Wednesday, October 31, 2012

சோழர்களின் வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 1 )

சோழர்களின்  வரலாறு என்ற கட்டுரைக்கு எம் கேள்விகள் : (பாகம் 1 )
http://www.usetamil.com/t643-topic

(அங்கே கேட்க வழி இல்லாததால் இங்கே கேட்கிறேன்)

============================

//சோழர் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று தெரியவில்லை//
அப்படி என்றால் வன்னியர்கள் 'சோழன்' என்ற பட்டங்களுக்கு உள்ள அர்த்தம் தெரியாமலேயே அதை இத்தனை நாளும் வைத்துகொண்டு இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

பள் - பண்டு - பண்டைய - பண்டையம் (விவசாயம்) - பாண்டியன்
சோறு - சோர - சோழ
(மொழி ஞாயிறு தேவநேய பாவாணர்)

=> இப்படி சோழனும், பாண்டியனும் தங்களை பெயரை பட்டத்தை குறிக்கும் வேர் சொல்கள் 'விவசாயம்' என்று இருப்பானேன்?
=> 'சோழனையாவது' 'தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சையை ஆண்டவன், ஊரு உலகத்துக்கே சோறு இட்டவன், அதனால் அவனின் வேர் சொல்' சோழன் என்று வருவதில் ஒரு அர்த்தம் இருக்கு. ஆனால் 'வன்னியரும்,கள்ளரும்' சொல்லும் 'பாண்டியன்' என்பவன் நெய்தல் நில மன்னனாக இருந்தால், அவனுடைய வேர் சொல்லும் விவசாயத்தை குறிப்பானேன்?
=> அட அவ்வளவு ஏங்க...? ஆங்கில அகராதியில் 'குடும்ப' தலைவனை குறிக்கும் husband என்ற சொல்லின் வேர் சொல்லே 'husbandary ' என்ற விவசாய சொல் தானே?
=> "சுழன்றும் ஏர் பின்னது உலகும்" என்று உலகில் இருக்கும் அனைத்து தொழில்களுக்கெல்லாம் 'உழவு' தொழிலே தலையானது என்று திருவள்ளுவர் சொல்வானேன்?


* பிராமணன் தான் உயர்ந்தவன் என்று சோழன் கருதி இருந்தால், அவனின் தொன்மமும் அதுவாகவே, வேதம் ஒதுபவனாகவே, பண்டிதனாகவே அல்லவா இருந்திருக்க வேண்டும்?
* போர் தொழிலே மிக உயர்ந்த தொழில் என்று எந்த தமிழ் இலக்கியங்களும் சொன்னதாக தெரியவில்லை. மூவேந்தர்களுக்கு சொந்தம் கொண்டாடும், போர் குடிகள், சத்ரியர்கள் என்று அழைத்து கொள்பவர்களும், ஏன் போர் தொழிலை சோழன் தனது ஆதி தொழிலாக கொள்ளவில்லை என்று என்னைக்காவது யோசித்தது உண்டா?


ஆக தொழிலாக இருக்கட்டும், சோழ, பாண்டிய, குடும்ப தலைவனாக இருந்தாலும் அனைவரும் விவசாயம் சார்ந்து, அதில் இருந்து தோன்றியவர்கலாகவே இருக்க முடியும். இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,

மூன்று + வேந்தன் = மூவேந்தன்.
'வேந்தன் மேய தீம்புனல் உலகும்' (தொல்காப்பியம்).

மருத நில தலைவனே வேந்தன், மூவேந்தர்களும் மருத நில குடிகளே என்று தொல்காப்பியரே தடம் பிடித்து காட்டுகிறார். எனவே சோழன் தமிழனாக இருக்கும் பட்சத்தில், அவனின் பூர்வீகம் தமிழ் மண் என்ற பட்சத்தில் அவனின் மூலம் 'விவசாயமே' என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
============================

No comments:

Post a Comment