Monday, December 3, 2012

களப்பிரர் வரலாறும், கள்ளரிடம் நமது கேள்விகளும்

அ.சவரிமுத்து எம்.ஏ., அவர்களின் "விடியலை நோக்கி களப்பிரர் வரலாறு" என்ற நூலிலிருந்து

"காளத்தி முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர் 'களவர்' என்பவர் இப்பெயர் கன்னடத்தில் 'களபரு' என்றும், வடமொழியில் 'களப்ரா' என்றும்,தமிழில் 'களப்பிரர்' என்றும் உருப்பெறும். இவர்கள் ஒரு கூட்டத்தினர்; அரசமரபினர் அல்லர். மூவேந்தரை வென்றவராக பாண்டிய - பல்லவவர் பட்டயங்கள் குறிக்கின்றன.

'அச்சுதக் களப்பாளன்' என்னும் பெயர் கொண்ட மன்னன் ஒருவன் முடியுடை மூவேந்தரையும் வென்று சிறைப்படுத்தினான் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது.(பக்கம் 14)
சேர, சோழ, பாண்டியர்களை 'அச்சுதன்' இரும்புச் சங்கிலியால் பிணைத்து இழுத்து வந்த போது மூவேந்தர்கள் பாடிபுகழ்ந்து கெஞ்சியது.

சேரன் பாடியது:
திணை விதைத்தார் முற்றந்திணை யுணங்கும் செந்நெல்
தன்னை விளைத்தார் முற்ற மதுதானாம் கனைசீர்
முரசுணங்கும் சங்குணங்கும் மூரித் தேர்த் தனை
அரசுணங்கும் 'அச்சுதன்'தன் முற்றத்து.

சோழன் பாடியது:
அரசர்குல திலகன் 'அச்சுதன்' முற்றத்தில்
அரசர் அவதரித்த வந்தால் - முரசதிரக்
கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் கற்றளையை
வெட்டிவிடும் ஓசை மிகும்.

பாண்டியன் பாடியது:
குறையுளார் எங்கிரார் கூர்வே லிராமன்
நிறையறு திங்கள் இருந்தான் - முறைமையால்
ஆலிக்குத் தானை யலங்குதார் 'அச்சுத' முன்
வாலிக்கிளையான் வரை.

குடகர் குணகடல் என்றார்த்தார் குடகர்க்கு
இடகர் வடகடல் என்றார்த்தார் - வடகடலர்
தென் கடலென்று ஆர்த்தார் தில்லையைச் 'சுதானந்தன்'
முன் கடை நின்றார்க்கும் முரசு.(பக்கம் 51)

========================================
நமது கேள்விகள்:
1)'களப்பாளன்' என்பது கள்ளர் குலத்தின் பட்ட பெயர்களில் ஒன்று என்று ந.மு.வேங்கடசாமி நாட்டார்(கள்ளர்) கூறியுள்ளார். அப்படிஎனில் முடியுடை மூவேந்தரையும் சிறைபடுத்திய 'அச்சுதக் களப்பாளன்' என்பவன் யார்? கள்ளரா? களப்பிரரா?

2)'களப்பாளன்' என்ற பட்ட பெயர் கொண்ட கள்ளர்கள் தமிழர்(?) எனில் களப்பிரர் ஆட்சி கால தொடக்கமான கி.பி 3ம் நூற்றாண்டுக்கு முன்புள்ள தமிழ் சங்க இலக்கியம் அல்லது கல்வெட்டுகளில் 'களப்பாளன்' என்ற பெயரை காட்ட முடியுமா?

3)'கள்ளர்கள்' மூவேந்தர்களின் ஒருவரான சோழர்கள் எனில் 'களப்பாளன்' என்ற பட்ட பெயர் தரித்த சோழ வேந்தரில் ஒருவரேனும் காட்ட முடியுமா? அல்லது மூவேந்தரில் வேறு யாரேனும் காட்ட முடியுமா?

(அச்சுத களப்பாளன் பற்றி 'தேவர் தளம்': http://www.thevarthalam.com/thevar/?p=1212)

---- மள்ளர் மருதவேல் மூப்பர்

2 comments:

  1. களபாளன் பட்டபெயர் கொண்ட கள்ளர்கள் சோழர்கள் எனில் மூவேந்தரையும்(குறிப்பாக சோழரை) சிறைபிடித்து "உங்கள் தமிழ் மொழியில் என்னை புகழ்ந்து ஒரு பாட்டு பாடுங்கள் உங்களை விடுதலை செய்கிறேன்" என்று செல்லி கொடுமைபடுத்திய இந்த "அச்சுதக் களபாளன்" யார்? தமிழனா??? வந்தேரியா? இல்லை கள்ள(போலி) சோழனா?

    ReplyDelete
  2. kallar entraal ella tamil sitrarasa parambarai matrum perarasa parambaraigalai(serar,solar,pandiyar,kalapirar,pallavarayar ulpata) ullatakkiya oru uyar saathi..........kallar entra varthai kurugiya kaalathil uruvaana oru pothu peyar.....kalla pattangal 2000 kkum merpattavaigal avatrai tamizhaga arasangathal kooda marukka mutiyathu ..ivai arasa pattapeyargal than..arasan entraal pattam kandippaga irunthe theeravendum......enge pallargalin pattangalai koorungal paarkkalam.........veelchiyataintha arasanaai irunthaal aatchi than pirar kai vasam pogum.....patta peyargaluma pogum????????koorungal ungal pattangalai?????

    ReplyDelete