கள்ளர்,மறவர்,அகமுடையார் என்றால் யார்?
அறிஞர் பெருமக்கள் சொல்வது:
*******************************
* "கள்ளர் என்ற சொல் பொதுவாக திருட்டு தொழில் ஈடுபடும் எல்லா மரபினரையும் குறிக்கும். ஆனால் இப்பெயர் அரசுக்கு வரி செலுத்த உட்படாத ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் மக்களை குறிப்பதாக உள்ளது. கள்ளர்களுக்கு என்று ஒரு பொதுப்படையான குணம் உண்டு.அது தான் எல்லோரும் திருடுவது ஆகும். இதனால் கள்ளர
் என்ற பொதுப்பெயர் இவர்களுக்கு தொழிற் பெயராக சூட்டப் பட்டது. (தகவல்: E.Thurston C&T of SI Vol. IV,Page 53)
* மறவர் என்ற சொல் போரில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் பொதுவாக வழங்கியது. "சங்க இலக்கியத்தில் மறம்,மறவன் என்ற சொற்கள் பேசப்படுவது உண்மையே.அது முறையே வீரத்தையும், வீரனையும் சுட்டுமே அன்றி, மறவர் என்ற ஒரு இனம் அல்லது மரபை சுட்டவில்லை.(தகவல்:History of Maravar,Page 16. Dr. S. Kadirvel)
* அகம்படியார் என்ற ஒரு சாதி தமிழ்வேந்தர் காலத்திலேயே இல்லை என்று தான் கூறப்படுகிறது. "ஆளையங்களிலும், அரண்மனையிலும் குற்றேவல் செய்வோர் அகம்படியார் என வழங்கினர்". (தகவல்: J.A.Abbe Dubois, Hindu Mannar & Custom - Page 17)
வன்னியர் சொல்வது
*********************
"உண்மையில் கள்ளர் சங்ககாலத்தில் இவர்கள் முதலில் தூசிப் படைகளாக, ஆநிரை கவரும் வெட்சிப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது. பிறகு அவர்களை குதிரை பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தினர். இவ்வாறானவர்கள் சேர்வைக்காரர்களாக அறியப்பட்டனர். பிறகு இவர்கள் அகப்பரிவாரங்களாக, அரண்மனைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்களே அகம்படியர் ஆவர். படைத் தளபதி ஆகும் அளவு இவர்களுக்கு உரிமை இருந்தது. இதைத்தான் 'கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே' என்கிற சொல்வழக்கு வெளிப்படுத்துகிறது."
மறத்தமிழர் சேனை(இது 'மறவர்களுக்கான' அமைப்பு):
***************************************************
கள் - தல்: பறித்தல், பகைவர்களின் பொருட்களை கவர்தல்
கள்ளன்: களம் விட்டு களம் சென்று பகையை அளித்தவர்கள் களைப்படை வீரர்கள்
மறவர்: வரும் பகையை எதிர்த்து நின்ற மறப்படை வீரர்கள்
அகமுடையார்: கோட்டை கொத்தளங்கள் காத்தும், குடிபடைகளுக்குள் கட்டுகோப்பு வளர்த்த அகப்படை வீரர்கள்