Showing posts with label புல்லி. Show all posts
Showing posts with label புல்லி. Show all posts

Saturday, January 5, 2013

கள்ளர்கள் தமிழ் மன்னர்களா? ஒருபோதும் இல்லை.

                                                                                                       
கள்ளர்கள் தங்களது வரலாற்றை பற்றி எடுத்து வைக்கும் ஆதாரங்கள்/வாதங்கள்: 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

@மேகநாதன் முக்குலத்து புலி (said): 
அதான் அதுக்கு முன்னாடி உள்ள வரலாறு எல்லாம்
உங்க வரலாறு என்று சொல்றிங்களே அதான் நான்
பேசல ...சிம்கம் பட்டி ஜமீன் ,சேதுபதி மன்னர்கள் எல்லாம்
நாயக்கர் ஆட்சிக்கு முன்னரே இந்த மண்ணை ஆண்டவர்கள்
---------------------------------------------------------------------------------
ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, சிங்கம்பட்டி ஜாமீன், புதுக்கோட்டை மன்னர்கள் தொண்டை மான் போன்றவர்களும் உங்களின் மள்ளர் பரம்பரையோ....
அந்த காலத்தில் பள்ளு எனும் பாடல்களை இசைத்தவர்கள் பாணர்கள் அல்லது பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்....இவர்களின் பாடல்களுக்கு பறை அறைந்து இசைத்தவர்கள் பறையர்கள் எனப்பட்டனர்.....இதுதான் வரலாறு.....இன்னும் ஒவ்வொரு சாதிக்கும் வரலாறு-உண்மையான வரலாறு உண்டு....ஆனாள் பள்ளர் என்று போட்டுக்கொல்வதையே இழிவாக கருதி "மள்ளர்" என்றும் "தேவேந்திர குல வெள்ளாளர்" என்றும் வரலாற்றில் இல்லாத பெயர்களை சாதிப்ப் பெயராக குரிப்பிட்டுக்கொல்கிரீர்கள்....உண்மைகள் ஒரு போதும் தூங்காது...நீங்கள் ஆண்ட பரம்பரை எனில் அரசு கொடுக்கும் தாழ்த்தப்பட்டவர் என்ற சலுகையை மறுத்து விட்டு......ஆண்ட பரம்பரை நாங்கள்.....நாங்கள் தாழ்ந்தவர் அல்ல சலுகை வேண்டாம் என முழக்கமிடுங்கள்....அரசு கொடுத்தாலும் சலுகையை பெறாதீர்கள்...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கன் தென்னன் (பாண்டியன் ) என்று. குல உயர்வுக்காக தேவர் என்று போட்டு கொள்ள அவசியம் இல்லை. பல்வேறு வரலாற்று அறிஞர்களால் மன்னர் இனம் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். இவர்களை பாலை குடி என்று கூறுவது பெரும்பாலும் பள்ளன் அடிக்கும் கூத்துக்களில் ஓன்று. சோழன் இவர்களை பள்ளர்கள் என்று அழைத்ததால் சோழன் பாண்டியன் மீது கோவம் கொண்டு இந்த வேலையை செய்கின்றனர். "சோழன் காலத்தில் சோழர் காலத்தில் பள் வரி, பறை வரி என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது".எனவே பள்ளன் இடைகால சோழன் , பாண்டியன் காலத்திலும் பள்ளன் என்றே அழைக்கபட்டான்.ஆனால் கள்ளர்கள் நாடன்டார்கள் என்பதற்கு குறைந்த பட்சம் ஆதராமாக 8 ஆம் நூற்றாண்டில் பூம்புகார் பகுதியை ஆண்ட "திருமங்கை ஆழ்வர்" ஐ சொல்லலாம். இவர் சோழர் படைத்தளபதி . சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்டவனும் கள்ளர் தான் ."கள்வர் கோமான் புள்ளி " என்று அழைக்க படுகிறான் ..எனவே உங்கள் பாலை கதை எல்லாம் எங்கும் விற்காது..பைத்தியம் பிடித்து அலைந்தால் இப்படிதான் தோணும்..

வேங்கடமலை இணைந்த தொண்டைநாட்டை ஆண்டவர்கள்--கள்ளர்களே! 
திருப்பதி மலை உட்பட்ட தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் கள்ளர்களே. இதனை கள்ளில் ஆத்திரையனார், மாமூலனார், தாயங்கண்ணனார் போன்ற தகைசான்ற பெரும் புலவர் பெருமக்கள் பன்னிரண்டு அகநானூறு பாடல்களில் தெரிவித்துள்ளனர். அப்பன்னிரண்டு பாடல்களையும் இக்கட்டுரையின் முதல்பகுதியில் குறிப்பிட்டுள்ளேன்.வேறு இன மக்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டனர் என எந்த அகநானூறு பாடலும் குறிப்பிடவில்லை.இவர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டதால் தொண்டைமான் என்ற பட்டம் பெற்றனர். தொண்டைமான், தொண்டையர், தொண்டைமான் கிளையார், தொண்டைப்பிரியர், தொண்டார், பல்லவர், பல்லவராயர், பல்லவாண்டார், பல்லவநாடார், பல்லவதரையர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் இவர்களின் வழித் தோன்றல்களே ஆவர். பன்னிரண்டு பாடல்களில் கீழ்கண்ட இரண்டு பாடல்களை மட்டும் விளக்க உரைக்காக (ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைபோல்) இங்கு எடுத்தாண்டுள்ளேன்.

1.கழல் புனை திருந்தடிக் களவர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி. .
விழவுடை விழுச்சீர். வேங்கடம். . (அகம்.61) (மாமூலனார் பாடியது)
                              
பொருள்..வீரக்கழல் அணிந்தவன் களவர் கோமான். அவன் வீர்ர்கள் பலரோடுசேர்ந்து வில்லில் வலிமையான நாணை ஏற்றி அம்புமழைப்பொழிந்து மழவர் நாட்டை வென்று அவர்களை அடிபணியச்செய்தவன். அவன் திருவேங்கடமலையில் உறைபவன்.

2.வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்குவெள்ளருவி வேங்கடத்தும்பர் அகம்.213) (தாயங்கண்ணனார் பாடியது)

பொருள்..வேங்கடமலையானது போர்ப்பயிற்சி உடைய யானைகளை வெல்லும் . தொண்டை நாட்டினருக்கு உரியது.

திருப்பதி 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உடையது. இம்மலைப்பகுதியை ஆண்ட கள்ளர்கள் அக்காலத்திற்கு முன்பிலிருந்தே அப்பகுதியை ஆண்டனர்.. எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்காத மழவர்(மறவர்) குடியினர் எவ்வித தடையுமின்றி தமிழ்நாட்டின் வடக்கே திருவேங்கட மலைவரையில் சுற்றித்திரிந்தனர்(அகம்.61).
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அகநானூறு புறநானூறு(எ) சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்ட காலம்-கி.மு.500-கி.பி.200 
சங்க காலத்தில் நம்முன்னோர்கள் வேங்கட நாட்டை(தொண்டை நாட்டை) ஆண்டனர் என்று மயிலை சீனி வேங்கடசாமி மேற்கண்ட அகநானூறு பாடல்களின் அடிப்படையில் கூறுகிறார். சங்காலத்தை பின்வருமாறு வரலாற்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுள்ளனர்:- 
தலைச்சங்கம்(பாண்டியநாட்டின்தலைநகரம்தென்மதுரை)…….கி.மு.400-------200 இடைச்சங்கம்(பாண்டிய நாட்டின் தலைநகரம் கபாடபுரம்). …. கி,மு,200-கிபி.100
கடைச்சங்கம்(பாண்டிய நாட்டின் தலைநகரம் வடமதுரை) ….. கிபி.100--கிபி.300
(கி.மு,400 முதல் கி.பி.300 வரை உள்ள காலப்பகுதி சங்க காலம் எனப்படும்)

புள்ளிவைத்து எழுதும் காலத்திற்கு முற்பட்டக்காலத்திலேயே மாமூலனார் அகநானூறு 61 எழுதி அதில் களவர் கோமான் எனக்குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மேலும் அக நானூறும், புறநானூறும் எழுதப்பட்ட காலம்- சங்க காலம்.எனவே அந்நூல்கள் சங்க இலக் கியங்கள் எனப்படுகின்றன. சங்க இலக்கிய காலம் கி.மு.500 முதல் கி.பி.200 வரை என டாக்டர் மு.வரதராசனார் தமிழ்இலக்கிய வரலாறு என்னும் நூலில் பக்கம்.25ல் குறிப்பிடு கிறார். மூன்று சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டிய மன்னர்களையேச் சேரும்.எனவேதான்,வில்லி.பாயிரம் 7 கீழ்க்கண்டவாறு பாண்டிய மன்னனுக்கும் அவன் வளர்த்த பாண்டிய இளவரசி-தமிழ்பாவைக்கும் புகழாரம் சூட்டுகின்றது.

"பொருப்பிலே பிறந்து தென்னவன்
புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்தோர் என
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளருகின்றாள்"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மள்ளரின் மறுப்புரை:
    17 ஆம் நூற்றாண்டு காலத்திய இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் என்போர் தற்கால மறவர் என்று சொல்லக்கூடிய இனத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் சமீன் என்போர் யார் என்பது அசிங்கத்தனமான வரலாறு. அதுபோன்று, அக்காலத்திய புதுக்கோட்டை தொண்டைமான் என்போர் தற்கால கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்கள். இதை நாங்கள் மறுக்கவில்லை. இவர்களை ஒருபோதும் நாங்கள் மள்ளர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால், தமிழகத்தில் இவர்களின் ஆட்சிக்காலம் என்பது தமிழர் வேந்தர்  ஆட்சி வீழ்ச்சியடைந்த காலம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலம். அப்படியென்றால், இவர்கள் எல்லாம் யார் என்று கேட்டால், அதற்குப் பதில் ‘இவர்கள் தமிழ் வேந்தர்கள் என்று சொல்கிறீர்கள். இந்த மடத்தனத்தை யாரிடம் சொல்வது!

    பள்ளுப்பாடல் தோற்றம் பெற்றது இதே அன்னியர் ஆட்சிகாலத்தில்தான். இந்தப் பாடல்களை ஒருபோதும் பள்ளர்கள் இசைக்கவில்லை. இந்தப் பாடல்கள் மூலம் பள்ளர்கள் ஏசப்பட்டார்கள் என்பதே உண்மை. இதைக்கூட உணராமல் சிலர் இந்த மாதிரிக் கட்டுரை எழுத வந்து விடுகிறார்கள். உண்மையில், இந்தப் பாடல்களை எழுதிய யாரும் பள்ளர்கள் கிடையாது என்பது இவர்களுக்கு உரைத்ததாகத் தெரியவில்லை. சங்ககாலத்தில்தான் பாணர்கள் இருந்தார்கள். அவர்கள் மள்ளரான பள்ளர்களை புகழ்ந்து பாடினார்கள். அன்னியர் ஆட்சிக் காலத்தில் பள்ளுப் பாடல்களை பாணர்கள் பாடினார்கள் என்று சொன்னால், அந்தப் பாணர்கள் யாராக இருக்கும் என்பதை கள்ளர்கள் தான் விளக்க வேண்டும்.

    பறை அடித்தவர்கள் பறையர் என்பது சரியான விளக்கம் இல்லை. சங்க காலத்தில் ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனிப் பறை இருந்தது. அதை அடித்தவர்கள் பறையர் கிடையாது. உண்மையில் சங்க காலத்தில் பறையர் என்ற இனம் தமிழகத்தில் இல்லை. பறையர் என்பது ‘செய்தி சொல்பவர் அல்லது பரப்புவோர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியது. இதுதான் அந்த சாதி மக்களுக்கான விளக்கம்.
எங்களுக்கு தற்போதுகூட தேவேந்திரகுலத்தான் என்ற சாதிப்பெயர் உள்ளது (எஸ்.சி பட்டியல் எண் 17). ஆனால், உங்களுக்கு(கள்ளர்,மறவர்,அகமுடையார்) தேவர் என்ற சாதிப்பெயர் அரசு ஆவணத்தில் கிடையாது. மள்ளர் மற்றும் தேவேந்திரகுலத்தான் என்பது வரலாற்றில் இல்லை என்று சொல்வது, தமிழக வரலாற்றை மறைக்க முயலும் அன்னிய முட்டாள்களின் பேச்சு.

    அரசு கொடுக்கும் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து இனத்தாருக்கும் உரிய உரிமை. அதேபோல், இந்த உரிமை வேண்டும், வேண்டாம் என்பது அந்தந்த இனத்தாரின் தனிப்பட்ட விசயம். இதை விட்டுவிடச் சொல்பவர்கள் முதலில் தங்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வேண்டாம் என்று சொல்லி மறுத்து விட்டு, அதன் பிறகு மற்ற இனத்தாருக்குப் புத்தி சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி மடத்தனமாக கருத்துத் தெரிவிக்கக் கூடாது. கள்ளர் நல வாரியம் மூலம் பொது மக்கள் பணத்தை,சலுகையை அனுபவிப்பது யார் என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. 

    எந்த வரலாற்றார் தற்காலத்தில் தேவர் என்று போலியாகப் பிதற்றிக் கொண்டுள்ள உங்களை மன்னர் பரம்பரை என்று சொன்னார்கள்? முதலில் நீங்கள் ‘தேவர் என்று சொல்லிக் கொள்வதற்கு சரியான காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம். தேவர் என்றால் மன்னர் என்று சொல்லாதீர்கள். அது வரலாறு தெரியாதவர்கள் கூற்று.

    அவசரப்படாதீர்கள், கள்ளர்களாகிய நீங்கள் சங்க காலத்தில் சொல்லக்கூடிய பாலைக்குடி கிடையாது. உண்மையான பாலைக்குடி என்போர் எயினர் என்று சொல்லக்கூடிய மக்கள். பள்ளிகள் என்று சொல்லக் கூடியவர்களே எயினர் என்பதற்கு சங்க இலக்கியத்தில் ஆதாரம் உள்ளது. எனவே நீங்கள் தமிழகத்தின் பாலைக்குடிகள்கூட கிடையாது.

    சோழன் காலத்தில் பள் வரி மற்றும் பறை வரி என்பது கிடையாது. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட அந்நியர் ஆட்சியில்தான் பள் வரி என்ற வரி இருந்தது.

ஆதாரம்:

[…….மேலும் அவர்களுக்கு நிலம் கொடையாக வழங்கப்பட்டுள்ளது அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதனை சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) பள்ளுப்பறை... சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)]

பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது".   http://ta.wikipedia.org/s/18sm


    இது எந்த மன்னர் காலத்தியக் கல்வெட்டுச் செய்தி என்று சொன்னால் நன்றாக இருந்திருக்கும். விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்துப் போட்டுவிட்டு, அதை தெளிவாக மறைத்து விடுகிறீர்களே!


    12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இடைக்காலத்தில் தற்போது கள்ளர் என்று சொல்லக்கூடிய இனம் தமிழகத்தில் இல்லை என ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. அப்புறம் எப்படி இடைக்காலமான 8 ஆம் நூற்றாண்டில் பூம்புகார் பகுதியில் கள்ளர் ஆட்சி செய்திருக்க முடியும்? காதில் பூச்சுற்ற வேண்டாம்!

    சங்க காலத்தில் வேங்கடப் பகுதியை ஆண்டவன் தமிழ் மன்னனான புல்லி. திருவேங்கடம் என்பது சங்க காலத்தில் தமிழகப் பகுதியாகவே இருந்தது. இந்த புல்லி என்ற மன்னன் கள்ளர் இனத்தைச் சார்ந்தவன் என்று கள்ளரான பண்டிதர். வேங்கடசாமி நாட்டார் போன்று ஒரு சில வரலாற்றார் கருத்து தெரிவித்திருப்பது உண்மையே. அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம், சங்க இலக்கியத்தில் வரும் கீழ்கண்ட வரிகள்

‘களவர் கோமான் மற்றும் ‘கள்வர் பெருமகன்

இவை உள்ள சங்கப் பாடல்கள்:

1. கழல் புனை திருந்தடிக் களவர் கோமான்
  மழபுலம் வணக்கிய மாவண் புல்லி. .
  விழவுடை விழுச்சீர். வேங்கடம். . (அகம்.61)
                              
பொருள்: வீரக்கழல் அணிந்தவன் களவர் கோமான். அவன் வீரர்கள் பலரோடுசேர்ந்து வில்லில் வலிமையான நாணை ஏற்றி அம்புமழை பொழிந்து மழவர் நாட்டை வென்று அவர்களை அடிபணியச்செய்தவன். அவன் திருவேங்கடமலையில் உறைபவன்.
                         
2. மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
  ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்...(அகம்.342)

பொருள்: மண்ணினால் ஆன புற்றை உடைய காட்டரணின் இடத்தைத் திறத்தலுடன், பகைவரின் பசுக்களைக் கவர்ந்து கொள்ளும், பழைய ஊரையுடைய, கள்வரின் தலைவன்..

முதல் பாடல் மூலம் தெரிவது, புல்லி என்ற தமிழ் மன்னன் மழவரை  அடக்கி, அவர்களை அடி பணியச் செய்தவன். அந்த மழவர் என்போர் யார்? தமிழ் பகுதியாகிய வேங்கடமலைப் பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு குடியினர். இவர்கள்தான் சங்க இலக்கியத்தில் மறவர் என்று சொல்லப்படுகின்றவர். இவர்களைத்தான் ஆறலைக் ‘கள்வர் என்றும் குறிப்பிடுகின்றனர். இதற்கு கீழ்கண்ட சங்கப் பாடல்கள் ஆதாரமாக உள்ளன.

".....இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்....."(அகம்.91)

பொருள்: கரிய நிறமுடைய இரலை மான்கள் உறங்கும் பாறாங்கற்களால் ஆன உயர்ந்த கற்குவியலில் அஞ்சாமை உடைய மழவர் பசுக்களை களவு செய்வதற்கு உதவியாய் வளர்ந்து நீண்ட அடியை உடைய ஆசினிப் பலவின் மரங்களை உடைய ஊர்.

மற்றொரு பாடல்

"....கண நிரை அன்ன, பல் கால் குறும்பொறை
தூது ஒய் பார்ப்பான்.........
................
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்....."(அகம்.337)

பொருள்: உப்பு வணிகர் கூட்டமாகச் செல்லும் கழுதை வரிசை போன்று விளங்கும் பாறைகளின் வழியே பல முறையும் தூதாகப் போகும் பார்ப்பான், வெண்மையான ஓலைச் சுருட்டுடன் வரும் இயல்பைப் பார்த்து, உண்ணாமையால் வாட்டம் கொண்ட விலாவுடைய ‘இவன் கையில் இருப்பது பொன்னாகவும் இருக்கக் கூடும் என்று எண்ணி, கையில் படைக்கருவியை உடைய மழவர் பயன் ஏதும் இல்லாமல் கொன்று வீழ்த்தினர்.

    இந்த இரண்டு பாடல்கள் மூலம் சங்க காலத்தில் கள்ளர் என்று சுட்டப்பட்டவர் மழவர் என்பது தெளிவாகும். பிறகு எதற்காக புல்லி என்ற தமிழ்மன்னன் ‘களவர்கோமான் என்று அழைக்கப்படுகிறான்? சங்க காலத்தில் தமிழ் மன்னர்களே பல்வேறு குடிகளை அடக்கி ஆண்டனர். அவ்வாறு அடக்கி ஆண்ட மன்னன் அடக்கியாளப்பட்ட அந்தக்குடியின் மன்னன் என்றும், அந்தக் குடியின் தலைவன் என்றும் சுட்டப்பட்டான். இதுதான் புல்லி என்ற மன்னன் ‘கள்வர் கோமான் என்று அழைக்கப்பட்டதற்கான காரணம். உண்மையில் அவன் கள்ளர் இனத்தவன் கிடையாது.

    இதைத்தான் இரண்டாவது பாடலில் (அகம்.342) உள்ள ‘கள்வர் பெருமகன் என்ற சொல்லும் தெளிவுபடுத்துகிறது. இங்கு ‘கள்வர் பெருமகன் என்று சுட்டப்படுபவன் கள்வர்களை அடக்கி ஆண்ட பழைமையான ஊரையுடைய பாண்டிய மன்னன்.

இதேபோன்று மற்றொரு பாடல்

"....எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை மழவர் பெரும....."(புறம்.90)

பொருள்: கணைய மரம் போன்ற முழந்தாள் அளவு நீண்ட கையை உடையவனே! தப்பாத வன்மையுடைய மழவரின் (கள்ளரின்) தலைவனே.

    இந்தப் பாடலில் மழவராகிய கள்ளரை அல்லது மறவரை அடக்கி ஆண்ட அதியமான் நெடுமானஞ்சி கள்ளரின் தலைவனாகக் காட்டப்படுகிறார். இதை வைத்து அதியமானை கள்ளர்குடியைச் சார்ந்தவன் என்று சொல்லக்கூடாது.

சரி, சங்க காலத்தில் காட்டப்படுகின்ற மழவர் என்ற கள்ளர்தான் தற்கால கள்ளர் இனத்தவரா என்றால் அதுகூடக் கிடையாது. ஏனெனில், தற்காலத்திய கள்ளர் என்போர் களப்பிரர்,முஸ்லீம்,வடுகர் மற்றும் குறும்பர் ஆகிய இனத்தில் இருந்து உருவான ஒரு கலப்பினம் ஆகும். இதற்கு ஏற்கனவே ஏராளமான ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, 14 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் கள்ளர் யாரும் மன்னராக இருந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

Friday, November 30, 2012

வந்தேறி கள்ளர்கள்

வந்தேறி கள்ளர்கள்

1)தமிழர் வரலாறு(தேவநேய பாவாணர்)
வந்தேரிகளான களபிரரை குறிக்கும் பெயரான 'களபாளர்' கள்ளர்களின் பட்டபெயராக இருப்பினும், கள்ளர்கள் முருக வழிபாட்டினர் என்பதால் 'கள்ளர்கள்' தமழர்கள் எனலாம்.

2)கடந்த ஆண்டு(2011) அக்டோபர் மாத 'தமிழக அரசியல்' வார இதழில் 'ராசராச சோழன் கள்ளரா? மள்ளரா?' என்ற தலைப்பில் செங்குட்டுவ வாண்டையார் 
"...கள்ளர் என்ற சொல் 'கள' 'களப' 'கள்வர்' என்ற மூல வடிவின் திரிபாகும்..:

3)"...தொண்டைமான் இளந்திரையன் காலத்தில், காளத்தி முதலிய மலைநாடுகளைச் சேர்ந்த காடுகளில் 'களவர்' என்னும் வகுப்பினர் வாழ்ந்திருந்தனர். அவர்கட்கு தலைவனாக இருந்தவன் 'புல்லி' என்பவன். இவன் திரயனுக்கு அடங்கி இருந்தவனா அல்லது மாறுபட்டவனா என்பது அறியக் கூட வில்லை". (இராச மாணிக்கனார், பல்லவர் வரலாறு, பக். 45 )

"களவர் என்ற பெயர் கன்னடத்தில் களபரு என்றும் மாறும்;பின் வட மொழியில் களப்ரா என்று மாறுதல் பெரும்; இது தமிழில் களப்பிரர் என உருப்பெறும். இவர்கள் ஒரு கூட்டத்தினர். அரச பரம்பரையினர் அல்லர். இவர்கள் மூவேந்தரை வேன்றவராகப் பாண்டியர் - பல்லவர் பட்டயங்கள் குறிக்கின்றனர்."  (இராச மாணிக்கனார், பல்லவர் வரலாறு, பக். 51 )
மேற்சொன்ன தகவலின் படி, தம்மை களப்பிரர்களின் வழித்தோன்றல் என்றும், 'கள்வன் கோமான் புல்லி' என்றும் கூறிக்கொள்ளும் 'கள்ளர்கள்' எந்த வகையிலும் மூவேந்தர்களாகவோ, அரச பரம்பரையினராகவோ, 'தொண்டைமான்' போன்ற பட்டகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதும் தெரியவருகிறது.

4) சோழர்கள் ‘களப’ என்று பெயருக்கு முன்னால் போற்றுக் கொண்டார்கள் என்று சொல்லி, அவர்கள் கள்ளர் இனத்தவர் என்கிறார்! அய்யா சோழர் மன்னர் ஒருவர் ‘களப’ என்ற சொல்லை பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டார். அப்படிஎனில், அவர் கள்ளர் இனத்தவர் என்று அர்த்தம் கிடையாது.’களப’ என்றால் ‘யானைக்கன்று’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளத்தான். பொதுவாகவே சோழர்கள் ‘ராஜசிங்கம்’ மற்றும் ‘யானைக்கன்று’ என்று தங்களை பெருமையாக அழைத்துக் கொள்வார்கள். அதற்காகத்தான் இந்த ‘ராஜகேசரி’ மற்றும் ‘களப’ போன்ற சொற்களை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது. தனது இனத்தைக் குறிக்க அல்ல. 

நமது கேள்விகள்: 

1)'கள' 'களப(?)' 'களபாளர்' என்பன வந்தேரியான களபிரரையே குறிக்கும் எனில் இதையே மூல வடிவாகவும்,பட்டபெயராகவும் கொண்ட கள்ளர் யார்?
2)தமிழர்களான பல்லவர்கள் பெளத மதத்தை தழுவினர் என்பதற்காக பல்லவர்களை வந்தேரிகள் என சொல்ல முடியுமா? அதைபோல் வந்தேரியான கள்ளர்கள் முருக வழிபாட்டினர் என்பதற்காக கள்ளரை தமிழர் என்று சொல்ல முடியும? முடியாது,

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே!! 
இங்கு பிறப்பினும் அயலன் அயலனே!!!!
-பாவேந்தர்