வரலாற்று அறிஞர்களும் கூறுகிறார்கள் (அதுவும் கிட்டதிட்ட 1372இல் இருந்து 1486 வரை பாண்டியர் குலம் என்று சரித்திர குறிப்பு இருக்கிறது). அப்படி இருக்கையில், இவ்வளவு காலம் சுமூகமாக இருந்துவிட்டு திடீரென ஒரு இனத்தை மட்டும் குறிப்பிட்டு அடிமைகளாக்கி அவர்களின் சரித்திரத்தை திட்டமிட்டு பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக அழித்தனர் என்று எப்படி கூற முடியும்?

    அப்படி தான் நடக்குமென்றால், சுந்தர பாண்டியன் சோழ தலைநகரான தஞ்சையை அழித்த போது, பாண்டியர் ஆண்ட அடுத்த நூறாண்டுகளுக்காவுது (கி. பி. 1251) அனைத்து சோழ மக்களையும் அடிமை குடிகளாக மாற்றி இருக்க வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. சரியான கேள்வி...
      ஓரு சொடக்கு போட்டு மன்னர் குடி...மற்றும் சாதியை அடிமைகளாக மாற்றியிருக்க முடியுமா...?
      மக்கள் விடுவார்களா..?
      உக்கிர பாண்டியன் கொண்டு வந்த உழு குடி பள்ளர்கள்

      Delete
  16. //மள்ளர் என்ற பள்ளர் என்று பள்ளு பாடல்களில் உள்ளது என்று தெளிவு படுத்தி உள்ளீர்கள், ஆனால் பள்ளு பாடல்கள் பள்ளர்களால் எழுதப்படவில்லை, அவை பள்ளரை ஏச பாடிய பாடல்கள் என்று நீங்கள் வேறு இடங்களில் சொல்லியுள்ளீர்கள். - அப்படி சொல்லும்போது உங்களை பற்றி தாழ்ந்து சித்தரிக்க எத்தனித்த ஒருவர் (உங்கள் கருத்து படி: மூவேந்தர் வமிசவளினர் ஆகிய) மள்ளரே பள்ளர் என்று எப்படி குறிப்பார்?
    ஏன் அந்த பள்ளு பாடல்களில் சொல்லி உள்ள மள்ளர் என்பவர் வெறும் கழனி உழவர் என்ற அர்த்தத்தில் சொல்லபட்டிருக்க கூடாது?//

    மள்ளர் என்பது பள்ளரை குறிக்கிறதா இல்லையா? நேரிடையாக பதில் கூறுங்கள். அதைவிடுத்து சுற்றிவலைத்து பதில் கூறாதீர்கள். உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள்கூட மள்ளர் என்பது பள்ளர்கள்தான் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் நீங்கள் ஒருபடி மேலே சென்று மள்ளர் என்பது பள்ளரை குறிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். உங்கள் ஆய்வு நன்றாக உள்ளது

    ReplyDelete
  17. //அப்படி என்றால் "மள்ளர் - பெருந்திறல் வீரர் (இனம் அல்ல, வீரர்களை குறிப்பது)" அதே சமயம் இப்படியும் பொருள் படும் "மள்ளர் - அருந்திறல் உழவர் (இனம் அல்ல, உழவர்களை குறிப்பது) " //

    சரி இருதியாக கேட்கிறேன் மள்ளர் என்பது சாதி, அது ஒரு குலத்தை குறிக்கும் சொல் அது இன்றைய பள்ளரை குறிக்கிறது என்று நிருபித்துவிட்டாள் உங்கள் பதில் என்ன?.

    ReplyDelete
  18. நேரடியான பதில் - "மள்ளர் என்ற பள்ளர் என்று பள்ளு பாடல்களில் உள்ளது என்று தெளிவு படுத்தி உள்ளீர்கள்" - இதில் நான் எங்கு சுற்றி வளைத்து பதில் அளித்திருக்கிறேன்??

    நான் கேள்வி தான் கேட்டு கொண்டிருகிறேன் ஏன் என்றால் நான் எந்த இடத்திலும் இன்ன சாதி தான் மூவேந்தர் வம்சாவளி என்று சொல்லி அதை நிறுவ முயற்சிக்கவில்லை, அதை நீங்கள் முதலில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  19. என் கேள்வியை மீண்டும் படித்து பாருங்கள்....

    "அதற்கு முன் மள்ளர்களே பள்ளர் ஆனார் என்பதற்கான உண்மையான (சும்மா "இருந்திருக்கலாம்" போன்ற ஆதாரங்கள் இல்லாமல்) ஆதாரம் கொடுங்களேன் பார்ப்போம். மள்ளர் என்பவர் எந்த காலத்தில் பள்ளர் ஆனார்கள்? ஏதேனும் குறிப்பிட்ட ஒரு நூற்றாண்டில் அப்படி நடந்ததா? மறுக்க முடியாத ஆதாரம் கொடுக்க முடியுமா?"

    1. மள்ளர் என்று நீங்கள் குறிக்கும் அந்த சொல் (சங்க இலக்கியங்களில் இருந்த மூவேந்தரிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை) இன்றைய பள்ளரை குறிக்கிறது என்பதை எப்படி விளக்குகிறீர்கள்?

    2. எப்போது மள்ளர் என்பவர் பள்ளர் என்று மாறினார், அதாவது எந்த நூற்றாண்டில்?

    இரண்டே கேள்விகளை பற்றி மட்டுமே நீங்கள் பேசி உள்ளதால் நானும் அதே கேள்வியை திருப்பி திருப்பி கேட்பது போல இருக்க கூடாதே என்று தான் தெளிவுற விளக்கி மீண்டும் கேட்டேன், (ஏனேன்றால் நீங்கள் இதை எப்படி எளிதாக திருப்பி விடுவீர்கள் என்றால் நான் தான் பள்ளு பாடல்களில் "மள்ளர் குலம்" என்பர் வருகிறது என்று சொல்லி விட்டேனே ஆகையால் மள்ளர் குலம் தான் பள்ளர் என்று உறுதிப்பட்டுவிட்டதே, அதனால் தான் நீங்கள் மறவர் என்ற சொல்லுக்கு உபயோகித்த சட்டகத்தை மள்ளர் என்ற சொல்லுக்கும் உபயோகபடுத்தி காட்டி விளக்கமாக கேள்வியை கூறினேன்)
    ஆனால் நீங்கள் நான் எதோ சுற்றி வளைத்து பதில் அளிக்கிறேன் என்கிறீர்கள்.

    ReplyDelete
  20. "உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள்கூட மள்ளர் என்பது பள்ளர்கள்தான் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் நீங்கள் ஒருபடி மேலே சென்று மள்ளர் என்பது பள்ளரை குறிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். உங்கள் ஆய்வு நன்றாக உள்ளது"

    - என் சமூகத்தை சேர்ந்தவர்களா? ஹஹஹா...என் குடும்ப பெயர் (எனக்கு தெரிந்த வரை) நான்கு வெவ்வேறு சாதிகளில் உள்ளது, ஆக நான் எந்த சமூகம் என்று நினைகிறீர்கள்? உங்கள் தளத்தில் மறுப்புரை எழுதுபவர் எல்லோரும் ஒரே சமூகத்தவரா என்ன?

    - ஆய்வா? நான் கேட்ட கேள்விகளுக்கு சொன்ன சில தரவுகள் (தரவு என்பது கூட சரியான வார்த்தை கிடையாது, செய்தி என்பது தான் சரி) வைத்து அதை ஆய்வு என்கிறீர்களே, அதுவும் "இருக்க கூடாதா" என்பது போன்ற கேள்விகள் தானே? உங்கள் எண்ண படி உண்மையான ஆய்வு என்பதின் அர்த்தம் இதுதானோ?

    எனது சிற்றறிவுக்கு தெரிந்து ஆய்வு என்பது கேள்வி பதில் அல்ல, 20 - 30 வருடம் ( ஏன் என்றால் சிறு சிறு தரவு முடிவுகளிலிருந்து கிட்ட திட்ட முழு முதல் முடிவுக்கு செல்லும் காலம்) ஆயிரகணக்கான புத்தகங்களை படித்து பலநூறு மையில்கள் அலைந்து தரவுகள் தேடி, அதை ஒன்றுக்கு பலமுறை பல்வேறு அறிஞர்களின் கூற்றுக்களை மறுபரிசிலனை செய்து பின் ஆராய்ச்சி முடிவுகளை உண்மையான மேதைகளின் முன் வைத்து ஒரு கருத்து பதிவு செய்வது. அதுவும் வரலாற்றில் முது பெரும் வரலாற்றறிஞர் கூட இது தான் முடிவு என்று வரையருக்க மாட்டார்கள், இதை போல் இருக்கலாம், இதற்கான வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது என்று விளக்கும் ஆய்வு கட்டுரைகள் தான் அதிகம், ஏனென்றல வரலாற்று ஆய்வில் ஒற்றைப்படையான கருத்துக்களுக்கு இடம் இல்லை.

    "சரி இருதியாக கேட்கிறேன் மள்ளர் என்பது சாதி, அது ஒரு குலத்தை குறிக்கும் சொல் அது இன்றைய பள்ளரை குறிக்கிறது என்று நிருபித்துவிட்டாள் உங்கள் பதில் என்ன?."

    - சங்க காலத்தில் சொல்லப்படும் மள்ளர் என்பது ஒரு சாதியை மட்டும் குறிக்கிறது அதன் தொடர் சங்கிலி அருபடமால் இன்றைய பள்ளர் சாதியாக இருக்கின்றனர் என்பதற்கு ஒற்றைப்படையான ஆதாரங்கள் இல்லாமல் (பன்முக தன்மையுள்ள அதாவது உங்கள் ஆதாரங்களுக்கு மற்ற வரலாற்றாய்வாளர்கள் / தமிழ் அறிஞர்கள் ஆகியோரின் கருத்துகளையும்) ஆதாரம் கொடுங்களேன், அதோடு அத்தகைய கூற்றை இதுவரை எத்தனை சரித்திர ஆய்வாளர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர் என்பதையும் சொல்லுங்கள் என்று தான் நானும் கேட்கிறேன். அது மிக பெரிய விளக்கமாக இருக்க கூடும் என்றே நினைகிறேன், அப்படி என்றால் அதை தனியான ப்ளாக்-காக எழுதி உள்ளீர்கள் என்றால் அதற்கான சொடுக்கியை கொடுங்கள். எதாவது, இதோ இந்த மொத்த ப்ளாகையும் படித்துபார் என்று கொடுத்து விடாதீர்கள், உதாரணமாக mallar-archives போன்ற மள்ளர் ப்ளாக்-களில் Hollywood 300 படத்தில் எப்படி மள்ளர்களே ஸ்பர்டன்சாக இருந்தார்கள் என்பதற்கு அந்த படத்தின் வசனங்களை ஆதாரமாக எழுதி, அதற்கு "ஆய்வு" என்று பெயரும் கொடுத்து என்னை இரண்டு நாட்கள் மண்டை காய்ந்த நிலையில் அலைய விட்டு விட்டனர், அப்படி எல்லாம் இல்லாமல் தெளிவான ஆய்வு கட்டுரை போன்று நான் மேல் கூறிய பன் நோக்கு கொண்ட விளக்கமாக இருந்தால் நல்லது

    இல்லை இதெல்லாம் வெளிவந்த "மீண்டெழும் பாண்டியர் வரலாறு" என்ற நூலில் விவரமாக உள்ளது என்று நீங்கள் கருதினால், அது இப்பொழுது எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள், உங்களிடமே இருந்தால் கூட நான் வாங்கி கொள்கிறேன்.


    ReplyDelete
  21. இறுதியாக நான் என் விளக்கங்களை தெளிவாக - விரிவாக எழுத வேண்டும் என்பதால் தான் பல வரிகளில் எழுதி உள்ளேன், இதற்கு உடனே நான் "சுற்றி வளைகிறேன்" என்று மறுப்பு எழுத வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

    பொதுவாக நம் மக்களுக்கு எல்லா வரிகளையும் படிக்க பொறுமை இருக்காது என்பதே என் கணிப்பு (இருந்தால் தமிழர்கள் புத்த வாசிப்பு அதிகமுள்ள சமூகமாக இருந்திருப்பார்கள்), அதனால் நீங்கள் உடனே ஏதும் முன் முடிவு கொண்டு படித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

    நன்றி.

    ReplyDelete
  22. மன்னிக்க வேண்டும் மேலும் ஒரு குறிப்பு

    நீங்கள் உங்கள் ஆதாரங்களில் குறிப்பிடும் ஆங்கிலேயே கால இந்திய வரலாற்றாய்வாளர் (ஆங்கில கண்ணோட்டத்தில் இந்திய வரலாற்றை பார்த்தவர்கள்) பற்றிய ஒரு குறிப்பு

    "According to Venkatachalapathy, Sastri's Tamil proficiency was not good and he relied on Tamil scholar S. Vaiyapuri Pillai for understanding Tamil literary works. Thus he was not able to analyze the changing meaning of words over time. Venkatachalapathy says, the professional historiography in Tamil Nadu practiced during K. A. Nilakanta Sastri's period there was rarely any interrogation of sources (except in terms of authenticity and chronology" - Experts from Venkatachalapthy's book "In Those Days There was No Coffee: Writings in Cultural History" or அந்த காலத்தில் காபி இல்லை.

    ReplyDelete
  23. //சங்க காலத்தில் சொல்லப்படும் மள்ளர் என்பது ஒரு சாதியை மட்டும் குறிக்கிறது அதன் தொடர் சங்கிலி அருபடமால் இன்றைய பள்ளர் சாதியாக இருக்கின்றனர் என்பதற்கு ஒற்றைப்படையான ஆதாரங்கள் இல்லாமல் (பன்முக தன்மையுள்ள அதாவது உங்கள் ஆதாரங்களுக்கு மற்ற வரலாற்றாய்வாளர்கள் / தமிழ் அறிஞர்கள் ஆகியோரின் கருத்துகளையும்) ஆதாரம் கொடுங்களேன், அதோடு அத்தகைய கூற்றை இதுவரை எத்தனை சரித்திர ஆய்வாளர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர் என்பதையும் சொல்லுங்கள் என்று தான் நானும் கேட்கிறேன் //

    அன்றைய மள்ளர் / மல்லர் இன்றைய பள்ளர் என கூறும் அறிஞர்கள்

    தொல்லியல்துறை இயக்குநர் முனைவர் நடன.காசிநாதன்.
    மள்ளர்களைப் போன்றே 'மல்லர்' என்பாரும் மருத நில மக்களே ஆவர். தொல்காப்பியம் 'மல்லல் வளனே' எனக் கூறுகிறது. ஆதனால் 'மல்லன்' என்போர் வளமுடையவர் என்று போருல்படுவர். மள்ளர்களில் பொருள் மிகுதியாகப் பெற்றிருந்தாரும், தலைவன் தகுதி பெற்றாரும் 'மல்லர்' என்று அழைக்கப் பெற்றனர். 'மல்லன் பேரூர்' என்று பெரும்பாணாற்றுப் படையும், மாடமோங்கிய 'மல்லன் மூதூர்' என்று நெடுநல் வாடையும் “மல்லன் மூதூர் மகிழ் விழாக காண்போன்” என்றும் மல்லர்களின் பேரூர், மூதூர் போன்றவற்றை இலக்கியங்கள் சுட்டுகின்றன.
    சங்க காலத்தில் வேளாண் தொழிலிலின்றும் விலகி மள்ளர் போர் வீரர்களாகவும், மல்லர் வேளாண் குடி மக்களின் தலைவராகவும் காவலராகவும் விளங்கி இருந்தனர் என்பது புலப்படுகிறது" என்கிறார்

    தமிழ்நாடு அரசின் மேனாள் தொல்லியல்துறை இயக்குநர் முனைவர் நடன.காசிநாதன்.- வரலாற்றில் தேவேந்திரர்கள்


    தொல்லியல்துறை இயக்குநர் முனைவர் இரா.நாகசாமி
    'மல்' என்ற சொல்லிற்குச் 'செல்வம்' என்று பொருள். 'மல்லை' என்ற சொல்லிற்கு 'செல்வம் மிகுதியானது' என்று பொருள். இதற்குத் 'திண்ணம்' என்ற பொருளும் உண்டு. 'வலிமை' 'வளப்பம்' என்கிற பொருட்களும் உண்டு. இவ்வாறாக 'மல்' என்ற சொல்லிற்கு வளம்,வளமை,திண்ணம் - உறுதியான - வலிமையான,செல்வம், செழுமை என்ற பொருட்கள் உண்டு இதனை Lexican , Dravidan Etimolagy Dictionary முதலிய அகராதிகள் மூலம் அறியலாம். இதே பொருளை 'மள்' என சொல்லிற்கு பார்க்கலாம். 'மள்ளர்' என்பதற்கு திண்மை, செழுமை, என்று பொருள். மள்ளர் என்றால் உழுபகடு உறப்புவார். செல்வம் என்றால் என்ன? பயிரினால் வருவது செல்வம்; போர் புரிபவர்களுக்கும் மள்ளர் என்ற பெயர் உண்டு. மல் - மல்லர், மள் - மள்ளர் இரண்டிற்கும் ஒன்று போல் பொருள் வருகின்ற கரணியத்தால், சில இடங்களில் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இஃது எனது முடிவான கருத்து. மல்லர் என்றாலும், மள்ளர் என்றாலும் ஒரு பொருள் உண்டு. வேறு பொருளும் உண்டு. அந்த இடத்திற்கு தக்கவாறு சொல்லின் பொருள் மாறுபடும். 'பள் ' என்ற சொல்லிற்கு 'பள்ளம் செய்தல்' என்று பொருள். எந்த வேளாண் செயல்பாடுகளாக இருந்தாலும் 'பயிர் செய்தல்' என்று வந்தால் வரப்பு எடுத்து நீர் தேங்க அந்தப் பள்ளத்தின் அடிப்படையில் இருப்பதாலே 'பள்' என்றால் 'பள்ளர்' என்று பொருள் சொகிறார்கள்.

    ஆதலால் பயிர் செய்து வளத்தைப் பெருக்கி, செல்வத்தைத் திரட்டியவர்களுக்கு 'பள்ளர்' என்று பெயர் வந்தது. அதாவது இம்மக்கள் தொழிலில் இருந்து நிறைவான செல்வத்தைக் கொண்டு வருகிறார்கள். அதனால் மருத நிலத்தில் வாழும் பள்ளர்கள் பிற குலத்தாருக்கு உணவூட்டியவர்களாவர். ஆதலால் 'பள்ளம்' செய்து செல்வத்தைப் பெருக்குகிறவர்கள் 'பள்ளர்கள்' என்றாயினர் என்று மேனாள் தொல்லியல்துறை இயக்குநர் இரா.நாகசாமி தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் மல்லர் - மள்ளர் - பள்ளர் என்பது எல்லாம் ஒரே பொருள் தரும் சொற்கள் மட்டுமின்றி மருத நிலக் குடியினரை மட்டும் குறிக்கும் குறியீட்டுக் குல மரபுப் பெயர் சொற்கள் என்பதும் எளிதில் விளங்கும்.

    ReplyDelete
  24. அன்றைய மள்ளர் / மல்லர் இன்றைய பள்ளர் என கூறும் அறிஞர்கள்

    முனைவர் வின்சுலோ
    “இன்று தென்னகத்தில் வேளாண்மைத் தொழில் புரிந்து வரும் பள்ளர், மள்ளர் என்பதின் உச்சரிப்பின் வேறுபாடு ஆகும்”, என்கிறது வின்சிலோவின் தமிழ் ஆங்கில அகராதி.(Dr.Winslolw Dictionary pp.775)

    டி.கே. வேலுப்பிள்ளை
    “பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் மள்ளர் பிற்காலத்தில் பள்ளர் என வழங்கலாயினர்.” என்கிறார் டி.கே. வேலுப்பிள்ளை.( T.K. Veluppillai, Travancore State manual 1940)

    முனைவர் சி.ஓப்பர்ட்
    “மள்ளர் பள்ளர் ஆனது உச்சரிப்பு வேறுபாடாகும்”. என்கிறார் மேலே நாட்டு அறிஞரான சி.ஓப்பர்ட்(Dr.G.Hobart, Dravidans, The original inhabitance of India pp.101)

    ஞா.தேவநேயப் பாவாணர்
    “பள்ளர் என்பவர் மள்ளர், மருதநிலத்தில் வாழும் உழவர்”. என்கிறார் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்.(செந்தமிழ் செல்வி 1975 ஏப்ரல் வெளியிடு)

    ந.சி. கந்தையாபிள்ளை
    “பள்ள என்பது மள்ள என்பதின் உச்சரிப்பு வேறுபாடாகும். பண்டைய மள்ளரே இன்றைய பள்ளர்”.என்கிறார் ந.சி. கந்தையாபிள்ளை (ந.சி. கந்தையாபிள்ளை, தமிழர் சரித்திரம் பக். 206). இக்கருத்தினைப் பண்டித சவரியாரும் வலியுறுத்துகிறார். இவ்விருவரும் யாழ்பாணத்து அறிஞர்கள்.

    சோ. இலக்குமிரதன் பாரதி
    “பள்ளர் என்பர் மருத நிலத் தலைமக்களாகிய மள்ளர், தேவேந்திர குல வேளாளர்” என்கிறார் சோ. இலக்குமிரதன் பாரதி. (சோ. இலக்குமிரதன் பாரதி, நமது சமூகம் பக். 218)

    முனைவர் கே.ஆர். அனுமந்தன்
    “பள்ளர், கடையர் என்று வழங்கப்படுகின்றனர். சங்க இலக்கியத்தில் வரும் வீரத்திற்குப் பேர்போன மள்ளர் பள்ளரின் மூதாதையாரே ஆவர்” என்கிறார் முனைவர் கே.ஆர். அனுமந்தன். (Dr.K.R. Hanumanthan, Unstouchability, A Historical Study pp 100).

    சேலம் மாவட்டக் குடிக்கணக்கு
    1961 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேலம் மாவட்டம் கணக்கன்கிரி ஊர் பற்றிய கையேட்டில் “பள்ளர் என்பவர் மருத நில மக்களாகிய மள்ளர்” எனக் கண்டுள்ளது. (1961 Census of India, Vol.IX, Madras VI, Village Survey, Kanakkangiri Village, Dalem District)

    கேரள பண்பாட்டு வரலாற்று நிகண்டு – II
    எசு.கே.வசந்தன் என்பவரால எழுதப்பட்டு, திருவனந்தபுரம், கேரள மொழிப் பயிற்சிகம் வெளியிட்ட கேரளப் பண்பாட்டு நிகண்டு பாகம் 2 பக்கம் – 123இல் பள்ளர் என்பவர் சங்க இலக்கியத்தில் மள்ளர் என அறியப்படுவதைத் தெளிவுபடுத்துகின்றது.


    திவாகர நிகண்டு ( சேந்தன் திவாகரன் ) – கி.பி . 9ஆம் நூற்றாண்டு
    மருதநில மக்கள் பெயர்
    களமர், தொழுவர், மள்ளர்,கம்பளர், விளைஞர்
    உழவர்,கடைஞர்,கிளைஞர் என்று அவையவை
    கழனிக்கு அடைந்தவர் பெயரே

    மருத நிலப்பெண் பெயர்
    உழத்தியர், கடைசியர், ஆற்றுக்காலாட்டியர்
    அடுத்த கழனிக்கு அடைந்த மகளிர்

    மருத நிலத் தலைமகன் பெயர்
    ஊரன், மகிழ்நன், கிழவன் என்று இவை
    சாலி மருதத் தலைமகன் பெயரே.

    மருத நிலத் தலைவி பெயர்
    மனைவி, கிழத்தி, இல்லாள், இல் என்று அவையவை
    மருதத் தலைமைகட்கு ஆகும்.






    பிங்கல நிகண்டு– கி.பி.10 ஆம் நூற்றாண்டு

    "செருமலை வீரருந் திண்ணியோரு
    மருதநில மாக்களு மள்ள ரென்ப" - – மள்ளரின் இலக்கணம்

    களம ருழவர் கடைஞர் சிதலர்
    மள்ளர் மேழியர் மருத மாக்கள்
    உழத்தியர் கடைசிய ரந்திலப் பெண்டிர்”- மருத நில மக்கள் பெயர்

    சூடாமணி நிகண்டு– கி.பி.10 ஆம் நூற்றாண்டு

    “களமரே தொழுவர் மள்ளர் கம்பளர் உழவரோடு
    விளைஞரே கடைஞரேழ் பேர்” - மருத நில மக்கள்
    “ஏராளர் நாட்டும் வாழ் உழவர் மள்ளர்” – தானைத்தலைவர் பெயர்


    வீரமாமுனிவரின் சதுரகராதி (ஆண்டு 1732)
    பள்ளர் – உழவர்
    மள்ளர் – உழவர்
    மருத நிலமக்கள் – மள்ளர், உழவர், களமர், கடைஞர், கிளைஞர், தொழுவர்,விளைஞர்

    ReplyDelete
    Replies
    1. டி.கே. வேலுப்பிள்ளை
      “பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் மள்ளர் பிற்காலத்தில் பள்ளர் என வழங்கலாயினர்.” என்கிறார் டி.கே. வேலுப்பிள்ளை.( T.K. Veluppillai, Travancore State manual 1940)

      எந்த வரலாற்று ஆதாரத்தின் படி அவர் இப்படி எழுதியுள்ளார் சகோ?

      Delete
  25. பள்ளன் மருத நிலம் சார்ந்தவன் , மூவேந்தர் அனைவரும் பாலை சம்பந்த பட்டவர், பள்ளன் கடவுள் இந்திரன், மூவேந்தர் கடவுள் சிவன், முருகன், கொற்றவை அனைவரும் வேட்டுவ குடி கடவுள்கள். பண்டைய போர் நாகரீகம் ஆநிரை கவர்த்தாலும், மீட்டலும் பள்ளனுக்கு இல்லை எயினர், மறவர்க்கு மட்டுமே உண்டு, உழவு கூலி பள்ளன் எப்படி அரசன் ஆனான். கதை பாட்டு லாம் சொல்லாம ஒழுங்கா பதில் சொல்லுங்க. "வெட்சி தானே குறிஞ்சியது புறனே" (தொல். பொருள். 59) அப்படினா அர்த்தம் தெரியுமா?? பதுக்கை, நெடுங்கல் அனைத்தும் வேட்டுவ குடி மக்களுக்கு மட்டுமே உள்ளது. ( போரில் இறந்த வீரனுக்குத்தான் நடுகல்) பூம்புகார் , கொற்கை அனைத்து நாகரீகமும் வேட்டுவர் நாகரீகம், இதில் பள்ளர் எங்கு வருகிறார். தெற்கில் இருந்து இடம் பெயர்ந்து வந்தது நாக குடி, வேட்டுவ குடி மக்கள் , அவர்களோடு பறையர்கள். இதில் உழவு தொழில் புரிந்த பள்ளனுக்கு என்ன வேலை??

    ReplyDelete
  26. மறவர் வெட்சி திணை சம்பந்த பட்டவர் பள்ளன் பள்ளம் சம்பந்த பட்டவர், உங்கள் வரலாறு என்பது நீங்கள் எழுதுவது அல்ல, உண்மையில் நீங்கள் யாரோ அதுதான் உங்கள் வரலாறு.

    ReplyDelete
  27. ஆதியில் குறிஞ்சி நிலம் முழுவதும் வேட்டை சமூகமாக வாழ்ந்த மனிதன் மழை ,வெள்ளம் போன்றவைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள மலைகளிலேயே வாழ்ந்தான். மலைகளில் காட்டுவாசியாக இருந்த மனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்தான்.

    கூட்டம் கூட்டமாக வாழ்ந்த அம்மக்கள் குறிஞ்சி நில குறவன்-குறத்தி ( இன்றைய குறவன்-குறத்தியோடு மட்டும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. பல பழங்குடிகளும் குறவன் குறத்திகளே.) என அழைக்கபட்டனர்.

    குகைகளில் வைத்து உண்ணப்படும் நிரந்தர உணவுத் தேவைக்காய் மலையை விட்டு கீழிறங்கி காடுகளில் இருப்பிடங்களை அமைக்கத் தொடங்கினர். அவர்கள் உணவுக்காக விலங்குகளைப் பழக்கி தன்னுடன் வைத்துக் கொண்டனர். அங்கு இயற்கையாய் விளைந்த தானியங்களையும் சேகரித்து உணவுத்தேவையைப் ஓரளவு பூர்த்தி செய்து கொண்டனர். அம்மக்களே இடையர்/ஆயர் ( கோனார் ) என்றும் அந்நிலப் பகுதியே முல்லை எனவும் அழைக்கப்பட்டது.

    எனினும் பெரும் வெள்ளம், காட்டுத்தீ மற்றும் ஆண்டு முழுவதுக்குமான உணவுத்தேவை போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் அவனை மீண்டும் ஆற்றங்கரை ஒட்டிய சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்தது.

    மனிதன் ஆற்றங்கரைச் சமவெளிகளுக்கு இடம்பெயர்ந்த நிகழ்வுதான் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சின் அடுத்த கட்டமாகிப் போனது. முல்லை நிலத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒரு கூட்டம் பள்ளமான ஆற்றங்கரைச் சமவெளிப் பகுதியில் முதன் முதலில் உணவுத் தானியங்களை பயிரிடும் வேளாண்மையை கண்டுபிடித்தனர். அம்மக்களே மள்ளர்/உழவர் என அழைக்கப்பட்டனர். இந்நிலப்பரப்பே மருதம் என அழைக்கப்பட்டது. மற்ற நிலப் பகுதிகளை ஒப்பிடும்போது மனிதனின் முக்கிய வாழ்வாதாரமான உணவும், நீரும், இருப்பிடமும் மருத நிலத்திலேயே பெருமளவில் இருந்தன.
    உணவு உற்பத்தியின் உச்சமாக நெல் வேளாண்மை மருதநிலப் உழவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தி அதிக அளவில் மருதநிலத்தில் வேளாண்மை செய்யப்பட்டதால் பிற நிலத்து மக்களும் மருதநிலத்தைச் சார்ந்தே வாழும் நிலை ஏற்ப்பட்டது.

    தாங்கள் காடுதிருத்தி உருவாக்கிய நிலங்களையும் அதில் கிடைக்கும் உற்ப்பத்தியையும் பாதுகாக்கும்பொருட்டு உழவு தொழில் செய்த வேளான் இனக்குழுக்களில் இருந்து அரசு தோன்றியதாக அரிஞர்கள் கூறுகின்றன.


    “மாயோன் மேயக் காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும்
    வருணன் மேயப் பெருமணல் உலகமும்
    முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச்
    சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.”
    ( தொல் பொருள் அகத் 5)

    என தொல்காப்பியர் சுட்டியதைப்போல இவர்கள் தங்களை வேந்தர் எனக் குறிப்பிட்டுக் கொண்டது மருதநிலத் தலைவர்கள் என்பதன் அடிப்படையிலேயே எனக் கருதலாம்.

    தமிழரசருள், சேர சோழ பாண்டியராகிய முக்குடியரசரும், வேந்தர் என்று கூறப்படும் தலைமையரசராவர். முதற்காலத்தில் அவர்க்கே முடியணியும் உரிமையிருந்தது. இதனாலேயே, அவர் வேந்தர் எனப்பட்டார். வேந்தன் என்னும் பெயர் வேய்ந்தோன் என்பதன் மரூஉ. வேய்தலாவது முடியணிதல்.
    கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயர் கொன்றை வேந்தன் என மருவியிருத்தல் காண்க.

    அரசு தோன்றிய இடம்
    “உழிஞைதானே மருதத்துப் புறனே” – என்று தொல்காப்பியம் புறத்திணை கூறக் காணலாம்.

    இவ்வாறு தோன்றிய மருதநில இனக்குழுக்களின் அரசின் கீழ் மற்ற இனக்குழுக்கள் பணி செய்திருக்களாம் அல்லது இனக்குழுக்கள் இனைந்து செயல்பட்டிருக்களாம்.

    இம்மருதநில மக்களோடு "மருதநில தொழிற்மக்கள்" பதினெட்டு வகையினரும் இருந்ததாக இலக்கியச் சான்றுகள் உண்டு. அவர்கள் :
    1. செம்மான்(தோல் தொழிலாளி)
    2. குயவன்(மண்பாண்டம் செய்வோர்)
    3. கொத்தன்(வீடு கட்டுவோர்)
    4. கொல்லன்(இரும்பு வேலை செய்வோர்)
    5. கன்னான்(செம்பு வேலை செய்வோர்)
    6. தட்டான்(பொன் வேலை செய்வோர்)
    7. தச்சன்(மரவேலை செய்வோர்)
    8. கற்றச்சான்(கல் வேலை செய்வோர்)
    9. செக்கன்(எண்ணெய் ஆட்டுவோர்)
    10. கைக்கோளன்(நெசவுத் தொழிலாளி)
    11. பூக்காரன்(பூ வேலை செய்வோர்)
    12. கிணையன்(கிணைப் பறையன்)
    13. பாணன்(பாடுநர்)
    14. கூத்தன்(ஆடுநர்)
    15. வள்ளுவன்(அறிவர்)
    16. மருத்துவன்(நோய் குணப்படுத்துவோர் )
    17. வண்ணான்(சலவைத் தொழிலாளி)
    18. மஞ்சிகன்(சவரத் தொழிலாளி

    இவ்வாறு இனகுழு மக்களாக வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் தொழிலின் அடிப்படையில் சாதிகளாக மாற்றம் பெற்றனர். அதைவிடுத்து குறிஞ்சியில்தான் அரசு தோன்றியது என்று கதை விட வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. //எனினும் பெரும் வெள்ளம், காட்டுத்தீ மற்றும் ஆண்டு முழுவதுக்குமான உணவுத்தேவை போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் அவனை மீண்டும் ஆற்றங்கரை ஒட்டிய சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்தது.//

      எனில் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்கள் தானே ஆற்றுப்படுக்கைகளில் மருதநில மக்களானார்கள்??? மேலும் மருதநிலத்தில் மள்ளர் என்பது குலமாகவும் அக்குலத்தில் பவ்வேறு மக்கள் இருந்தனர் என்பதுதான் வரலாறு. இன்னும் சொல்லப்போனால் மருதநிலத்தில் மள்ளர்களை தவிற உழவர் உழத்தியர் போன்ற மக்களும் வாழ்ந்தனர். எனில் மள்ளர் என்பவர்கள் பள்ளர் சாதிதான் என்று நிறுவுவது எப்படி சகோ :P

      Delete
    2. நாம் எல்லோரும் தமிழர்கள் தான் ஒரே குலம் தான். வேலையின் காரணமாக மாற்றிவிட்டோம் என்பதுதான் உண்மை

      Delete
  28. //பெரும் வெள்ளம், காட்டுத்தீ மற்றும் ஆண்டு முழுவதுக்குமான உணவுத்தேவை போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் அவனை மீண்டும் ஆற்றங்கரை ஒட்டிய சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்தது எனில் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்கள் தானே ஆற்றுப்படுக்கைகளில் மருதநில மக்களானார்கள்???//


    பெரும் வெள்ளம், காட்டுத்தீ மற்றும் ஆண்டு முழுவதுக்குமான உணவுத்தேவை போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் அவனை மீண்டும் ஆற்றங்கரை ஒட்டிய சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்தது என்றால் முல்லை நிலத்தில் வாழ்ந்த அணைவரும் மருத நிலத்திற்க்கு குடி பெயர்ந்தார்கள் என்பது பொருள் அல்ல. அவர்களில் ஒரு பிரிவினர் அல்லது அதிக அளவில் அவ்வாறு சென்றுருக்காலம். மற்றவர்கள் அங்கேயே தங்கியிருக்கலாம்.

    மருத நிலத்தில் குடியேறியவர்கள் வேளாண் தொழிலை கற்றுக்கொள்ள தொடங்கினர். அவ்வாறு வேளாண் தொழிலை செய்தவர்கள் உழவர்கள் என்று அழைக்கப்பட்டனர். அந்த வேளாண் தொழிலுக்கு தேவையான சில உபகரனங்கள் தேவைப்பட்டன அவற்றை நிவர்த்திசெய்ய சில இனக் குழுக்கள் தோன்றியிருக்களாம். மேலும் அங்கு மக்கள் நிலையாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டதால் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய சிறு, சிறு இனக்குழுக்கள் தோன்றிருக்கலாம். இவைகள் அணைத்தும் ஒரு தலைமுறையில் நடந்துவிடுவதில்லை. பல ஆயிரம் ஆண்டுகள் தேவையின் பொருட்டு சிறு, சிறு இனக்குழுக்களாக பிறிந்திருக்களாம்.

    இவர்களை வழிநடத்த தலைவன் ஒருவன் தோன்றுவது காலத்தின் கட்டாயம் ஆகிறது. மருதநிலத்தில் வாழ்ந்த சிறு, சிறு இனக்குழுக்கள் வேளாண் தொழில் செய்த உழவரையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், அவர்களின் தலைவனும் வேளாண் குடியிலிருந்து தோன்றுவது இயற்கையாகிறது. அவனே பிற்காலத்தில் வேந்தன் ஆகிறான். அவ்வாறு உழவு தொழிலும், போர் தொழிலும் செய்தவனை மள்ளர் என்று நிகண்டுகள் கூறுகின்றன.

    அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
    வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்
    – என்று திவாகர நிகண்டும்.

    ReplyDelete
  29. //மருதநிலத்தில் மள்ளர் என்பது குலமாகவும் அக்குலத்தில் பவ்வேறு மக்கள் இருந்தனர் என்பதுதான் வரலாறு. இன்னும் சொல்லப்போனால் மருதநிலத்தில் மள்ளர்களை தவிற உழவர் உழத்தியர் போன்ற மக்களும் வாழ்ந்தனர். எனில் மள்ளர் என்பவர்கள் பள்ளர் சாதிதான் என்று நிறுவுவது எப்படி சகோ :P//

    உங்களுடைய கூற்று தவறானது. உழவு தொழிலும், போர் தொழிலும் செய்தவனைதான் மள்ளர் என்று நிகண்டுகள் மிக தெளிவாக கூறுகின்றன.
    மேலும் மருத நிலத்தின் தலைமக்களாக குறிப்பிடப்படுபவர்கள் அணைவரும் ஒருவரே என்று அதே நிகண்டு தெளிவுபடுத்துகிறது.

    திவாகர நிகண்டு ( சேந்தன் திவாகரன் ) – கி.பி . 9ஆம் நூற்றாண்டு
    மருதநில மக்கள் பெயர்
    களமர், தொழுவர், மள்ளர்,கம்பளர், விளைஞர்
    உழவர்,கடைஞர்,கிளைஞர் என்று அவையவை
    கழனிக்கு அடைந்தவர் பெயரே



    பள்ளர், தேவேந்திர குலத்தான், காலாடி, குடும்பன், மூப்பன், மண்ணாடி, பண்ணாடி, கடையன், குடும்பி, வாதிரியார், பள்ளியர், பனிக்கன், பலகன் ………………. இன்னும் பல பிரிவுகள் உள்ளன. இவர்கள் அணைவரும் தேவேந்திர குல மள்ளர் எனும் ஒரே இனக்குழுதான். அல்லது உங்கள் கூற்றுப்படி பள்ளரைத் தவிர மற்ற அணைவரும் வேறு, வேறு சமுகத்தவர் என்று கூற முடியுமா?.


    மேலும் கல்வெட்டுகளும் , செப்பேடுகளும், பள்ளு இலக்கியங்களும் , புராணங்களும் மள்ளர்தான் பள்ளர் என்று உறுதிபட கூறுகின்றன. உங்களுக்கு தேவைப்பட்டால் அதையும் கொடுக தயார்.

    ReplyDelete
  30. மருதநில மள்ளர்களோடு "மருதநில தொழிற்மக்கள்" பதினெட்டு வகையினரும் இருந்ததாக இலக்கியச் சான்றுகள் உண்டு. அவர்கள் :
    1. செம்மான்(தோல் தொழிலாளி)
    2. குயவன்(மண்பாண்டம் செய்வோர்)
    3. கொத்தன்(வீடு கட்டுவோர்)
    4. கொல்லன்(இரும்பு வேலை செய்வோர்)
    5. கன்னான்(செம்பு வேலை செய்வோர்)
    6. தட்டான்(பொன் வேலை செய்வோர்)
    7. தச்சன்(மரவேலை செய்வோர்)
    8. கற்றச்சான்(கல் வேலை செய்வோர்)
    9. செக்கன்(எண்ணெய் ஆட்டுவோர்)
    10. கைக்கோளன்(நெசவுத் தொழிலாளி)
    11. பூக்காரன்(பூ வேலை செய்வோர்)
    12. கிணையன்(கிணைப் பறையன்)
    13. பாணன்(பாடுநர்)
    14. கூத்தன்(ஆடுநர்)
    15. வள்ளுவன்(அறிவர்)
    16. மருத்துவன்(நோய் குணப்படுத்துவோர் )
    17. வண்ணான்(சலவைத் தொழிலாளி)
    18. மஞ்சிகன்(சவரத் தொழிலாளி

    இவ்வாறு இனகுழு மக்களாக வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் தொழிலின் அடிப்படையில் சாதிகளாக மாற்றம் பெற்றனர் என்பது, முற்றிலும் வரலாற்று உண்மை பாண்டிய மள்ளரே. "மருதநில தொழிற்மக்கள்" பதினெட்டு வகையினரில் கூட இவர்கள் இல்லாதபோது ஏன் நம் பாட்டனை சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை .இவர்களோ பாலை நிலத்துமக்கள் இவர்கள் எப்படி மூவேந்தராக முடியும்?
    3000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தமிழின் மிக பழமையான தொல்காப்பியம் – (அகத்.5)-ல் “ வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் ”
    (மருத நிலத்தின் தலைவனை வேந்தன்) என கூறுகிறது. அதுபோல "வேந்தன்" என்னும் சொல் மருதம் நிலத்தின் தலைவனை
    குறிக்கும் சொல் என்று மொழிஞாயிறு தேவநேயபாவனார் கூறுகிறார்.
    நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைய குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர்”
    (வேங்கடசாமி நாட்டார்: கள்ளர் சரித்திரத்தில் இருந்து)
    உண்மை இவ்வாறிருக்க,நாயக்கர் ஆட்சி காலத்தில் பாலை நிலத்திலிருந்து மருதநில பகுதியில் குடியேறிய உங்களை, நாங்கள் இன்றுவரை மறக்காமல் "குடியானவர்கள்" என்றே அழைத்துவருகிறோம்.

    இது உங்களுக்கும் தெரியும்,தெரிந்தும் "நாங்கள் மூவேந்தர் " என்றால் உங்களை என்னவென்பது .

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. சோழ, மண்டலமான திருச்சி,கரூர்,தஞ்சாவூர்,நாமக்கல்,சேலம் ஆகிய மாவட்டங்களில் மருதநில பகுதியில் மள்ளர் வாழும் எல்லா ஊா்களிலும் மல்லாண்டார் கோவில் உள்ளது.மள்ளர்கள் மட்டுமே மல்லாண்டார் சாமியை வழிபடுகின்றனர். அதே ஊர்களில் வாழும் மற்ற வகுப்பினர் யாரும் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை வழிபடுவதில்லை. மள்ளர் வீடுகளில் எந்த சுபநிகழ்ச்சியானாலும் மிக பழமை வாய்ந்தத மல்லாண்டார் சாமியை, முதலில் வழிபட்டுவிட்டுதான் நிகழ்சியை தொடங்கும் பழக்கம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.சோழ மண்டலங்களில் வாழும் பள்ளா்கள், மள்ளர் எனும் தன் இனத்தை நினைவுபடுத்தும் வகையில் மல்லன், மல்லப்பன்,மல்லையப்பன்,மல்லையன்,என்னும் பெயர்களைக் கொண்டவர்களாக உள்ளனர்.
    ஆதாரம்: திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்காவில் மள்ளா் தெருக்களில் மல்லாண்டார் கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு:
    1)காட்டுப்புத்தூர்,2)களத்தூர்,3)ஒருவந்தூர்,4)தொட்டியம்5)மோகனூர்
    6)தொட்டியம்7)நத்தம்8)அழகரை9)கொலக்குடி10)சித்தூர்11)காரைக்காடு12)அரசலூர்13)பிடாரமங்கலம்14)அயலூர்15)வால்வேல்புத்தூர்

    கரூா் மாவட்டம்,கரூா் தாலுக்காவில் மள்ளா் தெருக்களில் மல்லாண்டார் கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு:
    1) கரூா் நகரம் (பாலம்மாபுரம்,திருக்காம்புலியுர்,திருமாநிலையூர்,வெங்கமேடு,நீலிமேடு) 2)நெரூா் 3)பள்ளபாளையம் 4)வாங்கல் 5)புலியூர் 6)சணப்பிரட்டி 7)ஆண்டான்கோவில் 8)தோட்டக்குறிச்சி 9)வெள்ளியணை 10) மண்மங்கலம்
    கரூா் மாவட்டம்,கடவூர்தாலுக்காவில்மள்ளா்தெருக்களில் மல்லாண்டார்கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு:
    1)கடவூர்,2)டி.இடையப்பட்டி,3)கொசூர்4)மாவத்தூர்5)முள்ளிப்பாடி6)பாலவிடுதி
    7)செம்பியானத்தம்8)தொண்டமாங்கினம்9)வாழ்வார்மங்கலம்10)தரகம்பட்டி

    இது சின்ன எடுத்துக்காட்டுதான் இதுபோன்று இன்னும் சோழ மண்டலத்தில் நிறைய ஊர்கள் உள்ளது.
    * அன்றைய மள்ளர்களே இன்றைய பள்ளர்கள் என்பதற்கு இலக்கியங்கள், கல்வெட்டுகளோடு மட்டுமல்லாமல் ,நடைமுறை வாழ்விலும் எவ்வளவோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. மள்ளர் என்பது பொதுப் பெயர்
      பள்ளர் என்பது சாதி...
      மல்லர் என்பது ஆந்திரப் பகிதியில் பட்டம்...
      தமிழில் மல்யுத்த வீரன் என்று பொருள்

      Delete
    2. ஏன்டா நாயே மள்ளர் தான் பள்ளர் னு தொல்லியல் துறை ஒத்துக்கிட்டது அவர்களுக்கு தெரியாததா உனக்கு தெரிய போகுது
      நீ யெல்லாம் ஒரு ஆளு மயிரே கிடையாது

      Delete
  34. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
    பள்ளி (வன்னியர்) சாதி ம்க்களும்சிலருக்கு மல்லாண்டார் சாமியை குல தெய்வமாக கொண்டனர்

    ReplyDelete
  35. அப்படியென்றால் அந்த சிலர் மள்ளர் இனத்திலிருந்து பிரிந்து சென்றவர்களாக இருக்கலாம். ஏனென்றால் சோழ மண்டலத்தில் மள்ளர்கள் வாழும் எல்லா ஊா்களிலும் மல்லாண்டார் கோவில் உள்ளது.சோழ மண்டல மள்ளர்களுக்கு முதற்கடவுளே மல்லாண்டார்சாமிதான்.

    ReplyDelete
  36. சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பள்ளர்களில் ஒரு பகுதியினர் முல்லை நில மக்களின் கலப்பால் பள்ளி எனும் பெயரில் வன்னியர் எனும் தனிச்சாதியினர் ஆனர். வன்னியர் என்பது பட்டமே; சாதியல்ல. இலங்கையில் வன்னியர் எனும் பெயர் கொண்டோர் அனைவரும் பள்ளர்களே. தமிழகத்திலும் அணைத்து பாண்டியராசா கோவில்களிலும் வன்னிராசாவும்வன்னிமாச்சியும் பள்ளர்களாலேயே வணங்கப்படுவது, வன்னியர் முல்லைநிலமக்களின் கலப்பால் பிரிந்த பள்ளர்களின் ஒரு பகுதியினர் என்பதாலேயே ஆகும்.

    ReplyDelete
  37. இது என்னுடைய சந்தேகம் மட்டுமே விருப்பு வெறுப்புகள் கிடையாது.

    சேர சோழ பாண்டிய மன்னர்களை விஜயநகர ஆட்சி கைப்பற்றினார்கள். பின்னர் மீண்டும் சேர சோழ பாண்டிய ஆட்சி வரக்கூடாது எனபதற்க்கு 74 பாளையங்கள் அமைத்தனர். மக்களிடம் நிலங்கள் பறிக்கப்பட்டு பாளையங்கள அந்த பாளையங்கள் மூலம் வரி வசூல் செய்யப் பட்டது.

    மறவர்கள் தான் பாண்டியர்கள் என்றால் தன்னை எதிரியான பாண்டியர் களுக்கு எப்படி பத்துக்கும் மேற்பட்ட பாளையங்கள் கொடுப்பார்கள் விஜயநகர மன்னர்கள்.

    பாண்டியர்கள் தன்னை வீழ்த்தியவரிடம் பாளையங்கள் வாங்கி ஆட்சி செய்தார்கள் என்று எங்குமே வரலாறு சொல்லவில்லை.

    இதேபோல் இன்னொரு சந்தேகம் பாண்டியர்களை வீழ்த்திய விஜயநகர குறுநில மன்னன் எப்படி வீர "பாண்டிய" கட்டபொம்மன் ஆனது.

    திராவிட ஆட்சி(விஜயநகர ஆட்சி பாகம் 2) => வெள்ளைக்காரர் => ஜமீன்தாரர் => பாளையங்கள் => விஜயநகர ஆட்சி = பிற்கால மூவேந்தர் => களப்பிரர்கள்=> இடைக்கால மூவேந்தர் => முற்கால மூவேந்தர்கள்.



    ReplyDelete
  38. வெண்ணிகலாடிக்கு நடுகல் மற்றும் அவர் வாரிசுக்கு நில தானம் நெற்கெட்டும்செவ்வல் பனளயக்காரர்கள் வழங்கிய ஆதரம் இருந்தும் சில முட்டாள் கூட்டங்கள் வெண்ணிகலாடி கற்பனை என கதைவிட்டு கொண்டு உள்ளனர்

    ReplyDelete
  39. 1. வில்லவர் மற்றும் பாணர்

    பாண்டியன் என்பது வில்லவர் மற்றும் பாணர் ஆட்சியாளர்களின் பட்டப்பெயர் ஆகும் . இந்தியா முழுவதும் பாண ராஜ்ஜியங்கள் இருந்தன. இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் என்று அழைக்கப்படும் பல இடங்கள் பாணர்களின் தலைநகரங்களாக மற்றும் பாணஅரசர்கள் பாணாசுரன் என்றும் அழைக்கப்பட்டனர். பாண மற்றும் வில்லவர் மன்னர்கள் இடைக்காலம் வரை இந்தியா முழுவதையும் ஆண்டனர்.

    கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகா மற்றும் ஆந்திராவும் பாணர்கள் மற்றும் பாணப்பாண்டியன் மன்னர்களால் ஆளப்பட்டது.

    வில்லவர் துணைக்குழுக்கள்

    1. வில்லவர்

    2. மலையர்

    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்.

    4. மீனவர்

    பழங்காலத்தில் இந்த அனைத்து துணைக்குழுக்களிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். உப குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா.

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் வில் அம்புக் கொடியை ஏந்தியிருந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை முத்திரையுடன் கூடிய கொடியை ஏந்தினார்.

    3. வானவர் உபகுலத்தைச் சேர்ந்த பாண்டியன் வில்-அம்பு அல்லது புலி அல்லது மரக் கொடியை ஏந்தினார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் இரட்டை மீன் சின்னம் கொண்ட கொடியை ஏந்தி தன்னை மீனவன் என்று அழைத்தார்.

    5. வேழநாடு-வேணாடு வில்லவர்களின் அடையாளமாக யானை சின்னம் இருந்தது.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் என்ற நாடாழ்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நாகர்கள் தெற்கில் மீனவர்களாக மாறினர். அவர்கள் திராவிட வில்லவர்-மீனவர் குலங்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.

    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், சான்றார், சாணார், சானார், சார்ன்னவர், சார்ந்தவர், சான்றகர், சாந்தகன், சாந்தார், பணிக்கர், திருப்பாப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கானா, மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல க்ஷத்திரியர், ரவிகுல க்ஷத்திரியர், நெலாமக்காரர் போன்றவை.

    பண்டைய பாண்டிய வம்சம் மூன்று பேரரசுகளாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்

    2. சோழ வம்சம்

    3. பாண்டிய வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேர மன்னர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். அனைவருக்கும் வில்லவர் வீரர்கள் ஆதரவு அளித்தனர்.

    முக்கியத்துவத்தின் வரிசை

    1. சேர பேரரசு

    வில்லவர் மலையர் வானவர் இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    ReplyDelete
  40. 2. வில்லவர் மற்றும் பாணர்


    பாணா மற்றும் மீனா

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர்கள் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள்.

    ஒரு வருடம் பாண்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விராட மன்னன் ஒரு மத்ஸ்ய - மீனா அரசனாவான்.

    அசுர அந்தஸ்து இருந்தபோதிலும், பாண இளவரசர்கள் ஆரிய-நாக இளவரசிகளின் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    ஏனென்றால், இந்தியா முழுவதும் வில்லவர்-பாண மன்னர்கள் இருந்தனர், ஆரிய-நாக மன்னர்கள் உத்தரப்பிரதேசத்தை மட்டுமே ஆண்டனர்.

    அஸ்ஸாம் பாண இராச்சியம்

    சோனிட்பூரை தலைநகராக கொண்ட அசுர சாம்ராஜ்யம் என்று அழைக்கப்படும் பாண ராஜ்யம் பண்டைய காலத்தில் அஸ்ஸாமை ஆண்டது. இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் ராஜ்ஜியங்கள் இடைக்காலத்தின் இறுதி வரை இருந்தன.

    மகாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னன் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டம் பெற்ற எண்ணற்ற மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். வில்லவர்கள் தங்கள் முன்னோர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம்

    ஓணம் பண்டிகை கடந்த 3800 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மன்னன் மகாபலி கேரளாவுக்கு திரும்பியதைக் கொண்டாடுகிறது. கருணையுள்ள அசுர திராவிட மன்னன் மகாபலி சிந்து சமவெளி மற்றும் இந்தியா முழுவதும் ஆட்சி செய்தான் ஆனால் ஆரிய அரசன் இந்திரனின் சகோதரன் உபேந்திரனால் கொல்லப்பட்டான். மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரண்டு இடங்களும் மகாபலியின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

    மாவேலி

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிரிகளான பாணர்களும் மாவேலி வாணாதிராயர் என்றும் அழைக்கப்பட்டனர்.

    தானவர் தைத்யர்

    பண்டைய தானவர்கள் மற்றும் தைத்தியர்கள் சிந்து சமவெளியின் பாண துணைக்குழுவாக இருக்கலாம். தனு என்றால் சமஸ்கிருதத்தில் வில் என்றும் தானவர் என்றால் வில்லவர் என்றும் பொருள். தைத்யா என்பது சிந்து நதியின் பழைய பெயர் எனவே தைத்யர் என்றால் சிந்து மக்கள் என்று பொருள். தைத்திய மன்னன் மகாபலி என்று அழைக்கப்பட்டான். இந்தியாவில் முதல் அணைகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண மன்னர்களால் கட்டப்பட்டதன. சிந்து நதிகள் அணைகளால் அடைக்கப்பட்டதால், ஆரிய மேய்ப்பாளர்கள் தங்கள் கால்நடைகளுக்கு தண்ணீர் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சிந்து நதியின் அணைகள் ஆரிய அரசன் இந்திரனால் அழிக்கப்பட்டன. இந்திரனின் சகோதரன் உபேந்திரனால் மன்னன் மகாபலி கொல்லப்பட்டான்.

    ஹிரண்யகர்ப விழா

    வில்லவர் மன்னர்கள் மற்றும் பாண மன்னர்கள் இருவரும் ஹிரண்யகர்ப்ப விழாவை நடத்தினர். ஹிரண்யகர்ப்ப விழாவில், பாண்டிய மன்னன் ஒரு தங்கக் கருவறையில் கிடந்தான், இது ஹிரண்ய மன்னனின் பொன் வயிற்றில் இருந்து அவன் வெளிப்பட்டதை உருவகப்படுத்தியது. ஹிரண்யன் மகாபலியின் மூதாதையர்.

    நாகர்களுக்கு எதிரான போர்

    பழங்கால தமிழ் இலக்கியமான கலித்தொகை வில்லவர் மீனவரின் கூட்டுப் படைகள் நாகர்களுக்கு எதிராக நடத்திய பெரும் போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர் மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவை நாகர்கள் ஆக்கிரமித்தனர்.

    நாகர் தெற்கு நோக்கி இடம்பெயர்தல்

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குஹன்குலத்தோர் (மறவர், முக்குவர், சிங்களவர்)
    3. குருகுலத்தோர் (கரையர்)
    4. பர்வத ராஜகுலம் (அகமுடையார், செம்படவர், பரதவர்) 5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகளாவர். நாகர்கள் டெல்லி சுல்தானகம், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் இணைந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    ReplyDelete
  41. 3. வில்லவர் மற்றும் பாணர்

    கர்நாடக பாண குலங்களுக்கும் வில்லவர்களுக்கும் இடையே பகை

    பொதுவான பூர்வீகம் இருந்தபோதிலும், கர்நாடகாவின் பாணர்கள் மற்றும் வில்லவர் எதிரிகளாவர். கிபி 1120 இல் துளு இளவரசர் பாணப்பெருமாள் தலைமையில் துளுநாட்டின் ஆலுபா பாண்டிய இராச்சியத்திலிருந்து பாண படையெடுப்பாளர்களால் கேரளா ஆக்கிரமிக்கப்பட்டது. பாணப்பெருமாள் அரேபியர்களுடன் கூட்டணி வைத்து நேபாள நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார்.

    பலிஜா நாயக்கர்கள் கி.பி.1377ல் தமிழகத்தை ஆக்கிரமித்தனர். வில்லவர் குலங்களின் சோழ பாண்டிய அரசுகள் விஜயநகரப் பேரரசின் பலிஜா நாயக்கர்களால் (பனாஜிகாஸ் என்ற மகாபலியின் பானா வம்சாவளியினர்) ஆக்கிரமிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டு மூன்று தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. கி.பி.1377ல் விஜயநகர தாக்குதலுக்குப் பிறகு தெலுங்கு வாணாதிராயர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற நாக குலங்களின் தலைவர்களாக ஆனார்கள். வாணாதிராயர்களின் ஆதிக்கம் வில்லவர் குலங்களை அழித்தொழிக்க வழிவகுத்தது.

    கர்நாடகா பாண்டிய ராஜ்ஜியங்கள்

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் அரசுகள் இருந்தன

    1. ஆலுபா பாண்டிய அரசு
    2. உச்சாங்கி பாண்டிய இராச்சியம்
    3. சான்றாரா பாண்டிய ராஜ்யம்
    4. நூறும்பாடா பாண்டிய அரசு.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர்.

    ஆந்திரப்பிரதேசம்

    ஆந்திராவின் பாண ராஜ்ஜியங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர சாம்ராஜ்யம்.

    பாணர்களின் கொடிகள்

    ஆரம்பகால
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்கால
    1. காளை சின்னம்
    2. குரங்கு கொடி (வானர த்வஜா)
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு சின்னம்
    6. சிங்க சின்னம்

    திருவிதாங்கூர் மன்னர்கள் கர்நாடகாவின் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த பாணர்கள் என்பதால் அவர்களின் கொடியில் சங்கு சின்னம் இருந்தது. சேதுபதிகள் கலிங்கத்தைச் சேர்ந்த வாணாதிராயர்களாக இருந்ததால் அனுமக்கொடி அல்லது அனுமன் கொடி (வானர த்வஜா) வைத்திருந்தனர்.

    பாணா மற்றும் மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டார்கள். மீனவர்கள் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    வட இந்திய பாண குலங்கள்.

    வட இந்திய பாணர்கள் பாணா, பாணியா, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்களை கொண்டிருந்தனர். வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைந்திருந்தனர். சில பாணர்கள் ராஜபுத்திரர் மற்றும் ஆரிய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    திர்கார், திர்கலா, திர்பண்டா, அக்னி, வன்னி ஆகியவை ஆரியர்களுக்கு வில் மற்றும் அம்புகளை உருவாக்குபவர்களாக இருந்த உத்தரப்பிரதேசத்தின் வட இந்திய பாணர்களின் சில பட்டங்கள்.

    ReplyDelete
  42. 4. வில்லவர் மற்றும் பாணர்

    பல்லவ பாணர்.

    பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளம்) ஆந்திராவிற்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம். பல்லவ மன்னர்கள் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வம்சாவளியினர் ஆனால் பாரசீக பார்த்தியன் வம்சத்துடன் கலந்திருந்தனர். பல்லவ மன்னர்களுடன், காடு வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் படை, பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது.

    பாஞ்சால நாட்டைச் சேர்ந்த இந்த பிராகிருத மொழி பேசும் பாண குலத்தினர் அக்னி, வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்களை பெற்றிருந்தனர். கிபி 275 இல் பல்லவர் தமிழகத்தை ஆக்கிரமித்தார். பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை முத்திரை இருந்தது. பல்லவர்களின் தலைநகரான மகாபலிபுரம், பாண வம்சத்தின் மூதாதையரான மன்னன் மகாபலியின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

    மீனா

    ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கினர். மீனா குலங்கள் ராஜஸ்தானை கி.பி 1030 வரை நவீன ஜெய்ப்பூரின் ஆமரில் இருந்து ஆட்சி செய்தனர். ஆலன் சிங் மீனா சாந்தா கடைசி பெரிய மீனா அரசர். சாந்தா, நாடார்வால், நாடாலா, பில்-மீனா போன்ற மீனா பட்டங்கள் சான்றார், நாடாழ்வார், வில்லவர்-மீனவர் போன்ற வில்லவர் பட்டங்களை ஒத்திருந்தன.

    சத்தீஸ்கரின் பாண வம்சம்

    நந்திவர்ம பல்லவரின் படையெடுப்பிற்குப் பிறகு பாலியைத் தலைநகராகக் கொண்டு கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவிலிருந்த தெற்கு கோசல இராச்சியத்தில் பல்லவர்களால் ஒரு பாண வம்சம் நிறுவப்பட்டது. விக்ரமாதித்யன் முதலாம் ஜெயமேரு கடைசி அரசன்.

    திக்கம்கர் பாண்டிய வம்சம்

    பாண்டிய பட்டம் பெற்ற பாண குலத்தினர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குண்டேஷ்வரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.

    பலிஜா வர்த்தகர்-வீரர்கள்இடைக்காலத்தில் பாணர்கள் வெற்றிகரமான வணிக சமூகமாக தங்களை மாற்றிக் கொண்டார். பாண பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராமம் போன்ற பல்வேறு வர்த்தக சங்கங்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-வீரர்கள் கிஷ்கிந்தா மற்றும் ஐஹோளேயில் தலைநகரங்களைக் கொண்டிருந்த பலிஜா நாயக்கர்கள் ஆவார்கள்.

    பலிஜா வர்த்தகக் குழுக்கள் ஐரோப்பாவின் ஜெர்மன் ஹான்சியாடிக் லீக் வர்த்தகக் குழுவை ஒத்திருந்தன. பலிஜாக்கள் ஆந்திரப் பிரதேசத்தின் பாண இராச்சியத்தை (வடுக நாடு) சேர்ந்தவர்கள், அவர்களின் பண்டைய தலைநகர் ஆனேகுண்டி அல்லது கிஷ்கிந்தா ஆகும். வானரர் என்பது வானரக் கொடியை ஏந்திய கிஷ்கிந்தாவின் பலிஜா மன்னர்களின் பட்டப்பெயர். விஜயநகரத்தின் பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து இருபது கிமீ தொலைவில் உள்ள ஹம்பியில் இருந்தது.

    பலிஜா நாயக்கர்கள் தெலுங்கு வாணாதிராயர் உதவியுடன் வில்லவர்கள் ஆண்ட சோழ மற்றும் பாண்டிய ராஜ்யங்களை அழித்தார்கள்.

    முடிவுரை

    எனவே பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கவில்லை. மகாபாரதத்தில் கூறப்படும் பாண்டியர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவர்களை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். சில பாணர்கள் பாண்டியா பட்டத்தைப் பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தைப் பயன்படுத்தவில்லை. பாணர்களின் கலவையுடன் பல்வேறு ராஜ்ஜியங்கள் தோன்றின. சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்பிற்குப் பிறகு வட இந்திய பாண ராஜ்ஜியங்கள் வீழ்ச்சியடைந்தன.

    ________________________________________________


    வில்லவர், மலையர் மற்றும் வானவர் குலங்களின் வில்-அம்பு, மலை மற்றும் மரம் அடையாளங்களுடன் கூடிய சங்க கால நாணயம்.

    https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png

    .

    ReplyDelete
  43. பஞ்ச திருவழுதி நாடாக்கள்

    வெட்டும் பெருமாள் பஞ்ச பாண்டியர்களில் ஒருவர். பஞ்ச பாண்டியர்கள் பஞ்ச பாண்டியாள் அல்லது பஞ்ச திருவடிகள் அல்லது பஞ்ச திருவழுதி ராசாக்கள் அல்லது பஞ்ச திருவழுதி நாடாக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். வெட்டும் பெருமாள் திருநெல்வேலி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளின் சில பகுதிகளை கயத்தாறில் இருந்து தனது தலைநகராக இருந்து ஆட்சி செய்தார்.

    அனைத்து வில்லவர் மன்னர்களும் அதாவது பஞ்ச பாண்டியர்கள் உட்பட சேர, சோழ மற்றும் பாண்டியன் குலங்கள் நாயக்கர்களுக்கு எதிராக வேணாட்டின் துளு-சேராய் மன்னனுடன் கூட்டணி வைத்திருந்தனர். ஆனால் தென்காசி பாண்டியன் மாத்திரம் விஜயநகர நாயக்கர்களின் அடிமையாக இருந்தான். தென்காசி பாண்டியன் சடையவர்மன் ஸ்ரீவல்லபன் வெட்டும்பெருமாளை தாக்கினான். அதைத் தொடர்ந்து விட்டல ராயரை அனுப்பிய விஸ்வநாத நாயக்கர் கிபி 1544 இல் வெட்டுப் பெருமாளைத் தோற்கடித்தார். வெட்டும் பெருமாள் வேணாடு மன்னன் வீர கேரள வர்மாவிடம் அடைக்கலம் புகுந்தார். ஆனால் விட்டல ராயர் அதே ஆண்டில் வேணாட்டைக் கைப்பற்றினார்.

    கி.பி.1561ல் பஞ்ச பாண்டியர்கள் ஆண்ட திருநெல்வேலி பகுதிக்கு விஜயநகர நாயக்கர்கள் படையெடுத்தனர். பஞ்ச திருவழுதி நாடாக்கள் படைக்கும் விஜயநகரப் படைக்கும் இடையே கயத்தாறில் வைத்து கடும் போர் நடந்தது, அதில் பஞ்ச திருவழுதி நாடாக்கள் அடிபணிந்தனர். பஞ்ச திருவழுதி நாடாக்கள் நாயக்கர்களின் ஆதிக்கத்தை ஏற்க வேண்டியதாயிற்று. பிற்காலத்தில் தாமிரபரணிக் கரையில் உள்ள திருவழுதி வளநாட்டை பஞ்ச திருவழுதி நாடாக்கள் ஆண்டனர். ஆழ்வார் திருநகரி பஞ்ச திருவழுதி நாடாக்களின் தலைநகரங்களில் ஒன்றாகும். கடைசி பஞ்ச திருவழுதி நாடாக்கள் மன்னன் திருவழுதி வைகுண்ட நாடான் கட்ட பொம்மு நாயக்கரின் கீழ் ஆண்டிருந்தார் .

    ReplyDelete
  44. பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் வம்சங்கள்

    பாணா, பில் மற்றும் மீனா குலங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் திராவிட வில்லவர்-நாடாழ்வார் குலங்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். நாடாழ்வார் குலங்கள் வில்லவர்-மீனவர் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் உபகுலங்களில் வில்லவர், மலையர், வானவர் குலங்கள் மற்றும் அவர்களது கடல்வழி உறவினர்களான மீனவர்கள் அடங்குவர். அனைத்து வில்லவர் உபகுலங்களின் இணைப்பு நாடாழ்வார் அல்லது சான்றார் பிரபுத்துவம் உருவாக வழிவகுத்தது.

    சோழர்கள் வில்லவர்களின் வானவர் உபகுலத்தையும், பாண்டியர் வில்லவர்-மீனவர் உபகுலத்தையும், சேரர்கள் வில்லவர் உபகுலத்தையும் சேர்ந்தவர்கள்.

    பண்டைய திராவிட மீனவர் குலங்கள், பிற்காலத்தில் வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த பரதவர், முக்குவர் மற்றும் கரையர் போன்ற நாக மீனவ குலங்களிலிருந்து இனரீதியாக வேறுபட்டவர்கள்.

    வில்லவர் மற்றும் பாண குலங்கள் இருவரும் சிந்து சமவெளியின் அசுர திராவிட மன்னன் மகாபலியை தங்கள் மூதாதையராகக் கருதி ஹிரண்யகர்ப விழாவை நடத்தினர்.

    வட இந்திய பாணா, பில் மற்றும் மீனா ராஜ்ஜியங்கள்

    1. மத்தியப் பிரதேசத்தின் திக்கம்கரின் குண்டேஷ்வர் பாண்டியர்கள்
    2. அஸ்ஸாமின் சோனித்பூரின் அசுர ராஜ்யம்
    3. மீனா வம்சம் ஆமெர், ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
    4. பாணா ராஜ்யம் பாலி, சத்தீஸ்கர்
    5. குஜராத் மற்றும் ராஜஸ்தானின் பாணியா-வாணியா வணிகர்கள்
    6. வன்னியர்-வட பலிஜா-திகளர், பாஞ்சால நாடு மற்றும் தமிழகத்தின் பாண குலங்கள்
    7. மத்ஸ்ய (மீனா) இராச்சியம் ஒட்டாடி (கி.பி. 1200 முதல் கி.பி 1470 வரை) ஒடிசா
    8. குஜராத் மற்றும் கொங்கண் கடற்கரையின் கோலி-பில் வம்சங்கள்
    1. குஜராத்தின் பாரியா இராச்சியம் (கி.பி. 1524 முதல் 1948 வரை).
    2. குஜராத்தின் காந்த் கோலி வம்சம்
    3. குஜராத்தின் தாகூர் கோலி குலங்கள்

    4. மேற்கு குஜராத்தின் மக்வானா கோலி சமஸ்தானங்கள்
    1. கடோசன் சமஸ்தானம்
    2. காபட் சமஸ்தானம்
    3. புனாத்ரா சமஸ்தானம்

    5. குஜராத்தின் ஜவ்ஹர் இராச்சியம் (கி.பி. 1343 முதல் 1947 வரை).
    6. மகாராஷ்டிராவின் கொலாபா இராச்சியம் (கி.பி. 1713 முதல் கி.பி. 1840 வரை)

    9. ராஜஸ்தானின் பில்-மீனா குலங்கள்

    கர்நாடகாவின் பாண ராஜ்ஜியங்கள்

    1. கடம்ப ராஜ்யம் கிளைகள்
    1. சான்றாரா பாண்டிய வம்சம் (கி.பி. 682 முதல் கி.பி. 1763)
    2. நூறும்பாடா பாண்டியன் வம்சம் (கி.பி. 900 முதல் கி.பி. 1238 வரை)

    2. கோகர்ணா பாண்டிய ராஜ்யம்
    3. பலிஜா ஐந்நூற்றுவர் ஆட்சி செய்த ஐஹோளே
    4. உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்
    5. துளுநாடு ஆலுபா பாண்டிய ராஜ்யம்

    கேரளாவின் துளு-நேபாளி ஆலுபா வம்சத்தின் கிளைகள், இதில் மன்னர்கள் துளு ஆலுபா-கோலத்திரி வம்ச இளவரசிகளை தாய்களாகவும், நம்பூதிரி பிராமணர்களை (அஹிச்சத்திரம்-நேபாள வேர்களைக் கொண்ட துளுவ பிராமணர்கள்) தந்தைகளாகவும் கொண்டிருந்தனர்.

    1. கண்ணூர் கோலத்திரி வம்சம் (கி.பி. 1156 முதல் கி.பி. 1785)
    2. கோழிக்கோடு சாமுத்திரி வம்சம் (கி.பி. 1156 முதல் கி.பி. 1806)
    3. கொச்சி வம்சம் (கி.பி. 1335 முதல் கி.பி. 1947 வரை)
    4. வேணாடு ஆற்றிங்கல் ராணி வம்சம் (கி.பி 1333 முதல் கிபி 1704 வரை)
    5. திருவிதாங்கூர் வம்சம் (கி.பி. 1704 முதல் கி.பி. 1947 வரை)
    6. பலிஜா நாயக்கர் பேரரசு ஆனேகுண்டி-கிஷ்கிந்தா-விஜயநகரம்
    கிளைகள்
    1. மதுரை நாயக்கர்கள் (கிபி 1529 முதல் கிபி 1736 வரை)
    2. தஞ்சாவூர் நாயக்கர்கள்(கி.பி. 1532 முதல் கி.பி. 1673 வரை)
    7. பலிஜா நாயக்கர்களின் கேலடி நாயக்க ராஜ்யம்

    ReplyDelete
  45. பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் வம்சங்கள்

    ஆந்திரப் பிரதேசத்தின் பாண இராச்சியங்கள்

    1. கோலார் மற்றும் குடிமல்லம் பாணா இராச்சியம்
    2 . மசூலிப்பட்டினத்தின் ப்ருஹத் பாலா அல்லது பிருஹத்-பாணா வம்சம்

    தமிழ்நாட்டின் பாணர்கள்

    1. திருவல்லம் பெரும்பாணப்பாடி பாணர்கள்
    2. மகதை நாடு, அறகளூர் பாணர்கள்
    3. மகாபலி வாணாதிராயர் குலங்கள்

    தமிழ்நாட்டின் வில்லவர்-நாடாழ்வார் ராஜ்ஜியங்கள்

    1. வானவர்-நாடாழ்வார் ஆண்ட சோழ வம்சம்
    2. வில்லவர்-மீனவர்- நாடாழ்வார் என்ற பாண்டியன் வம்சம்
    3. கி.பி 520 வரை ஆண்ட கருவூரில் வில்லவர்களின் சேர வம்சம்
    4. தென்காசி பாண்டிய வம்சம் (கி.பி. 1422 முதல் 1618 வரை)

    கேரளாவின் வில்லவர்-நாடாழ்வார் வம்சங்கள்

    1. கொடுங்களூரில் மாகோதை நாடாழ்வார் ஆட்சி செய்த வில்லவர்களின் சேர வம்சம் (கி.பி. 520 முதல் கி.பி. 1102 வரை)

    2. வில்லவர்களால் ஆளப்பட்ட கொல்லத்தின் சேர-ஆய் வம்சம் (கி.பி. 1102 முதல் கி.பி. 1333 வரை)

    3. வில்லவர்களால் ஆளப்பட்ட சேந்தமங்கலத்தின் வில்லார்வெட்டம் ராஜ்யம் (கி.பி. 1102 முதல் கி.பி. 1450 வரை)

    4. கோட்டையடி, திருவிதாங்கோடு மற்றும் சேரன்மாதேவியில் சேர குறுநாடுகள், கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் பாண்டியன் குறுநாடுகள், களக்காடு சோழ குறுநாடு (கி.பி. 1333 முதல் கி.பி. 1610 வரை)

    5. பந்தளம் பாண்டிய இராச்சியம் (கி.பி. 1623 முதல் 1729 வரை) (பந்தளம் பாண்டியன் வம்சம் பாண்டியர்களாக வேடமிட்ட பார்கவ கோத்திரத்தைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர்களின் போலி பாண்டிய வம்சத்தால் மாற்றப்பட்டது.).

    6. பூஞ்ஞார் பாண்டியன் ராஜ்யம் (பூஞ்சார் பாண்டியன் வம்சம், சார்க்கரா கோவிலகத்தைச் சேர்ந்த துளுவப் பிராமணர்களின் போலி பாண்டியன் வம்சத்தால் மாற்றப்பட்டது, அவர்கள் பாண்டியர்கள் போல் நடித்தனர்)

    முடிவுரை:

    இந்திய துணைக் கண்டம் முழுவதும் திராவிட பாண-பில்-மீனா அரசுகள் மற்றும் வில்லவர்-மீனவர் அரசுகள் ஆட்சி செய்தன. சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்-நாடாழ்வார் அரசுகள் அசுர திராவிட பாண அரசுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை.

    வில்லவ நாடார் குலங்களின் எதிரிகளாகவும் பாணர்கள் இருந்தனர். துளு பாண ஆலுபா வம்சத்தினர் அரேபியர்களுடன் கூட்டு சேர்ந்து கி.பி 1120 இல் வடக்கு கேரளாவை ஆக்கிரமித்தனர். கி.பி 1311 இல் துருக்கிய படையெடுப்பிற்குப் பிறகு பாண்டிய வம்சத்தின் வில்லவர்கள் பலவீனமான நிலையில் இருந்தபோது கி.பி 1377 இல் ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவைச் சேர்ந்த பாண பலிஜா விஜயநகர நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.

    துளு பாண ஆலுபா வம்சம் மற்றும் தெலுங்கு பாண பலிஜா நாயக்கர் வம்சம் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் வில்லவர் வம்சங்களுக்கு முடிவு கட்டியது.

    ReplyDelete
  46. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    வில்லவர் மற்றும் பாண குலங்கள் இந்தியாவின் பூர்வீக அசுர திராவிட ஆட்சி வம்சங்கள்.


    வில்லவரும் பாணர்களும்

    வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் இந்தியா மற்றும் இலங்கையின் திராவிட ஆட்சியாளர் குலங்களாயிருந்தனர். வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்பவை. வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் ஆகிய குலங்களின் இணைப்பே வில்லவ நாடாழ்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை முழுவதையும் ஆண்டனர்.


    வில்லவர்-பாண வம்சங்களின் பல்வேறு குலங்கள்

    1. தானவர்
    2. தைத்யர்
    3. பாணர்
    4. பில்
    5. மீனா
    6. வில்லவர்
    7. மீனவர்


    சேர சோழ பாண்டியன் பேரரசுகளின் வில்லவர்களின் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், நாடான், நாடான்மார், நாடாக்கமார், நாடாக்கள்,சான்றார், சான்றோர், சாணார், ஸாணார், புழுக்கை சாணார், சார்ன்னவர், சான்றகர், சாந்தகர், சாந்தார், சாண்டார், பெரும்பாணர், பணிக்கர், பணிக்கநாடார், அண்ணாவி, திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மூத்த நாடார், மறவ நாடார், க்ஷத்திரிய நாடார், மாறன், மாறநாடார், மாறவர்மன், முக்கந்தர், மூப்பர், கிராமணி, நட்டாத்தி, கருக்குப்பட்டயத்தார், கொடிமரத்தார், கள்ள சான்றார், சேதி ராயர், சேர்வைக்காரர், ஈழச்சான்றார், ஏனாதி, ஆசான், சிவந்தி, ஆதித்தன், ஆதிச்சன், பாண்டியகுல க்ஷத்திரியர், பாண்டிய தேவர், ரவிகுல க்ஷத்திரியர், நெலாமைக்காரர், தேவர், குலசேகரன், குலசேகர தேவர், வில்லவர், வில்லார். வில்லவராயர், வானவர், வன்னியர், மலையர், மலையமான், மலையான் சான்றார், மீனவன், சேரன், மாகோதை நாடாழ்வார், நாடாவர், நாட்டாவர், நாட்டார், மேனாட்டார், சோழன், சோழ தேவர், செம்பியன், அத்தியர், சோனாட்டார், பாண்டியன், பனையன், பனைய மாறன், பனந்தாரகன், மானாட்டார், நெல்வேலி மாறன், சீவேலி, மாவேலி, கூவேலி போன்றவை


    ஈழவர்

    சண்ணார், பணிக்கர், இல்லத்து பிள்ளை, இல்லவர், தண்டான், யக்கர், இயக்கர், சேவகர்


    சிரியன் கிறிஸ்தவர்களின் வில்லார்வெட்டம் இராச்சியம்

    மாவேலி, பணிக்கர், பணிக்கர்வீட்டில், வில்லேடத்து, வில்லாடத்து, விச்சாற்றேல், அம்பாடன், பரியாடன், பைநாடத்து, பயிநாடத்து, படையாட்டில், படமாடன், படையாடன் பனையத்தற, புல்லன், கோலாட்டு, கோவாட்டுக்குடி, கோராட்டுக்குடி, கூவேலி, சேரதாயி, மூவாட்டு, மேனாச்சேரி, ஈழராத்து, மணவாளன், மாநாடன், மாந்நாட்டு, மழுவாஞ்சேரி, தண்டாப்பிள்ளி, வெளியத்து, பெருவஞ்சிக்குடி


    இலங்கை வில்லவர்

    வில்லவர், நாடார், சாண்டார், சாணார், சான்றார், கோட்டை சான்றார், யானைக்கார சான்றார், கயிற்று சான்றார், நம்பி, நளவர், கோட்டைவாசல் நளவர், பஞ்சமர், சேவகர், பண்டாரி


    யாழ்பாணம் ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்

    வில்லவராயர், கலிங்க வில்லவர், பணிக்கர், வன்னியர்


    கண்டி இராச்சியம்

    கலிங்க வில்லவன், தனஞ்சயா, பணிக்கனார், பணிக்கர்.


    கோட்டே இராச்சியம்

    வில்லவர், பணிக்கர்.


    கர்நாடகாவின் பாணப்பாண்டியன் ராஜ்ஜியங்கள்

    வில்லவர் = பாண, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவரு, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, சான்றா, ஸாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பாண்ட், பண்ட், பண்டரு, பாண்ணாயா
    மலையர் = மலேயா மீனவர்=மச்சியரசா
    சாணார் = சாண்ணா
    சானார் = ஸாண்ணா, மாசாணா மாசாண்ணைய்யா
    பாண்டியன் = பாண்டியா
    பாண்டிய தேவர் = பாண்டிய தேவா
    உடையார்=வோடைய, ஒடைய, ஒடையரச


    ஆலுபா பாண்டியன் வம்சம்

    நாடாவா, பாண்டா, பண்டரு, பாண்டியா, ஆள்வா, ஆளுவா, தனஞ்சயா, குலசேகரா, குலசேகரதேவா, ஆலுபேந்திரா, பட்டியோதையா, பாண்டியராஜா பல்லாள், பாண்ணாயா, மலேயா, பில்லவா, பாணான், பாங்கேரா


    உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்

    பாண்டியா


    இக்கேரி நாயக்கா

    நாயக்கா, பாணாஞ்சா, பலிஜா


    சான்றாரா பாண்டியன் வம்சம்

    பாண்டியா, பாணா, பில்லா, சான்றாரா, சாந்தா, , ஸான்றா, சாந்தாரா மற்றும் சான்டா, மச்சியரசா, சாண்ணா, ஸாண்ணா, மாசாணா, மாசாண்ணையா, வோடயா, ஒடேயா, பைரராசா, தேவா

    நூறும்பாடா பாண்டிய வம்சம்

    பாண்டியா, பில்லா, சாண்ணா, ஸாண்ணா, ஒடையரசதேவா, தேவா, தேவராசா


    கொங்கன் பாண்டிய இராச்சியம்

    பாண்டியா, நாடாவரா


    கோவா கடம்ப இராச்சியம்

    பாண்டியா, உப்பு நாடோர், தொற்கே நாடோர், பாண்டாரி, சாளுவா


    ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவின் விஜயநகர நாயக்கர்கள்

    நாயக்கா, நாயக்கர், தேவராயா, பலிஜா, பாணாஞ்சிகா, பாணாஞ்சா, வளஞ்சியர், அய்யாவோலு, ஐந்நூற்றுவர், அய்யர், அய்யம்கார், பாணர், வாணர், வானரர்.

    ReplyDelete
  47. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    ஆந்திராவின் பாண இராச்சியம்

    பாணா, மகாபலி வாணாதி ராயர், மகாவிலி வாணாதிராயர், வன்னியர் வாணாதிராஜா, வாணவ ராயர், வாண அடியார், ஸாண்ணா, பலிஜா, நாய்க்கர், மணவாளன், கண்ட கோபாலன், சோடா


    கோலார் பாண இராச்சியம்

    பாணா, வாணாதிராயர், வாணர், மகாபலி வாணாதிராயர், வன்னியர் முடியெடா மணவாளன், திருமாலிருஞ்சோலை வாணன், பொன்பரப்பினான்.


    கவுட்

    செட்டி பலிஜா


    கலிங்க பாணா ராஜ்யம்- ராமநாடு- ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியம்

    கங்கை பிள்ளை வாணாதிராயர், பிள்ளை குலசேகர வாணாதிராயர், வன்னியர், கலிங்க வில்லவன், தனஞ்சய, மாகோன், குலசேகர சிங்கை ஆரியன்


    மகாராஷ்டிரா

    பண்டாரி


    வட இந்திய பாணா-மீனா ராஜ்ஜியங்கள்

    வில்லவர் -மீனவர் பட்டம் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர்= மெர், மெஹ்ர், மெஹர், மேரோன், மேவார், மேவாசி, கோமலாடு
    3. வானவர்= பாண, வாண
    4. மீனவர்= மீனா
    5. நாடார், நாடாள்வார்= நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாந்தார்= சாந்தா
    7. சேர = செரோ


    ராஜஸ்தானின் மீனா வம்சம்

    சாந்தா மீனா, மீனா, பில்-மீனா, நாடாலா, நாட்டாலா, நாட்டார்வால், கோமலாடு


    பில் குலங்கள்

    பில், பில்-மீனா, பில் கராசியா, தோலி பில், துங்ரி பில், துங்ரி கராசியா, மேவாசி பில்,  ராவல் பில், தாட்வி பில், பாகாலியா, பில்லாளா, பாவ்ரா, வாசவா மற்றும் வாசவே.


    வட இந்தியாவின் பாண வணிகர்கள்

    பாணியாபாணியா, பணியா, வாணியா, வைஷ்ணவ் வாணியா, குப்தா


    ராஜபுத்திர குலங்கள்

    அக்னிவன்ஷி ராஜபுத்திரர்கள், சௌஹான்


    குண்டேஷ்வர் பாண்பூர் திக்காம்கர் பாண்டியர்கள், மத்திய பிரதேசம்

    பாண்டியா, பாண்டா, குந்தேஷ்வரின் பாண்டியர்கள், பக்வார் க்ஷத்திரியர், பக்வார் ராஜ்புத்திரர்கள்


    திர்கார்

    அக்னி, வன்னி, திர்பாண்டா, திர்போண்டா, திர்காலா, பாணவாடி, பாணி சாத், பாண்வாதி, காம்னாகர், காமாங்கர், காம்னாகர், ரன்சாஸ், திட்காட், திர்பண்டா, திர்கர், திர்மாலி, திர்வார், திட்கர், திரிதார்


    பாஞ்சால நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்லவ பாணர்கள்

    வன்னியர், வன்னிய குல க்ஷத்திரியர், அக்னிகுல க்ஷத்திரியர், காடுவெட்டி, திகளர், வட பலிஜா, சவலக்காரர், சவளர், வன்னே காப்பு, பள்ளே காப்பு, நாய்க்கர், வன்னிய கவுண்டர்


    சோனிப்பூர் அஸ்ஸாமின் பாண இராச்சியம்

    அசுரா, பாணா, மகாபலி


    சிந்து நதிதீர நாகரிகத்தின் பாண குலங்களின் பட்டங்கள்

    மகாபலி, தானவர், தைத்தியர், அசுரர்

    ReplyDelete

  48. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கர்நாடகத்தை ஆண்ட சான்றாரா பாண்டியர்கள் வில்லவர் பரம்பரையைச் சேர்ந்த சான்றார்கள் என்ற நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். பாணவாசியில் இருந்து ஆண்ட கடம்ப பாணப்பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை சான்றாரா பாண்டியன் குலமாகும்.


    கடம்ப வம்சம்

    கடம்ப வம்ச மன்னர்கள் பாணப்பாண்டியன் வம்சம் என்றும் அழைக்கப்படும் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கடம்ப வம்சத்தினர் வடக்கு கர்நாடகத்தில் இருந்து பாணவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பாணர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள்ஆவர். இவ்வாறு சான்றாரா பாண்டிய வம்சத்தினர் வில்லவர் நாடாள்வார்-நாடார் குலங்களின் வடநாட்டு உறவினர்கள் ஆவர்.

    கடம்பர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைப் போலவே காட்டில் வசிப்பவர்கள். வானவர் தங்கள் கொடிகளில் மரச் சின்னங்களையும், பிற்காலத்தில் புலிச் சின்னங்களையும் பயன்படுத்தினார்கள். மரம் மற்றும் புலி இரண்டும் காட்டுடன் தொடர்புடையவை. அதேபோல் கடம்பர்கள் தங்கள் கொடிகளில் கடம்ப மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கடம்ப தலைநகரம் வனவாசி அல்லது பாணவாசி என்று அழைக்கப்பட்டது. வில்லவர்களுடன் தொடர்புடைய கடம்பர்கள் மற்றும் பிற பாண வம்சத்தினர் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.


    சேர வம்சத்தின்மேல் கடம்பர்களின் தாக்குதல்

    பண்டைய சேர வம்சம் பாணவாசியின் கடம்பர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கிபி 130 முதல் கிபி 188 வரை) தான் பாணவாசி கடம்பரை தோற்கடித்ததாகவும், கடம்பர்களின் அரச அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தியதாகவும் கூறுகிறார்.


    கடம்ப குலங்கள்

    கடம்பர்களின் பாணப்பாண்டியன் வம்சத்தில் இரண்டு அரச குலங்கள் இருந்தன

    1. நூறும்பாடா பாண்டியர்
    2. சான்றாரா பாண்டியர்

    நூறும்பாடா பாண்டிய குலத்தினர் நூறும்பாடா பிரதேசத்தில் இருந்து ஆண்டனர். நூறும்பாடா என்பது நூறு நெல் வயல்களைக் குறிக்கும் அதாவது கிராமங்களை.

    சான்றாரா பாண்டியர்

    சான்றாரா பாண்டியன் குலத்தினர் சான்றாலிகே பிரதேசத்தில் இருந்து ஆட்சி செய்தனர். சான்றாலிகே என்றால் சான்றார் குலங்களின் வீடு என்று பொருள்.

    பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.


    வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
    மலையர் = மலெயா
    மீனவர்=மச்சிஅரசா
    சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
    சானார் = சான்னா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வொடெயா, ஒடெய


    சான்றாரா வம்சம்

    கிபி 682 இல் சாளுக்கிய மன்னன் வினயாதித்தியனால் நிறுவப்பட்ட கல்வெட்டுகளில் சான்றாரா குலத்தைப் பற்றிய முதல் குறிப்புகள் உள்ளன. சான்றாரா வம்சம் சான்டா, சாந்தா, சாந்தாரா, சாந்தா மற்றும் ஸாந்தா என்றும் அழைக்கப்பட்டது.


    ஜினதத்தா ராயா

    ஜினதத்தா ராயா அல்லது ஜின்தத் ராய், வட இந்தியாவில் மதுரா வைச் சேர்ந்த ஜைன இளவரசராக இருந்தவர், கி.பி 800 இல் சான்றாரா வம்சத்தை நிறுவியவர் எனக் கூறப்படுகிறது. வடக்கு மதுரா ஒரு பாணப்பாண்டியன் அரசாக இருந்திருக்கலாம்.

    இளவரசர் ஜினதத்தராயரை தனது தந்தை நடத்திய விதம் காரணம் மனம் நொந்து, பத்மாவதி தேவியின் சிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மதுராவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

    கிபி 800 இல், கடம்ப வம்சத்தைச் சேர்ந்த சான்றாரா பாண்டியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சான்றாராகளின் ஒரு குழு பாணவாசியில் உள்ள அரச வீட்டில் தங்க விரும்பியது. சான்றாரா பாண்டியரின் மற்றொரு குழு ஹோம்புஜாவிற்கு குடிபெயர்ந்தது, இது அவர்களின் புதிய தலைநகராக மாறியது.

    ReplyDelete
  49. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கலசா-கர்கலா  ராஜ்யம்

    கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.

    ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.

    பைரராசா பட்டம்

    கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின்  கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.

    சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.


    விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே

    கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.


    கர்கலா சான்றாரா பாண்டியர்கள்

    சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 ​​முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.


    சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது

    கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
    கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
    சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.


    வீர பாண்டியா IV

    கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு "அபிநவ பாண்டியர்" என்ற பட்டம் கிடைத்தது.


    இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா

    கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

    கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

    இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் "சாதன சைத்தியாலயம்" கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.

    வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.

    ReplyDelete
  50. சான்றாரா பாண்டியன் வம்சம்

    சான்றாரா பாண்டியன் வம்சத்தின் முடிவு

    கி.பி 1763 .யில் கேலடி நாயக்கர்கள் மற்றும் ஹைதர் அலியின் படையெடுப்புகளுக்குப் பிறகு சான்றாரா பாண்டியன் வம்சம் மறைந்தது.


    கேலடி நாயக்கர்கள்

    கி.பி 1499 இல் ஹோம்புஜாவின் சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட பகுதியில் அதாவது ஹொசகுண்டாவுக்கு அருகிலுள்ள கேலடியை தங்கள் தலைநகரைக் கொண்டு தங்கள் ராஜ்யத்தை நிறுவினர். கேலடி நாயக்கர்களும் சான்றாரா பாண்டியன் வம்சத்தைப் போலவே பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலிஜா நாயக்கர்களின் பாணாஜிகா துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

    கலசா-கர்காலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகள் கி.பி 1700 களில் கேலடி நாயக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.


    ஹைதர் அலியின் படையெடுப்பு

    கி.பி 1763 இல் ஹைதர் அலி கேடி நாயக்கர்களை தோற்கடித்து கேலடி நாயக்க ராஜ்யத்தை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலி 1763 கி.பி இல் கர்கலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்து அதை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு சான்றாரா பாண்டிய வம்சம் முற்றிலும் மறைந்து விட்டது.


    முடிவுரை:

    சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் நாடாள்வார், நாடார் அல்லது சாணார் என்றும் அழைக்கப்படும் சான்றார்களால் ஆளப்பட்டன. சான்றார் ஆட்சியாளர்கள் பண்டைய வில்லவர்-மீனவர் வம்சத்திலிருந்து வந்தவர்கள்.

    கிபி 1311 இல் துருக்கிய சுல்தானகத்தின் படையெடுப்புகளையும் கிபி 1377 இல் கிஷ்கிந்தா-ஆனேகுண்டியின் பலிஜா நாயக்கர்களின் படையெடுப்பையும் தொடர்ந்து சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் முடிவுக்கு வந்தன.

    இதேபோல் 1700களில் பலிஜா நாயக்கர்களான கேலடி நாயக்கர்களின் படையெடுப்பு மற்றும் கி.பி 1763 இல் ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு கர்நாடகாவின் சான்றாரா பாண்டிய ராஜ்யம் முடிவுக்கு வந்தது..

    ReplyDelete
  51. சான்றாரா பாண்டிய வம்சம் உள்ளிட்ட பாண குலத்தவர்களும், சான்றார்கள் போன்ற வில்லவர்-நாடாழ்வார் குலத்தவர்களும் மட்டுமே பாண்டியன் பட்டம் பெற்ற அரசராக முடியும்.

    ReplyDelete
  52. புறஞ்சேரிபள்ளர்க்கு என சுந்தரபாண்டியன்தேவரால் எழுதப்பட்ட கல்வெட்டு 🤣🤣🤣🤣

    மறுப்பு என்பதற்கு பதில் உருட்டுனு வைலே

    ReplyDelete