Showing posts with label சேதுபதி. Show all posts
Showing posts with label சேதுபதி. Show all posts

Wednesday, December 5, 2012

முக்குலத்தோர் என்பவர் யார்?

கள்ளர்கள் 'முக்குலத்தோர் என்போர் யார்' என்பதற்கு கொடுக்கும் விளக்கங்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

  • முக்குலத்தோர் (தேவர்) 
     முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் அவர்களும் இவ்வாறே கூறுகின்றார்.
  • கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் குறிப்பிடுவதுண்டு. 
  • தேவர் (முக்குலத்தோர்)
     தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக வரலாற்றுகாலம் தொட்டு இன்றுவரை விளங்கி வருகின்றனர். தேவர் என்போர் கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் இம்மூவரும் உள்ளடக்கிய ஒரு சமூக கூட்டமைப்பு. இம் மூவரும் இணைந்தவொரு வீரவர்க்கமானது முக்குலத்தோர் யென்று வழங்கப்பட்டு வருகிறது. 
         ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர். ஆங்கிலேய ஆதிக்கத்தின் போது தமிழகத்திலிருந்து சட்டிஸ்கர் பகுதிக்கு இடம் பெயர்ந்த தேவரின மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர். 
    • தேவர் (முக்குலத்தோர்) சமூகத்தினர் பெரும்பான்மையானோர் தென் தமிழகத்து மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர். மேலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி யென தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தென் தமிழகத்திலும், மத்திய தமிழகத்திலும் தேவரின மக்கள் அதிகம் காணப்படுகின்றனர். 
    • முக்குலத்தோர் :
         தமிழை வளர்க்க மிகவும் செம்மையான பணிகளை செய்துள்ளனர். "கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்" என்ற பாடலை செவி வழி கேட்டறிந்து இருக்கலாம்
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    மேலே கொடுக்கப் பட்ட விளக்கங்களுக்கான எமது மறுப்புரைகள்:


    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து மறவர்,கள்ளர் மற்றும் அகமுடையர் (சேர்வை) என்ற வேறுபட்ட மூன்று இனத்தாரும் தாங்களை இந்திரனுக்கு அகலிகை மூலம் தவறான வழியில் பிறந்தவர் என்றும், இந்திரனுக்குப் பிறந்ததால் தாங்கள் ‘தேவர் என்றும், அதன் அடிப்படையில் தாங்கள் முக்குலத்தார் என்பதாகவும் கூறிக் கொள்கின்றனர் (பூவிந்திர புராணம்). ‘தேவர் என்ற பட்டத்தின் காரணத்தால் தாங்கள் மூவேந்தர் வம்சாவழியினர் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர். இது உண்மையா?
    ஆங்கிலேயர் ஆட்சிக்கு முந்திய நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இவர்கள் மூவரும் சகோதரர் எனவும், அதனால் முக்குலத்தார் எனவும் அறியப்பட்டதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.
        தேவர் என்பது அரசன், மதகுருமார் மற்றும் கடவுள் ஆகியோரைக் குறிக்கும் ஒரு மரியாதைச் சொல்லாகும். தேவர் என்ற சொல்லிற்கு கடவுள் அல்லது தெய்வம் எனப் பொதுவாகப் பொருள் கொள்கின்றனர். அதனை தலைவன் எனக் ‘கால்டுவெல் குறிப்பிடுகிறார் (கால்டுவெல், திருநெல்வேலி சரித்திரம், பக்கம் 52-53). தேவர் என்ற பட்டமானது தற்காலத்தில் மறவர் என்று காட்டப்படுகின்ற இனத்தைச் சார்ந்த சேதுபதி மன்னர்களுக்கு இருந்தது உண்மையே. 17 ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து உள்ள கல்வெட்டுக்களில் இவர்கள் ‘சேதுபதி காத்த தேவர் என்றே குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், அதற்கு முன்பு அப்படி இருந்ததற்கு நிச்சயமாக ஆதாரம் இல்லை.
         இந்த ‘தேவர் என்ற சொல்லைப் பெயருக்குப் பின்னால் பட்டமாகப் பயன்படுத்துகின்ற வழக்கம் சங்ககாலம் தொட்டு வழக்கில் இருந்து வந்துள்ளது. (பார்க்க: 'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும் )  ஆனால், அக்காலத்தில் இது ஒரு குறிப்பிட்டச் சாதியைச் சார்ந்தவர் பயன்படுத்துகின்ற பட்டமாக இல்லை. அதனடிப்படையில் பல புலவர்கள் இப்பெயர் பெற்றிருந்தனர்.
         (எ.கா) பெருந்தேவனார், ஈழத்துபூதன் தேவன், பூதன் தேவனார், வாயிலான் தேவன் மற்றும் தேவனனார். இவர்கள் யாவரும் வெவ்வேறு வகுப்பினைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
        இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியிலிருந்த பிற்காலச் சோழ மன்னர்கள் மற்றும் பாண்டிய மன்னர்கள் தேவர் என்று பெயரிட்டுக்கொண்டனர். இக்காலத்திலும் இது குறிப்பிட்ட சாதிப் பிரிவினருக்கான பட்டமாக இல்லை.
        (எ.கா) பொன்மாளிகை துஞ்சிய தேவர், இராசராச தேவர், சுந்தரபாண்டியத் தேவர் மற்றும் குலசேகர பாண்டியத் தேவர்.
    பொதுவாக பேரரசர்களும், அவர்களுக்குக் கீழ் இருந்த தளபதிகளும் மற்றும் குறுநில மன்னர்களும் தங்களது முதன்மை மற்றும் அதிகாரத்தைக் காட்டுகின்ற வகையில் ‘தேவர் என பட்டம் சூடிக்கொண்டனர். பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் என்பவன் சுந்தரபாண்டியத் தேவர் என அழைக்கப்பட்டான். ஆனால், அவனுடன் பிறந்த அவனது மற்ற சகோதரர்கள் ‘தேவர் என்ற பட்டத்தைச் சூடிக் கொள்ளவில்லை. எனவே, இடைக்காலத்தில் தேவர் என்ற பட்டம் தனிநபர் சார்ந்த பட்டமாக இருந்ததேயன்றி ஒரு சாதி சார்ந்த பட்டமாக இல்லை என்பதே உண்மை. பிற்காலத்தில், தமிழ் வேந்தர்கள் வீழ்ச்சியடைந்த நிலையில், கண்டவர்கள் எல்லாம் இந்த தேவர் பட்டத்தை தங்களது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டனர். இதற்கு ‘கண்டராதித்த தேவன் என்ற பெயர் கொண்ட ஒரு தாசியின் மகனைக் குறிப்பிடலாம். சில காலத்திற்கு முன்பு வரை கள்ளிக்கோட்டை வெள்ளாளர்களுக்கும் தேவர் என்ற பட்டமிருந்தது குறிப்பிடத்தக்கது. (நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, பக்கம் 89).
         பிற்காலச்சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின்பு தமிழகத்தில் தமிழ் பேசாத இனத்தவரே பெரும்பாலும் அரசியல் அதிகாரத்தில் இருந்தனர். அந்த வகையில் ஒரு சில கள்ளர், மறவர் இனக்குழுக்கள் தாங்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர். அந்நிலையில், தேவர் என்ற பட்டத்தினை தங்களை முதன்மைப் படுத்தும் பொருட்டு பயன்படுத்தி இருக்கலாம். (இரா.சுந்தரவந்தியத்தேவன் ‘பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் பக்கம் 142). இதன் அடிப்படையில், சேதுவின் பதியாகச் சொல்லப்படுகின்ற இராமேஸ்வரத்தைப் பாதுகாக்கும் கூட்டத்தின் தலைவனைக் குறிக்கும் சொல்லாக இந்த ‘தேவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதா? இது ஒரு வழி.
         கி.பி 17 ஆம் நூற்றாண்டு காலத்திய சேதுபதி மன்னர்களாகிய தற்கால மறவர் என்ற இனத்தைச் சார்ந்தவர், ‘தேவர் என அழைக்கப்பட்டனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சேதுபதி வரலாற்றை ஆராய்ந்த முனைவர் எஸ்.எம்.கமால் அவர்கள், ‘சேதுபதியின் வரலாறு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து அதாவது, கி.பி 1601 லிருந்து முரண்பாடு இல்லாத வகையில் இருக்கிறது. ஆனால், அதற்கு முந்தைய சேதுபதி மன்னர்களது ஆட்சித் துவக்கம், அவர்கள் முன்னோர் மரபு பற்றிய முறையான வரலாற்றுச் செய்திகள் இதுவரைக் கிடைக்கவில்லை என்கிறார். மேலும் ‘முதல் சேதுபதி மன்னராகச் சுட்டப்படுகின்ற (கி.பி.1603) உடையான் ரெகுநாத சேதுபதி மன்னரது தந்தையார் பெயர் என்ன என்பதும், அவர் சேதுபட்டத்திற்கு எந்த முறையில் தகுதி பெற்றவர் என்பதும் அறியத்தக்கதாக இல்லை எனவும் குறிப்பிடுகிறார் (எஸ்.எம்.கமாலின் ‘சேதுபதிகள் சரித்திரம் பக்கம் 9). அப்படியெனில், கி.பி 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சேதுபதி மன்னர்கள் இருந்தார்களா? அப்படி இருந்தார்கள் என்றால் அவர்கள் தற்கால மறவர்களின் முன்னோர்களா? இல்லையா?  அல்லது அப்போதைய சேதுபதி மன்னர் என்போர் வேறு இனத்தைச் சார்ந்தவர்களா? அவர்களுக்கும் ‘தேவர் என்ற பட்டம் இருந்ததா? என்ற விவரங்கள் நிச்சயமாக இல்லை. இந்த நிலையில் தேவர் என்ற பட்டம் கொண்ட 17 ஆம் நூற்றாண்டு காலத்திய மறவராகிய சேதுபதி மன்னர்களை, ‘தேவர் என்ற பட்டத்தின் மூலம் இடைக்காலத்திய தமிழ் மூவேந்தர்களுடன் நிச்சயமாகத் தொடர்புபடுத்த முடியாது. பிற்காலத்தில், தமிழ் வேந்தர்கள் ‘தேவர் என்று பட்டம் போட்டுக்கொள்வதை நிறுத்திக் கொண்டனர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
         இதற்கிடையில், தேவர் என்ற சொல் பற்றி ஆராய்ந்த அந்தோணிசாமி நாடார் அவர்கள், ‘தெவ்வர் என்ற சொல்லிற்குப் பகைவன், கொடியவன் எனப் பொருள் எனவும், மறவர் போன்ற இனக்குழுக்கள் முரட்டு சுபாவம் உடையவராக, குடிமக்கள் சொத்தை கொள்ளை அடிப்பவராக இருந்ததால் அவர்கள் அமைதியான குடிகளுக்குப் பகைவர்களாகக் கருதப்பட்டனர். அதனால், அவர்கள் தெவ்வர் என அழைக்கப்பட்டனர். அச்சொல்லே பின்னர் தேவர் என மருவியதாகக் கூறுகிறார் (அந்தோணிசாமி நாடார், சான்றோர் வரலாறு, பக்கம் 138). 

         மேலும், மறவர்களின் பூர்வீகம் பற்றி ஆராய்ந்த திரு, ஆர்.சத்தியநாத அய்யர் அவர்கள் ‘மறவர் தலைவனின் தலைநகரமான பெரியபட்டணம் சிறு சிறு குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவர்களது தொழில் கொள்ளையடித்தல் ஆகும் என்று கூறுகிறார் ( R.Satyanatha Ayyar, The History of Nayaks-page 322). எனவே, ‘குடிமக்களுக்குப் பகைவர்களான முரட்டு சுபாவம் கொண்ட ‘தெவ்வர் என்போரே ‘தேவர் ஆகி இருக்க வாய்ப்புண்டு என்ற முடிவு ஒத்துவருவதாக இருக்கிறது.
         அகமுடையார் என்ற சேர்வை இனத்தார்கள் கி.பி 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் சேதுபதி மன்னர்களிடத்தில் சேவைக்காரன் என்ற வகையில் கீழ்நிலை ஊழியம் செய்ததாகவே தெரிகிறது. அக்காலத்திய சேவைக்காரர்களில் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுபவர் மருது சேர்வைக்காரர்கள். இவர்கள் பற்றி முனைவர் எஸ்.எம்.கமால் குறிப்பிடுவது ‘மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் அந்தரங்கப் பணியாளர்களாகப் பணி புரிந்தனர். நாளடைவில் விதவையான சிவகங்கை ராணி வேலுநாச்சியாருக்கும், வெள்ளை மருதுவிற்கும் ஏற்பட்ட நெருக்கம் சிவகங்கை அரசியலில் விபரீதத்தை விளைவித்தது. அரசியாரது பலவீனத்தைப் பயன்படுத்தி, தாங்களே ஆட்சியாளர்களாக அவர்கள் இயங்கி வந்தனர். இதனை அறிந்த இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, வீரமறக்குடி வழியினரான தமது உறவினர் ராணி வேலுநாச்சியாரை, அவரிடமே அடிமைகளாக இருந்த மருது சேவைக்காரர்கள் ஆட்டிப்படைப்பதா? என்ற வேதனையும், சினமும் அடைந்தார். மேலும், ஆண் வாரிசு அற்ற சிவகங்கை சமஸ்தானத்தை தமது இராமனாதபுரம் சமஸ்தானத்துடன் இணைக்க விரும்பி, ஆற்காடு நவாப்பிற்கு சேதுபதி மன்னர் கடிதம் எழுதினார். இதனடிப்படையில் சேதுபதி மன்னருக்கும், மருது சேர்வைக்காரருக்கும் பகை வளர்ந்தது. (எஸ்.எம்.கமாலின், ‘சேதுபதிகள் சரித்திரம் பக்கம் 239-247). இந்தக் காலக்கட்டத்தில் சேர்வைக்காரர் மற்றும் மறவர் ஆகியோருக்கு இடையே முக்குலத்தோர் என்ற பந்தம் ஏதும் நிச்சயமாக இல்லை. மேலும், மருது சகோதரர்கள் ‘சேர்வைக்காரர் என்றே அழைக்கப்பட்டனர். அவர்கள் ‘தேவர் என்று அழைக்கப்படவில்லை. அவர்களது இனத்தாரும் தேவர் என்று அழைக்கப்படவில்லை.
         அதே 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் கள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் எந்த சம்பந்தமும்  கிடையாது. உண்மையில் சேதுநாட்டில் கள்ளர்கள் கொள்ளை அடித்து அட்டூழியம் செய்ததும், அவர்களை சேதுபதி மன்னர்கள் தண்டித்ததுமே நடந்தது. இதுவும் சேதுபதி வரலாற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னால் ஒரு காலகட்டத்தில் புதுக்கோட்டை கள்ளர் சகோதரர்கள் இருவரின் தங்கையான கத்தாயி என்ற காதலி நாச்சியாரை சேதுபதி மன்னர் இரண்டாம்தாரமாகத் திருமணம் முடித்த நிலையில், புதுக்கோட்டையின் உண்மையான தொண்டைமான் மன்னனைக் கொன்றுவிட்டு, தனது மைத்துனான கள்ளனை சேதுபதி மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னனாக்கினான். இப்படித்தான் புதுக்கோட்டை சமஸ்தானம் உருவானது. இங்கேயும் மறவருக்கும், கள்ளருக்கும் முக்குலத்தோர் என்ற வகையில் உறவுமுறை இல்லை. கள்ளருக்கு தேவர் என்ற பட்டமும் இருக்கவில்லை. பிறகு எப்படி கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் என்போர் முக்குலத்தோர் ஆனார்கள்? கள்ளர் மற்றும் மறவர் என்போர் சட்டதிட்டங்களுக்கு உட்படாமல், பொதுமக்களிடத்தில் கொள்ளை போன்ற அட்டூழியச் செயல்களில் ஈடுபட்டதால் ஆங்கிலேய அரசின் குற்றபரம்பரைச் சட்டத்தால் அடக்கப்பட்டனர். இதுவே கள்ளர் மற்றும் மறவர் என்போர் ஒன்றிணைய வழிவகுத்தது. இதற்கிடையில், மறவரின் கீழ் சேர்வைக்காரர்களாக இருந்த அகமுடையாரும் இவர்களுடன் இணைந்தனர். முக்கியமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களான பள்ளர்களின் எதிர்ப்பை சமாளிக்கும்முகமாக மூன்று இனத்தாரும் ஒன்றிணைந்த அமைப்பாக செயல்பட ஆரம்பித்தனர். இதுதான் ‘முக்குலத்தோர் அமைப்பு உருவான முறை.

    Sunday, December 2, 2012

    பண்டைய தமிழகத்தில் போர்மறவர் என்போர் ‘பள்ளரே’ -- பாகம் 1

    மறவர் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகவும், வரலாறாகவும் முக்குலத்தோர் கூறும் விளக்கம் இது:

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    மறவர் - பெயர்க் காரணம் : 
    மறவர்
    என்பவர் திராவிட இனத்தில் முதல் இனமாக இருக்கலாம் என்றும், இவர்கள் தென்னிந்தியாவில் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் ராமன் ராவணனுக்கு எதிராக நடந்த போரில் ராமனுக்கு உதவி செய்ததால் இராமபிரான் இவர்களுடைய சேவையைப் பாராட்டி உங்களை மறவேன் என்று சொன்னதால் இவர்கள் 'மறவன்' என்று அழைக்கப்பட்டனர். மற்றும் மறவன் என்ற இப்பெயர் வீரம், கொடூரம் கொலை செய்தல், கொள்ளை அடித்தல் ஆகியவற்றுடன் சம்பந்தப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல ....முன்காலத்தில் இந்த இனம் படைக்கலன்களில் அதிகப் பங்கு எடுத்ததால் இப்பெயர் வந்திருக்காலம் என்று எட்கர் தார்ஸ்டன் கூறுகிறார். 
    குகன் வழித்தோற்றம் : 
         இவர்கள் குகன் வம்சாவழியினர் என்தற்கு, இராமாயணத்தில் இராமன் இலங்கைக்கு செல்வதற்கு குகன் உதவி செய்ததாகவும், அப்போது இராமன் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி வந்து, உன்னை சந்திப்பேன் என்று சொன்னான். ஆனால், குறிப்பிட்ட
    காலத்தில் வராததைக் கண்ட குகன் தீ மூட்டி தற்கொலை செய்ய இருந்த காலத்தில் அனுமன் அதைக் தடுத்து நிறுத்தினார். பின்னால் இச்செய்தியை இராமனுக்குச் சொன்னார்கள். இதைக் கேட்ட இராமன் குகனின் வீரத்தைக் குறிக்கும் விதமாக 'மறவன்' என்று அழைத்தார். இவர் வழி வந்தவர்கள் தான் மறவர்கள். இவ்வாறு இவ்வினத்தின் பெயர் வரலாற்று ஆசிரியர்களின் பல்வேறு கருத்துக்களையும், கர்ணபரம்பரைக் கதைகளையும் கொண்டுள்ளது. ஆனால் இந்திரன், அகலிகை ஆகிய ஆரியர் இருவர் சேர்க்கையால் தோன்றிய இனம் மறவர் என்று சொல்வது எங்களை இழிவுப்படுத்துவதற்காகவே திரிக்கப்பட்டது ...
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    மேலே சொன்னவற்றிற்கு மறுப்புரைகள்:

    1. மறவர் என்ற சொல் பற்றி டாக்டர் கதிர்வேல் கூறுவது:
         சங்க இலக்கியத்தில் மறம், மறவர் என்ற சொற்கள் பயன்படுத்தி இருப்பது உண்மையே. ஆனால், அது முறையே வீரத்தையும், வீரரையும் சுட்டப் பயன்பட்டதேயன்றி, மறவர் என்ற இனம் அல்லது மரபைச் சுட்டவில்லை. (மறவர் வரலாறு, டாக்டர் கதிர்வேல்,பக்கம் 16)
    2. மறவர் என்பதற்கு பிங்கல நிகண்டு (3941) 
     ‘வேடர் தம் பெயரும் வீரருமாவர் எனப்பொருள் கூறுகிறது.
     வேடர் என்பவர் ‘அறம் செய்யின் மறம் கெடும் என்ற கோட்பாடுடன் ஆறலைத்தல் தொழில் செய்து வாழ்ந்த எயினரைக் குறிக்கும். இவர்களே வன்கண் மறவர், வன் கண் ஆடவர் என்றும், கூளியர் என்றும் சங்க இலக்கியங்களில் காட்டப்படுகின்றனர். இவர்களுக்கும், தற்காலத்தில் மறவர் என்று சொல்லக்கூடிய இனத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
    (எ.கா) துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர் (நற்றினை 33:6)
          வருநர்ப் பார்க்கும் வங்கண் ஆடவர் (குறுந்தொகை 274:4)
          கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் (குறுந்தொகை 331:3)
          குரங்கன்னபுன் குறுங்கூளியர் (புறநானூறு 136:12)
    வீரர் என்ற வகையில் ‘மறவர் என்ற சொல் படைமறவரையும் மற்றும் படைத்தலைவரையும் குறிக்கும் ஒரு பண்புப் பெயராகும்.படைமறவர் என்றால் அது மள்ளர்குடியினரைக் குறிப்பதாக அமைகிறது.
          எம்.சீனிவாச அய்யங்கார் பள்ளர் பற்றிக் கூறுவதாவது: ‘பள்ளர் என்பது சரியாய் மள்ளர் என்று உச்சரிக்கப்பட வேண்டும். அவர் பாண்டியர் படைமறவர் ஆவார்(M.Srinivasa ayyangar, Tamil studies, page 106)'

    மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் ( அகம் 27:8)  
    படைத்தலைவர் என்ற வகையில் இது சேர, சோழ மற்றும் பாண்டியப் படைத்தலைவர்களைக் குறித்தது.
    (எ.கா) ‘திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன் (புறம் 179:5)
    இந்த மறவன் நாலைக் கிழவன் நாகன்.
    ‘இழை அணி யானைச் சோழர் மறவன் ( அகம் 326:9)
    இவன் பொருநர் கிழவன் பழையன்.
    வசை இல் வெம்போர் வானவன் மறவன் (அகம் 143:10)
    இந்த மறவன் சேரர் படைத்தலைவன் பிட்டன்.
    மேலே சொல்லப்பட்ட படைத்தலைவர்கள் அனைவரும் மள்ளர் குடியைச் சார்ந்தவர்கள். இந்த மறவர் என்போர் யாரும் தற்கால மறவர் குடியைச் சார்ந்தவர்கள் கிடையாது. ஏனென்றால், கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரைத் தமிழகத்தில் மறவர் என்ற இனம் கிடையாது.(Noboru karashima ‘A concordance of the names in the chola inscriptions’-1979)

    3. கி.பி 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருவிளையாடற் புராணத்தில் மறவர் என்பது வேட்டுவராகவும், மள்ளர் என்பது போர்மறவராகவும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. (திருவிளையாடற் புராணம்,பழியஞ்சின படலம்) 
    4. இடைக்காலமான 13ஆம் நூற்றாண்டு வரை மறவர் என்ற இனம் இல்லை என்றபோது, அதற்கு பல யுகங்கள் முந்தியதாகக் கூறப்படும் இராமன் காலத்தில் ‘மறவர் என்ற இனம் பற்றிச் சொல்லப்படுவதில் அர்த்தம் இல்லை. அதேபோன்றே குகன் கதையும்.

    எட்கர் தர்ஸ்டன் மறவர் பற்றிக் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
       ‘சென்னை மாகாண காவல்துறையினரின் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்திலுள்ள பல்வேறு மக்கள் பிரிவினரில் மறவர் ஆரம்பத்திலிருந்தே திருடுவதைக் குலத்தொழிலாக நடத்தி வருவதாகக் கண்டுள்ளனர் (எட்கர் தர்ஸ்டன் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ தொகுதி 5, பக்கம் 29)'

    5. ‘இந்திரன், அகலிகை இணைவால் ‘மறவர் இனம் தோன்றவில்லை என்பது உண்மை. ஏனெனில்,அதற்கு ஆதாரம் கிடையாது.

    6. டாக்டர் எம்.எஸ்.கோவிந்தசாமி கி.பி 15-16 ஆம் நூற்றண்டுகளில் தெலுங்கு நூல்களில் பேசப்படும்லம்பகர்ணா என்பவரே மறவர் என்கிறார் (Dr.M.S.Govindasamy, The role of the feudafories in the later chola history)

    7. மறவர் இனத்தைச் சார்ந்த தினகரன் என்பவர் மறவர்கள் ஆந்திரப் பகுதியிலுள்ள கிழுவை நாட்டிலிருந்து வந்ததாக தமது மறவர் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.

    8. இராமநாதபுரம் சேதுபதி மகாமறவன் என அழைக்கப்பட்டான். அவன் தெலுங்கு மொழியை ஆதரித்தான்.

    9. சேதுபதி மன்னர்கள் தங்களைப் பற்றிய மெய்கீர்த்திச் செய்திகளில் தம்மை ‘மகாமண்டலேஸ்வரன் என்றும் ‘ஆரியர் மானம் காத்தான் எனவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இது அவர்களைப் பற்றிய செப்பேடு மற்றும் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. மகாமண்டலேஸ்வரன் என்பது விசயநகர மன்னர்களைக் குறிக்கும். ஆரியர் என்பது வடுகரைக் குறிக்கும்.

    10. சேதுபதிகள் தம்மை ‘மூவராய கண்டன் என்றும் பெருமையாகச் சொல்லிக் கொண்டனர். மூவராய கண்டன் என்பது தமிழ் வேந்தர்களுக்கு பகைவன் என்பதாகும்.

       இன்று தம்மை 'மறவர்' என்ற அழைத்து கொள்ளும் முக்குல மறவர் என்போர் யார், அவர் பூர்வீகம் என்ன என்பதும், 'போர்குடி மறவர்' யார் என்பதும் விளங்குகிறது அல்லவா...?

    Friday, November 30, 2012

    மறவர் பாண்டியரா?

    மறவர் பாண்டியரா?
    ===================
    நூல்        : சேதுபதி சரித்திரம்
    ஆசிரியர்: ஹரப்பா தியாகராஜன்
    பக்           : 677 , 680 , 681 , 682 , 685 , 689
    ஆய்வு பொருள்: செப்பேடுகள்
    நமது விவாத தலைப்பு: சேதுபதியின் பட்டங்கள்
    * மூவராயக் கண்டன் — மூவேந்தர்களுக்கு எதிரியானவன்
    * வைகை வளநாடன் கொட்டம் அடக்கி – பாண்டியனின் கொட்டம் அடக்கியவன்
    * ஆரியமானம் காத்தான் – ஆரியர்களின் மானத்தை காத்தவன்

    (எமது கேள்விகள்:)
    => மறவர்கள் செதுபதியையே மன்னராக கொண்டவர்கள், அவர்களுக்கே அடி பணிந்தவர்கள். மறவர்களும், சேதுபதியும் பாண்டியன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மேலே உள்ள பட்டங்கள் எதிராக அல்லவா சொல்கின்றன.?

    => விஜயநகர மன்னர்களுக்கு மேலே சொன்ன அதே பட்டங்கள் உள்ளதே. எப்படி? பாண்டியனை எதிர்த்தவன் இப்படி பட்டங்களை வைத்துகொள்வதில் அர்த்தம் இருக்கு. ஆனால் ‘நான் தான் பாண்டியன்’ என்று சொல்பவனுக்கும் அதே பட்டமா?

    இப்போது இந்த கட்டுரையின் தலைப்பை மீண்டும் வாசியுங்கள். :-)