Wednesday, October 31, 2012

சோழர்களின் வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 2 )

சோழர்களின்  வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 2 )
http://www.usetamil.com/t643-topic

(அங்கே கேட்க வழி இல்லாததால் இங்கே கேட்கிறேன்)

============================
//சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது.//

இந்த கட்டுரையை எழுதியர் அப்படி என்ன வரலாற்றை கரைத்து குடித்து விட்டு, கடையில் இப்படி ஒன்றும் இல்லை என்று கைவிரித்தார் என்று தெரியவில்லை. கீழே உள்ள சங்கரன் கோவில் கல்வெட்டை பாருங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு

"

விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் 2, எண் 863ஃ பக்கம் 803








(கள்ளர் கூற்றுப்படி)
சேரன் மலையையும், காட்டியும் ஆண்டவன்,
சோழன் மருத நிலத்தை ஆண்டவன்,
பாண்டியன் நெய்தல் நிலத்தை ஆண்டவன் என்றால்

//உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் //

இந்த மூவரும் ,உழவர் தலைவனான 'தெய்வேந்திரக் குடும்பனிடம்' மழை வேண்டி நிற்பானேன்?. குடும்பன் வெட்டிய 12000 கிணறால் விவசாயம் செய்பவனுக்கு தான் உபயோகம். மீன் பிடிப்பவனுக்கும், மலையில் இருப்பவனுக்க்ம் மழை எதற்கு? கிணறு எதற்கு?
...............................................
(வன்னியர் கூற்றுப்படி)
மூவேந்தர்களுக்குள் எந்த உறவும் இல்லை என்றால்,

//சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, //

ஒரு பொது பிரச்னைக்கு இவர்கள் ஒன்றாக வந்து வேண்டியது ஏன்? பாண்டியனுக்கு பிரச்சனை என்றால் சோழன் எதுக்கு வரணும்? வறட்சியினால் சோழனின் நிலம் வாடினால் சேரனுக்கு என்ன? ஒருவரை 'மன்னன்' என்றும், இன்னொருவனை 'கோ' என்று மட்டுமே வலராறு சுட்டி இருந்திருந்தால் கூட சிறு குழப்பம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மூவரையும் தமிழ் உலகம் 'வேந்தன்' என்று தானே பதிவு செய்கிறது? வயலும் வயல் சார்ந்த 'மருத' நில தலைவனையே வேந்தன் என்று தொல்காப்பியர் நிறுவி உள்ளார். எனவே மூவேந்தர்கள் மருத நில குடிகளே, மூவரும் ஒரே குடியை சேர்ந்தவர்களே....!!!


(குறிப்பு: பல காலம் ஒன்றாக இருந்த மூவேந்தர்களை சூழ்ச்சியால் பிரித்ததை மிகப் பெருமையாக சொல்லிக் கொள்ளும் கலிங்கத்து அரசனின் கல்வெட்டும் இங்கே விரைவில் பதிப்பிக்கப் படும்.)

2 comments:

  1. //உக்கிரப் பெருவழுதியும்
    சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
    இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
    கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
    மகிழ்ந்து இரும் ///

    தெய்வேந்திரன் எனப்து இந்திரனை குறிக்கும் சொல் "பள்ளரை அல்ல"

    ReplyDelete
  2. இவர்களை விற்கவோ அடகுவைக்கவோ வாடகைக்கு விடவோ நிலவுடையமையாளருக்கு உரிமை உண்டு. நிலத்தோடு சேர்த்தும் தனியாகவும் இவர்கள் விற்கப்பட்டனர். ஒரு அடிமை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மாவட்டத்திற்கு ஏற்ப விலை போனதாகத் தெரிகிறது. நிலவரி ஒன்றே அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக அமைந்திருந்த ஆரம்ப காலக்கட்டங்களில் பண்ணைகளை விட்டுத் தப்பியோடிய கொத்தடிமைகளை பண்ணையார்களுக்கு மீட்டுத்தரும் முயற்சியில் மாவட்டக் கலெக்டர்களே ஈடுபட்டனர். 1830 இல் திருச்சி மாவட்டக் கலெக்டர் சேலம் மாவட்டக் கலெக்டருக்கு நிலத்திலிருந்து தப்பியோடிய பத்துப் பள்ளர்களை மீட்டுத்தரக் கோரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; பள்ளர்கள் நிலத்தின் அடிமைகள் ; நிலத்தைவிட்டு வெளியேறும் உரிமை அவர்களுக்கு கிடையாது நிலவுடைமையாளரான பிராமணர் அவர்களுடைய உதவியின்றி நிலத்தைச் சாகுபடி செய்ய இயலாது. அவருக்கு அடிமைகளை மீட்டுத் தராவிடில் நிலமும் பாழாகும். அரசாங்கமும் நஷ்டமடையும்" என்று குறிப்பிட்டுள்ளார். நீதி மன்றங்களும்கூட, அடிமைமுறை மரபுவழிப்பட்ட நடைமுறை என்று பண்ணையாட்களை விற்கும் அடகுவைக்கும் பண்ணையார் உரிமைக்குச் சாதகமாகவே ஆரம்பக்காலங்களில் தீப்பளித்தன அடிமைகள் அவர்கள் செய்த சிறுசிறு தவறுகளுக்குக் கூடக் கடுமையாக஼த் தண்டிக்கப்பட்டனர்.

    ReplyDelete