Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Sunday, February 24, 2013

பள்ளிப் படை -- விளக்கம்

@Chiyan Vasanth (said):
@@@@@@@@@@@@@@@@@@@@

    ஒரு மன்னன் இறந்தால் அவனுக்கு கட்டுவது பள்ளி படை ..... சேரன் பள்ளி மார் என்றழைக்க பட்டார் ///// ஏன் மள்ளர் படை என்று கட்டியிர்க்க லாமே
@@@@@@@@@@@@@@@@@@@@


மள்ளரின் மறுப்புரை
பள்ளி என்ற வார்த்தைக்கு இருக்கும் அர்த்தங்களை வரிசையாக காண்போம்.

பள்ளி        -- 1. பள்ளர்குலப் பெண். 2. பள்ளன் மனைவி. 3. வன்னியர் குலம். 4. வன்னியர் குலச் சிற்றரசன். “ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமா போலே” (திவ். இயற். திருவிருத். 40, வியா. 235).
பள்ளி        -- கல்வி கற்பித்துக் கற்கும் இடம்; கல்விக்கூடம், பள்ளிக்கூடம்.
பள்ளி        -- படுத்து உறங்கும் இடம்
பள்ளி        -- பள்ளிச்சி = வன்னியர்குலப் பெண்
பள்ளி        -- 1. படுக்கை. பள்ளிகொண்டான், பள்ளியெழுச்சி முரசம். 2. தூக்கம். “பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப” (கலித். 121). 3. விலங்கு துயிலிடம் (பிங்.). 4. படுக்கையறை.
பள்ளி கொள்ளுதல்  -- படுத்தல்.
பள்ளி -- சமணர் படுக்கும் குகை

       எனவே பள்ளி என்பது மொத்தம் இரண்டே அர்த்தங்களை குறிக்கிறது. ஒன்று 'மனிதனை' குறிக்கிறது. இரண்டாவது 'படுத்தல், படுக்கையை' குறிக்கிறது. எனவே இலக்கியங்களில் தென்படும் 'பள்ளி' என்ற வார்த்தையை மேலே சொன்ன ஏதாவது ஒரு பதத்தில் மட்டுமே, இடத்திற்கு ஏற்ப பொருள் விளக்கம் கொள்ள வேண்டும்.


பள்ளி படுத்துதல்/பள்ளி படை: 
    எகிப்தில் மம்மிகள் போல தமிழக மன்னர்கள்,அரசிகள் போன்றோர் நிரந்தரமாக நித்திரை கொள்ளும் முகத்தே அவர்கள் இறந்தபின்பு கட்டப்படும் சமாதி போன்ற அமைப்பே 'பள்ளி படை'.

    இங்கே 'பள்ளி' என்ற வார்த்தை நபரையோ, சாதியையோ சுட்ட வில்லை. "நித்திரை கொள்ளுதல்" என்ற அர்த்தத்தையே சுட்டுகிறது என்பது தெளிவு.

    உதாரணமாக சோமசுந்தர பாண்டியனும், மீனாட்சியையும் பள்ளி படுத்திய இடமே இன்று நாம் வழிபாடும் 'மதுரை மீனாச்சி திருக்கோயில்' ஆகும்.

     பள்ளி,படையாச்சி,வன்னியர் குறித்து மேலதிக கட்டுரைகள் வரவிருக்கின்றன. அதில் ஒவ்வொருவரை பற்றியும் தனித்தனியே விவாதிப்போம்.