Saturday, July 13, 2013

பாண்டியர்கள் யார் ? - நடுவக்குறிச்சி பாளையக்காரன் கைபீது

வடுகர்கள் மதுரைப் பாண்டியர்களை வென்று தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த தமிழர்களின் குடும்பு ஆட்சி முறையை மாற்றி 72 பாளையப்பட்டுகளை எற்படுத்தி பாளையக்காரர்களை நியமித்து ஆட்சி செய்து வந்தனர். பெருவாரியாக வடுகர்களைப்  பாளையக்காரர்களாக  நியமித்தனர். ஒரு சில பாளையப்பட்டுகளைத் தமிழ் மன்னர்களுக்கு  எதிராக உதவி செய்த சாதியினருக்கு வழங்கினர்.  
வடுகர்களின் ஆட்சி போய் பிரித்தானியரின்  கிழக்கிந்தியக் கும்பனியார் ஆட்சியைக் கைப்பற்றிய  19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாளையப்பட்டுக்காரர்கள்  அனைவரும் பாளையப்பட்டுகளை தாங்கள் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வருவதாகவும் கும்பனியார் இந்தப்  பாளையப்பட்டுகளைத் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் நாங்கள் கும்பனியாரின் கீழ் வரிகளை ஒழுங்காகக் கட்டி வருவோம் என்றும் உறுதி கூறி வேண்டுகோள் விண்ணப்பங்கள் செய்து கொண்டார்கள். இந்த விண்ணப்பங்கள் கைபீதுகள் எனப் பெயர் பெற்றனர்.
தமிழ்நாடு அரசு பாளையப்பட்டுகளின் வம்சாவளி என்று நான்கு தொகுதிகளாக இவைகளைப் பதிப்பித்துள்ளது. நடுவக்குறிச்சி பாளையக்காரன்  வம்சாவளி கைபீது என்ற கைபீது தொகுதி – 2 இல் பக்கங்கள் 106 முதல் 111 வரை ஆறு பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. (பதிப்பு ஆண்டு 1981).  தமிழ்நாடு அரசு கீழ்திசைச் சுவடிகள் நூல் நிலையத்தில்  சுவடி எண் 3886 ஆகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குத்தாலத் தேவர் என்ற பட்டப்பெயர் கொண்ட இப்பாளையக்காரன்  “எங்கள் வமுசத்தில் பாண்டிய றாசா பெண் கேட்டார்,அதற்கு மறக்குலத்திலேயிருக்கிற பெண்ணை சந்திறகுல வங்கிசத்தில் குடுக்கிறதில்லை என்று சொன்னதிற்கு பாண்டிய றாசா விதனமாய்ப் படை சேகரித்து……என்று தமது கைபீதில் எழுதியுள்ளார். கைபீதுவில் உள்ள காலக் குறிப்புகள் தவறாக இருந்தாலும் இந்தச்சாதி பற்றிய செய்தி தவறாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்கள் கூட முக்குலத்தோருக்கும் தமிழ் மூவேந்தர் மரபினருக்கும் சாதியத் தொடர்பு இல்லை என்பதையும், முக்குலத்தோர்  மூவேந்தர் மரபினர் அல்லர் என்பதையும் கூறியுள்ளனர். இந்த கைபீதில் மறவர் குலத்தினரும் பாண்டியர் குலத்தினரும் வேறு வேறு சாதியினர் என்பதை ஒரு மறவர் பாளையக்காரர் 200 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.
                தகவல் : டாக்டர் குருசாமி சித்தர் (மள்ளர் மலர் 2003)
       கூடுதல் தகவல் : எந்த பாளையக்காரர்களும் ( மறவர், கள்ளர், அகம்படியர்.) தங்களை  மூவேந்தர் வம்சம் என உரிமைகோரவில்லை.

70 comments:

  1. Marupadium Fruad History ya. Gurusamy Chithar yarunga? Unga all. ungalukku etha mathiri than solluvar.

    ReplyDelete
  2. டாக்டர் குருசாமி சித்தர் மள்ளர்குலம்தான் நாங்கள் இல்லை என்று கூறவில்லை. ஆனால் இங்கு கூறப்பட்டுள்ள செய்தி மறவர் குலத்தினரும் பாண்டியர்குலத்தினரும் வேறு வேறு சாதியினர் என்பதை ஒரு மறவர் பாளையக்காரர் 200 ஆண்டுகளுக்குமுன்பே தமது கைபீதில் எழுதியுள்ளார் என்பதுதான். அந்த கைபீதில் உள்ள செய்தி தவறு என்று சொல்கிற்களா ? அல்லது நடுவக்குறிச்சி பாளையக்காரன் மறவன் இல்லை என்று சொல்கிற்களா ?. எது தவறான வரலாறு தெளிவாக கூறுங்கள்.

    ReplyDelete
  3. பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க மள்ளர். பாளையக்காரர் ஆட்சியில் பாண்டிய ராஜா யாரு? தெலுங்கு நாயக்கர் தான் மதுரையை ஆண்டார்கள். தெலுங்கனுக்கு தமிழன் பொண்ணு கொடுப்பாண்ணா?

    ReplyDelete
  4. தென்காசிப் பாண்டியர்கள் பற்றி தங்களுக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது என்று நினைக்கிறேன். அதனால்தான் நாயக்கர்கள் மதுரையை ஆண்ட காலத்தில் பாண்டியர்கள் ஆட்சிசெய்யவில்லை என்று தவறான தகவலை சொல்கிற்கள். இந்த பகுதியை பார்த்துவிட்டு பதில் கூறுங்கள்.
    http://ta.wikipedia.org/wiki/பாண்டியர்

    ReplyDelete
  5. என்னமோ போங்க. நல்லா பொய் மட்டும் சொல்லுரீங்க.

    ReplyDelete
  6. யார் பொய் மட்டுமே சொல்கிறார்கள் என்பதை இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

    இங்கு கூறப்பட்டுள்ள செய்தி : மறவர் குலத்தினரும் பாண்டியர்குலத்தினரும் வேறு வேறு சாதியினர்.

    செய்தி இடம்பெற்ற நூல் : நடுவக்குறிச்சி பாளையக்காரன் கைபீது

    இதை கூறியவர் : நடுவக்குறிச்சி பாளையக்காரன்

    சாதி : மறவர்

    நூல் பற்றிய செய்தி

    பதிப்பு ஆண்டு : 1981

    சுவடி எண் : 3886 (பக்கங்கள் 106 முதல் 111 வரை )

    “எங்கள் வமுசத்தில் பாண்டிய றாசா பெண் கேட்டார்,அதற்கு மறக்குலத்திலேயிருக்கிற பெண்ணை சந்திறகுல வங்கிசத்தில் குடுக்கிறதில்லை என்று சொன்னதிற்கு பாண்டிய றாசா விதனமாய்ப் படை சேகரித்து……”

    மேலே கூறிய செய்திகள் தவறு என்று தக்க சான்றுடன் கூறுங்கள் பார்க்களாம்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இது ஆவணங்களும் ஆராய்ச்சியாளரர்களும் கல்வெட்டுக்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆவணங்களும் சொலவது இதுதான் அதுமட்டுமல்ல இதை உங்கள் புரூடா புலவர் செந்தில்பள்ளர் புத்தகம்தமும் இதைத்தான் சொல்கிறது

    விடயம் இப்படியிருக்கையில் பாளையக்காரர்களாய் தமிழ் மன்னர்கள் இருந்தபோது பாண்டிய அரசாட்சியில் அமர்ந்திருந்திருந்தது நாயக்கர்கள்தான் என்பது திண்ணம்.

    ஒரு நாயக்கனுக்கு தேவர்கள் திருமண உறவுமுறை வைக்க மாட்டார்கள்..அதற்கான ஆவனமே அது!..அதுமட்டுமல்ல பாண்டிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நாயக்கன் தமிழ் உயர்குடியான தேவரினத்தோடு சம்பந்தம் வைத்து வந்திருக்கிறான் அதற்கு எம் குல மன்னன் முடியாது என சொல்லியிருக்கிறான்.

    குடுகுடுப்பை சித்தரிருக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள்..
    "Magizyme" மூளை வளர்ச்சிக்கான மாத்திரை இதை சாப்பிட்டால் குடுகுடுப்பை சித்தருக்கு மூளை வளருமா பார்ப்போம்.

    ReplyDelete
  9. “எங்கள் வமுசத்தில் பாண்டிய றாசா பெண் கேட்டார்,அதற்கு மறக்குலத்திலேயிருக்கிற பெண்ணை சந்திறகுல வங்கிசத்தில் குடுக்கிறதில்லை என்று சொன்னதிற்கு பாண்டிய றாசா விதனமாய்ப் படை சேகரித்து……”

    நடுவக்குறிச்சி பாளையக்காரனா தேவர் இப்படி எழுதியிருப்பது அன்று பாண்டியர் பீடத்தில் அமர்ந்திருந்த நாயக்கரைத் தான் எனபது காலத்தையும் ஆட்சியையும் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்...

    இதுக் கூட தெரியாமல் எப்படியா உங்கள் குடுகுடுப்பை சித்தர் எழுதுறார்.. சிரிப்பு சிரிப்பா வருது!!! ஹய்யோ ஹ்ய்யோ

    ReplyDelete
  10. //“எங்கள் வமுசத்தில் பாண்டிய றாசா பெண் கேட்டார்,அதற்கு மறக்குலத்திலேயிருக்கிற பெண்ணை சந்திறகுல வங்கிசத்தில் குடுக்கிறதில்லை என்று சொன்னதிற்கு பாண்டிய றாசா விதனமாய்ப் படை சேகரித்து……”//

    என்ன செய்தி பாதியில நிக்கிது .. மேற்கொண்டு சொன்னால் உண்மை எதும் வெளிவருமோ..

    ReplyDelete
    Replies
    1. கரெக்டா சொன்னீர்கள் தியாகு. பள்ளர்கள் இல்லாத பெருமைக்கு ஏங்குறார்கள். வரலாரை மாற்ற பர்க்குறார்கள். முடியுமா நம்மிடம்?

      Delete
    2. பாளையக்காரர்களாய் தமிழ் மன்னர்கள் இருந்தபோது பாண்டிய அரசாட்சியில் அமர்ந்திருந்திருந்தது நாயக்கர்கள்தான் என்பது திண்ணம்.

      ஒரு நாயக்கனுக்கு தேவர்கள் திருமண உறவுமுறை வைக்க மாட்டார்கள்..அதற்கான ஆவனமே அது!..அதுமட்டுமல்ல பாண்டிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நாயக்கன் தமிழ் உயர்குடியான தேவரினத்தோடு சம்பந்தம் வைத்து வந்திருக்கிறான் அதற்கு எம் குல மன்னன் முடியாது என சொல்லியிருக்கிறான்.

      குடுகுடுப்பை சித்தரிருக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள்..
      "Magizyme" மூளை வளர்ச்சிக்கான மாத்திரை இதை சாப்பிட்டால் குடுகுடுப்பை சித்தருக்கு மூளை வளருமா பார்ப்போம்.//

      தென்காசிப் பாண்டியர்கள் நாயக்கர் இல்லையே பின்பு ஏன் மறவர் பாண்டியருக்கு பெண் கொடுக்க மறுக்க வேண்டும். இந்த கைபீதுவை எழுதியது நயக்கரோ அல்லது பாண்டியரோ ( மள்ளரோ ) இல்லையே ! மறவர் தானே எழுதியது. அவர் மூளை வளர்ச்சியில்லாமல்தான் இதை எழுதினாறா?.

      Delete
    3. @Pandyan Mallar
      “எங்கள் வமுசத்தில் பாண்டிய றாசா பெண் கேட்டார்,அதற்கு மறக்குலத்திலேயிருக்கிற பெண்ணை சந்திறகுல வங்கிசத்தில் குடுக்கிறதில்லை என்று சொன்னதிற்கு பாண்டிய றாசா விதனமாய்ப் படை சேகரித்து……” - இதில் எங்கு தென்காசி பாண்டியர்கள் என்று வருகிறது? வெறும் பாண்டிய ராசா என்று தானே இருக்கிறது?

      Delete
  11. // என்ன செய்தி பாதியில நிக்கிது .. மேற்கொண்டு சொன்னால் உண்மை எதும் வெளிவருமோ..
    கரெக்டா சொன்னீர்கள் தியாகு. பள்ளர்கள் இல்லாத பெருமைக்கு ஏறாங்குர்கள். வரலாரை மாற்ற பர்க்குறார்கள். முடியுமா நம்மிடம்? //


    அந்த கைபீதுவை தாங்கள் முழுமையாக படித்துவிட்டு கூறுங்கள் என்ன உண்மை வெளிவருகிறது என்று பார்ப்போம். அல்லது யார் இல்லாத பெருமைக்கு ஏங்குகிறார்கள் என்று தெரியும்

    ReplyDelete
  12. மா.இளந்திரையன்July 29, 2013 at 11:39 PM

    மள்ளர் பற்றி சில கேள்விகளுக்கு முதலில் விடை சொல்லுங்கள்?
    1. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை பற்றி புறநானூறில் இடைக்குன்றூர் கிழார் பாடிய பாடல்களில் இருந்து மள்ளர் என்று யாரை கூறுகின்றார்?

    76. அதுதான் புதுமை!
    பாடியவர்: .இடைக்குன்றூர் கிழார்.
    பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
    திணை :வாகை. துறை: அரச வாகை.
    ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
    புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
    இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை
    மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
    நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
    செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,
    ஒலியல் மாலையடு, பொலியச் சூடிப்,
    பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக,
    நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
    பீடும் செம்மலும் அறியார் கூடிப்,
    பொருதும் என்று தன்தலை வந்த
    புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க,
    ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே!

    77. யார்? அவன் வாழ்க!
    பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
    பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்.
    திணை: வாகை. துறை: அரசவாகை.
    கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்,
    குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
    நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
    குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
    நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
    யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,
    தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
    உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
    அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
    மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும்,அதனினும் இலனே.

    78. அவர் ஊர் சென்று அழித்தவன்!
    பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
    பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
    திணை:
    வாகை. துறை: அரசவாகை.
    வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்,
    அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து,
    அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
    மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து,
    விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்
    பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,
    எள்ளி வந்த வம்ப மள்ளர்
    புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர,
    ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்
    மாண்இழை மகளிர் நாணினர் கழியத்,
    தந்தை தம்மூர் ஆங்கண்,
    தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.

    79. பகலோ சிறிது!
    பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
    பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
    திணை: வாகை.
    துறை; அரசவாகை.
    மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
    மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து,
    தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
    வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
    வம்ப மள்ளரோ பலரே;
    எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே?

    ReplyDelete
  13. மா.இளந்திரையன்July 29, 2013 at 11:41 PM

    2. //வம்ப மள்ளரோ பலரே // பாண்டியனோடு போர் செய்த அந்த வம்ப மள்ளர்கள் யார் ?

    இதோ அகம் -36 இல் இருந்து

    பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
    கொடுவாய் இரும்பின் கோள்இரை துற்றி,
    ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
    கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
    அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித்

    தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
    கயிறுஇடு கதச்சேப் போல மதம்மிக்கு,
    நாள், கயம் உழக்கும் பூக்கேழ் ஊர
    வருபுனல் வையை வார்மணல் அகன்துறைத்
    திருமருது ஓங்கிய விரிமலர்க் காவில்,

    நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
    வதுவை அயர்ந்தனை என்ப அலரே,
    கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
    ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
    சேரல், செம்பியன், சினம்கெழு திதியன்,

    போர்வல் யானைப் பொலம்பூண் எழினி,
    நார்அரி நறவின் எருமை யூரன்,
    தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
    இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன், என்று
    எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல்

    முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரைசெலக்,
    கொன்று களம்வேட்ட ஞான்றை,
    வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!

    (சேரல், செம்பியன், சினம்கெழு திதியன், பொலம்பூண் எழினி, எருமை யூரன், இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன்)

    1. சேரல் - மாந்தரஞ்ச்சேரல் இரும்பொறை,
    2. செம்பியன் - கிள்ளிவளவன்,
    3. சினம்கெழு திதியன் - (அழுந்தூர் வேள்),
    4. பூண் எழினி - அதியன் மரபினர்,
    5. எருமை யூரன் - மைசூரை ஆண்டவன் (களபிறர் படையில் ஒருவன் ) வடுகன் ,
    6. இருங்கோ வேண்மான் - இருங்கோவேள் ,
    7. இயல்தேர்ப் பொருநன்.

    ReplyDelete
  14. மா.இளந்திரையன்July 29, 2013 at 11:43 PM

    3. போரில் தோல்வியுற்ற இந்த எழுவர் ஏன் மள்ளர் எனபட்டனர் ?
    பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை விடுத்தது அவன் வென்ற மள்ளர் பலரேயான தொல்வியுற்ற எழுவரை மட்டும் எதற்காக மள்ளர் என்று குறிப்பிடவேண்டும்...

    4. அப்படியானால் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மள்ளர் இல்லையா?

    5. மேலே சொன்ன எழுவரும் மள்ளர் - பள்ளரா சரியாக சொல்லவும் ?

    6.அப்படி பள்ளர் என்றால் இவர்களின் சந்ததியினர் என்ன அடையாளங்களோடு(உட்பிரிவு, பட்டம்) உங்கள் இனத்தில் கலந்து உள்ளனர்?

    7. எருமை யூரன் - மைசூரை ஆண்டவன் (களபிறர் படையில் ஒருவன் ) கொங்கணர் பகுதி தலைவன் வடுகன் இவர் மள்ளர் என்றால் பள்ளர் களபிறரா ?

    8. இதில் மூவேந்தர்கள் களபிறர்களோடு திருமணம் செய்தவர்கள் அப்படியானால் (கொங்கணர், கங்கர், வடுகர்) போன்ற திராவிட மரபணு உங்களிடம் உள்ளதா இல்லையா?

    மேல் சொன்ன பாண்டிய மற்றும் எழுவர் கூறு உடைய மக்களை எங்களால் அடையாளம் காட்ட முடியும் அவர்கள் எந்த இனங்களில் கலந்து உள்ளனர் என்று சொல்லமுடியும் உங்களால் இந்த எழுவரை பள்ளரில் அடையாளம் காட்ட முடியுமா?

    இந்த பாடலில் இருந்து மள்ளர் என்பது ஒரு இனத்தை குறிக்காது அது போர் செய்யும் அரசர் அனைவரையும் குறிக்கும் சொல்லே .....

    இதை மறுக்கமுடிய்மா ?

    ReplyDelete
    Replies
    1. Very good Mr Ilanthirayan.I can answer all your questions who Nedunchezhiyan is and who mallars are.First you give some explanations about how you can say that Erumaiyuuran is a Vaduga or Kalapra.Erumaiyur is presently known as Mysore.No doubt,so you mean Erumaiyuran is a vaduga or Kalapra, is n't it? Do you have any other explanation that Erumaiyuran is a Vaduga or Kalapra? If it is, let me know.

      Delete
  15. .
    புறநானூறு பாடல் 78 -பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது

    பொருள் : தீரமும், வீரமும் உள்ள எம் இறைவன் (மன்னன்) வழிமையும் வேகமும் மிக்க கால்களை உடையவன் . நீரைக் கலக்கிக்கொண்டு, உழுவைமீன் தன் இரையை மின்னலெனச் சென்று பிடிப்பது போல், இவனது மலைப்பு அறியா மார்பினை மதியாது, மள்ளர்குலப் பகை மன்னர்கள் எழுவர் வீறு கொண்டு எழுந்து, நாம் விழுப்புண் பட்ட வெற்றி மள்ளர்கள் என்றும், புகழ் படைத்தவர்கள் செழியன் சின்னப் பையன், போரில் கொள்ளையிடத்தக்க அவன் செல்வங்களும் அதிகம் என்றும் இகழ்ந்து பேசி எதிர்த்து வந்து வம்பு செய்கின்ற மள்ளர் மன்னர்களைத் தீய நோக்குடைய அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்து, அவர்களை போர்களத்திலே கொல்லாது அவர்களின் ஊர்வரை விரட்டிச்வென்று அவர்களின் மனைவியர் வெட்கிட எம் இறைவன் நெடுஞ்செழியன் வெற்றி முரசு ஒழிக்க செய்து அயல்நாட்டு மள்ள மன்னர்களின் ஆணவத்தைக் கொன்று ஒழித்தான்.

    இந்த பாடல் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மற்றும் அவனிடம் தோல்விபெற்ற ஏழு மன்னர்களைப்பற்றியது. பாண்டியனை மள்ளர் என்றும் வம்பு செய்த எழுவரை (சேரல், செம்பியன், சினம்கெழு திதியன், பொலம்பூண் எழினி, எருமை யூரன், இருங்கோவள், இயல்தேர்ப் பொருநன்) வம்ப மள்ளர் என்று இடைக்குன்றூர் கிழார் தெளிவாக குறிப்பிடுகிறார்.

    ReplyDelete
  16. //எருமை யூரன் - மைசூரை ஆண்டவன் (களபிறர் படையில் ஒருவன் ) கொங்கணர் பகுதி தலைவன் வடுகன் இவர் மள்ளர் என்றால் பள்ளர் களபிறரா ? //

    எருமையூரன் என்பவன் எருமை (மைசூர் ) நாட்டையை ஆட்சி செய்ததால் அப்பெயர் அவனுக்கு வழங்கப்பட்டதாக மைசூர் வரலாறு கூறுகிறது. அவன் மள்ளர் குலத்தை சேர்ந்தவன். அவனை வடுகர் என்று கூறுவது தவறு. களப்பிறர்கள் தமிழ் வேந்தர்களை வென்று தமிழகத்தை ஆட்சி செய்தபோது, தமிழ் வேந்தர்கள் ஆட்சியை இலந்து கர்னாடகம்,ஆந்திரா,மற்றும் இலங்கை போன்ற பகுதிகளுக்கு சென்று குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர்.

    தெலுங்கு நாட்டிலும், அதற்கு வடக்கேயும் இருந்துகொண்டு தாம் சோழர் வமிசத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டவர்களும் தம் புகழைக் கூறும்போது உறையூரையும், காவேரியையும் மறக்கவில்லை. அக்காலத்திய கல்வெட்டுகளும் இதையே கூறுகின்றன. தெலுங்குச் சோழர்களைப் போன்றே உச்சங்கில் பாண்டியர்களும் இந்திய வரலாற்றில் காணப்படும் சில சிதறிய வமிசங்களாகும் ( சோழர்கள் புத்தகம் -1 கே.ஏ .நீலகணடசாஸ்திரி பக்கம் 135 ). இந்தியா மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் தமிழ் வேந்தர்கள் தான் ஆட்சி செய்த இடங்களில் தான் சார்ந்த இன மக்களை குடியமர்த்தி அவர்கள் இன்றும் வேளான்மை செய்வதோடு தங்களை பள்ளர், மள்ளர், மல்லர், பாண்டியர் வமிசங்கள் என்று கூறிப்பிடுகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. மா.இளந்திரையன்July 31, 2013 at 4:41 AM

      எருமையூரான் - களபிறரே மைசூரை (எருமையூரை) ஆண்ட வடுக கொடுங் கருநாடரே.

      களபிறர் - கொங்கணர், கலிங்கர், கொடுங்கரு நாடர்,
      பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்

      பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன.வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது.

      பெரிய புராணத்தில் சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறார். அவர்களுள் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரையில் இருந்து சிவபெருமானுக்குத் திருப்பணி செய்து வந்தார். அவ்வாறு செய்து வரும் நாளில், கருநாடர் மன்னன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து, அப்போது மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனை வென்று மதுரை மாநகரைக் கைப்பற்றிப் பாண்டிய நாட்டை ஆட்சி புரியலானான் என்று சேக்கிழார் மூர்த்தி நாயனார் புராணத்தில் கூறுகிறார்.

      கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல்
      மானப் படைமன்னன் வலிந்து நிலம் கொள் வானாய்
      யானை, குதிரை, கருவிப்படை வீரர், திண்தேர்
      சேனைக் கடலும் கொண்டு தென் திசை வந்தான்

      வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச்
      சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம்
      சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்தும் ஆற்றால்
      கந்தப் பொழில்சூழ் மதுரா புரி காவல் கொண்டான்.

      (பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணம், 11-12)

      கல்லாடம் - "மதுரை வவ்விய கருநாடர் வேந்தன் "

      (வடுகக் கருநாடர் – (தமிழும் - பிருகாருதமும் கலந்து உருவான) வடுகு என்னும் மொழியைப் பேசும் கருநாடர்; சிந்த – அழிய; செரு – போர்; மதுராபுரி – மதுரை மாநகர்.)

      பெரியபுராணமும், கல்லாடமும் களபிறர்கள் பாண்டிய நாட்டை பிடித்த பிறகு பாடப்பட்டவை ஆனால் சிலபதிகாரத்திலே பெரிய புராணத்திற்கு முன்பே இளங்கோவடிகள் "கொடுங் கருநாடர் " என்று யாரை குறிக்கிறார் ?

      1.) கலியரசனே - பெரியபுரானம் கூறும் "வடுக கருநாடக வேந்தன்" என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

      2.) வடுக கருநாடக வேந்தன் - எருமையூரான் அன்றி வேறு யார்? கொங்கனரா? கங்கரா? கலிங்க படையா? பல்வேற்கட்டியா?

      எருமையூர் - மகிழாவூர் - மகிஷாவூர் - மைசூர் எருமையூர் - (வடுகக் கருநாடர் – (தமிழும் - பிருகாருதமும் கலந்து உருவான) வடுகு என்னும் கன்னடம் மொழியைப் பேசும் கருநாடர்..

      களபிறர் எல்லாம் கொடுந்தமிழ் பேசிய மன்னர்களே இருமொழி கொள்கையுடயவர்க்கள் (தமிழும் - பிருகாருதமும்(பாலியும்) ) கலந்து பேசியவர்கள் நாகர் வழி வந்த திராவிடர்கள் என்று அவர்கள் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன வரலாற்று ஆய்வார்களும் உறுதி செய்கின்றனர்.

      3.) இபொழுது சொல்லுங்கள் எருமையூரானை களபிறரை வடுகரை இடைக்குன்றூர் கிழார் ஏன் மள்ளர் என்கிறார்?

      Delete
  17. மா. இளந்திரையன்.July 31, 2013 at 4:45 AM

    // பாண்டியனை மள்ளர் என்றும் வம்பு செய்த எழுவரை (சேரல், செம்பியன், சினம்கெழு திதியன், பொலம்பூண் எழினி, எருமை யூரன், இருங்கோவள், இயல்தேர்ப் பொருநன்) வம்ப மள்ளர் என்று இடைக்குன்றூர் கிழார் தெளிவாக குறிப்பிடுகிறார். //

    நண்பரே பாடல் - 78 இல் இதில் எழுவரை வம்ப மள்ளர் என்கிறார் பாண்டியனை மள்ளர் என்று குறிக்கும் வரி எது சரியாக சொல்லுங்கள் ?

    நீங்கள் கூறுவது போல் பாண்டியன் மற்றும் எழுவரும் மள்ளர்
    என்றாள் செழியன், சேரல், செம்பியன், பூண் எழினி, எருமை யூரன், இருங்கோவள், இயல்தேர்ப் பொருநன் - தற்காலத்தில் நீங்கள் தான் மள்ளர் என்று கூறிக்கொள்கின்றீர்கள் அதாவது பள்ளர் தான் மள்ளர் என்று அப்படி என்றால் இவர்களின் கூறுகள் உங்களிடம் தான் கட்டாயம் இருக்க வேண்டும் இருக்கின்றதா ?

    அப்படி இல்லை என்றால் வேறு இனத்தில் கானப்பட்டால் அவர்கள் தானே மள்ளர்கள்?

    இல்லை அந்த கூறுகள் காணப்படும் இனங்கள் உங்கள் வழித்தோன்றல்கள் என்றால் ஒரே மரபணு தானே இருக்கவேண்டும் ?

    ReplyDelete
  18. மா. இளந்திரையன்.July 31, 2013 at 4:50 AM

    /////
    களப்பிறர்கள் தமிழ் வேந்தர்களை வென்று தமிழகத்தை ஆட்சி செய்தபோது, தமிழ் வேந்தர்கள் ஆட்சியை இலந்து கர்னாடகம்,ஆந்திரா,மற்றும் இலங்கை போன்ற பகுதிகளுக்கு சென்று குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர்.

    தெலுங்கு நாட்டிலும், அதற்கு வடக்கேயும் இருந்துகொண்டு தாம் சோழர் வமிசத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டவர்களும் தம் புகழைக் கூறும்போது உறையூரையும், காவேரியையும் மறக்கவில்லை. அக்காலத்திய கல்வெட்டுகளும் இதையே கூறுகின்றன. தெலுங்குச் சோழர்களைப் போன்றே உச்சங்கில் பாண்டியர்களும் இந்திய வரலாற்றில் காணப்படும் சில சிதறிய வமிசங்களாகும் ( சோழர்கள் புத்தகம் -1 கே.ஏ .நீலகணடசாஸ்திரி பக்கம் 135 ). .///

    1. ) அது எப்படி நண்பரே தோல்வியற்ற பிறகு (கர்நாடகம், ஆந்திரா)
    என்ற தம்மை வென்றவர்கள் நாட்டில் போய் (எதிரிகள்) நாட்டிலே சோழன் என்று ஆட்சி முடியும்...? அதுவும் குறுநில மன்னர்களாக ?


    // தெலுங்கு நாட்டிலும், அதற்கு வடக்கேயும் இருந்துகொண்டு தாம் சோழர் வமிசத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டவர்களும் தம் புகழைக் கூறும்போது உறையூரையும், காவேரியையும் மறக்கவில்லை. அக்காலத்திய கல்வெட்டுகளும் இதையே கூறுகின்றன...//

    2. ) நண்பரே அந்த கல்வெட்டு யாரை குறிக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா?
    3. ) தெலுங்கு சோழர்கள் யார் என்றும் இபொழுது எந்த மக்களில் உள்ளனர் என்று அடையாளம் காட்ட முடியமா? பள்ளரில் அவர்களை கானா முடியுமா? அந்த கல்வெட்டு வரிகளை காட்ட முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே எருமையூரின் தற்காலப் பெயர் மைசூர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால்,எருமையூரான் என்று சங்க காலத்தில் குறிப்பிடக்கூடியவன் 'களப்பிரன்' என்பது சரியான கருத்து கிடையாது.இவனை நீங்கள் பெரியபுராணத்தில் குறிப்பிடக்கூடிய பாண்டியநாட்டைக் கைப்பற்றிய களப்பிர மன்னனுடன் ஒப்பிடுவது தவறானது.பெரியபுராணத்திலும்,கல்லாடத்திலும் சுட்டிக்காட்டக்கூடிய களப்பிரமன்னன் 'அச்சுதக்களப்பாளன்' என்பவன் ஆவான்.இவனைப் பற்றிய கல்வெட்டுச் செய்தியும் உள்ளது.இவனது காலம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.இவனை சங்ககால இடைக்குன்றூர் கிழார் குறிப்பிடக்கூடிய தமிழ் மன்னனான எருமையூரனுடன் தொடர்புபடுத்துவது தவறானது.இங்கே காலம் என்பது முக்கியமானது.சங்ககாலத்தில் கருநாடகத்தின் எருமையூர் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததை நீங்கள் மறக்கக்கூடாது.இதன் பொருட்டே தமிழ் மள்ளனான எருமையூரனை சங்கப் புலவர்கள் குறிப்பிடக்கூடிய நிலை ஏற்பட்டது.அதேபோன்று மள்ளர் என்பது ஒரு இனத்தைக் குறிப்பிடக்கூடிய மரபுப் பெயர்.அந்த இனத்தாரே தற்காலத்தில் பள்ளர் எனப்படுகின்றனர்.இதை 'மறவர்' போன்ற பண்புப் பெயருடன் ஒப்பிட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.இதைப் பற்றிய உங்களது புரிதல் இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது....தொடர்ந்து விவாதிப்போம்..

      Delete
    2. பெரியபுராணத்தில் குறிப்பிடக்கூடிய களப்பாளன் பெயர் 'கூற்றுவநாயனார்'.முதலில் மூவேந்தரை வென்று தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆண்ட களப்பாளன் 'அச்சுதக்களப்பாளன்'

      Delete
    3. Vaduga = Northener.

      Delete
  19. //இந்த பாடலில் இருந்து மள்ளர் என்பது ஒரு இனத்தை குறிக்காது அது போர் செய்யும் அரசர் அனைவரையும் குறிக்கும் சொல்லே .....

    இதை மறுக்கமுடிய்மா ?//

    நிகண்டுகள் அனைத்தும் மள்ளர் என்பது ஒரு இனம் என்று தான் குறிப்பிடுகிறது அது போர் செய்யும் அரசர் அனைவரையும் குறிக்கவில்லையே ! மேலும் சங்க புலவர்களில் மள்ளனார் என்று முடியும் பெயர் கொண்டவர்கள் பலர் இருந்து இருக்கிறார்கள். மல்லர் என்ற ஒரு புலவர் திருக்குறளுக்கு உரை வகுத்துள்ளார். மள்ளர் என்பது பொது சொல்லாக உழவர், வீரர் என்பதை மட்டும் குறிக்குமானால் இப்புலவர்கள் தங்கள் பெயரில் மள்ளனார் என்று சேர்த்துக்கொள்ள இடமில்லை. மள்ளர் என்பது ஒரு குலப்பெயராகையால் அவர்கள் அதைத் தம் பெயருடன் சேர்த்துக்கொண்டார்கள்.
    1. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
    2. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
    3. அம்மள்ளனார்
    4. கடுவன் மள்ளனார்
    5. மதுரை தமிழ்க்கூத்தன் கடுவன் மள்ளனார்
    6. மதுரை தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார்
    7. கடுவன் மள்ளனார்
    8. மள்ளனார்
    9. மல்லர்

    கம்பராமாயணத்தில் பல பாடல்களில் மள்ளர் என்பது ஒரு இனம்,ஒரு குலம் என தெளிவாக கூறிப்பிடுகிறார்.

    பாலகாண்டம், நாட்டுப்படலம் பா – 32
    “ குன்றுடைக் குல மள்ளர் “– இங்கு மள்ளர் என்பது ஒரு குலம் என கூறிப்பிடுகிறார்.

    யுத்தகாண்டம், வானரர் களம்காண் படலம் பா – 25
    “ இன மள்ளர் பரந்த கையில் “- இங்கு மள்ளர் என்பது ஒரு இனம் என கூறிப்பிடுகிறார்.

    பால காண்டம் ஆற்றுப்படலம் பா – 18
    “ காத்த கால் மள்ளர் ” – நாட்டைக் காக்கும் பல கிளைகளையுடைய மள்ளரினத்தார்.


    திவாகர நிகண்டு – கி.பி.9 ஆம் நூற்றாண்டு

    "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திற லுழவர்க்கும்
    வருந்தகைத்தாகும் மள்ளரெனும் பெயர்" – மள்ளரின் இலக்கணம்

    “களமர், தொழுவர், மள்ளர்,கம்பளர், விளைஞர்
    உழவர்,கடைஞர்,கிளைஞர் என்று அவையவை
    கழனிக்கு அடைந்தவர் பெயரே”- மருத நில மக்கள் பெயர் (8)

    உழத்தியர், கடைசியர், ஆற்றுக்காலாட்டியர்
    அடுத்த கழனிக்கு அடைந்த மகளிர்” - மருத நிலப்பெண் பெயர்(3)

    பிங்கல நிகண்டு– கி.பி.10 ஆம் நூற்றாண்டு

    "செருமலை வீரருந் திண்ணியோரு
    மருதநில மாக்களு மள்ள ரென்ப" - – மள்ளரின் இலக்கணம்

    களம ருழவர் கடைஞர் சிதலர்
    மள்ளர் மேழியர் மருத மாக்கள்
    உழத்தியர் கடைசிய ரந்திலப் பெண்டிர்”- மருத நில மக்கள் பெயர்

    சூடாமணி நிகண்டு– கி.பி.10 ஆம் நூற்றாண்டு

    “களமரே தொழுவர் மள்ளர் கம்பளர் உழவரோடு
    விளைஞரே கடைஞரேழ் பேர்” - மருத நில மக்கள்
    “ஏராளர் நாட்டும் வாழ் உழவர் மள்ளர்” – தானைத்தலைவர் பெயர்

    ReplyDelete
  20. பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்த ஏழு மன்னர்களை உங்களது கருத்துப்படி ஏழுமள்ளர்கள் என்று மட்டும் சொன்னால் போதும் ஏன் 'வம்ப மள்ளர்கள்' என்று சொல்ல வேண்டும் இதைப் பற்றி நீங்கள் யோசித்தீர்களா? 'வம்பே புதுமை' என்கிறது தொல்காப்பியம்.இது அயலோர்,வம்பு செய்பவன்,வேற்று நாட்டுக்காரர் (சேர,சோழநாடு போன்று) என்ற அர்த்தமாகும்.இதை 'வம்ப மோரியர்' (அகநானூறு 251), 'வம்ப வடுகர்' (அகநானூறு 375) போன்றவற்றுடன் ஒப்பிட்டுத் தெளிவு பெறவும்......

    ReplyDelete
  21. //1. ) அது எப்படி நண்பரே தோல்வியற்ற பிறகு (கர்நாடகம், ஆந்திரா)
    என்ற தம்மை வென்றவர்கள் நாட்டில் போய் (எதிரிகள்) நாட்டிலே சோழன் என்று ஆட்சி முடியும்...? அதுவும் குறுநில மன்னர்களாக ?


    2. ) நண்பரே அந்த கல்வெட்டு யாரை குறிக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா?
    3. ) தெலுங்கு சோழர்கள் யார் என்றும் இபொழுது எந்த மக்களில் உள்ளனர் என்று அடையாளம் காட்ட முடியமா? பள்ளரில் அவர்களை கானா முடியுமா? அந்த கல்வெட்டு வரிகளை காட்ட முடியுமா?//


    தெலுங்கு நாட்டிலும், அதற்கு வடக்கேயும் இருந்துகொண்டு தாம் சோழர் வமிசத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டவர்களும் தம் புகழைக் கூறும்போது உறையூரையும், காவேரியையும் மறக்கவில்லை. அக்காலத்திய கல்வெட்டுகளும் இதையே கூறுகின்றன. தெலுங்குச் சோழர்களைப் போன்றே உச்சங்கில் பாண்டியர்களும் இந்திய வரலாற்றில் காணப்படும் சில சிதறிய வமிசங்களாகும் ( சோழர்கள் புத்தகம் -1 கே.ஏ .நீலகணடசாஸ்திரி பக்கம் 135 ). இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறிர்களா ? இல்லையா ? இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இனிவரும் விவாதத்தில் கே.ஏ .நீலகணடசாஸ்திரியின் புத்தகத்தை மேற்க்கோல் காட்டாமல் இருப்பீர்களா ?. இதற்க்கு பதில் கூருங்கள் அதன்பின்பு களப்பிரர் காலத்து இரேணாட்டுச் சோழர் பட்டியலை கொடுக்கிறோம்.

    ReplyDelete
  22. பள்ளர்களே, நீங்கள் தான் பாண்டியர் என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அதனால்தான் மலையாளி, பாண்டி என்றால் கீழ் ஜாதி என்று நினைக்கிறான்.நீங்கள் பள்ளத்தில் வாழ்ந்த விவசாய கூலிகள்.விவசாயம் உங்கள் தொழில். ஆனால் நீங்கள் நில உடமையாளர்கள் அல்ல.இதை புரிந்துக்கொண்டு தமிழனாக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். வாருங்கள் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. Mr.Vijay ? are u mad by birth ?

      Why Should we feel ashamed of finding our Ancestors ? We are ROYAL PANDIANS.
      OUR PROFESSION IS FARMING NOT STEALING OR SMUGGLING.

      GO AND STUDY THE REALITY.PALLARS ARE 80% has OWN LAND.IN DINDUGUL,NAMAKKAL,Trichy SIDE WE
      ARE THE DOMINATING LAND OWNERS.IN SIVAGANAGAI/PUDUKKOTTAI MOST OF THE PALLARS HAS MORE THAN
      1 ACRE FARM LANDS.OTHER CASTS ONLY DOESNT HAVE ANYTHING.RAMANATHAPURAM,TIRUNELVELI MALLARS ARE MOSTLY DOING FARMING ON LEASED LAND. OFCOURSE THERE ARE FARM LABOURS IN OUR COMMUNITY ?
      IT IS SIN ? NO IT IS HIGHLY RESPECTABLE JOB THAN burglary,Corruption or Prostitution.

      EVERYONE IN TAMIL SOCIETY SHOULD RESPECT PALLAR(MALLARS) AND SAY THANK YOU IN THEIR WHOLE LIFE TIME.

      BECAUSE WE HAVE CONSERVED BEST WATER MANAGEMENT,FARMING TECHNIQUES for AGES.

      DONT VOMIT HERE WITHOUT KNOWING THE GROUND REALITY.

      Delete
    2. @ Prakash Mallar - "PALLARS ARE 80% has OWN LAND.IN DINDUGUL,NAMAKKAL,Trichy SIDE" - In which part of Trichy side are Pallars land owners? Kallars, Mutharaiyars, Reddies are Land Owners in the present Trichy District, unlike you I'm not exaggerating for other districts as I am not aware of them really. But Trichy district I know for sure that Pallars are considered to be untouchables and have been bonded agricultural laborers. I just want to tell you that I'm not writing this to make the Pallars to be called as lower caste, but its disgusting how you people are writing and spreading false facts to wrongly prove you have kingly origins. Stop spreading rumors and you are the one who didn't know ground reality and vomiting on about land owning in all districts. If you want to prove that publish the land owning facts using RTI rather than your flamboyant display of ugly lies.

      Delete
  23. //பள்ளர்களே, நீங்கள் தான் பாண்டியர் என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?//

    மூவேந்தர் பரம்பரை நாங்கள்தான் என்று நிறுபிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் போராடுகிறோமெ என்று நீங்கள்தான் வெட்கப்படவேண்டியவர்கள். நாங்கள் ஏன் வெட்கப்படவேண்டும்.
    மள்ளர்கள்தான் மூவேந்தர்கள் என்று நிறுபிக்க எத்தனை சான்றுகள் வேண்டும்
    1.சங்க இலக்கியம்
    2.கல்வெட்டுக்கள்
    3.செப்பு பட்டையம்
    4.நீதிமன்ற தீர்ப்பு
    5.வாழ்வியல் நடைமுறை

    ReplyDelete
  24. //தமிழனாக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். வாருங்கள் நண்பர்களே.//

    நீங்கள் மூவேந்தர்களையும் வெற்றிகொண்டு ஆண்ட போர்குடி என்பதை நாங்கள் மறுக்கவில்லை ஆனால் மூவேந்தர் வழித்தோன்றல் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களை இருகரம் நீட்டி அழைக்கிறோம் வாருங்கள், ஆரியம், திராவிடம், தலித்தியம் இல்லா தமிழகத்தை வென்றெடுப்போம். தமிழனாக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

    ReplyDelete
  25. Study about thalaivankottai zamin history

    ReplyDelete
  26. //Study about thalaivankottai zamin history//

    தாங்கள் முழுமையாக படித்துவிட்டு கூறுங்கள் என்ன உண்மை வெளிவருகிறது என்று பார்ப்போம்.

    ReplyDelete
  27. controversialhistory.blogspot.in/2007/06/origin-of-pallavas.html?m=1

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. இங்கே ஏதாவது பதிவிடும் முன், இங்கே சென்று கொஞ்சம் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்.


    http://namvaralaaru.blogspot.in/2013/04/blog-post.html

    http://mallarchives.blogspot.in/

    http://maruppukalam.blogspot.in/

    ReplyDelete
  30. Mr.Vijay ? are u mad by birth ?

    Why Should we feel ashamed of finding our Ancestors ? We are ROYAL PANDIANS.
    OUR PROFESSION IS FARMING NOT STEALING OR SMUGGLING.

    GO AND STUDY THE REALITY.PALLARS ARE 80% has OWN LAND.IN DINDUGUL,NAMAKKAL,Trichy SIDE WE
    ARE THE DOMINATING LAND OWNERS.IN SIVAGANAGAI/PUDUKKOTTAI MOST OF THE PALLARS HAS MORE THAN
    1 ACRE FARM LANDS.OTHER CASTS ONLY DOESNT HAVE ANYTHING.RAMANATHAPURAM,TIRUNELVELI MALLARS ARE MOSTLY DOING FARMING ON LEASED LAND. OFCOURSE THERE ARE FARM LABOURS IN OUR COMMUNITY ?
    IT IS SIN ? NO IT IS HIGHLY RESPECTABLE JOB THAN burglary,Corruption or Prostitution.

    EVERYONE IN TAMIL SOCIETY SHOULD RESPECT PALLAR(MALLARS) AND SAY THANK YOU IN THEIR WHOLE LIFE TIME.

    BECAUSE WE HAVE CONSERVED BEST WATER MANAGEMENT,FARMING TECHNIQUES for AGES.

    DONT VOMIT HERE WITHOUT KNOWING THE GROUND REALITY.

    ReplyDelete
  31. நண்பர் பிரகாஷ், என்ன ஆச்சு உங்களுக்கு? ஏதும் கனவு கண்டிர்களா?

    ReplyDelete
  32. சிறுபாணாற்று படை என்னும் நூலில், நல்லூர் நத்தனார் என்னும் புலவர் மதுரை பற்றி குறிப்பிடும் போது, இவ்வாறாக குறிப்பிடுகிறார் : "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை".
    இதில் மகிழ்நன் என்பவன் மள்ளன் என்ற பள்ளனே, பாண்டியனும் ஆவான். மதுரை என்பதற்கு தமிழ் என்று அர்த்தம். மதுரையை உருவாக்கியவனும், தமிழை போற்றியவனும் மள்ளன் என்ற பள்ளனே ஆவான். மகிழ்நன் என்பவன் மள்ளன் என்ற பள்ளனை குறிக்கிறது என்பதற்கு கீழே உள்ள லிங்கை தொடுத்து பார்க்கவும். அதில் மருத நிலத் திணை மக்கள் என்னென்ன பெயர்களில் வருகிறார்கள் என்பதை கவனிக்கவும்.
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    ReplyDelete
    Replies
    1. "இதில் மகிழ்நன் என்பவன் மள்ளன் என்ற பள்ளனே, " - இதை எந்த தமிழ் அறிஞர் சொல்கிறார்? "மகிழ்நன்" என்று தானே உள்ளது "மள்ளன்" என்பர் இல்லையே? எப்படி மகிழ்நன், மள்ளன் என்று அர்த்தப்படும்? அனால் உங்களுக்காக இன்னும் அதிக எடுத்துக்காட்டுகளை தருகிறேன், இனி எங்கு சென்றாலும் இதையும் எழுதி விடுங்கள்....
      1. "அதாண்டா..... இதாண்டா.... அருணாசலம் நான்தாண்டா...
      அன்னை தமிழ் நாட்டிலே நான் அனைவர்க்கும் சொந்தம்டா ..."
      - இதில் அருணசலம் என்பவன் மள்ளன் என்ற பள்ளனே, பாண்டியனும் ஆவான். தமிழ் நாடு என்பதற்கு மதுரை என்று அர்த்தம், ஆக தமிழ் நாட்டை உருவாக்கியவனும் பள்ளனே

      2. "பல்லேலக்க.... பல்லேலக்க....
      ..... அண்ணே வந்த தமிழ் நாடு... அமெரிக்கா"
      - இதில் அண்ணே என்பவன் மள்ளன் என்ற பள்ளனே, பாண்டியனும் ஆவான். தமிழ்நாடு என்பது மதுரையை குறிக்கும் ... அமெரிக்கா என்பது நவீன தமிழ் நாட்டை குறிக்கும்....
      'இப்படி நீங்கள் எழுதி கொண்டே போகலாம்.... எப்படியும் கேட்பதற்கு எவனும் இல்லை அதனால் உங்களுக்கு நீங்களே வரலாற்றாய்வாளர், தமிழ் அறிஞர், உலக சரித்திர ஆய்வாளர் என்று சொல்லி கொண்டு தவறான சரித்திரத்தை உண்டாக்கி கொள்ளலாம்.

      Delete
  33. "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை". என்றால் இதுதான் தமிழ் அர்த்தம்

    ----இது சிறுபாணாற்றுப்படை எனும் பத்துப்பாட்டு நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்மொழி நிலைபெற்றிருக்கும் பெருமை தாங்கி நிற்கும் பழமையான மகிழ்ச்சி தோன்றுகின்ற தெருக்களையும் உடைய மதுரை மாநகரம் என்பது இந்த அடிகளின் பொருள்.
    சொற்பொருள்: மறுகு - தெரு---

    என்னே தமிழறிவு..பாரதி சொன்ன மாதிரி தமிழ் மெல்ல மெல்ல சாகாது..உங்கள் பாத்துருச்சில இனி அதுவே தற்கொலை பண்ணிக்கொள்ளும்

    ReplyDelete
    Replies
    1. "தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின்
      மகிழ் நனை மறுகின் மதுரையும் ".

      இந்தப் பாடலில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த 'அரு மரபின்' என்பதற்குப் பின்னால் 'மகிழ் நன்' என்று வந்துள்ளது.ஆனால் 'மகிழ் நன் மறுகின் மதுரை' என்பதன் அர்த்தமாக 'மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கின்ற தெருக்களையுடைய மதுரை' என்றவாறு சங்க இலக்கிய புத்தகங்களில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால், 'மகிழ் நன்' என்ற சொல்லுக்கு முன்னால் உள்ள 'அரு மரபின்' என்ற சொல்லை இணைத்துப் பார்க்கும்போதுதான் சிறிது குழப்பமாக உள்ளது.மகிழ்நன் என்றால் மருதநிலத் தலைமகன் என்பதையும் சங்க இலக்கியங்களின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.அப்படியெனில்,இந்த இடத்தில் உள்ள 'மகிழ் நன்' என்பதன் அர்த்தம் உண்மையில் 'மகிழ்ச்சி தருகின்ற' வா? அல்லது மருதநிலத்தானான மள்ளனா? தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்கவும்.

      Delete
    2. பாடலில் சொல்லப்பட்டது " தாங்கு அரு" அல்ல தாங்கரு என்பதே! தாங்கரு என்பது தாங்கு + அரு என பிரிக்க கூடியதல்ல என்பது தமிழறிவு!

      Delete
  34. தோழர் விஜய் சொல்லிய பதிலையும் ஜீர்ணகிக்க முடியாமல்..கேள்விக்கு பதிலும் சொல்லாமல் தத்தளிக்கும் தாழ்த்தப்பட்டவர்களே உங்கள் பொய்யன் செந்தில் பள்ளரிடம் போய் இதற்கு பதில் கேளுங்கள்!

    ReplyDelete
  35. நடுவக்குறிச்சி பாளையக்காரனா தேவர் இப்படி எழுதியிருப்பது அன்று பாண்டியர் பீடத்தில் அமர்ந்திருந்த நாயக்கரைத் தான் எனபது காலத்தையும் ஆட்சியையும் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்...

    பாளையங்களை உருவாக்கியது நாயக்கர்கள்தான்,இது ஆவணங்களும் ஆராய்ச்சியாளரர்களும் கல்வெட்டுக்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆவணங்களும் சொலவது இதுதான் அதுமட்டுமல்ல இதை உங்கள் புரூடா புலவர் செந்தில்பள்ளர் புத்தகம்தமும் இதைத்தான் சொல்கிறது

    விடயம் இப்படியிருக்கையில் பாளையக்காரர்களாய் தமிழ் மன்னர்கள் இருந்தபோது பாண்டிய அரசாட்சியில் அமர்ந்திருந்திருந்தது நாயக்கர்கள்தான் என்பது திண்ணம்.

    ஒரு நாயக்கனுக்கு தேவர்கள் திருமண உறவுமுறை வைக்க மாட்டார்கள்..அதற்கான ஆவனமே அது!..அதுமட்டுமல்ல பாண்டிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நாயக்கன் தமிழ் உயர்குடியான தேவரினத்தோடு சம்பந்தம் வைத்து வந்திருக்கிறான் அதற்கு எம் குல மன்னன் முடியாது என சொல்லியிருக்கிறான்.

    குடுகுடுப்பை சித்தரிருக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள்..
    "Magizyme" மூளை வளர்ச்சிக்கான மாத்திரை இதை சாப்பிட்டால் குடுகுடுப்பை சித்தருக்கு மூளை வளருமா பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆர்.தியாகுSeptember 18, 2013 at 3:54 AM

      தோழர் விஜய் சொல்லிய பதிலையும் ஜீர்ணகிக்க முடியாமல்..கேள்விக்கு பதிலும் சொல்லாமல் தத்தளிக்கும் தாழ்த்தப்பட்டவர்களே உங்கள் பொய்யன் செந்தில் பள்ளரிடம் போய் இதற்கு பதில் கேளுங்கள்!

      குடுகுடுப்பை சித்தரிருக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள்..
      "Magizyme" மூளை வளர்ச்சிக்கான மாத்திரை இதை சாப்பிட்டால் குடுகுடுப்பை சித்தருக்கு மூளை வளருமா பார்ப்போம்.
      ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
      வேறு வழியே இல்லை.இனி நீங்கள் காலங்காலத்திற்கும் செந்தில் மள்ளரையும்,டாக்டர் குருசாமி சித்தரையும் நினைத்து புளுங்காமல் இருக்கமுடியாது.

      Delete
  36. //நடுவக்குறிச்சி பாளையக்காரனா தேவர் இப்படி எழுதியிருப்பது அன்று பாண்டியர் பீடத்தில் அமர்ந்திருந்த நாயக்கரைத் தான் எனபது காலத்தையும் ஆட்சியையும் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.././


    தென்காசிப் பாண்டியர்கள் நாயக்கர் அல்ல. அவர்கள் பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னர்கள். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல்அவனின் அடுத்து வந்த பாண்டியர் அனைவரும் தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர்.பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத்தலைநகரான மதுரையை இழந்து தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர்.பாண்டியர்களின் கடைசித்தலைநகரம் தென்காசி ஆகும்.நடுவக்குறிச்சி பாளையக்காரனும் தென்காசிப் பாண்டியர்களும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள்தான் என்பதை இந்த பட்டியலை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். நடுவக்குறிச்சி பாளையக்காரனிடம் பெண் கேட்டு வந்தது தென்காசிப் பாண்டியர்கள்தான், நாயக்கர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து நாயக்கர்தான் பெண் கேட்டுவந்தார் என்று ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் உங்களுக்குத்தான் ("Magizyme") மூளை வளர்ச்சிக்கான மாத்திரை தேவைப்படும் என்று நினைகிறேன் நீங்கள் முதலில் சாப்பிடுங்கள் மூளை வளருமா பார்ப்போம்.

    தென்காசிப் பாண்டியர்கள்

    சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463

    இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473

    அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506

    குலசேகர தேவன் கி.பி. 1479-1499

    சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543

    பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552

    நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564

    சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604

    வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612

    வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618

    கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)

    ReplyDelete
    Replies
    1. Sir,

      I don't to intend to enter into your caste disputes. I just want to point out one thing here - கொல்லங்கொண்டான் Zamins were Maravars.

      Delete
    2. @Pandyan Mallar
      “எங்கள் வமுசத்தில் பாண்டிய றாசா பெண் கேட்டார்,அதற்கு மறக்குலத்திலேயிருக்கிற பெண்ணை சந்திறகுல வங்கிசத்தில் குடுக்கிறதில்லை என்று சொன்னதிற்கு பாண்டிய றாசா விதனமாய்ப் படை சேகரித்து……” - இதில் எங்கு தென்காசி பாண்டியர்கள் என்று வருகிறது? வெறும் பாண்டிய ராசா என்று தானே இருக்கிறது?

      Delete
  37. கம்பளத்தார்களும் மறவர்களும்

    மறவர்களும் , கம்பளத்தார்களும் ஏறக்குறைய ஒரே இனத்தை போல பழகி வந்துள்ளனர் . 'மணியக்காரத் தேவர்' என்ற சமூகத்தவர் எட்டையபுரம் ஜமீன்தாரரின் சாதியாகிய கம்பளத்து நாயக்கர் சமூகத்துக்கும், மறவர் சமூகத்துக்குமான கலப்பு மணத்தில் தோன்றியவர்களாவர். இன்றும் மணியக்கார மக்கள் கம்பளத்து மக்கள் வாழும் பகுதிகளியே அதிகம் நெருங்கி வாழ்வார்கள் . வெள்ளாரம் கல்வெட்டில் இந்த பதிவு பதிவாகி உள்ளது . நாயக்கர் சமுதாயத்துக்கும் , தேவர் இனத்துக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்ததாக , வருசநாடு ஜமின் கதை ( கம்பளத்தார் கதை ) மற்றும் வெள்ளாரம் கல்வெட்டில் பதிவாகி உள்ளது

    ReplyDelete
  38. கீழே உள்ள லிங்கை தொடுத்து பார்க்க

    https://www.facebook.com/photo.php?fbid=200763123433872&set=a.138186663024852.1073741826.100005005570560&type=1&theater

    பிற்கால பாண்டியர்கள் ( பள்ளர்கள் - மள்ளர்கள் ) ஆண்ட பகுதி

    ReplyDelete
  39. why you have not written anything new

    ReplyDelete
  40. The Nayaks called themselves as Pandyas, after they started ruling Madurai. So, what Siddharth say seem to be correct.

    ReplyDelete
  41. மருதிருவர் என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் தங்களை பாண்டியர்கள் என்று சொல்வதுபோல் நாயக்கர்களும் தங்களை பாண்டியர்கள் என்று அழைத்துக்கொண்டனர். பாண்டியர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் எல்லோரும் பாண்டியர்களின் வாரிசாகமுடியாது குறைந்தபட்சம் மூவேந்தர்கள் வாழ்ந்தகாலத்தில் மருதநிலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். 10 - 12 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்களின் கல்வெட்டுகளில் சாதி பட்டியல் உள்ளது அதில் இன்று பாண்டியருக்கு உரிமைகோரும் பல சமூகங்கள் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக
    1.மறவர்
    2.அகமுடையார்
    3.உடையார்
    4.நாடார்
    5.நாயக்கர்
    அன்றைய நிலையில் தமிழகத்தில் 32 சாதிகள் மட்டுமே இருந்தன அப்படியென்றால் பாண்டியர்கள் யார் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  42. மூவேந்தர்கள் வாழ்ந்தகாலத்தில் நாம் யாராக இருந்தோம் என்ற வாதங்களை நிறுத்துங்கள் சகோதர்களே... இனி வரும் காலங்களில் நாம் சந்ததி எவ்வராக உயர வேண்டும் என்பதை சிந்தியுங்கள்... நாடார்கள் விட நாம் 100 ஆண்டுகள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கி இருக்கிறோம்...கடந்த 10 ஆண்டுகளில் பிராமினையும் பின்னுக்கு தள்ளி வேகமாக முன்னேறி செல்கிறார்கள்.

    ReplyDelete
  43. இந்த பாளையங்களை இவர்களுக்கு பிரித்து கொடுத்தவனே வடுகன் நாய்க்கன் தானே ...! ஒருவேளை அவன் மூடனாக இருப்பானோ ...? மறவர்களை வீழ்த்தி விட்டு மீண்டும் மறவர்களிடமே பாளையங்களை கொடுத்து இருக்கிறானே ...? இன்னுமாடா கதை சொல்லி அழைகிறீர்கள்...!

    ReplyDelete
  44. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  45. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.

    ReplyDelete
  46. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரர் தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாலாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.

    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    ReplyDelete
  47. அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர். சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.


    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.

    ReplyDelete
  48. அசுர திராவிட துடக்கம்

    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    ReplyDelete
  49. அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர்
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர்
    பணிக்கர் = பணிக்கா
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.


    __________________________________________

    ReplyDelete
  50. வில்லவ மன்னர்களின் சாந்தகன் பட்டம்

    சாந்தகன் பட்டம் என்பது வில்லவ நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சாந்தகன் பட்டத்தை பயன்படுத்தினர்.

    நாடார்களின் வடக்கு உறவினர்களான மீனா வம்ச மன்னர்கள் சாந்தா மீனா பட்டத்தை
    பயன்படுத்தினர்.


    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் (2613)


    ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
    சீர்த்தி
    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி
    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்
    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
    தான் மன்னோ.

    ___________________________________________

    ReplyDelete
  51. இந்தியாவின் மூன்று இனங்கள்

    இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடம், ஆரியம் மற்றும் நாகர்கள்.
    திராவிடர்கள் இந்தியாவில் உருவான இந்தியாவின் பூர்வீக பூர்வகுடிகள்.

    1. திராவிடர்
    2. ஆரியர்
    3. நாகர்


    திராவிடர்கள்

    பாணர்கள், வில்லவர்கள், மீனவர் பில், மீனா, தானவர், தைத்தியர்கள் ஆகியோர் ஆரியர்களுக்கு முந்திய திராவிட மக்கள் ஆவர். அவர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாண்டிய இராச்சியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நெருங்கிய தொடர்புடைய வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. வட இந்தியாவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பணியாக்கள் திராவிட பாணர்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்தோ-ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர்

    பண்டைய சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய வம்சத்தை கிமு 9990 இல் நிறுவினார், அதாவது 11,971 ஆண்டுகளுக்கு முன்பு. வில்லவர் சாம்ராஜ்யங்கள் வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலத்தவர்களாலும் கடல்கடந்த குலமான மீனவர்களாலும் ஆதரிக்கப்பட்டன.
    வில்லவர் உயர்குடியினர் நாடாள்வார் அல்லது சான்றார் என்று அழைக்கப்பட்டனர்.


    இந்தோ-ஆரியர்கள்

    கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் ஹரஹ்வைதி நதிக்கு அதாவது அர்கந்தாப் நதி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். கிமு 1800 முதல் கிமு 1750 வரை அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தாக்கி அங்கு அவர்கள் குடியேறினர்.

    கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். அந்தக் காலத்தில் ரிக்வேதம் எழுதப்பட்டது. கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குடியேறினர்! கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான இந்தோ-ஆரிய கலாச்சாரம் பிந்தைய வேத காலம் அல்லது வர்ணம் பூசப்பட்ட சாம்பல் சாமான் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் வேத யுகத்தின் பிற்பகுதியின் முடிவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. யுதிஷ்டிரனின் ராஜசூய யக்ஞத்திற்குப் பரிசுகளைக் கொண்டு வரும் குருக்ஷேத்திரப் போரில் சிங்கள மன்னன் பங்கேற்றதை மகாபாரதம் குறிப்பிடுகிறது. சிங்கள சரித்திரம் மகாவம்சத்தின் படி சிங்கள இராச்சியம் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது கி.மு 543 இலாகும், .


    சித்தியன் படையெடுப்பு

    கிமு 150 இல் ஆரிய குலமாக இருந்த சித்தியன் - சாகா மக்களின் படையெடுப்பிற்குப் பிறகு, பழைய இந்தோ-ஆரிய கலாச்சாரம் முற்றிலும் மறைந்து விட்டது. பிராமணர்கள் பல்லின தோற்றமுள்ளவர்கள் மற்றும் பல பிராமணர்கள் சித்தியர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். கிபி 460 இல் ஹூனா மற்றும் ஹெப்தாலைட்டுகள் இந்தியாவைத் தாக்கினர். ஹெப்தாலைட்டுகள் அல்லது வெள்ளை ஹுனா ஆரம்பகால துருக்கிய குலங்கள். சித்தியர்களிடமிருந்து, ஹூனாக்கள் மற்றும் ஹெப்தாலைட்டுகள் ராஜ்புத் குலங்கள் உருவாகின. சித்தியர்களிடமிருந்தும் ஜாட்கள் உருவாகியிருக்கலாம்.


    சித்தியன் மற்றும் ஹூணர்களுடன் இந்தோ-ஆரிய கலவை

    இவ்வாறு வட இந்தியப் பண்பாடு என்பது திராவிடர், இந்தோ-ஆரியர்கள், பார்த்தியர்கள், சித்தியர்கள், ஹூணர், ஹெப்தாலைட்டுகள் போன்றவர்களின் கலவையாகும்.
    வட இந்தியாவில் ராஜ்புத்திரர், ஜாட், கத்ரி, மராத்தியர் போன்ற பெரும்பாலான ஆதிக்க மக்கள் சித்தியர்கள் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். காயஸ்தர்கள் குஷான படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். உண்மையான இந்தோ-ஆரியர்கள் இன்று இல்லை. வட இந்தியர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் இன ரீதியாக வேறுபட்டவர்கள்.

    வேத ஆரியர்களாக நடிக்கும் வட இந்தியர் உண்மையில் சித்தியனாகவோ, ஹூணனாகவோ அல்லது துருக்கியராகவோ இருக்கலாம். பிராமணர்கள் உட்பட அவர்களில் பலர் பாரசீக மொழியிலும், வேதங்களில் இல்லாத மத்திய ஆசிய மொழிகளிலும் குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.

    சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தோ-ஆரிய பிராமணர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்கள் போன்ற தங்கள் சொந்த மன்னர்களைக் கைவிட்டனர். இந்தோ-ஆரிய பிராமணர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களை நிறுவிய சித்தியன் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர்.


    மகாபாரத குலங்கள்

    மகாபாரத காலத்திலிருந்த யாதவர்கள், இக்ஷவாகு, குஷ்வாஹா, சாக்கியர், மௌரியர் போன்ற குலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இன்னும் பலமற்றவை. அவர்கள் ஒப்பீட்டளவில் கருமையான நிறமுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

    ReplyDelete
  52. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள்

    நாகர்கள் இந்தோ-ஆரியர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்திருக்கலாம். ரிக்வேதத்தில் நாக மன்னன் நஹுஷன் குறிப்பிடப்படுகிறார். நாகர்கள் இந்தோ-ஆரியர்களின் கூட்டாளிகள்.

    திராவிட பாண, மீனா, தானவ மற்றும் தைத்திய குலங்களுக்கு எதிராகப் போரிட்ட ஆரிய மன்னர்கள் இந்திரன் என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளியில் ஆட்சி செய்த பண்டைய வில்லவர்-பாணர்களின் மூதாதையரான மஹாபலி மன்னர் இந்திரன் மற்றும் அவரது சகோதரர் உபேந்திரா ஆகியோரால் கொல்லப்பட்டனர்.

    நாகர்களின் மன்னன் நஹுஷன் இந்தோ-ஆரியர்களின் மன்னரானார் மற்றும் இந்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். நஹுஷன் ஆரிய முனிவர்களை மதிக்கவில்லை. நஹுஷன் ரிஷிகளிடம் தான் அமர்ந்திருந்த பல்லக்கைச் சுமக்கச் சொன்னார். இது அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    நவீன இந்தி ஆரிய மற்றும் நாகா மொழிகளில் இருந்து உருவானது எனவே தேவநாகரி என்று அழைக்கப்பட்டது. நாகர்கள் நகரம் அல்லது நகர் எனப்படும் பல நகரங்களை கட்டியதாக புகழ் பெற்றுள்ளனர்.
    யாதவர்களும் பாண்டவர்களும் நஹுஷாவின் குலத்திலிருந்து வந்த நாகர்கள். நாகர்கள் நஹுஷா மற்றும் அவரது இந்திர குலத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறினர்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் பல நாகர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் இந்தோ-ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே பகை தொடங்கியது. ஆரிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டு அவர்களில் பலர் இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.


    முற்குகர்

    முற்குகர் என்பவர்கள் கங்கைப் பகுதியில் இருந்து வந்த சிங்கர், வங்கர் மற்றும் காலிங்கர் என அழைக்கப்படும் குகன் குலத்தைச் சேர்ந்த மூன்று குலங்கள் ஆவர். முற்குகர் ஒரிசாவிற்கும் பின்னர் இலங்கைக்கும் குடிபெயர்ந்தனர்.
    முற்குஹர் குடியேற்றம் கிமு 543 இல் இளவரசர் விஜயா சிங்கள இராச்சியத்தை நிறுவ வழிவகுத்தது.
    நவீன சிங்கள-கலிங்க வம்சங்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்த முற்குஹரின் வழித்தோன்றல்கள்.


    மறவர்

    குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் கங்கை பகுதியில் மீனவர்கள். மறவர்கள் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மட்டக்களப்பு மான்மியத்தின்படி அவர்களுக்கு அயோத்தியில் பதவிகளை ஸ்ரீராமர் வழங்கினார். மறவர் ஸ்ரீராமருடன் சேர்ந்து கிமு ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயக்கர் அரசன் ராவணனை தோற்கடித்தனர்.

    மறவர்களில் பலர் மீண்டும் வந்து இலங்கையை ஆக்கிரமித்து அங்கேயே குடியேறினர். மறவர் இலங்கையை ஒட்டிய பகுதிகளான ராமநாடு போன்றவற்றிலும் குடியேறினர்.. மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர் இராமநாட்டை வட இலங்கை என்று அழைத்தனர். முக்குவர்கள் மறவர் இனத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் இருவரும் குகன் குலத்திலிருந்து வந்தவர்கள்.. முக்குவர் தமிழ்நாடு, கேரளா மற்றும் துளுநாட்டின் கடலோரப் பகுதிகளில் குடியேறினார்கள். முக்குவர் மறவர் போன்ற மீனவர்கள்.


    கல்வார்

    சித்தியர்களின் படையெடுப்பு நாகர்களை தென்னிந்தியாவிற்கு பெரிய அளவில் வெளியேறத் தூண்டியது. வட இந்தியாவின் கல்வார் குலங்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி நாட்டிலிருந்து ஒரிசாவிற்கு குடிபெயர்ந்து அங்கும் ஒரு சேதி சாம்ராஜ்யத்தை நிறுவினர். வட இந்திய கல்வார் குலங்கள் தென்னிந்தியாவில் கள்வர் அல்லது களப்பிரர் என்று அழைக்கப்பட்டனர். களப்பிரர்களிடமிருந்து நவீன கள்ளர் சமூகம் மற்றும் களப்பாளர் என்று அழைக்கப்படும் வெள்ளாளர்கள் வம்சாவளியினர் தோன்றினர்.

    கிமு 100 இல் காரவேளா என்ற கலிங்க ஆட்சியாளரின் கீழ் வெள்ளாளர்கள் வட தமிழகத்தை ஆக்கிரமித்தனர். கி.பி 250 இல் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையிலிருந்து ஆட்சி செய்த களப்பிரர் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர் வம்சங்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து வந்த நாக குலங்களால் கீழ்ப்படுத்தப்பட்டன.


    கங்கர்

    கி.பி 200 இல் கங்கை நதி தீரத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் கங்கர் அல்லது கொங்குகள் என்று அழைக்கப்பட்டவர்கள். கங்க மக்களிடமிருந்து நவீன வொக்கலிகா கவுடா மற்றும் கவுண்டர்கள் தோன்றினர். கொங்கு வேளாளர்கள் தங்கள் கங்க இக்ஷவாகு வம்ச மன்னர் அவினிதாவின் (கி.பி. 469 முதல் கி.பி 529 வரை) ஆட்சியின் போது தமிழ்நாட்டின் கொங்கு பகுதியை ஆக்கிரமித்தனர்.

    வில்லவர் சேரர்கள் தங்கள் தலைநகரான கருவூரையும் கொங்கு மண்டலத்தையும் கொங்கு வேளாளர் என்று அழைக்கப்படும் கங்கைக் குடியேற்றக்காரர்களிடம் இழந்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர தலைநகர் கேரளாவில் உள்ள கொடுங்களூருக்கு மாற்றப்பட்டது.


    இந்திர குலம்

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நாக குலங்கள் இந்திரனின் வழிவந்ததாகக் கூறுகின்றனர். நாக மன்னன் நஹுஷன் இந்திரன் ஆன பிறகு நாக குலத்தினர் தங்களை இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம்.

    ReplyDelete
  53. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள் துருக்கியர்கள் மற்றும் அரேபியர்களுடன் நட்பு கொள்வது

    கி.பி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து தமிழ் வில்லவர் ராஜ்யங்களையும் அழித்தது.
    நாக குலங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டணி வைத்து அவர்களுடன் திருமண உறவுகளை கொண்டிருந்தனர். கிபி 1335 முதல் கிபி 1377 வரை மாபார் சுல்தானகத்தின் ஆட்சியின் போது பல நாகர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கிபி 1377 க்குப் பிறகு நாயக்கர் ஆட்சியின் போது அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
    ஆனால் கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்யும் சடங்கைத் தொடர்ந்தனர். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரி மட்டுமே மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார். தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கினறன.

    கிபி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பிற்குப் பிறகு நாயர், கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலங்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.


    வாணாதிராயர்கள்

    கி.பி.1377ல் விஜயநகர நாயக்கர் தாக்குதலின் பின்பு வாணாதிராயர் எனப்படும் பல தெலுங்கு பாண தலைவர்கள் கள்ளர், வெள்ளாளர், மறவர் போன்ற நாக குலங்களின் பிரபுக்களாக மாறினர்.

    இந்த வாணாதிராயர்கள் பாளையக்காரர் ஆக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்த தெலுங்கு வாணாதிராயர்களும் லிங்காயத்துகளும் கள்ளர், மறவர் மற்றும் கவுண்டர்கள் போன்ற உள்ளூர் தமிழ் சாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.


    முடிவுரை :

    தமிழ்நாட்டில் பெரும்பாலான நாக குலத்தினர் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையில் நாடார்களும், பல்லவ வன்னியர்களும், பலிஜா நாயக்கர்களும் மட்டுமே தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆவர்.

    வில்லவர், மலையர், வானவர், மீனவர் என அனைத்து வில்லவர் குலங்களும் இணைந்த பிறகே நாடார் அல்லது நாடாள்வார்கள் தோன்றினர்.
    வில்லவர் பட்டங்கள் வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா -காவுராயர், இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பாண குலங்களும் வில்லவர் குலங்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவை. நாடார்கள் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ வன்னியர் பாஞ்சால நாட்டின் வட பாண வம்சத்தைச் சேர்ந்தவர்.

    பலிஜா நாயக்கர்கள் பழங்காலத்திலிருந்தே கிஷ்கிந்தா-ஆனேகுண்டியில் இருந்து ஆட்சி செய்த பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்களின் பட்டங்களில் பாணாஜிகா, பாணியா, வளஞ்சியர் மற்றும் வானரர் ஆகியவை அடங்கும்.

    பல்லவ வன்னியர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தை ஒத்திருக்கும் பாஞ்சால நாட்டிலிருந்து வடக்கு பாணர்கள் ஆவர். அஸ்வத்தாமாவின் பிராமண பாரத்வாஜ குலத்தைச் சேர்ந்த பல்லவ மன்னர்களுடன் வன்னியர்கள் தென்னாட்டிற்கு கிமு மூன்றாம் நூற்றாண்டில் வந்தனர். பல்லவ வம்சம் ஈரானின் பார்த்தியன் வம்சத்துடன் இணைந்ததால் பல்லவ அல்லது பஹ்லவ என்று அழைக்கப்பட்டது. பாரத்வாஜ-பார்த்தியன் வம்சத்தினர் காடுவெட்டிப் படையைக் கொண்டுவந்தனர். பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தை கட்டி மன்னன் மகாபலியின் பெயரை சூட்டினார்கள். மகாபலி அல்லது மாவேலி வில்லவர் மற்றும் பாண குலத்தின் மூதாதையர் ஆவார்.

    அதன் காரணமாக பல்லவ மன்னர்கள் காடுவெட்டி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். வீரகுமாரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக வன்னியர் இருந்தனர். வன்னியர்களின் பட்டங்கள் வட பலிஜா, திகலா அல்லது திர்கலா போன்றவை.

    ReplyDelete